Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

Featured Replies

நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

விடிந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தல். தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்துவிட்டன. பொதுநிலையில் நிற்போர், எல்லோரும் வாக்களியுங்கள் என்ற கோரிக்கையையும் தேர்தல் சுமுகமாக நடந்தேற வேண்டும் என்ற ஆசீர்வாதத்தையும் சமயோசிதமாகக் கூறி தேர்தல் பற்றிய தங்கள் கருத்தை நிறைவுசெய்து கொண்டுள்ளனர்.

தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வதற்கான வழியாக அவர்கள் இதைக் கருதியிருக்கலாம். அதில் நியாயமும் இருக்கவே செய்கிறது.

அதேநேரம் ஊடகங்கள் தத்தம் கருத்துக்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எடுத்துக்கூறியுள்ளன. அத்தகைய கருத்துகளுக்குள் சார்புநிலையும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஊடகங்கள் எந்தெந்தப் பக்கம் சார்ந்தவையோ அவை தத்தம் சார்பு நிலைக்கேற்ப கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. அவைபற்றியெல்லாம் நாம் இங்கு எதுவும் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.

ஆனால் ஊடகங்கள் எப்போதும் நடுநிலை சார்ந்து நிற்பதே பொருத்தமுடையதும் ஏற்புடையதும் ஆகும். ஏனெனில், இலங்கையில் இனவாதத் தீயை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதில் பெரும்பாலான ஊடகங்கள் கணிசமான பங்கை ஆற்றியுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. இதன்காரணமாகவே சர்வதேச தொண்டு நிறுவனமொன்றின் அறிக்கையில், இலங்கையில் ஊடகப்பயங்கரவாதம் நிலவுகின்றது என்ற கருத்து இடம்பெற்றுள்ளது.

உலகமக்களின் பல்கலைக்கழகமாக விளங்குவது பத்திரிகைகளே என்ற ஒரு அறிஞனின் கருத்தியலோடு இதை ஒப்பிடுமிடத்து ஊடகங்கள் பயங்கரவாத சிந்தனையைத் தோற்றுவிக்குமாக இருந்தால், அதைவிடப் பயங்கரம் எதுவுமாக இருக்கமுடியாது. எனினும் இலங்கையில் துரதிர்ஷ்டவசமாக ஊடகப்பயங்கரவாதம் நிலவி வருகின்றது. இஃது இனப்பிரச்சினையின் துன்பநிலை தொடர்வதில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளது எனலாம்.

எதுவாயினும் கடந்த சில, தினங்களாக வலம்புரி அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மரியாதைக்குரிய வாசகர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் வலம்புரியின் நிலைப்பாடு என்ன? இதுவரை தேர்தல் குறித்து வலம்புரி மெளனம் சாதிப்பது போன்ற தோற்றப்பாடு தெரிகின்றது. எனவே வலம்புரி தனது கருத்தைக் கூற வேண்டும் என அன்புக்கட்டளை இட்டவண்ணம் உள்ளனர்.

தேர்தலைப் பொறுத்தவரை யாருக்கு வாக்களிப்பது என்ற முடிபை வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தில் வலம்புரி மிகவும் உறுதியாக இருக்கிறது. இதனையே வலியுறுத்தவும் விரும்புகின்றது அவ்வளவுதான்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21023

  • தொடங்கியவர்

பொதுவாக மேற்குலக நாடுகளில் தேர்தல் காலத்தின்போது, அவர்களின் கொள்கை திட்டங்களின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட கட்சியை இல்லை நபரை ( நகர பிதா) ஆதரவளிக்க கேட்பார்கள்.

யாழின் உதயன் பத்திரிகை மறைமுகமாக கேட்டுள்ளது வீட்டுக்கு வாக்களியுங்கள் என்று. அப்படியே வலம்புரியும் செய்திருக்கலாம், செய்திருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி வலம்புரிப் பத்திரிகையில் வந்தது, அகூதா.

நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

தேர்தலைப் பொறுத்தவரை யாருக்கு வாக்களிப்பது என்ற முடிபை வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தில் வலம்புரி மிகவும் உறுதியாக இருக்கிறது. இதனையே வலியுறுத்தவும் விரும்புகின்றது அவ்வளவுதான்.

வலம்புரி இடம்புரியாகப் போய் நடுநிலையை நாட்ட நினைக்கிறது.

நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

ஆனால் ஊடகங்கள் எப்போதும் நடுநிலை சார்ந்து நிற்பதே பொருத்தமுடையதும் ஏற்புடையதும் ஆகும். ஏனெனில், இலங்கையில் இனவாதத் தீயை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதில் பெரும்பாலான ஊடகங்கள் கணிசமான பங்கை ஆற்றியுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. இதன்காரணமாகவே சர்வதேச தொண்டு நிறுவனமொன்றின் அறிக்கையில், இலங்கையில் ஊடகப்பயங்கரவாதம் நிலவுகின்றது என்ற கருத்து இடம்பெற்றுள்ளது.

தேர்தலைப் பொறுத்தவரை யாருக்கு வாக்களிப்பது என்ற முடிபை வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்தில் வலம்புரி மிகவும் உறுதியாக இருக்கிறது. இதனையே வலியுறுத்தவும் விரும்புகின்றது அவ்வளவுதான்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21023

ஆனால் ஊடகங்கள் எப்போதும் நடுநிலை சார்ந்து நிற்பதே பொருத்தமுடையதும் ஏற்புடையதும் ஆகும்.

நடுநிலைமை வகிப்பது ஊடகதர்மமாக அறியப்படவில்லை. கருதுகளை பிரசுரிப்பதில் சமத்துவம் அளிப்பது தான் ஊடகதர்மம்.

உண்மைகளை வெள்ளிக்கொணர்வது ஊடகங்களின் பொறுப்பு. உண்மை கட்டாயம் ஒரு பக்க சார்பானது. யாருக்கு வாக்களிக்கலாம் என்பது மேலைநாட்டு ஊடகங்கள் "Editorial"லில் தான் குரிப்பிடுவார்கள்."Editorial " என்பது ஆசிரியர்களின் கருத்து. அது எல்லோரும் அறிய ஒரு பக்கமான தனி மனிதர் கருத்து. அது உண்மைகளை வெள்ளிக் கொணரும் புதினப்பகுதியல்ல.

ஏனெனில், இலங்கையில் இனவாதத் தீயை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதில் பெரும்பாலான ஊடகங்கள் கணிசமான பங்கை ஆற்றியுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. இது வலம்புரியின் நடுநிலைமையற்ற தனிப்பட்ட கருத்து

இதன்காரணமாகவே சர்வதேச தொண்டு நிறுவனமொன்றின் அறிக்கையில், இலங்கையில் ஊடகப்பயங்கரவாதம் நிலவுகின்றது என்ற கருத்து இடம்பெற்றுள்ளது. இது ஊடகங்கள் நடுநிலைமை வகிக்க முடியாதவாறு அரசபயங்கரவாதம் அவர்களின் குரல் வளைகளை நெரிப்பதால் ஏற்பட்டுள்ள நிலை. அத்தோடு இது ஒரு நடுநிலைமையற்ற "out of context quotation". Lake house 1970 களில் அரசுடமையாக்கப்ப்ட்டுவிட்டது. அதனால்த்தான் அது ஒரு பக்கமாக நின்று அரச பயங்கரவாததை வளர்கிறது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.