Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி கேஜ் - கூண்டு - வன்னிப்படுகொலைகளின் புத்தகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி கேஜ் - கூண்டு - வன்னிப்படுகொலைகளின் புத்தகம்

2009 வன்னிக் கொலைக்களம் ஆவேசமாக அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தபோது ஐ.நாவுக்கான பேச்சாளாராக கொழும்பிலிருந்த அவுஸ்த்திரேலியரான கோர்டன் வைஸ் என்பவரால் வன்னிப் படுகொலைகள், அதற்கு முன்னரான காலம், படுகொலைகளின் பின்னரான காலம், அதன் முன்னரான, பின்னரான உலக ஒழுங்கு ஆகிய பல்வேறுபட்ட நிலைகளில் இருந்து ஒரு தொகுப்பாக தி கேஜ் எனு இந்த நூல் வரையப்ப்ட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விடயங்கள் எமக்கு முன்னரே பரீட்சயமாக இருந்தாலும் கூட குறிப்பாக வன்னி கொலைக்களத்தில் இறுதிக்காலத்தில் நடைபெற்ற கொடூரங்களை உள்ளிருந்த சாட்சிகளின் அடிப்படையிலும், ஐ.நா பணியாள்ர்களின் சாட்சியங்களினூடாகவும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

எழுந்தமானமாகப் பார்க்கும்போது போரில் ஈடுபட்ட இருதரப்பான சிங்கள அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் பற்றி விமர்சித்திருந்தாலும் கூட, இப்புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகளும், சாராம்சமும் சிங்கள அரசையும் அதன் ராணுவத்தையும் போர்க்குற்றவாளிகளாக காட்டுவதற்குரிய பல தகவல்களை அவர் இங்கே தொகுத்திருக்கிறார்.

சிங்கள சனாதிபதி மற்றும் அவரது தம்பியும் கொடுங்கோலனுமான கோத்தா, மகிந்த சமரசிங்க, விஜேசிங்க, பலித்த கோகோண, பீரீஸ் போன்ற இனவாதிகளின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் இந்த நூல், வன்னி மக்கள் இறுதி நாட்களில் அனுபவித்த கொடூரங்களை நாங்கள் இதுவரை பார்க்காத கோணத்திலிருந்து பார்த்திருக்கிறது.

மக்கள் வேட்டையாடப்படும்போது வாளாவிருந்த ஐ.நா, சர்வதேச சமூகம், மேற்குலக சனநாயக நாடுகள், இன்னொரென்ன் ஐ.நா அமைப்புகள் என்பவற்றைக் கடுமையாகச் சாடியிருக்கும் இந்த ஆசிரியர், அவர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்பதையும் ஆராயத் தலைப்பட்டிருக்கிறார்.

தமிழர்களாகிய நாம் வைத்திருக்கவேண்டிய ஒரு புத்தகம். தமிழரல்லாத மூன்றாம் தரப்பு ஒன்றிடமிருந்து வந்திருக்கும் இந்த நூல் நிச்சயம் எமது எதிர்கால நடவடிக்கைகளுக்கும் பிரச்சாரங்களுக்கும் உதவும்.

முடிந்தால் நீங்களும் ஒரு தடவையாவது வாசித்துப் பாருங்கள்.

நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். முக்கியமாக இளையவர்களுக்கு பரிசாக தரப்படலாம்.

தகவலுக்கு நன்றிகள்.

கோர்டன் வைஸ் அவர்கள் தான் ஏன் இந்த புத்தகம் எழுதினேன்? என விளக்குகிறார்.

Gordon Weiss - The story behind The Cage

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்புத்தகம் அண்மையில் சிட்னியில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவைக்கு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் விற்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.