Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நாடு கடத்த இருந்தோரில் ஒருவர் தற்கொலை முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Thursday, 2011-06-16 19:50:16]

இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 5.00 மணிக்கு தனி விமானம் மூலம் தமிழர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். எனவே இதனைத் தடுக்க தமிழர்கள் அங்கே ஒன்று திரண்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என தடுத்துவைத்துள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடைபெற்றால் சனல் 4 தொலைக்காட்சி அதனை ஒளிபரப்ப தயாரகவும் உள்ளது எனவும் அறியப்படுகிறது.

ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என திடீர்போராட்டம் அறிவிக்கப்படவேண்டும் என தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ள ஒலிநாடாவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றாலும், அவர்கள் இலங்கை செல்லும்போது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை நாம் உலகிற்கு வெளிக்கொண்டுவருதல் வேண்டும். இந்த வகையில் ஒரு திடீர் போராட்டம் இன்று மாலை 3 மணி முதல் 5 மணிவரை இடம்பெற்றால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நாம் ஒரு அளவிற்கேனும் தடுக்க முடியும்.

இல்லையே அவர்கள் இலங்கை சென்றுள்ள விடையத்தை நாம் வெளியுலகிற்க்கு கொண்டுவந்தால், அவர்கள் உயிர் இலங்கையில் பாதுகாக்கப்படும். அதனால் தமிழர்களே உடனடியாக ஹீத்ரூ விமானநிலையத்தில் 3 மணி முதல் 5 மணிவரை ஒன்று கூடி உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=44964&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

(2ம் இணைப்பு) லண்டனில் நாடு கடத்த இருந்தோரில் ஒருவர் தற்கொலை முயற்சி: ஆபத்தான கட்டத்தில் உள்ளார்! குடிவரவு அதிகாரிகள் கருத்துக் கூற மறுப்பு.. விமான நிலையதில் தடுப்பிலுள்ளோரது உதவிநாடும் குரல்.. Top News

[Thursday, 2011-06-16 19:50:16]

இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 5.00 மணிக்கு தனி விமானம் மூலம் தமிழர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். எனவே இதனைத் தடுக்க தமிழர்கள் அங்கே ஒன்று திரண்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என தடுத்துவைத்துள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடைபெற்றால் சனல் 4 தொலைக்காட்சி அதனை ஒளிபரப்ப தயாரகவும் உள்ளது எனவும் அறியப்படுகிறது.

Top News விமான நிலையதில் தடுப்பிலுள்ளோரது உதவிநாடும் குரல்..

ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என திடீர்போராட்டம் அறிவிக்கப்படவேண்டும் என தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ள ஒலிநாடாவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றாலும், அவர்கள் இலங்கை செல்லும்போது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை நாம் உலகிற்கு வெளிக்கொண்டுவருதல் வேண்டும். இந்த வகையில் ஒரு திடீர் போராட்டம் இன்று மாலை 3 மணி முதல் 5 மணிவரை இடம்பெற்றால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நாம் ஒரு அளவிற்கேனும் தடுக்க முடியும்.

இல்லையே அவர்கள் இலங்கை சென்றுள்ள விடையத்தை நாம் வெளியுலகிற்க்கு கொண்டுவந்தால், அவர்கள் உயிர் இலங்கையில் பாதுகாக்கப்படும். அதனால் தமிழர்களே உடனடியாக ஹீத்ரூ விமானநிலையத்தில் 3 மணி முதல் 5 மணிவரை ஒன்று கூடி உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள்.

இன்று பிரிட்டனிலிருந்து திருப்பப்படும் அகதிகள் பழிவாங்கப்படலாம்! 16-Jun-2011 at 3:37 PM

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் பழிவாங்கப்படலாம் என்கிற நிலை காணப்படுவதால் பிரித்தானிய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளனர் என்ற பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்தே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதன் மூலம் இந்த மக்கள் பல துன்பங்களை எதிர்நோக்கலாம் என்பதால் பிரித்தானியா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பிராந்தியத்திற்கான இயக்குனர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நின்றவர்கள் தற்போதும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் தமிழ்ப் புலிகளை எதிர்த்தனர்,ஆனால் இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஆபத்துமிக்க செயற்பாடுகளால் சிலநேரங்களில் பாதிக்கப்பட்டுமுள்ளனர்" என பிராட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினருக்கு, பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதற்கான விமானச் சிட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

"அண்மையில் எனது அடையாள ஆவணங்களை உள்விவகார அலுவலகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட போதிலும் எனது காரில் சென்று கொண்டிருந்த பொழுது நான் தடுக்கப்பட்டுள்ளேன்.

வியாழன் அன்று நான் எனது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்." என தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர் ஒருவர் பி.பி.சி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இவர்களின் பாதுகாப்புக்கருதி பெயர்கள் வெளியிடப்படவில்லை.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் முன்னரே தற்போதே தமக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக, தடுப்பு முகாமில் உள்ள 30 வயதுடைய ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தனக்கு பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே தான் பிரிட்டன் வந்ததாக இவர் கூறுகிறார். இவருக்குத் திருமணமாகி 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது வீட்டாருக்கு தனக்க ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து முழுமையாகத் தெரியாது என்றும் இவர் கூறியுள்ளார்.

நாடு கடத்தப்படுவோம் என்று தெரியவந்தவுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை இவர்களை பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை குறித்து குடிவரவு அதிகாரிகள் கருத்துக் கூற மறுத்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=44964&category=TamilNews

  • கருத்துக்கள உறவுகள்

இவன் பிரிட்டிஸ் காரன் யோக்கிய சிகாமணியாக்கும் .. அந்த காலத்தில் இருந்து இவனுங்களால தான் உலகத்தில் பாதி தொல்லை.. அவங்களே உயிர் பிழைக்க வந்திருக்கிறார்கள் அவர்களிடம் போய் ரூல்ஸ் பேசிகொண்டு இருக்கிறார்கள்.. :(

.

இன்றைய தினம் அவ்வாறு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுத் திருப்பியனுப்பபப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தியாறு என்றும், அதில் பதினைந்து தமிழர்கள், ஏழு முஸ்லிம்கள், நான்கு சிங்களவர்கள் உள்ளடங்குவதாகவும் குடிவரவுக்கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா மேலும் தெரிவிக்கின்றார்.

நாடுகடத்தப்பட்டவர்களில்

பெரும்பாலானவர்கள் மாணவர்களுக்கான வீசாவில் பிரிட்டன் சென்று வீசா காலாவதியான பின்னரும் அங்கு தங்கியிருக்க முயற்சித்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.