Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ : கருத்து வெளியிட மறுக்கிறார் நிருபமா - ‘இந்தியா ருடே‘ குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ : கருத்து வெளியிட மறுக்கிறார் நிருபமா - ‘இந்தியா ருடே‘ குற்றச்சாட்டு

[ செவ்வாய்க்கிழமை, 12 யூலை 2011, 00:45 GMT ] [ கார்வண்ணன் ]

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் இந்தியத் தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்ட பின்னரும், இந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசாங்கம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று இந்திய ஊடகமான ‘இந்தியா ருடே‘ தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நிகழ்த்திய கொடூரங்கள் குறித்த சாட்சியங்களை ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்டன.

ஆனாலும் இந்தியா தொடர்ந்து இதுபற்றி மௌனம் சாதித்து வருவதாகவும் ‘இந்தியா ருடே‘ குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளை, இவை விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்டவை என்று சிறிலங்கா கூறியுள்ளது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சனல்- 4 தொலைகாட்சி ஒளிபரப்பிய ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ என்ற- மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் சாட்சியான- ஆவணப்படத்தை ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி கடந்த வியாழக்கிழமை ஒளிபரப்பியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக சிறிலங்கா படைகளால் நடத்தப்பட்ட போரின்போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதை இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உறுதி செய்வதாகவும் 'இந்தியா ருடே' தெரிவித்துள்ளது.

ஆனாலும் இநதிய வெளிவிவகார அமைச்சு இதுபற்றிக் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவிடம் இது குறித்துக் கேட்டபோது அவர், இந்த விவகாரம் கறித்து தான் கருத்து வெளியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார் என்றும் இந்தியா ருடே மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110712104260

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ : கருத்து வெளியிட மறுக்கிறார் நிருபமா - ‘இந்தியா ருடே‘ குற்றச்சாட்டு

[ செவ்வாய்க்கிழமை, 12 யூலை 2011, 00:45 GMT ] [ கார்வண்ணன் ]

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் இந்தியத் தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்ட பின்னரும், இந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசாங்கம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று இந்திய ஊடகமான ‘இந்தியா ருடே‘ தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நிகழ்த்திய கொடூரங்கள் குறித்த சாட்சியங்களை ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்டன.

ஆனாலும் இந்தியா தொடர்ந்து இதுபற்றி மௌனம் சாதித்து வருவதாகவும் ‘இந்தியா ருடே‘ குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளை, இவை விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்டவை என்று சிறிலங்கா கூறியுள்ளது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சனல்- 4 தொலைகாட்சி ஒளிபரப்பிய ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ என்ற- மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் சாட்சியான- ஆவணப்படத்தை ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ தொலைக்காட்சி கடந்த வியாழக்கிழமை ஒளிபரப்பியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக சிறிலங்கா படைகளால் நடத்தப்பட்ட போரின்போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதை இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உறுதி செய்வதாகவும் 'இந்தியா ருடே' தெரிவித்துள்ளது.

ஆனாலும் இநதிய வெளிவிவகார அமைச்சு இதுபற்றிக் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவிடம் இது குறித்துக் கேட்டபோது அவர், இந்த விவகாரம் கறித்து தான் கருத்து வெளியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார் என்றும் இந்தியா ருடே மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110712104260

கூற வைக்க வேண்டியது தமிழகமக்களின் பொறுப்பு. அழிந்தது தமிழர், அழித்தது வட இந்தியன்.

தமிழக தமிழன் கூற வைக்கனும். இல்லையேல் இப்படியான் கொலைகள் காஸ்மீரிலும் தொடரும். என் தமிழகம் கூட கூடிய அதிகாரம் கேட்டால் இது தான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாடு வெட்டுபர்களிடம் போய்ப் பகவத் கீதைக்குக் கருத்துக் கேட்டால், அவர்களால் எப்படிப் பதில் சொல்ல முடியும்?

இந்த அரசியல் வல்லமை உள்ள அம்மாவை இந்தியா அமெரிக்க இந்திய தூதுவராக நியமிக்க உள்ளது. அங்கும் அவர் போய் ' நோ கமெண்ட்ஸ்' கூற முடியாது. ஆனால், தமிழன் விடயத்தில் எதை செய்தாலும் எதை சொன்னாலும், ' நோ புறபிளேம்ஸ்'.

வாழ்க இந்திய வல்லரசு! வளர்க காந்தி தேசம்!!

கொலைகாரர்கள் பயத்தில் உறைந்து போயுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.