Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் போராட்டம் இந்தியாவின் இறைமைக்கு அச்சுறுத்தல்

Featured Replies

இன்றைய உலகப் பொருளாதார மயமாக்கல் என்ற நிலைக்கூடாக உலக நாடுகள் அனைத்தும் தம் பூகோள அரசியல் இருப்பையும் தாண்டி நெருங்கி வரக்கூடிய நிலமையே காணப்படுகின்றது. பூமிப் பந்தில் இருக்கக்கூடிய நாடுகளின் வாழ்க்கை முறை அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அனைத்து நாடுகளையும் சென்றடையக் கூடியதாக காணப்படுகின்றது. உலகின் எந்த மூலையிலும் ஏற்படக் கூடிய புயலோ பூகம்பமோ இல்லை போரோ கூட உலக நாடுகளின் பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை உடனும் ஏற்படுத்துவதை நாம் காண்கின்றோம்.

அந்த வகையில் இன்று உலகின் சில பகுதிகளில் ஏற்படக்கூடிய இனங்களுக்கிடையிலான மோதல்களும் சுதந்திரத்துக்கான போராட்டங்களும் உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டங்காணச் செய்வதுடன் வசதி பெற்ற நாடுகளின் சந்தை வாய்ப்புக்களையும் மாற்றி அமைத்து விடுகின்றது. இச்சந்தை வாய்ப்புக்களிற்கான போராட்டமே இன்று உலகின் வல்லரசுகளிற்கும் பிராந்திய வல்லரசுகளிற்கும் இடையிலான முறுகல்களுக்கும் பெரும் காரணமாக அமைந்து விடுகின்றது. அதேவேளையில் எதிர்காலச் சந்தை வாய்ப்புக்களுக்கான விஸ்தரிப்பு முயற்சிகளும் பிராந்திய உலக சமநிலையைக் குழப்புவதுடன் புதிய புதிய அணிகளுக்கிடையிலான கூட்டுக்களையும் உடைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

இன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள ஆதிக்கப் போட்டி எவ்வாறு தமிழ் ஈழத்துக்கான சுதந்திரப் போராட்டத்தில் சாதக பாதகத் தன்மைகளை ஏற்படுத்துகின்றது என்பதப் பார்ர்ப்போம். இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான ஆதிக்கப் போட்டி என்பது காலனித்துவ ஆட்சியின் காலத்திலேயே விதையூன்றி இன்று பெருமளவில் வியாபித்து நிற்கின்ற உலகப்பிராந்தியத்துக்கான ஆதிக்கப் போட்டியின் ஒரு பகுதியாகும். காலனித்துவ முறைமையின் சுரண்டல்,முடிவுக்கு வரவேண்டிய கட்டாயம் எழுந்தபோது நவீன காலனித்துவ சுரண்டல் எனப்படக் கூடிய உலகப் பொரூளாதார முறைமை அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. வளர்ந்த நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கும் தொழில்நுட்பங்களுக்குமான சந்தை வாய்ப்புக்களாக வளர்ந்து வரும் நாடுகளும் பின் தங்கிய நாடுகளும் தெரிவு செய்யப் பட்டன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் அதிகளவில் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளே அடங்கியிருந்தன. வளர்ச்சி யடைந்த நாடுகள் பட்டியலில் இருந்த ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்களிடமிருந்த தொழில் நுட்பச்சிறப்புகளாலும் பணபலத்தினாலும் இவற்றைச் சாதகமாக்கின.

சோவியத்யூனியனின் கட்டுப் பாட்டில் இருந்த கொம்யூனிச நாடுகள் இதன் எக்ல்லைகளுக்கப்பால் இருந்திருந்தபோதும் சோவியத்தின் உடைவு இன்னும் பல நாடுகளை சந்தை நாடுகளாக்கிவிட்டிருக்கின்ற

மேற்கூறிய கட்டுரையில் சுட்டிக்காடிய திசையில் தற்போதய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திப்பதாகா உலவும் அண்மைய 'வதந்திகளை' யாரவது அறிந்தீர்களா?அவ்வாறன ஒரு மாற்றம் உண்மயிலேயே ஏற்பட்டுள்ளதா?

நடக்க வேண்டியதுதான்... நடக்கும் எண்டு நம்புவோம்.....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ராஜபக்ச அரசாங்கம் மேற்குலகை விட இந்தியாவைத் தான் அதிகம் நம்பியிருந்தது. இதனால் தான் மேற்குலகிலிருந்து தூரவே நின்று கொண்டிருந்தது.

ஆனால் இப்போது இந்தியா கையை விரித்து விட்டதால் வேறு வழி இன்றி பிசைந்து கொண்டிருக்கின்றது. உண்மையில் தலைவர் கொடுத்த அடி சிறப்பானது. இதைத்தான் பாலகுமார் அண்ணா 3வது சுனாமி எனச் சொல்லியிருக்க வேண்டும்.

எனவே களம் இப்போது எமக்குச் சார்பாக நகர்வதாகவே நான் உணர்கின்றேன். எதுவானாலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும்.

நன்றி பிருந்தன் இணைப்பிற்கு!

* இந்திய மாநில தேர்தல்கள் நெருங்குகின்றது!

* அதைவிட தமிழ்நாட்டு பிரதிநிதிகளின் துணையின்றி ஆட்சியை தொடரமுடியாத மத்திய அரசு!

* தமிழ்நாட்டில் கட்சி பேதமின்றி ஆரம்பித்திருக்கும் ஈழ்மக்களுக்கான ஆதரவலை!

* இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்/கொலைக்கலாச்சாரம் பகிரங்கமாக ஆதரிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டமை!

... போன்ற சில காரணங்களுக்காக இந்திய ஆளும்வர்க்கம் கொஞ்சம் அடக்கி வாசிக்க முற்படுவதாகவே நினைக்கிறேன். மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத்தொடங்கியுள்ள அரசியல் குரல்களின் வல்லமையைப் பொறுத்தே மத்தியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது! இதுவரை எமக்காக ஒலித்த "நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ராமதாஸ், ..." போன்றோர்களுடன் "கலைஞர்" இணைந்திருப்பது ஒரு பாரிய மாற்றத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதைவிட அண்மையில் சூழ்நிலைகளாலோ அல்லது நிஜமாகவோ தமிழக முதலமைச்சர், இலங்கை ஜனாதிபதியை சந்திக்க மறுத்த நிகழ்ச்சியும், மத்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.

எங்கு, யாரிடமாவது மாற்றங்கள் ஏற்படுகிறதோ இல்லையோ, எம் பலமே எதையும், எப்பவும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிருந்தன் இணைப்பிற்கு!

* இந்திய மாநில தேர்தல்கள் நெருங்குகின்றது!  

* அதைவிட தமிழ்நாட்டு பிரதிநிதிகளின் துணையின்றி ஆட்சியை தொடரமுடியாத மத்திய அரசு!

* தமிழ்நாட்டில் கட்சி பேதமின்றி ஆரம்பித்திருக்கும் ஈழ்மக்களுக்கான ஆதரவலை!

* இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்/கொலைக்கலாச்சாரம் பகிரங்கமாக ஆதரிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டமை!

... போன்ற சில காரணங்களுக்காக இந்திய ஆளும்வர்க்கம் கொஞ்சம் அடக்கி வாசிக்க முற்படுவதாகவே நினைக்கிறேன். மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத்தொடங்கியுள்ள அரசியல் குரல்களின் வல்லமையைப் பொறுத்தே மத்தியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது! இதுவரை எமக்காக ஒலித்த "நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ராமதாஸ், ..." போன்றோர்களுடன் "கலைஞர்" இணைந்திருப்பது ஒரு பாரிய மாற்றத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதைவிட அண்மையில் சூழ்நிலைகளாலோ அல்லது நிஜமாகவோ தமிழக முதலமைச்சர், இலங்கை ஜனாதிபதியை சந்திக்க மறுத்த நிகழ்ச்சியும், மத்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.

எங்கு, யாரிடமாவது மாற்றங்கள் ஏற்படுகிறதோ இல்லையோ, எம் பலமே எதையும், எப்பவும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

இது தான் எனது கருத்தும். எந்த நாடுமே தன் நலனுக்கு பின தான் எம்மைப் பற்றி சிந்திக்கும். ஆகவே நாமே எம்மை காத்துக் கொள்ளவேண்டியது தேவையாகும்

இந்தியா ஒரு போதும் முற்றுமுழுதாக ஈழத்தமிழருக்கு சார்பாக நடந்ததும் இல்லை...இனி நடக்க போவதும் இல்லை!

இந்தியா எமக்கு சார்பாக நடந்திருக்க கூடும்... ஈழத்தில் பெரும்பான்மை இனத்தினால் அடக்கி ஒடுக்கபடுவது எந்தவகையிலும் இந்தியாவின் மாநிலங்களூடன் தொடர்பற்ற ஒரு இனமாக இருந்திருந்தால்!

இந்தியா தூங்கும் போதும் காலாட்டிகொண்டே தூங்கும்..

அவ்ளோ பயம் அடுத்த நிமிடம் அதன் இறையாண்மைக்கு என்னாகுமோ என்று!

உலகத்திலேயே இந்தியா போல ஒரு நாடு இல்லை!

இருந்தாலும் அது ஜனநாயக அரசியல் வழிமுறையை பின்பற்றி செயற்படுவதாக இருக்காது!

உலகில் இருக்கக்கூடிய பல நாடுகள் போல் சில மடங்கு பரப்புள்ள ஒவ்வொரு மாநிலங்கள்!

ஒவ்வொரு மொழிகள்! ஒவ்வொரு அரசியல் முறைமைகள் கலாச்சாரங்கள்..ஒவ்வொரு மாநில எல்லையிலும் சோதனை சாவடிகள்... என்று இத்தனையயும் தாண்டிதான் "நமது பிரதமர்" என்று அத்தேச மக்கள் அழைக்கிறார்கள்... அல்லது அழைக்க வைக்கப்படுகிறார்கள்!

இன்றைக்கு தமிழ்நாட்டில் எமக்காய் குரல் கொடுக்கும் அரசியல் சக்திகளின் அழுத்ததினால்தான் இந்தியா எமக்கு எதிராய் செயற்பட தயங்குகிறது என்று நாம் நினைத்தால் அது அதீத கற்பனை! மாற்றுவழியை அது சுலபமாக பெற்றுக்கொள்ளும்!! ...

அரசியல் வியாபாரம் என்று ஆகிவிட்ட இன்றைய நிலையில்!

ஒரு சர்வதேச பத்திரிகையாளர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதற்காகவே எந்தவிதத்திலும் அது தனக்கு பாதிப்பு இல்லையென்று தெரிந்தும்....ராஜீவ் கொலை வழக்கு பற்றி பூச்சாண்டி காட்டி...உடனடியாக இந்தியா தனது படையை அனுப்பி பிரபாகரனை கைது செய்யவேண்டும் என்று திடீர்தேசப்பற்று காட்டிய ஜெயலலிதா போன்றவர்களை விலைக்கு வாங்கி நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு எவ்வளவு நேரம் செல்லும்?

இன்று எமக்காய் ஆதரவுதரும் சக்திகளின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறது..எப்படியென்றால் "பிடி என்கையில் இருக்கிறது" என்ற நிலமையில்.. அது கொஞ்சம் தளர்ந்தாலும் இந்தியா மாற்றுவழியை நாடும்!

தற்போதைய சூழ்நிலையில் எமக்கு ஆதரவு தரும் சக்திகளை கட்டாயம் அணைத்து போகவேண்டும்தான்..

எமக்கு சாதகமாயுள்ள நிலைமகளின் அதியுச்ச பயன்பாட்டை பெற்றேயாக வேண்டும்தான்...

ஆனால் எம்முடன் தோழ்கொடுக்கும் தமிழக உறவுகள்

கொஞ்சம் ஓவெரா உணர்ச்சி வசபடுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்!

"இலங்கைக்கு உதவி செய்தால் தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆகும்" என்கிறீர்களே...வேணாமே!

எங்களூக்காய் நீங்கள் செய்யும் உதவிகள் நன்றியோடு பார்க்கிறோம்! பார்க்கப்படும்! ஆனால் மேற் குறிப்பிட்ட வசனம் வேண்டவே வேண்டாம்!

தமிழனுக்கு உதவி செய்தால் என்னென்ன சாதகம் பாதகம் எமக்கு என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கு நீங்களே தகவல் கொடுக்கிறீர்கள்! 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.