Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புல்லுக் குளமும் தாரை வார்க்கப்படுமா? தொடரும் பொருளாதார வளச் சுரண்டல்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 ஜூன் 2011

யாழ் நகரப்பகுதியிலுள்ள புல்லுக் குளமும் தாரை வார்க்கப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அதாவது இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையினருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றது. நட்சத்திர விடுதிகளுக்காகவும் உணவு விடுதிகளுக்காகவுமென பல்வேறு இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. யாழ் நகரின் புல்லுக்குளமும் தற்போது தாரைவார்க்கப்படலாம் என அஞ்சப்படுகின்றது.

வடக்குமாகாண ஆளுனர் யாழ்ப்பாணம் புல்லுக்குளம் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றார். யாழ் நகர மையப்பகுதியில் அசோகா விடுதியின்; பின்புறமாக அமைந்துள்ள பகுதி புல்லுக்குளமாகும். இதனை ஒரு சுற்றுலா பொழுதுபோக்கு மையமாக மாற்றுவதே ஆளுனரின் திட்டமாகக் காணப்படுகின்றது. ஏற்கனவே பல மில்லியன் ரூபா செலவழித்து நடைபாதைகள் உள்ளிட்ட பகுதிகள் புனரமைக்கப்படடடிருக்கின்றன.

இந்நிலையில் குளத்தை ஆளப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் மாநகரசபையில் இது தொடர்பாக எந்தவொரு தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என மாநகரசபை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும் இந்தக் குளத்தை பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்குமாறு ஆளுனர் நிர்ப்பந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினருக்கு இதன்மூலம் வருவாயை ஈட்டுவதே நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குளப் பகுதியில் சவாரிப் படகுகள் சகிதம் பொதுமக்கள் சுற்றுலா மையமாகப் பயன்படுத்துவதற்குமான ஏற்பாடுகளை சிங்களத் தரப்பினூடாகச் செய்யவும் அதனையண்டிய பகுதிகளில் விடுதிகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான அனுமதி எதுவுமே மாநகரசபை நிர்வாகத்திடம் பெறப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே நேற்றையதினம் இந்தப் பகுதியில் குளத்தை தூர்வாரும் பணியை மாநகரசபை ஆரம்பித்திருக்கின்றது. இந்த நடவடிக்கைக்கு யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணம் முழுமையாக இதயங்கனிந்த ஆதரவு வழங்கி வருவதாகத் தெரிய வருகின்றது. இதன்மூலம் அவர் நிதிக் கையாடல்களை மேற்கொண்டிருப்பதாக தமிழ் தேசிக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இதனிடையே நேற்று உரையாற்றிய மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் தமது சுயநல அரசியல் கருதி இந்த அபிவிருத்திப் பணியைத் தடுத்து நிறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை இது குறித்து குளோபல் தமிழ்ச் செய்திகளிடம் கருத்து கருத்து வெளியிட்டுள்ள யாழ் நகரை அண்மித்த நலன் விரும்பிகள்; யாழ் மாநகரசபையின் அனுமதியுடன் வெளிப்படையான கேள்வி விண்ணப்பப் பத்திர கோரலினூடாக அதாவது ரென்டர் முறையினூடாக இவ்வாறான வருமான மூலங்கள் கொடுக்கப்பட வேண்டும். அதில் நாட்டின் பிரஜைகள் யார் வேண்டுமானாலும் அதிக விலையை கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும்.

அதனை விடவும் இவ்வாறான இயற்கையுடன் கூடிய சூழலை மாநகர சபையே நிர்வகித்து அதன் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை நகரின் அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும். ஆனால் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் உள்ள பெரும்பான்மை அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் திட்டமிட்டு அவற்றை குறித்த சமூகப் பிரிவினருக்கு தரைவார்ப்பதனை ஏற்க முடியாது என கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட மிகப் பிரபலமான விகாரமா தேவி பூங்காவை அரசாங்கம் தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுக்குமா? அவ்வாறு கொடுக்குமானால் இந்த நடைமுறை சரியாகும். ஆக யாழ் மாநகர சபையில் இவை குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு மாநகர சபைக்கு உட்பட்ட வருமானம் ஈட்டும் வளங்களை தனியாருக்கு குத்தைகைக்கு கொடுக்க முடியுமா எனத் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, அரசியல் செல்வாக்குகளும் சுயநலங்களும் இவற்றை தீர்மானிக்கும் நடைமுறை தொடருமானால் திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கே வழிவகுக்கும் என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62946/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

குப்பையும் வண்டலும் பெரும் புல்புதர்களும் உள்ள குளத்தை யாழ் மாநகர முதல்வர் துப்பரவுசெய்ய அனுசரணையாக இருப்பது நல்லது. இதன்மூலம் துர்நாற்றம் தவிர்க்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

புல்லுக்குளத்தை புனரமைக்க... பல காலம் நடவடிக்கை எடுக்கப்பட்டும், அதற்கான கால நேரம் சரிவராமல் இருந்தது.

இப்போது...... நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய விடயம். பக்கத்தில் முனியப்பர் கோவில் இருக்க.....

அதற்குள் சனம் செய்யும் அசிங்கங்களுடன், நுளம்பு உற்பத்தியாகும் ஃFபக்றி யாகவும் இருந்தது மாற வேண்டும்.

இந்த குத்தகையை, பெரும்பான்மை இனத்தவருக்கு கொடுக்காமல், சிறுபான்மை முஸ்லிம் அல்லாத தமிழருக்கு கொடுக்க ஆளுநர் முன்வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.