Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சனல் - 4க்கு எதிராக சாட்சியமளிக்க 11,664 முன்னாள் போராளிகளும் தயார்'

Featured Replies

'சனல் - 4க்கு எதிராக சாட்சியமளிக்க 11,664 முன்னாள் போராளிகளும் தயார்'

இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள சனல் - 4 தொலைக்காட்சிக்கு எதிராக சாட்சியமளித்து, இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள முன்னாள் போராளிகள் 11ஆயிரத்து 664பேரும் தயாராக உள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை சமூகத்தில் மீள்குடியேற்றவும் ஒன்றிணைக்கவுமான சமய சமூகத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று புனர்வாழ்வு ஆணையாளர் தலைமையதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே புனர்வாழ்வு ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அதாவது நந்திக்கடல் களப்பு பகுதியிலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளே புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.

அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியில் ஆரம்பித்த இந்த புனர்வாழ்வு நடவடிக்கையினை தற்போதும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் 594 சிறுவர் போராளிகள், 2,033 பெண் போராளிகள் மற்றும் 9,037 ஆண் போராளிகள் என 11,664பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் எம்மால் புனர்வாழ்வளிக்கப்படும் இந்த 11,664 முன்னாள் போராளிகளும், தங்களது வீடுகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கான காரணம் அறியப்படாத பட்சத்திலேயே நாம் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி தீர்வு காண முற்படுகின்றோம்' என்றார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/25710--4-11664-.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்காவையும் ஒரு பச்சை மட்டையையும் என்னிடம் தந்தால் ஒரு கிழமைக்குள் இதற்கு எதிரான அறிக்கையை என்னால் வாங்கிதர முடியும். :lol: :lol: :lol:

புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்காவையும் ஒரு பச்சை மட்டையையும் என்னிடம் தந்தால் ஒரு கிழமைக்குள் இதற்கு எதிரான அறிக்கையை என்னால் வாங்கிதர முடியும். :lol: :lol: :lol:

அடி, உதை, வதைகளினால் பெறப்படும் சாட்சியங்களை பிரித்தானிய நீதிமன்றம் ஏற்காது

  • தொடங்கியவர்

இந்த சனல் நாலின் எதிர்பாராத நன்மைகளில் ஒன்று - எவ்வளவு முன்னைநாள் போராளிகள் இன்னும் சிங்கள பிடியில் உள்ளனர் என்பதே. இப்பொழுது இந்த எண்ணிக்கை உலகறிந்த விடயம். இவ்வளவு முன்னைநாள் போராளிகளுக்கும் சிங்கள அரசே பொறுப்பு.

அதேவேளை இவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட கோரி அழுத்தம் தரப்படல் வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்காவையும் ஒரு பச்சை மட்டையையும் என்னிடம் தந்தால் ஒரு கிழமைக்குள் இதற்கு எதிரான அறிக்கையை என்னால் வாங்கிதர முடியும். :lol: :lol: :lol:

:D:D

வெளியே போவதோ, உள்ளே இருப்பதோ போராளிகளுக்கு உகந்ததல்ல. வெளிநாடுகள் அரைமனம் கால்மனமாக இருக்கும் போது நாம் இந்தவிடயத்தை அவதானமாக கையாள வேண்டும். இது ஒரு முள்ளில் விழுந்த சேலை. இழுத்து எடுக்க முயலக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே போவதோ, உள்ளே இருப்பதோ போராளிகளுக்கு உகந்ததல்ல. வெளிநாடுகள் அரைமனம் கால்மனமாக இருக்கும் போது நாம் இந்தவிடயத்தை அவதானமாக கையாள வேண்டும். இது ஒரு முள்ளில் விழுந்த சேலை. இழுத்து எடுக்க முயலக்கூடாது.

அவர்கள், வெளியே இருந்தாலும்....

சிங்கள புலனாய்வுத்துறையாலும், ஒட்டுக் குழுக்களாலும் கண்காணிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மல்லையூரான்.

இன்று இணைக்கப் பட்ட பதிவை பாருங்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று....

அவர்கள் வாழ்க்கை, அவர்கள் கைகளில் இல்லை என்பதே... உண்மை. :(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89806&pid=678526&st=0&#entry678526

  • தொடங்கியவர்

வெளியே போவதோ, உள்ளே இருப்பதோ போராளிகளுக்கு உகந்ததல்ல. வெளிநாடுகள் அரைமனம் கால்மனமாக இருக்கும் போது நாம் இந்தவிடயத்தை அவதானமாக கையாள வேண்டும். இது ஒரு முள்ளில் விழுந்த சேலை. இழுத்து எடுக்க முயலக்கூடாது.

இவர்களை ஐ.நா. / யுனிசெப்பின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்க வலியுறுத்தலாம்.

அதற்கு சிங்களம் இணங்காது, ஆனால் போர்குற்ற அரசு எவ்வாறு இவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என விவாதித்து அணுகலாம்.

புதிய செய்திகளுக்கு நன்றி, தமிழ் சிறி, அகூத. த.தே.கூ இதற்கு கூட ஒரு முடிவையும் காணவில்லை அதன் ஒன்பது சுற்று பேச்சுகளில்

  • கருத்துக்கள உறவுகள்

புதிய செய்திகளுக்கு நன்றி, தமிழ் சிறி, அகூத. த.தே.கூ இதற்கு கூட ஒரு முடிவையும் காணவில்லை அதன் ஒன்பது சுற்று பேச்சுகளில்

தமிழ் தேசிய கூட்டமைப்பும் கையாலாகத நிலைமையிலேயே... உள்ளது.

அதுக்குள்ளை, இருக்கிற சிலர் கண்டபடி, அறிக்கை விடாமல் இருந்தாலே... புண்ணியாமாய்ப் போகும்.

இவர்களை ஐ.நா. / யுனிசெப்பின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்க வலியுறுத்தலாம்.

அதற்கு சிங்களம் இணங்காது, ஆனால் போர்குற்ற அரசு எவ்வாறு இவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என விவாதித்து அணுகலாம்.

இது விடயமாக பல தரப்பட்டவர்களூடாக கதைக்கப்பட்டது அகூதா விளைவு பலன் இல்லை.

யுனிசெவ் இன் மூன்றாம் தர அதிகாரியுடன் பேசப்பட்டது.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இரண்டாம் தலைவருடன் பேசப்பட்டது.

இவர்கள் கூறிய கதையினை சொன்னால் மனவருத்தம் என்றாலும் சொல்கின்றேன். “ போராளிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனவே நாம் அவர்களுக்கு உதவுவது சிரமம்” இதுதான் கிடைத்த பதில்.

நோர்வேயுடன் பேசப்பட்டது.

தென் ஆபிரிக்காவுடன் பேசப்பட்டது. அதாவது மிகவும் ஆபத்தான நிலமை உள்ளவர்களை வேறு நாடுகளுக்கு எடுக்கலாம் என்று.

நோர்வே சமாதான செயலகம், மற்றும் திட்டமிடல் பகுதியில் பணி புரிந்தவர்களுக்கு உதவலாம் என கூறி ஒரு 10 பேர்வரை உதவினார்கள் இது பற்றி ஏற்கனவே படித்துள்ளீர்கள். மேலும் சிலருக்கு கொடுத்த போது கையை விரித்துவிட்டார்கள்.

தென்னாபிரிக்காவை பொறுத்தவரை செய்கின்றோம் என சொன்னார்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் தலா 1000 டொலர் வீதம் ( மாதம்) ஒரு வருடத்திற்கு பராமரிப்பு செலவுகள்:ஐ காட்டவேண்டும் என்றார்கள். அதற்கான மேலதிக பேச்சுக்கள் நடைபெறுகையில்.. ( கூத்துக்கள் குளப்பங்கள் ஆரம்பித்து விட்டது) யாரும் முன்வரவில்லை. மீண்டும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது ஆனால் தென்னாபிரிக்கா சொல்லிவிட்டது எல்லோரையும் அரசு விடுவித்து வருகின்ரார்கள் அவர்களுக்கு பெரிதாக பிரச்சினை இல்லை என்று.

மட்டுமல்ல தென்னாபிரிக்காவிற்கு பல வழிகளில் தப்பி சென்றவர்களுக்கும் அசைலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக எரித்திரியா மற்றும் சில ஆபிரிக்க நாடுகளிலும் பேசப்பட்டது. அவர்கள் அதிக பணம் கேட்டார்கள்.

So the operation stopped.

Edited by உமை

  • தொடங்கியவர்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச ஆதரவை பெற்று, அதன் மூலம் ஒரு விசாரணை, பின்னர் ஐ.நா. ஊடான தேர்தல் - இவைகள் மட்டுமே விடிவை பெற்றுத்தரும்.

இந்த சனல் நாலின் எதிர்பாராத நன்மைகளில் ஒன்று - எவ்வளவு முன்னைநாள் போராளிகள் இன்னும் சிங்கள பிடியில் உள்ளனர் என்பதே. இப்பொழுது இந்த எண்ணிக்கை உலகறிந்த விடயம். இவ்வளவு முன்னைநாள் போராளிகளுக்கும் சிங்கள அரசே பொறுப்பு.

அதேவேளை இவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட கோரி அழுத்தம் தரப்படல் வேண்டும்.

நல்லதொரு கருத்து!

புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்காவையும் ஒரு பச்சை மட்டையையும் என்னிடம் தந்தால் ஒரு கிழமைக்குள் இதற்கு எதிரான அறிக்கையை என்னால் வாங்கிதர முடியும். :lol: :lol: :lol:

தண்ணீரில் ஊறவைத்த பூக்காம்பாளையும் நல்ல சாமான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் சித்தன்... :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.