Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தாவும் கோத்தபாயவும் இறுதியில் இராணுவத்தையும் காட்டிக்கொடுப்பர் -பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by இரும்பொறை on 27/05/2011 in செய்தி | 0 Comment

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய ஒரே நபர் நான். இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் இறுதியில் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பது நிச்சயம் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று மேல் நீதிமன்றத்தில் நீதியரசர்களான தீபாலி விஜே சுந்தர, எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி சரத்பொன்சேகா 5ஆவது நாளாகவும் சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கூறியவை வருமாறு:

நான் இராணுவத் தளபதியாகச் செயற்பட்ட காலங்களில் தாய்நாட்டுக்கும், இராணுவச் சீருடைக்கும் பங்கம் ஏற்படாத வகையில் கௌரவத்தைக் காத்துக்கொண்டு சேவை செய்தேன்.நான் எனது பள்ளிப் பருவத்தில் இருந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, தாய்நாட்டை நேசித்து, மோசடி, ஊழல் இன்றி வாழ வேண்டும் என்று உறுதி பூண்டு வாழ எண்ணினேன். அதற்கான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் எனது பெற்றோரிடம் இருந்தும், பெரியோரிடமிருந்தும் பெற்றேன். இதற்கான நல்ல தளமாக இராணுவ சேவை திகழ்ந்ததால் இராணுவத்தில் இணைந்தேன்.

தற்போதைய நாட்டுத் தலைவர்கள் இன்று தாயே, எனது தந்தையே எனக்கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி போலி தேசப்பற்றுள்ளவர்கள் போன்று ஆட்சியை நடத்துகிறார்கள். இவ்வாறு போலியாக மோசடி செய்து ஊழல் கலாசார நிர்வாகத்தைப் பூண்டோடு அழிக்கவே நான் எனது இரண்டாவது நடவடிக்கையை ஆரம்பித்தேன்.

நாட்டை மீட்டெடுக்க குடும்ப சகிதம் அர்ப்பணிப்புடன் உழைத்து மீட்ட நாட்டை ஒன்றுக்கும் உதவாத அரசு, அழிவின் பாதைக்கு இட்டுச்செல்வதைத் தடுத்து, நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணி, எனது இரண்டாவது நடவடிக்கையை அரசியலின் ஊடாக ஆரம்பித்தேன். அன்று ஆரம்பித்த எனது 2ஆவது நடவடிக்கை வெற்றிபெறும் என்பது நிச்சயம். அதற்காக ஜாதி பேதம், மத வேறுபாடு, குலம் என்று பார்க்காமல் நாட்டு மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என நம்புகிறேன். என்னை சிறையில் அடைத்தாலும் மக்களுக்காக ஆரம்பித்த எனது பயணம் தடைப்படாது.

மோசடி, அடக்குமுறை, பொய், சட்டங்களை அடக்குதல், அப்பாவி மக்களை ஏமாற்றும் கலாசாரம் என்பவற்றுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து அவற்றிலிருந்து சுதந்திரம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான நடவடிக்கையை நம்மக்கள் எடுக்காவிட்டால் இந்த துரதிஷ்டமான சூழ்நிலை மேலும் தொடரும்.நாட்டில் நிலவிய யுத்தத்தைக் காண்பித்து வாக்குகளைப் பெற்றவர்கள் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை எதிர்த்து மக்கள் கிளர்ந்து எழும்பினால் நாட்டைப் பாதுகாக்கலாம்.

தீவிரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடியதைப் போன்றே மோசடி, தேசத்துரோகி அரசியல் வாதிகளிடம் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைக்கு நான் என்னை அர்ப்பணிப்பேன்.ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் இலங்கை தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசும், ஐ.நாவும், சர்வதேச நாடுகளும் பல விமர்சனங்களைச் செய்துள்ளன. அரசியல் கைதியான எனக்கு அந்த ஐ.நா. அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பாக அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்த அறிக்கையில் எனது பெயர் உள்ளதாகவும், சில இடங்களில் விசேடமாக எனது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் என்னைப் பார்க்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.இராணுவச் சிப்பாய்களையும், இப்புனிதமான நாட்டையும் சிரமங்களுக்குத் தள்ளியவர்களே இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

இந்த அறிக்கையில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை அளிக்கக்கூடியவன் நானே. அரசியல் இலாபத்துக்காக என்னை சிறையில் அடைத்து இராணுவச்சிப்பாய்களைப் பொருட்படுத்தாமல் இந்த நாட்டையும், இராணுவத்தினரையும் கஷ்டத்தில் தள்ள அரசு முற்படுகிறது. இதற்கு ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளருமே பொறுப்புக்கூற வேண்டும். இறுதியில் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். இது நிச்சயம். ஐ.நா. அறிக்கையை வாசித்து ஆராய்ந்த பின்னர் அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க எண்ணுகிறேன். எந்தவொரு சர்வதேச விசாரணைகளுக்கும் நான் முகம் கொடுக்கத் தயார்.ஆனாலும் நான் தற்போது கவலையடைகிறேன். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்த நாட்டில் நானும் ஓர் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். ஆனால், கைது செய்யப்பட்ட கே.பி. அரச கைதியாக உள்ளார். நானோ அரசியல் கைதியாக்கப்பட்டுள்ளேன்.

source:Eelam press.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி.பிழைக்கத் தெரிந்தவர் பொன்ஸ்!!!

நீங்கள் கறிவேப்பிலை போல!

கறிக்கு மணமூட்டலாம்! ஆனால் ஒரு நாளும் கறியில் பங்கு கேட்கக் கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெள்ளைக் கொடி விவகாரத்தை சொல்லி முடிக்கிறதுக்கு முன் ராசபச்ச சகோதர்கள் இவருக்கு சிவப்பு கொடி காட்டிடுவானுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய ஒரே நபர் நான். இந்த விடயத்தில் ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் இறுதியில் இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பது நிச்சயம் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

மஞ்சள் தெளித்து அறுக்கபட இருக்கும் பொதுவான பலி ஆடுகள் பாடும் பாடல்... :rolleyes: :rolleyes:

http://www.youtube.com/watch?v=XqXNKPZp9JE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.