Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவுக்கு தமது இரத்தத்தை பலி கொடுக்க லட்சக்கணக்கான யுவதிகள் தயாராம்– அமைச்சர் பௌசி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு தமது இரத்தத்தை பலி கொடுக்க லட்சக்கணக்கான யுவதிகள் தயாராம்– அமைச்சர் பௌசி!

makintha12.jpgமகிந்த ராஜபக்ஷவிற்கு தங்களது இரத்தத்தினை பலி கொடுப்பதற்கு லட்சக் கணக்கான யுவதிகள் வரிசையில் காத்திருப்பதாக சிறிலங்காவின் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச். எம் பௌசி தெரிவித்தார்.

பொத்துவில் பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் பௌசி பொத்துவில் பெரிய பள்ளி வாசலில் வைத்து மக்கள் மத்தியில் இதனை பகிரங்கமாக தெரிவித்தார்.

கொலைவெறியன் மகிந்தர் தனது ஆயுள் முழுவதும் பதவி வகிப்பதற்கு 2 ஆயிரம் யுவதிகளது மார்பு பலியிடப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆயிரமல்ல லட்சக்கணக்கான யுவதிகள் தங்களது மார்புகளையும் இரத்தங்களையும் மகிந்த ராசபக்சவுக்காக பலி கொடுப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர் என்றும் அமைச்சர் பௌசி தெரிவித்தார்.(இளம் பெண்களையும் கிஅடத்தி அவர்களது மார்புகளையும் இரத்தங்களையும் மகிந்த ராசபக்சவுக்காக பலியெடுக்க அரசு புதிய சதி இதிலிருந்து வெளிப்படுகிறது)

எனவே மகிந்த ராசபக்சவின் ஆயுளை நீடிப்பதற்கும் அவர் ஆயுள்காலம்வரை பதவி வகிப்பதற்கும் சகல நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் பௌசி கேட்டுக்கொண்டார்.

மகிந்த ராசபக்ச ஆயுள்காலம்வரை பதவியில் நீடிக்க வேண்டுமானால் 2ஆயிரம் யுவதிகளின் மார்பகங்கள் பலியிடப்பட வேண்டும் என மகிந்த ராசபக்சவுக்கு நெருக்கமான சோதிடர் ஒருவர் கூறியதையடுத்து உடனடியாக இதை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், இதனையடுத்தே இராணுவத்தினரே இளம்பெண்கள் மீது இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் நம்பகமான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் பௌசி மகிந்த ராசபக்சவுக்காக தங்களது இரத்தத்தினையும் மார்பகங்களையும் பலி கொடுக்க லட்சக்கணக்கான யுவதிகள் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று பொத்துவில் பள்ளிவாசலில் வைத்து தெரிவித்துள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பௌசியின் தாயாரும் மனைவியும் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளார்களாம் :D :D

அது சரி அவரின் ஆயுட் காலம் என்னவாம்!

அதை யார் நிர்ணயிப்பது என்று தெரியுமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அவரின் ஆயுட் காலம் என்னவாம்!

அதை யார் நிர்ணயிப்பது என்று தெரியுமோ?

ஹ.....ஹ .....வெரி சூன்.

உண்மையில் இந்த உலகம் நாகரீகம் அடைந்ததா???

அல்லது சிங்களவன்மட்டும்தான் இன்னும் நாகரீகமடையவில்லையா

இது மிக பாரதூரமான விடையம். ஆங்கில கொப்பியை தெரிந்த இடமெல்லாம் அனுப்பு விடுங்கோ. வலை எங்கும் போட்டு விடுங்கோ. இந்த சிசோபிறனிக் கேசுகள் தடுக்க ஆக்கள் இல்லாமல் என்னவும் செய்யுங்கள். இது மந்திரி ஒருஆள் பேசின பேச்சு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் நினைச்சது குருட்டுவாக்கிலை அவனுக்கு சாதகமாய் எல்லாம் நடந்து முடிஞ்சுது.........இப்ப அந்த வெற்றியை நினைச்சு நினைச்சு குதிக்கால்லை நடக்கிறான்...எத்தினை நாளைக்கெண்டு பாப்பம்....தான் செய்யிறது முழுக்க சரியெண்டு நினைக்கிறான் போலை கிடக்கு ^_^

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு இரத்தம் தேவையானால் 20 இலட்சம் பெண்கள் வரிசையில் நின்று வழங்குவர்: பௌசி

8/15/2011 11:39:30 AM

ஜனாதிபதிக்கு இரண்டாயிரம் பெண்களின் மார்பிலிருந்து இரத்தம் தேவையாக இருந்தால் கிறீஸ் மனிதர்களை வைத்து எடுக்கவேண்டிய அவசியமில்லை. 20 இலட்சம் பெண்களே நேரடியாக வந்து கியூவில் நின்று ஜனாதிபதிக்கு அந்த இரத்தத்தினைக் கொடுப்பார்கள் என்று அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி கூறினார்.

பொத்துவில் பிரதேசத்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான அலியார் முஹம்மது மஹ்ஜூனின் ஜனாஸா நல்லடக்கத்தில் சனிக்கிழமையன்று கலந்து கொண்ட பின்னர் பொத்துவில் பெரிய ஜூம் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றினார்.

இதன்போது, ஜனாதிபதி தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்காக இரண்டாயிரம் பெண்களின் மார்பிலிருந்து ரத்தம் பெற்று மாந்திரீகம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், அதற்காகவே கிறீஸ் மனிதர்கள் வந்துள்ளதாகவும் கூறப்பட்டு வரும் கதை குறித்து கருத்துத் தெரிவித்துப் பேசும் போதே மேற்கண்ட விடயத்தை அமைச்சர் பௌசி கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், ஜனாதிபதி தொடர்பில் கூறப்படும் மேற்படி கதைகள் வெறும் வதந்திகளாகும். ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மீது விரோதமுள்ளவர்களே இவ்வாறான கதைகளை உருவாக்கி விட்டுள்ளனர். இது ஒரு வகையான சூழ்ச்சியாகும். இந்த சூழ்ச்சியினை மக்கள் நம்பிவிடக் கூடாது.

நாம் நிம்மதியாக வாழ வேண்டும். 30 வருடங்களாகக் கஷ்டப்பட்டு விட்டோம். இப்போது நிம்மதியான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதை அனுபவிக்காமல் நாம் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

பொத்துவிலில் இடம்பெற்ற சகோதரர் மஹ்ஜூனின் மரணம் கல்லடிபட்டுத்தான் நிகழ்ந்ததாக இராணுவ அதிகாரியொருவர் என்னிடம் கூறினார். இது நம்பும் படியாகவா உள்ளது. சகோதரர் மஹ்ஜூனின் மரணம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ. அப்துல் மஜீத் சாட்சியாக உள்ளார். அவரின் சாட்சியத்தை பொலிஸாரிடமும் தெரிவித்துள்ளார்.

எனவே, இது குறித்து கவலைப்பட வேண்டாம். மஹ்ஜூனின் மரணத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார். அதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான சகல உதவிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த சூழ்ச்சியில் மக்களும் பயன்படுத்தப்படுகின்றார்கள். எனவே, இதில் நீங்கள் மாட்டி விடாதீர்கள்.

பொதுமக்களாகிய உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் எம்மிடம் பேசுங்கள். எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்து தருவோம் என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33279

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.