Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு

[ கனடியத் தமிழர் பேரவை ] - [ Jun 14, 2011 21:29:30 GMT ]

யூன் திங்கள் 14ஆம் நாள் புதன்கிழமையன்று கனடியப் பாராளுமன்றத்தில் என்.டி.பி. கட்சியும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து ஓர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர்.

கனடாவின் முன்னணித் தேசிய ஊடகங்கள் பல கலந்துகொண்ட இம் மாநாட்டில் என்.டி.பி. கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவை சார்பில் யோர்க் பிராந்தியக் கல்விச் சபை உறுப்பினரும் கனடியத் தமிழர் பேரவையின் உபதலைவருமான செல்வி வனிதா நாதன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்களும் பங்கேற்றனர்.

ஊடகவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் 'கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் முழுமையான ஆதரவை இம் முயற்சிக்கு வழங்க வேண்டுமெனவும் சிறிலங்கா அரசு போர்க்குற்ற விசாரணைகளுக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இன்று பிரித்தானியாவில் சன்ல் 4 தொலைக்காட்சியல் காண்பிக்கப்படவிருக்கும் ஆவணப்படம் தொடர்பாக அவர் கூறுகையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக பல விடயங்களை நாம் கடந்த காலங்களில் கேள்வியுற்றபோதும் இப்போது அவற்றை ஆதாரங்களோடு காணக்கூடியதாக இருக்கிறது. நீதியான விராசணை மற்றும் குற்றமிழைத்தோருக்கான சரியான தண்டனை வழங்கல் மூலமாக மட்டுமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு என்.டி.பி. கட்சி எப்போதுமே ஆதரவு வழங்கியதோடு கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் இச் செயற்பாட்டில் ஒன்றிணைய வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறது. பாதிக்கப் பட்டோருக்கு நீதி வழங்கிடவும் கலாச்சார வேறுபாடுகளற்ற சமாதானத்தை நிலைநாட்டிடவும் போர்க் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் எப்போதுமே குரல் கொடுக்கும் கனடா இந்த விடயத்திலும் அழுத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து செல்வி வனிதா நாதன் அவர்கள் தனது உரையில் இன்று சர்வதேசத்தின் கவனத்தையே ஈர்த்திருக்கும் சிறி லங்காவின் இந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கச் செனற் சபையும் பிரித்தானிய பாராளுமன்றமும் மிகுந்த கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணும் கனடாவும் இவ்விடயம் குறித்து உரத்துக் குரல்கொடுக்க வேண்டுமென்றும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் வலியுறுத்துவது போல சிறி லங்கா சர்வதேசப் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட முனைந்து செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

சிறி லங்காவில் நடைபெற்ற இப் போர்க்குற்றங்களை உலக அரங்கின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக மிகக் கடுமையாகவும் திறமையாகவும் உழைத்து வரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆராரச் செய்தி திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்களால் வாசிக்கப்பட்டது. இவர் தொடர்ந்து பேசுகையில் கனடியத் தமிழர் பேரவையின் வேண்டுகோளை ஏற்று பல கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்துத் தொடர்ந்து பாராளுமன்றத்திற் குரல் கொடுப்பதற்கு உறுதியளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கனடிய வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இம் மாநாட்டிற் கலந்து கொண்டனர். மாநாட்டில் வழங்கப்பட்ட தகவல்களை அவர்கள் கூர்ந்து அவதானித்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக ஊடகவியலாளர் கேள்விகளுக்கான மூவரின் பதில்களோடும் மாநாடு நிறைவு பெற்றது.

மூலம்: கனடியத் தமிழர் பேரவை

அவசர அறிவித்தல்

கனடாவின் பிரபல தேசிய ஊடகங்கள், நேற்று முன்தினம் இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் சேனல் 4 தொலைக்காட்சியின் "இலங்கையின் கொலைக்களம்" என்ற விவரண சித்திரம் குறித்த தகவல்களை கனேடிய மக்களுக்கு, தொலைக்காட்சி மூலமாகவும், கனேடிய தேசிய ஊடங்கள் மூலமாகவும் வெளிக்கொணர முன் வந்துள்ளன.

இம் மைய ஊடகங்கள் , 2009 ஆண்டு மே மாத இறுதிகட்ட போரின் போது, தங்களின் நெருங்கிய உறவினர்களை இப்போர்ச்சூழலில் பறிகொடுத்த கனேடிய தமிழ் உறவினர்களை அவசரமாக நேர்காணல் செய்ய விரும்புகிறார்கள்.

இவ் மைய ஊடங்களில் பங்குபற்றி , இலங்கையின் கொலை களம் சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொணர விரும்பும் தமிழ் கனேடிய உறவுகள் உடனடியாக கனேடிய பேரவையை 416 -240 -0078 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.