Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை – கொழும்பின் அதிர்வுவலைகள் தொடர்கிறது:-

Featured Replies

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை – கொழும்பின் அதிர்வுவலைகள் தொடர்கிறது:-

(தொகுப்பு)

நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சியாக கருதப்பட வேண்டும் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டமாக கருதப்பட வேண்டுமென அதி வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் வயிறு பிழைக்க முடியாத நபர்களே இவ்வாறு இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சதிகாரர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி;த் திட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பை வெளியிட ரஷ்யா சீனா முடிவு?

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்-கீ-முனின் நிபுணர்கள் குழு இலங்கை மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பை வெளியிட ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

இலங்கை இறையாண்மை உள்ள ஒரு நாடு எனவும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட ஐ.நாவுக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் இந்த நாடுகள் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் மூலம் இலங்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஏற்கனவே மெஸ்சிகோ இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானங்களை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமது வீட்;டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விட்டன. இந்த நிலையில், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு தெளிவுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இரண்டு குழுக்களை அனுப்ப உள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக சகல சமயத் தலைவர்களையும் ஒன்று திரட்ட அரசாங்கம் முயற்சி:-

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கடும் கண்டணத்தை எதிர்ப்பை வெளியிடுமாறு சகல சமயத் தலைவர்களையும் அரசாங்கம் பலவந்தப்படுத்தி வருவதாக தெரியவருகிறது.

நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஒட்டுமொத்த கண்டனத்தை சமயத் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அரசு கேட்டுள்ளது.பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய சமயங்களைச் சேர்ந்த தலைவர்களிடம் இந்த விண்ணப்பத்தை அரசாங்கம் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.ஐ.நாவைக் கண்டிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிகளிலும் கலந்து கொள்ளுமாறும் சமயத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.

ஐ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கை அரசாங்கம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்ப்பைக் வெளிப்படுத்தவுள்ளது:-

ஐ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பைக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தவுள்ளது. நாளை கொழும்பிலும் பிற இடங்களிலும் இதற்கென பெரும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் அரசு பெரும் எடுப்பில் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தெரியவந்தது.

கொழும்பில் உள்ள ஐ.நாவின் அலுவலகம் முன்பாகவும் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அன்றையதினம் இலங்கையின் நிலைப்பாடு ராஜதந்திரிகளுக்கு விளக்கப்படுவதுடன், செய்தியாளர்களுக்கும் தெளிவுபடுத்த அமைச்சர்கள் தயார் நிலையில் உள்ளனர் என அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே தினத்தன்று முன்னெடுக்கப்படவுள்ள பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக நாளைய ஆர்ப்பாட்டங்கள் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் பதிலளித்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிக்கப்படும்:-

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதிலளித்த பின்னர், அது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் எப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தாலும் நாட்டை காட்டிக் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை எனவும் தயாசிறி கூறியுள்ளார். வெளி சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சி உயிரை அர்ப்பணித்து செயற்பட தயாராக உள்ளது.

எனினும் நாட்டிற்குள் உள்ள பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்க கூடிய பொருத்தமான நபர் சரத் பொன்சேக்கா, அவரை சிறையில் இருந்து விடுவித்து, அதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம், அவருக்கு வழங்க வேண்டும். ஐக்கிய நாடகள் அலுவலகத்தை முற்றுகையிட்டோ, நோர்வே தூதரகத்தை மூடி விடுமாறு கூறியோ, இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

இந்த விடயத்தில் அனைவரும் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும். நாட்டில் ஜனநாயகம், நீதிமன்ற சுதந்திரம் என்பவற்றை ஏற்படுத்துவதுடன் ஆட்களை கடத்திச் செல்வது தொடர்பில் அரசாங்கம் தெளிவான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும். அப்படி தெளிவான தீர்மானத்திற்கு அரசாங்கம் வருமாயின் இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாது எனவும் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப்புலிகள் 600 தமிழர்களை சுட்டுக்கொலை செய்தனர் - சதாசிவம் கனகரட்னம்:-

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப்புலிகள் 600 தமிழர்களை சுட்டுக்கொலை செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ஏசியன் ரிப்பியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உடல்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. உடல்களை எடுத்து வந்தர்களிடம் கேட்ட போது, புலிகள் இவர்களை கொன்றதக கூறியதாகவும் சதாசிவம் குறிப்பிட்டுள்ளார். புலனாய்வு பிரிவினரிடம் 4வது மாடியில் இந்த தகவல்களை தாம் வெளியிட்ட போதிலும் புலனாய்வு துறையினர் அந்த தகவல்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக திவயின கூறியுள்ளது.

globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.