Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசு சர்வதேச கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதல்ல..

Featured Replies

தமிழக அரசு சர்வதேச கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதல்ல..

g-8-flash.jpg

இந்தியா மீதான அழுத்தங்கள் தொடரும்…

செயற்பாட்டு ரீதியான விடையை தரவேண்டிய நிலையில் சோனியா அரசு..

இன்று அதிகாலை பிரிட்டனில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரான்ஸ் புறப்படுகிறார். பிரான்சில் இன்று நடைபெறும் ஜி-8 நாடுகளின் விசேட மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரிட்டனுடன் அவர் போராடிப் பெற்ற உடன்பாடுகளுடன் இன்று ஜி – 8 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்.

இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படப்போவது மூன்று விடயங்கள். 1. லிபிய விவகாரம் 2. ஜப்பானில் ஏற்பட்ட அணு உலைக்கசிவு, மற்றும் வறிய நாடுகளின் அணு ஆயுதங்கள் மீதான பாதுகாப்பு 3. உலகப் பொருளாதாரம். இதற்குள் நேற்று மாலை கையெழுத்தான உலக ஜனநாயக மறுமலர்ச்சிக்கான உடன்பாடு ஆகியன உள்ளடக்கப்படும். இன்று ஜி 8 ல் காணப்படும் உடன்பாடு நாளை வெளியாகும். அதற்கு முன்னர் நேற்று கைச்சாத்திடப்பட்ட உலக ஜனநாயகப் பாதுகாப்பு என்ற தலைப்பிலான அமெரிக்க – பிரிட்டன் ஒப்பந்தந்தத்தை பார்த்தல் வேண்டும்.

உலக ஜனநாயக மறுமலர்ச்சியும், அடுத்த கட்ட உலக ஜனநாயகமும் என்ற விவகாரமே இந்த நூற்றாண்டின் முதலாவது பெரிய நகர்வாக இருக்கும். ஜனநாயக மரபுகளை உடைத்து, கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஏழை பேதைகளை ஏமாற்றி, இனப்படுகொலை செய்து, போலியான பயங்கரவாத பட்டம் கட்டும் நாடுகளின் முதுகில் எண்ணெய் தடவி குறி சுடும் காலத்திற்குள் உலகம் கால் வைத்துவிட்டதை நேற்று கைச்சாத்தான அமெரிக்க – பிரிட்டன் ஒப்பந்தம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

இதன் பின்னணியில் சென்ற வாரம் வெளியான தமிழ்நாடு குறித்த விக்கிலீக்ஸ் அறிக்கையும், தமிழ் நாட்டில் நடந்து முடிந்த மாநில தேர்தலும் நோக்கப்பட வேண்டும். உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. அதன் ஜனநாயக விழுமியங்கள் வீழ்ச்சியடைந்தால் இந்தியாவைப் போல நெருக்கடி மிக்க நாடு உலக சமுதாயத்திற்கு வேறெதுவும் கிடையாது. புதிய உலகம் இந்தியாவின் ஜனநாயக பண்புகளை மூலைக்கு மூலை அவதானிக்கும், அவதானித்துக் கொண்டிருக்கிறது. அதன் பிரதிபலிப்பே தமிழ்நாடு தேர்தலும், 2ஜி விவகாரமும்.

தமிழ்நாடு தேர்தலில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற சம்பவங்கள் சர்வதேச அதானிப்பிற்கு உட்பட்டுள்ளன..

01. தேர்தலுக்கு வாக்களிக்கும் அப்பாவி மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து, தலையில் அடித்து சத்தியம் வாங்கி, தேர்தல் வெற்றிகளை திமுக – காங்கிரஸ் அணி பெற்றது.

02. இந்தக் காரியத்தை நடாத்துவதற்கான பணம் 2 ஜி போன்ற பாரிய ஊழலில் திரட்டப்பட்டதற்கான வழக்கு தற்போது நடைபெறுகிறது. கலைஞர் மகள் கனிமொழியும் தற்போது சிறையில் இருக்கிறார்.

தலைக்கு இவ்வளவு என்று பணத்தை வழங்கி தேர்தலை வெற்றி கொண்டால் அது ஜனநாயகத்தின் மாபெரும் வீழ்ச்சியாக அமையும். இந்தக் காரியம் நிறுத்தப்பட வேண்டும், உலக ஜனநாயகத்தை கேலிக்கிடமாக்கக் கூடாது. சோனியா காந்தியிடம் இந்த விவகாரம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அவருடைய பிரிட்டன் விஜயத்தில் இந்த மரபு குறித்த உரையாடல்கள் முக்கிய தலையங்கமாக இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் இப்படியொரு மாற்றம் நடந்திருக்காது.

இந்தியா சரியான ஜனநாயகப் பாதையில் செல்வதை செயல் மூலமாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆகவேதான் கூட்டணி கட்சி என்று பார்க்காமலே திமுகவிற்கு எதிரான முடிவுகளை மத்திய அரசு எடுக்க நேர்ந்துள்ளது.

இந்திய தேர்தல் கமிஷன் சரியான ஒரு தேர்தலை நடாத்திக் காட்டவேண்டும்..! சிறப்பாக தமிழகத்தில்..! அதைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா சரிவர நிறைவேற்றியிருக்கிறது. கலைஞர் தோல்வியடைந்தது ஜனநாயகத்தின் வெற்றியே என்பதை மறுக்க முடியாது. உலக நாடுகளுக்கு அது திருப்தியை கொடுத்திருக்கும்.

2 ஜி ஊழல் என்பது ஜனநாயக அதிகாரத்தை வைத்து நடைபெற்றுள்ள உலகின் மிகப்பெரிய ஊழல். 21 ம் நூற்றாண்டில் அதைவிட பெரிய ஊழல் உலகில் இதுவரை நடைபெறவில்லை. கண்டிப்பாக இதற்கு நடவடிக்கை எடுத்துக் காட்ட வேண்டும். இல்லையேல் ஜனநாயக விழுமியங்கள் பற்றி சர்வதேச அரங்கில் இந்தியா குரல் எழுப்ப முடியாது. சோனியா காந்தி கனிமொழிக்காக கவலைப்படலாம் ஆனால் காப்பாற்ற முயலமாட்டார். காப்பாற்றினால் அவர் சர்வதேச சமுதாய கண்காணிப்பிற்கு கண்டிப்பாக உள்ளாவார். இதை நன்கு உணர்ந்து இந்தியா அதையும் செய்துள்ளது.

இதைவிட பாரிய சிக்கல் இந்திய தேர்தலின் வாக்களிப்பு இயந்திரங்கள். இந்த இயந்திரங்களில் வாக்களிக்கும்போது வெளியில் சிறிது தூரத்தில் இருந்து முடிவுகளை மாற்றலாம் என்று அமெரிக்காவில் இருந்து ஒரு தகவல் வெளியானது. அது பீ.பீ.சியிலும் வெளி வந்தது. ஆகவே வாக்களிப்பு இயந்திரங்களின் நியாயத் தன்மையையும் நிறுவ வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருந்தது. அதையும் தமிழகத்தில் வைத்து சிறப்பாக செய்து காட்டியுள்ளார்கள்.

இதே இயந்திரத்தை மகிந்த ராஜபக்ஷ சிறீலங்கா அதிபர் தேர்தலில் எப்படிப் பயன்படுத்தினார் என்பது உலக சமுதாயத்திற்கு தெரியாமல் இருக்காது. வன்னியிலும், வெளிநாடுகளிலும் புலிகள் செய்த ஒவ்வொரு தவறுகளையும் உலக நாடுகள் செப்பமாகப் பதிவு செய்துள்ளன. புலிகள் குறித்த அவர்களுடைய அறிக்கைகளின் உட்கட்டுமானத்தைப் பார்த்தால் எல்லாவற்றையும் சர்வதேச சமுதாயம் துல்லியமாக பதிவு செய்திருப்பது தெரிகிறது. அகவேதான் மகிந்த ராஜபக்ஷவை மட்டும் பதிவு செய்யாமல் விட்டிருப்பார்கள் என்று நாம் கருதிவிட முடியாது. சிறீலங்காவின் அடுத்த தேர்தல் மகிந்த ராஜபக்ஷவால் தீர்மானிக்க முடியாத தேர்தலாகவே அமையும்.

இதுபோல…

புலிகள் வன்னிக்குள் மாட்டுப்பட்டபோது மு.கருணாநிதி ஆடிய இரட்டைவேட நாடகம் உலக சமுதாயத்தால் பார்க்கப்பட்டுள்ளது. நாம் மாநில அரசு.. நமது சக்திக்கு உட்பட்டதையே செய்ய முடியும்..! என்று கூறியபடி மு.கருணாநிதி சர்வதேசத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஆட்சி நடாத்தினார். இவருடைய ஆட்சியில் ஒரு தடவைகூட இவர் ஐரோப்பாவோ அமெரிக்காவோ வந்து ஜனநாயக முறைகளை பார்த்தது கிடையாது. ஆனால் இவருடைய ஜனநாயகத்தை உலகம் தீர்க்கமாக பார்த்துள்ளது. புலிகளை வெளிப்படையாக எதிர்ப்பது தப்பில்லை, அதுபோல ஆதரிப்பதிலும் தப்பில்லை. ஆனால் ஆறு கோடி மக்கள் கொண்ட ஜனநாயகத்தை இரட்டை வேடம் போட்டு கேலிக் கூத்தாக்கிவிட்டு, நாம் மாநில அரசு என்று கூறி வேடம்போட யாதொரு முகாந்திரமும் இல்லை.

வெறும் 50 லட்டசம் பேருள்ள டென்மார்க்கின் ஜனநாயகத்தை ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நாவும் அவதானிக்கும்போது ஆறு கோடி தமிழருள்ள தமிழ் நாட்டை மாநில அரசு என்று தவிர்த்துவிடுவார்களா?

கலைஞர் போன்றோர் நாம் மாநில அரசு நம்மால் என்ன செய்ய முடியும் என்று கூறுவது மிகப்பெரிய அறியாமையாகும். பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாகக் கூறுவதைப் போன்ற செயலாகும்.

உண்மையில் தமிழ்நாடு அரசு சர்வதேச நாடுகளின் பார்வையில் உள்ளது. அங்குள்ள தலைவர்கள் இனியும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடுதல் கூடாது. ஜெயலலிதா கூட தேர்தலில் வெற்றி பெற்றதும் நாம் மாநில அரசு நமக்கு ஓர் எல்லை உண்டு என்று தெரிவித்தார். அவருடைய ஆட்சியில் அவர் சறுக்கிய முதலாவது இமாலய சறுக்கல் அதுதான். தொடர்ந்தால் ஜெயலலிதா அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக ஆட்சியில் இருந்து இறங்கிப் போக நேரும்.

சிறீலங்காவிலும் புதிய ஜனநாயகம் மலரப்போகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களத் தலைவர்கள் நடாத்தும் பித்தலாட்ட ஜனநாயகம் கிழித்து வீசப்படும் நாட்கள் நெருங்கிவிட்டன. அதேவேளை தமிழரிலும் உலகம் தெரியாத பேதைகளாக வெளி நாடுகளிலும், இலங்கையிலும் தமிழரை வழிநடாத்துவோர் இன்றும் பெரும்பான்மையாக இருக்கிறார். இவர்களும் காலப்புயலில் அறுந்த காற்றாடிகளாக பறக்க நேரிடும். காரணம் உலகத்தின் மாற்றம் அப்படியிருக்கிறது.

இவற்றை நாம் கற்பனையில் எழுந்தமானத்தில் கூறவில்லை. உலக அரசியலின் செயற்பாட்டு விதிகளை அவதானித்தே, எழுதுகிறோம். நேற்று பிரிட்டனில் கைச்சாத்தான ஒப்பந்தம் ஜனநாயகத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிர் காலம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. எகிப்தில் விழுந்த கடதாசி அட்டை தொடர்ந்து சரிகிறது. கருணாநிதியை சரித்தது, சிறீலங்காவிற்குள்ளும் வரும்..

இன்று ஜி- 8 மாநாட்டில் உலகத் தலைமை மாற்றங்கள் குறித்த விடயம் பேசப்படவுள்ளது. இந்தியா – சீனா குறித்த தனியான உரையாடலும் இடம் பெறுகிறது. சுவாரசியங்கள் மேலும் தொடரும்..

அலைகள் உலக அரசியலின் இயங்குநிலை அவதானிப்புப் பிரிவு 26.05.2011

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய ஆட்சியில் ஒரு தடவைகூட இவர் ஐரோப்பாவோ அமெரிக்காவோ வந்து ஜனநாயக முறைகளை பார்த்தது கிடையாது. ஆனால் இவருடைய ஜனநாயகத்தை உலகம் தீர்க்கமாக பார்த்துள்ளது.

கருணாநிதி தனது வாழ்நாளில், டெல்லிக்கு விமானத்தில் பறந்ததை தான் கேள்விப்பட்டுள்ளேன்.

வெளிநாடுகளுக்கு பறந்து செல்ல நேரம் இல்லாமல்.... கழகப் பணி செய்து கொண்டிருந்தார் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக உழுங்கு மீண்டும் மாறுகிறது என்று பிரிட்டனில் பேசியிருக்கிறார் ஒபாமா.. இந்த சைக்கிள் காப்பில் எங்களுக்கும் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க வேணும்..! :unsure:

அமெரிக்காவின் தேவை தனது நிலையை உலகில் தக்கவைத்தல். அதற்காக தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றங்களை கொண்டுவருகின்றது,

அதற்கு மத்திய கிழக்கின் புரட்சி முக்கியமாகின்றது. அதன் தொடர்ச்சியாக சர்வாதிகளை ஆதரிப்பது, மனித படுகொலைகளை தடுத்து நிறுத்துவது, மக்களின் விடுதலை போராட்டங்களை மதிப்பது எனவும் அடங்கும். அதன் மூலம் தனக்கு புத்தி சந்தைகளை அது தேடவும் தனது மதிப்பை பேணவும் விரும்புகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.