Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெரினாகடற்கரையில் இடபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011 15:35 |

சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி 'மே 17 இயக்கம்' அழைப்பு விடுத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களின் வருகையுடன் உணர்வுபூர்வமாக நடந்துள்ளது.

மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் உணர்வுள்ள கட்ச்சிகளும்,அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாது இந்த நிகழ்வுக்கும் கட்சி பேதமின்றி ஒரு குடையின் கீழ் இந்த நிகழ்வை நடத்திமுடித்துள்ளமை சிறப்பே.

http://youtu.be/AIicQFW8Pcc

http://youtu.be/Sry8EpKXUKU

http://youtu.be/zY3uA8-Wk_k

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8170:-10-&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிள்கொடி உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்......

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெரினாகடற்கரையில் இடபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்பு

நன்றி உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

மெழுகுவர்த்தி நெருப்பு, பெரு நெருப்பாய் மாறட்டும்!

நன்றிகள் தமிழ் நாட்டு உறவுகளுக்கு!!!

3 மணி நேரமாக கடும் மழை பெய்தபோதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியதாக நேரில் சென்றவர்கள் கூறுகிறார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்பாகத்தான் மழை ஓய்ந்ததாம்.

அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் உணர்வுள்ள கட்ச்சிகளும்,அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாது இந்த நிகழ்வுக்கும் கட்சி பேதமின்றி ஒரு குடையின் கீழ் இந்த நிகழ்வை நடத்திமுடித்துள்ளமை சிறப்பே.

இந்த விடயத்தில், தமிழக கட்சிகள் ஒன்றிணைந்த்து செயற் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்க‌ளின் உணர்வுபூர்வ அ‌ஞ்ச‌லி

இலங்கை இராணுவத்தினரா‌ல் கொடூரமாக கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ஈழத்தமிழர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆ‌ம் தே‌தியை உலககெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. சபை கடைபிடித்து வருகிறது.

அந்த வகையில் இலங்கை இராணுவத்தின் பிடியில் சிக்கி, சித்ரவதைக்கு உள்ளாகி உயிர் இழந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு நேற்று பல்வேறு அமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள், மே 17 இயக்கம் நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க. பதிவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலைக்கு பின்புறம் குவிந்தனர். இலங்கையில் நடைபெற்ற கொடுமைகளை சித்தரிக்கும் படங்களை கையில் ஏந்தி வந்திருந்தனர்.

இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் நினைவாக மெரினா கடற்கரை மணலில் நினைவு தூண் அமைக்கப்பட்டு, அதன் அருகில் மலர்களால் தூவப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெரினா கடற்கரைக்கு பெற்றோர், நண்பர்களுடன் வந்திருந்த மாணவ-மாணவிகளும் இந்த உணர்வுபூர்வமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் அர்ப்பணிப்பை வழங்கினர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காட்சியளித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சென்றிந்த நானும், கவிதைவீதி சௌந்தர், வந்தேமாதரம் சசியும் அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து பெருமிதம் அடைந்தோம். மேலும் பதியுலகைச் சேர்ந்த பதிவர் கும்மி, உண்மைத்தமிழன், செந்தில், மதராச பவன் சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தரத் தான் நான் அனைவரும் இங்கே கூடினோம். இந்த ஒற்றுமை, ஒன்றுப்பட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை நிச்சயமாக அடைய முடியும்.

அதற்கு இந்த நிகழ்வு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.

http://sakthistudycentre.blogspot.com/2011/06/blog-post_27.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.