Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பின்லேடனுடன் பிரபாகரனை ஒப்பிடுவதா -ஈழ ஆதரவாளர்கள் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

99052756.jpg

அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் பின்லேடனை பிரபாகரனோடு ஒப்பிட்டுப் பேசியது தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருநாள் பயணமாக இலங்கை சென்றிருந்த அமெரிக்காவின் தெற்காசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னர் பத் திரிகையாளர்களைச் சந்தித்தார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழ் மக்களின் அனைத்து முக்கிய பிரச்னைகளையும் உள்ளடக்கியதான ஒரு உறுதியான அறிக்கை வெளிவர வேண்டும்’’ எனப் பேசினார்.

இதைத் தாங்கமுடியாத சிங்கள ஊடகவியலாளர்கள் அவரைப் பேசவிடாது தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். ‘‘ஒசாமா பின்லேடனின் மரணத்தை ஒரு விதமாகவும் பிரபாகரனின் மரணத்தை ஒரு விதமாகவும் அமெரிக்கா கையாள்கிறதா?’’ என ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்க, “அமெரிக்காவின் நேரடி இலக்காக ஒசாமா பின்லேடன் இருந்தார். அவரைப் பிடிப்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால், புலிகளை அழிக்க நாங்கள் அவ்வியக்கத்தைத் தடைசெய்து இலங்கை அரசுக்கு உதவி செய்தோம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான செயல்பாடுகளில் அமெரிக்கா இப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கிறது. பிரபாகரன் மற்றும் ஒசாமா பின்லேடன் இருவரும் உலகில் மிக மோசமான பயங்கரவாதிகள் என வரலாற்றில் இடம் பெறுவார்கள்’’ என குறிப்பிட்டார் ராபர்ட் ஓ பிளேக்.

பிளேக்கின் இந்த பதிலைக் கேட்ட பின்னர் சிங்களப் பத்திரிகையாளர்கள் சமாதானமடைந்தனர். ஆனால், தமிழீழ ஆதரவாளர்களோ பின்லேடனையும் பிரபாகரனையும் ஒரே பார்வையில் பார்ப்பதா என கொதித்துப் போயிருக்கிறார்கள்.

“இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது பிளேக்குக்குப் புரிகிறது. ஒடுக்கப்பட்ட ஒரு இனத்துக்காகப் போராடும் இயக்கத்தின் தலைவரை பயங்கரவாதி என்று எப்படிச் சொல்லலாம்?’’ என அவர்கள் கோபப்படுகிறார்கள்.

பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன்னதாக கோத்தபய ராஜபக்ஷே, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்திருந்த பிளேக், “இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழவேண்டும்’’ என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ‘‘அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது’’ என்கிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.

“இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்துள்ளது, இலங்கை அதனைச் சரியாக விசாரிக்கவில்லை. இலங்கையின் நீதித்துறையில் நம்பகத்தன்மை இல்லை’’ எனக் கூறி வரும் அமெரிக்கா, தற்போது இலங்கையில் உள்ள நீதித்துறைக்கு 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து உதவியுள்ளது. இது ஏன்? அமெரிக்காவின் இந்தச் செயல் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதற்கு ஒப்பானது’’ என்கிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.

அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளும் ஐ.நா. அறிக்கை தொடர்பாக தமிழர்களுக்கு எதிரான கருத்தையே கொண்டிருக்கின்றன என்ற வருத்தம் தமிழர்களிடம் உள்ளது. ஐ.நா.வுக்கான பிரான்ஸ் நாட்டு பிரதிநிதி ஜெராட் அராவுட் என்பவர் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா.வின் ஊடக அமைப்பான இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு “இலங்கையில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை இலங்கை அரசே மேற்கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை இந்த மாதம் பிரான்ஸ் ஏற்கவுள்ளது என்பது இந்த தருணத்தில் கவனிக்கப்பட வேண்டியது.

“ஐ.நா. அறிக்கை தொடர்பாக சீனா கவனம் செலுத்தி வருகின்றது. இலங்கை அரசு தனது சொந்த விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதால், இலங்கை அரசும், அதன் மக்களும் இந்த விஷயத்தை நேர்த்தியாகக் கையாள்வார்கள் என சீனா நம்புகின்றது. இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளையே அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும். நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடாது’’ என சீனாவின் வெளி விவகார அமைச்சகப் பேச்சாளர் ஹொங் லீ தெரிவித்துள்ளார்.

‘‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது’’ என வழக்குத் தொடுக்கும் பொறுப்பை வகிக்கும் ஒக்கம்போ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்குப் பிறகாவது தங்களுக்கு நீதி கிடைக்கும் எனக் காத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள். ஆனால், இலங்கை அரசு அது நடக்காமல் இரு ப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கி விட்டது என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.

விளையாட்டு பொம்மைகளாகும் தமிழர்கள்!

03bs.jpg

இலங்கை சாவகச்சேரியில் இலங்கை ராணுவமும், தொழிற்சங்கமும் இணைந்து பௌத்த மற்றும் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர். அதில், விளையாட்டு என்ற பெயரில் தமிழர்கள் அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்ச் சிறுவர்களின் கைகளைக் கட்டி, கயிற்றில் தொங்க விடப்பட்டிருந்த பிஸ்கெட்டை நாய் கடிப்பது போல் விளையாட விட்டு ரசித்து மகிழ்ந்திருக்கிறார்கள் சிங்கள ராணுவமும், அவர்களது குடும்பமும். பெண்களுக்கு தேங்காய்த் துருவும் போட்டி நடத்தப்பட்டது. இளைஞர்களின் கைகளையும், பெண்களின் கண்களையும் கட்டி, பெண் கள் இளைஞர்களுக்கு பால் சோறு ஊட்ட வேண்டும் என்கிற போட்டியும் நடைபெற்றது.

சுற்றிலும் சிங்களர்கள் நின்று சிரிக்க, தமிழர்கள் இந்த விளையாட்டுகளை பொம்மைகள் போல் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த விளையாட்டுகளை சிங்களர்கள் யாரும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

“ஐ.நா. அறிக்கை தொடர்பாக சீனா கவனம் செலுத்தி வருகின்றது. இலங்கை அரசு தனது சொந்த விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதால், இலங்கை அரசும், அதன் மக்களும் இந்த விஷயத்தை நேர்த்தியாகக் கையாள்வார்கள் என சீனா நம்புகின்றது. இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளையே அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும். நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடாது’’ என சீனாவின் வெளி விவகார அமைச்சகப் பேச்சாளர் ஹொங் லீ தெரிவித்துள்ளார்.

'அனாதை' என்பதற்கு இன்னொரு வார்த்தை இலங்கைத் தமிழன் தான்!

மகாபாரதத்தில் வரும் கர்ணனின் பாத்திரம் போல!

எல்லா விதமான திறமைகளும் அவனிடம் இருந்தது!

அதை வெளிப்படுத்த அவனுக்கு ஒரு' அங்கதேச அரசு' தேவைப் பட்டது!

அது வரைக்கும் நாங்கள் அனாதைகள் தான்!!!

'அனாதை' என்பதற்கு இன்னொரு வார்த்தை இலங்கைத் தமிழன் தான்!

மகாபாரதத்தில் வரும் கர்ணனின் பாத்திரம் போல!

எல்லா விதமான திறமைகளும் அவனிடம் இருந்தது!

அதை வெளிப்படுத்த அவனுக்கு ஒரு' அங்கதேச அரசு' தேவைப் பட்டது!

அது வரைக்கும் நாங்கள் அனாதைகள் தான்!!!

இலங்கை தமிழன் எனபதை விட தமிழன் என்றே கூறலாம்.. எல்லா நாட்டு தமிழனும் அடிமைகளாக தான் உள்ளார்கள்.

தமிழகதமிழனை நேவி சுடலாம், மலேசிய தமிழனை மலாய அரசு எதுவும் செய்யலாம். இதுதான் தமிழன் நிலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில தினங்களுக்குள் ஒரு இலட்சம் மக்களைக் படுகொலை செய்த 'அரசே!' '"புலிகள் பயங்கரவாதிகள்" என்ற பட்டம் தானும் கொடுத்து, உலகையும் கொடுக்க வைத்திருக்கின்றது. இதுதான் தன் தகுதிக்கு முரண்பாடான செயல். கொலைகாறனின் தீர்ப்பில் நீதி மட்டுமாவது மிஞ்சும் என்று எதிர்பார்ப்பது அரசியலா? அறியாமையா? ஒன்றும் புரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா அறிக்கையை வைத்துக்கொண்டு தமிழர்கள் செயற்படவேண்டியதுதான்..!

அடுத்த செவ்வியில், ராதிகா சிற்சபேசனிடம் சேர்பியாவின் மிலோசவிச்சிற்கும் சிங்களத்தின் மகிந்த ராஜபக்சவிற்கும் ஒற்றுமைகள் காண்கிறீர்களா என்று கேட்கலாம்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.