Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காங்கிரசின் தோல்வியே நெடியவனின் கைதுக்கு காரணம் – இந்தியாவின் எல்லை கடந்த பயங்கரவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசின் தோல்வியே நெடியவனின் கைதுக்கு காரணம் – இந்தியாவின் எல்லை கடந்த பயங்கரவாதம்

May 25th, 2011 ஐரோப்பிய செய்தியாளர்

அண்மையில் தமிழகத்தில் இந்திய காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்விக்கு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் நெடியவன் தலைமையிலான புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தான் வலுவான காரணம் என நம்பியுள்ள இந்திய புலானாய்வு அமைப்பு நெதர்லாந்து அரசுக்கு கொடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே நெடியவன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமான த டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குமரன் பத்மநாதனின் தலைமையை நெடியவன் உட்பட தமிழகத் தலைவர்களான வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோர் தலைமையிலான தனிப்பட்ட பிரச்சாரங்கள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.

இந்த பிரச்சாரம் தான் காங்கிரசுக்கு தோல்வியை கொடுத்தது. தமிழகத்தில் போட்டியிட்ட 60 காங்கிரஸ் உறுப்பினர்களில் 10 பேர் கூட வெல்லவில்லை. சிறீலங்கா அரசுக்கு ஆதரவளித்து விடுதலைப்புலிகளை வஞ்சம் தீர்த்த காந்தி குடும்பத்திற்கு மீண்டும் விடுதலைப்புலிகள் தக்க பதிலடியை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலையும் காந்தி குடும்பத்தை கலக்கத்தில் தள்ளியுள்ளது. எனவே தமிழகத்தின் இந்த எழுச்சிக்கு நெடியவன் தலைமையிலான அணியே காரணம் என இந்திய காங்கிரஸ் கட்சியும், றோ புலனாய்வு அமைப்பும் நம்புகின்றன.

இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசுக்கு இந்திய காங்கிரஸ் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே நெடியவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடியவன் தொடர்பான தகவல்களை சிறீலங்கா அரசின் கைகளில் இருக்கும் குமரன் பத்மநாதனே காங்கிரஸ் அரசுக்கு வழங்கியிருந்தார். அதன் பின்னர் அந்த தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை நெதர்லாந்து அரசுக்கு வழங்கியுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

... ஒரு வரியில் சொல்வதானால் ... தன் கையால், தன் தலையில் மண்ணை அள்ளி வாரிப்போடப்பட்டிருக்கிறது!!!

... போட்ட மண், தனக்கு மட்டுமல்ல ...!!!!!????

Edited by Nellaiyan

என்னே வியாக்கியானம். ஏதோ சொல்லுவார்கள் பனை மரத்தில் தேள் கொட்டினால்...... அது போலிருக்கிறது சமாச்சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீரணிக்க முடியாத உண்மை என்னவெனில் நாங்கள் சர்வதேச அரசியல் அனாதைகள்!

தமிழ் நாட்டில் உள்ள தொப்புள் கொடி உறவுகளின் (சீமான் போன்றோரின்) கரங்களை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவிற்கு எம்மால் மேலும் அழுத்தங்களைக் கொடுக்க முடியும்.

மேலுள்ள செய்தி உண்மையெனின் இந்தியா ஏற்கெனவே அதிர்வுகளை உணரத் தொடங்கி விட்டது! மேலும் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது,இந்தியா ஏதாவது செய்தாக வேண்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ம் ,இந்தியா அழுத்தம் கொடுக்க நெதர்லாந்து நெடியவனை விசாரணை செய்ததாம்.இதனை டெய்லி மிரர் சொல்ல நாங்கள் நம்புவோமாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.