Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா - சிறிலங்கா - இந்தியா உறவு : இந்தியப் பேராசிரியர் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வியாழக்கிழமை, 30 யூன் 2011, 09:43 GMT ] [ நித்தியபாரதி ]

அண்மையில் ரஷ்யாவின் சென்பீற்றேர்ஸ்பேக்கில் இடம் பெற்ற பொருளாதார உச்சி மாநாட்டில் சீன அதிபர் கூ ஜின்ராவோவை [Hu Jintao] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இவ்விரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் தமது நாடுகளிற்குத் தேவையான உதவிகள் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.

சீனா-சிறிலங்கா உறவு நிலை தொடர்பாக புதுடில்லியிலுள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தின் அனைத்துலக அரசியல் மற்றும் ஆயுத ஒழிப்பு விடயம் தொடர்பான மையத்தின் பேராசிரியரும் தலைவருமான சுவரன் சிங் [swaran Singh], World Politics Review - WPR தளத்துடனான மின்னஞ்சல் மூலமான நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

WPR: அண்மைய நாட்களில் சீனா – சிறிலங்கா உறவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பாகவும், இந்த உறவின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விளக்கம் தரவும்?

சுவரன்சிங்: 'சீனா ஒன்றே' என்ற சீனர்களின் இறையாண்மைக் கொள்கைக்கும், சீனாவின் மனித உரிமைகள் விவகாரத்திலும் ஆதரவு வழங்கிவரும் சிறிலங்காவிற்கு பொருளாதார, இராணுவ மற்றும் தொழினுட்பம் சார் உதவிகளைச் செய்கின்ற மிகப் பிரதான ஆதரவாளராக சீனா விளங்குகின்றது.

அண்மைய ஆண்டுகளில் சீனாவானது சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் முக்கிய கட்டட நிர்மாணங்கள், துரித நெடுஞ்சாலை அமைத்தல், துறைமுக அபிவிருத்தி போன்ற கட்டுமாணப் பணிகளிற்காக பெருமளவான நிதியை முதலீடு செய்து வருகின்றது.

மிக அண்மையில் அம்பாந்தோட்டை அபிவிருத்தி வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித அபிவிருத்தித் திட்டத்திற்காக சீனாவானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவிற்கு வழங்க உடன்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அம்பாந்தோட்டையானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிராந்தியமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய அனைத்துலகத் துறைமுகம், நிலக்கீழ் அகழி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எரிபொருள் மீள் நிரப்பு வசதிகள் மற்றும் சிறிலங்காத் தலைநகர் கொழும்பிலிருந்து தெற்கே 150 மைல்கள் தொலைவிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சூழ அமைக்கப்படும் அனைத்துலக விமான நிலையம் என்பனவற்றை உள்ளடக்கிய மாபெரும் திட்டத்திற்குத் தேவையான 85 வீதமான நிதி சீன நாட்டாலேயே முதலீடு செய்யப்படவுள்ளது.

இந்தப் பிராந்தியத்தின் மிகப் பெரும் கப்பல் போக்குவரத்திற்கான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாக அம்பாந்தோட்டையைக் கட்டியெழுப்புவதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்காகும்.

WPR: சீனாவானது சிறிலங்காவின் நலனில் அதிக அக்கறை எடுத்துள்ளமை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம் தரவும்?

சிங்: சீனா தொடர்பான சிறிலங்காவின் உறுதியான ஆதரவானது டிசம்பர் 2005ல் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் சீனா ஒரு பார்வையாளராகக் கலந்துகொள்ள வழிசமைத்தது. இதன் மூலம் சீனாவானது இந்திய விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தக் காரணமாக அமைந்தது.

இந்தியா, சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவானது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. இனம் மற்றும் கலாசார ரீதியாக இரு நாடுகளிற்கும் இடையில் மிகப் பலமான ஒற்றுமை காணப்படுகின்றது.

அத்துடன், பிரித்தானியர்களின் கொலனித்துவ நாடுகளாக இருந்த இவ்விரு நாடுகளும் தற்போது பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.

புவியியல் ரீதியாக இந்தியா, சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் மிகவும் அண்மித்த தூரத்தைக் கொண்டுள்ளன. அதாவது மிகவும் குறுகிய நீர்ப்பரப்பான பாக்கு நீரிணையால் இவ்விரு நாடுகளும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில், சீனாவின் நிதி ரீதியிலான ஆதரவு சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் ஒரு இராஜதந்திர உறவைப் பேண உதவியுள்ளது. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான கேந்திர நலனும் சிறிலங்கா மீது சீனா தனது ஆதரவையும் செல்வாக்கையும் வழங்கக் காரணமாக உள்ளது.

இந்நிலையில்,இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள சிறிலங்காத் தீவானது, சீனாவிற்காக கேந்திர முக்கியத்துவம் மிக்கதும் கவர்ச்சி மிக்கதுமான இடமொன்றை வழங்க முன்வந்துள்ளது.

சிறிலங்காவுடன் மிகவும் சுமூகமானதொரு உறவு நிலையைப் பேண இந்தியா முயற்சித்திருந்த வேளையில், சீனாவானது சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் எதிர்பார்ப்பிற்கு பெரும் தடையாக உள்ளது.

சிறிலங்காவுடன் நல்லதொரு உறவைப் பேணவேண்டும் என்ற இந்தியாவின் முயற்சியின் ஒரு அங்கமாகவே, 2009 மார்ச்சில் சிறிலங்கா அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்திற்காக இந்தியாவால் வழங்கப்பட்ட இராணுவ உதவியும் பார்க்கப்படுகிறது.

அத்துடன், இந்திய-சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான கலந்துரையாடல், அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதரகங்கள், சில கட்டுமானத் திட்டங்கள் என்பனவும் சிறிலங்காவுடன் சிறந்த உறவைக் கட்டியெழுப்புவதற்கான இந்தியவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளாகும்.

பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை மீளப் புனரமைத்தல், துரையப்பா விளையாட்டரங்கை நவீனமயப்படுத்துதல், யாழ்ப்பாணத்தில் புதிய கலாசார மையம் ஒன்றை உருவாக்குதல் போன்றவை இந்தியாவால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானத் திட்டங்களில் உள்ளடங்குகின்றது.

WPR: முடிவடைந்த சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் தொடர்பாகவும், சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பின்னர் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் உள்ள உறவு நிலையில் எவ்வாறான மாற்றங்கள் அல்லது தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பாக விளக்குக?

சிங்: தமிழ் மக்கள் மீது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக அண்மைய நாட்களில் சிறலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மீது அனைத்தலக சமூகமும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டு வரும் இந்நிலையில், சிறிலங்காவானது சீனாவில் தங்கிவாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவுடன் ஒப்பிடும் போது, தனது நாட்டு நாடாளுமன்றின் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு, வெற்றிகரமான சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றால் இந்திய அரசாங்கம் சிறிலங்காவின் போர்க் குற்றங்களிற்கு ஆதரவளிக்க முடியாத நிலையில் உள்ளது.

விடுதலைப் புலிகளிற்கு எதிராக சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தின் போது அனைத்துலக யுத்தச் சட்டத்தை மீறிச் செயற்பட்டமைக்காக சிறிலங்கா அரசாங்கள் யுத்தக் குற்றங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்தது.

இதனைக் காரணமாகக் கொண்டு சிறிலங்காவின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது என ஐ.நாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 'நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள்' தொடர்பான சீனாவால் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 'நேர்மையான தேசிய மீளிணக்கப்பாடு' ஒன்று சிறிலங்காவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா பல தடவைகள் தனது அழுத்தத்தைக் கொடுத்து வந்துள்ளது.

அண்மைய காலங்களில், சீனாவும் இந்தியாவும் சிறிலங்காவுடன் மிகப் பலமான உறவைக் கட்டியெழுப்புவதில் உறுதியாக இருந்துள்ளன.

ஆசியக் கண்டத்தில் மிகப் பலம் பொருந்திய இவ்விரு பிராந்திய வல்லரசுகளுடனும் சமமானதொரு உறவைக் கட்டியெழுப்புவதை உறுதிப்படுத்துவதில், கொழும்பானது கடுமையான சவால்களிற்கு முகங்கொடுத்து வருவதென்பது உண்மையானதாகும்.

http://www.puthinappalakai.com/view.php?20110630104177

  • கருத்துக்கள உறவுகள்

இதனைக் காரணமாகக் கொண்டு சிறிலங்காவின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது என ஐ.நாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 'நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள்' தொடர்பான சீனாவால் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 'நேர்மையான தேசிய மீளிணக்கப்பாடு' ஒன்று சிறிலங்காவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா பல தடவைகள் தனது அழுத்தத்தைக் கொடுத்து வந்துள்ளது.

சீனாவினதும், இந்தியாவினதும் சிங்களம் தொடர்பான கொள்கையின் பெரிய மாறுபாடு ஒன்றும் கிடையாது என்பதே உண்மை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.