Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த ஒரு சின்ன வெளிச்சம்தான் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம்.

Featured Replies

உலகில் யாராவது தங்களுக்காக குரல் கொடுக்க மாட்டார்களா என ஏங்கித் தவித்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு சின்ன வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஆதரவாவது தங்களுக்குக் கிடைக்காதா என்றுதான் அவர்கள் நெடுநாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான போர் உக்கிரத்தை அடைந்த நிலையில் 2008 அக்டோபர் முதல் அப்போதைய தி.மு.க. அரசிடம் இலங்கைக்கு எதிராக சட் டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஈழ ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், ‘காங்கிரஸை பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்ற காரணத்தால் அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்தக் கோரிக்கைக்கும் இலங்கைத் தமிழர்களின் அழுகுரலுக்கும் செவிசாய்க்கவே இல்லை.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இருண்டு கிடந்த ஈழத்தமிழர்களின் முகத்தில் நம்பிக்கை விளக்கை ஏற்றியிருக்கிறது. ‘‘மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’’ என்று முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திருமாவளவன் முதல்வர் ஜெயலலிதாவின் இத்தீர்மானத்தை வரவேற்றிருப்பதுதான் இத்தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் வரவேற்புக்கு சாட்சி!

இந்தத் தீர்மானம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களிடம் கேட்டோம்.

வைகோ (ம.தி.மு.க. பொதுச் செயலாளர்)

‘‘தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட இத்தீர்மானம் தாய்த்தமிழகத்திலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் நம்பிக்கை விதைகளை விதைத்தி ருக்கிறது. இந்தத் தீர்மானத்தின் முழு விவரங்களையும் படித்துவிட்டு இதுகுறித்து விளக்கமாக பின்னர் பேசுகிறேன்.’’

சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ் எம்.பி.)

‘‘இலங்கையில் 30 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் பெருமளவு இந்தியாவில் இருந்தே போகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தரவும், மீன்பிடி படகுகள் வழங்கவும், மலைவாழ் மக்களுக்கு பேருந்து வசதி செய்து தரவும், வேலை வாய்ப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டு நலிந்து போன அம்மக்களை மேலும் துயரத்தில் தள்ளவே இந்தப் பொருளாதாரத் தடை உதவும். ராஜபக்ஷேவை தண்டிக்க வே ண்டும் என்பதற்காக தமிழர்களைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? இலங்கை மீது இந்தியா தடை விதித்தால் இந்தியாவின் பகை நாடான சீனா இலங்கைக்கு உதவ முன்வரும் என்பதை மறந்துவிடக் கூடாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என்றார்.

கொளத்தூர் மணி (பெரியார் திராவிட கழகத் தலைவர்)

‘‘டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ‘இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்துள்ளது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஐ.நா. சபையின் மூவர் குழுவும் இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. உண்மையில் இலங்கை விடுதலை பெற்ற நாளில் இருந்தே தமிழர்கள் தொடர்ந்து துயரங்களுக்கு ஆளாகி வரு கின்றனர். இதுவரை அங்கே நடந்த மிகப்பெரிய ஆறு கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இலங்கை ராணுவத்தில் சிங்களவர்கள் மட்டுமே உள்ளனர். அதில் தமிழர்கள் இல்லை. எனவேதான் அங்கே நிகழ்த்தப்பட்டது தமிழினப் படு கொலை என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

தெற்கு தைமூர், தெற்கு சூடான், கொசாவா போன்றவை தனிநாடாகப் பிரிந்து செல்ல பொது கருத்துக் கேட்பு நடத்தப்பட்டன. அப்படியான பொது வாக்கெடுப்பு இலங்கைத் தமிழர்களிடையே நடத்தப்பட வேண்டும். இணைந்து வாழவோ, பிரிந்து வாழவோ அவர்களின் விருப்பத்துக்கே விடவேண்டும். இதுவரை இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்த துயரங்களை தமிழ்நாடு அரசு மௌனமாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானத்தால் தமிழர்கள் வாழ்வில் புது எழுச்சி உருவாகியுள்ளது.’’

சீமான் (தலைவர், நாம் தமிழர் இயக்கம்)

‘‘டப்ளின் தீர்ப்பாயம், ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கையோடு தாய்த் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட இப்படியொரு தீர்மானம் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு உத்வேகம் கொடுக்கும்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளது என்று ஐ.நா. அவையே ஒப்புக் கொள்ளும் போது, எட்டுக் கோடி தமிழர்கள் வாழும் நாட்டில் இனப்படுகொலைக்கு எதிராக எ ன்ன செய்தார்கள் என்று உலக நாடுகள் கவனிக்கும்’’ என்றவரிடம், ‘பொருளாதாரத் தடை விதித்தால் இலங்கையில் உள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸார் சொல்கிறார்களே?’ என்று கேட்டோம்.

‘’தமிழர்கள் மீது போர் தொடுத்தால் அதற்கு ஆதரவு கொடுப்பதும், சிங்கள அரசு மீது பொருளாதாரத் தடை விதித்தால் அது தமிழர்களுக்கு எதிரானது என்று பேசுவதும் காங்கிரஸ்காரர்களின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கைக் காட்டுகிறது. பொருளாதாரத் தடை என்பது அந்நாடு மீது அழுத்தம் கொடுப்பதற்குத்தான். தடையை உடைக்க வேண்டும் என்றால் தமிழர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவர்களுக்கு வரும். பொருளாதாரத் தடை மூலமாக ராஜபக்ஷே சரண் அடைவான். இந்தத் தீர்மானத்திற்காக உலகம் முழுவதும் தமிழர்கள் வெறும் உதட்டளவில் அல்ல, உள்ளத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொண் டிருக்கிறார்கள்’’ என்றார், சீமான்.

நன்றி. குமுதம் ரிப்போர்ட்டர்.

இச்செய்தி தொடர்பான படம் மற்றும் வீடியோ பார்க்க...

http://www.thedipaar.com/news/news.php?id=29436

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு என்பது ஒரு கடல் மாதிரி! அதில் உருவாக்கப் பட வேண்டியது ஒரு சிறிய அலை மட்டுமே!

அது தானாக உருண்டு, பேரலையாகி சுனாமியாக மாறிவரும்போது, அதன் முன்பு இந்தியப் பேரரசு கூட நிமிர்ந்து நிற்க முடியாது!

இணைப்புக்கு நன்றிகள், ஈசிஜொப்ஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த ஒரு சின்ன வெளிச்சம்தான் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.