Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரணதண்டனையிலிருந்து நம்மவர் உயிர் மீட்போம் - விசுவநாதன் ருத்ரகுமாரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனையிலிருந்து நம்மவர் உயிர் மீட்போம் - விசுவநாதன் ருத்ரகுமாரன் [ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 09:30 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

Rudra.JPG

மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையினை நிறுத்தம் செய்யும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகம் தமது பரிந்துரையினை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மீள வழங்க வேண்டும் என நாம் இந்திய அரசைக் கோருகிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரமாவது,

முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தம் மீதான மரணதண்டனையினை சிறைத் தண்டனையாக மாற்றுமாறு விடுத்த வேண்டுகோளை இந்தியக் குடியரசுத் தலைவர் வெகுகாலம் தாண்டிய நிலையில் நிராகரித்துள்ளார்.

அதுவும் அவர்கள் சிறையிடப்பட்டு 20 ஆண்டுகள் தாண்டிய பின்னர்; கருணை மனு கையளிக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்த பின்னர் இவ்வேண்டுகோளை நிராகரித்துள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மரணதண்டனை மானிட தர்மத்துக்கு முரணானது. அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு [right to live] எதிரானது.

இவ்விடத்தில் மரணதண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரணதண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டுமென்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் கூற்று மிகவும் அர்த்தம் பொதிந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானமொன்று மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியதென அரசுகளைக் கோரியிருந்தமையும் இங்கே கவனத்துக்குரியது.

உலக நாடுகள் 193ல் இன்று மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டோ அல்லது நடைமுறைப்படுத்தப் படாமலோ இருப்பதென்பதும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

உலக அரங்கில் நீதி வழங்கப்படும் நடைமுறையிலிருந்து மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென உலகெங்குமிருந்து எழும் குரல்களோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக் கொள்வதுடன் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இம் மூவரது மரண தண்டனையினை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மனிதாபிமான, சட்ட அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளும்படி இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் சமூகத்தினையும் மரணதண்டனைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் அனைத்துலக சமூகத்தினையும் கோரி நிற்கிறது.

இராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகவும் அரசியல்மயப்பட்ட நிலையில் நடற்தேறிய ஒரு வழக்கு. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை என்றே முதன் முதலில் தீர்ப்பு வழங்கப்பட்டமை இவ்வழக்கின்; அரசியல் தன்மையினை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது.

பின்னர் தமிழ் உணர்வாளர்களது ஆதரவுடன் உச்ச நீதிமன்றில் நடைபெற்ற சட்டப்போரின் விளைவாக இக் குற்றம் தடா சட்டத்துக்குட்பட்ட பயங்கரவாதக் குற்றமல்ல என்பது வெளிப்படுத்துப்பட்டதுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 19 பேருக்கு முழு விடுதலை அளிக்கப்பட்டு எஞ்சிய 7 பேரில் நால்வருக்கு அந்நேரம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான நளினியின் மரணதண்டனை மனிதாபிமான அடிப்படையில் ஏற்கெனவே சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டபோது ஏனைய மூவரின் மரணதண்டனையும் அவ்வாறு மாற்றப்படுமெனவே எதிர்பார்க்கப் பட்டது.

இந் நிலையில் தான் இந்திய உள்துறை அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மரணதண்டனையினை உறுதி செய்திருப்பது எமக்கெல்லாம் மிகவும் கவலையளிக்கிறது.

மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களின் குரலாக பேரறிவாளன் வெளிப்படுத்தியுள்ள கருத்து இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களதும் உலக சமுதாயத்தினதும் மிகுந்த கவனத்துக்குரியது. "நாம் கோருவதெல்லாம் உயிர்ப்பிச்சையல்ல. மறுக்கப்பட்ட நீதியினையே" என அவர் மிகத் தெளிவாகத் தமது உரிமைக் குரலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ் விடயத்தில் மூன்று தளங்களில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். வெகுவாக அரசியல்மயப்பட்ட நிலையில் இவ் வழக்கு நடைபெற்றமை இவ் வழக்கில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தது. இது இவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட முதலாவது தளம் ஆகும்.

தடா சட்டத்தின் கீழ் இவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டமை இரண்டாவது தளமாகும்.

இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு – ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்ட இவர்களுக்கு - இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது நீதி மறுக்கக்படும் மூன்றாவது தளம் ஆகும்.

இவ்வாறு மிகவும் காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில்; 1993ல் தீர்ப்பளித்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இத்தகையதொரு பின்புலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையினை நிறுத்தம் செய்யும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகம் தமது பரிந்துரையினை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மீள வழங்க வேண்டும் என நாம் இந்திய அரசைக் கோருகிறோம்.

ஈழத் தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு இந்திய அரசும் துணைநின்றது என்ற ஆழ்ந்ததொரு துயரும் காயமும் தமிழீழம், தமிழ்நாடு முதற்கொண்டு அனைத்து உலகத் தமிழ் மக்கள் மத்தியிலும் உண்டு. இதனைக் கவனத்திற் கொண்டும் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மக்களின் மனஉணர்வுகளுக்கு மதிப்பளித்தும் இம் மூவருக்குமான மரணதண்டனையினை நிறுத்தம் செய்யும் முடிவினை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161ன் கீழ் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தமிழக ஆளுனராலும் மரணதண்டனையினை நிறுத்தம் செய்வதற்கான பரிந்துரையினை வழங்க முடியும்.

உலகத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைக்குரலையும் பிரதிபலித்து நிற்கும் தமிழக முதலமைச்சர் இவ் விடயத்தில் தலையிட்டு மரணதண்டனையினை நிறுத்தம் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரி நிற்கிறோம்.

இவற்றை விட மரணதண்டனையினை நிறைவேற்றுவதற்கு எதிரான தடை உத்தரவினை நீதிமன்றத்தின் ஊடாக பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்கி நிற்கிறது.

மரணதண்டனைக்கெதிராக உலகில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தினை இவ் விடயம் நோக்கித் திருப்பி இம் மரண தண்டனைகளுக்கெதிரான அனைத்துலக உணர்வலைகளைத் தட்டியெழுப்புவதற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களது ஆதரவோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இம் மரணதண்டனைகளுக்கெதிராக இந்திய தமிழ்நாடு அரசுகளுக்கும் மனிதஉரிமை அமைப்புக்களுக்கும் தமது உணர்வுகளை உடனடியாக வெளிப்படுத்துமாறு உலகத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கிறது.

நன்றி

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://www.puthinapp...?20110816104491

Edited by தமிழ் அரசு

நல்ல முயற்சி அவர்களை காப்பாற்ற அனைவரும் பாடுபடவேண்டும்

மரணதண்டனையிலிருந்து நம்மவர் உயிர் மீட்போம் - விசுவநாதன் ருத்ரகுமாரன் [ செவ்வாய்க்கிழமை, 16 ஓகஸ்ட் 2011, 09:30 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

Rudra.JPG

அதுவும் அவர்கள் சிறையிடப்பட்டு 20 ஆண்டுகள் தாண்டிய பின்னர்; கருணை மனு கையளிக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்த பின்னர் இவ்வேண்டுகோளை நிராகரித்துள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மரணதண்டனை மானிட தர்மத்துக்கு முரணானது. அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு [right to live] எதிரானது.

இவ்விடத்தில் மரணதண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரணதண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டுமென்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் கூற்று மிகவும் அர்த்தம் பொதிந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானமொன்று மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியதென அரசுகளைக் கோரியிருந்தமையும் இங்கே கவனத்துக்குரியது.

இந் நிலையில் தான் இந்திய உள்துறை அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மரணதண்டனையினை உறுதி செய்திருப்பது எமக்கெல்லாம் மிகவும் கவலையளிக்கிறது.

மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களின் குரலாக பேரறிவாளன் வெளிப்படுத்தியுள்ள கருத்து இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களதும் உலக சமுதாயத்தினதும் மிகுந்த கவனத்துக்குரியது. "நாம் கோருவதெல்லாம் உயிர்ப்பிச்சையல்ல. மறுக்கப்பட்ட நீதியினையே" என அவர் மிகத் தெளிவாகத் தமது உரிமைக் குரலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு – ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்ட இவர்களுக்கு - இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது

இவ்வாறு மிகவும் காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில்; 1993ல் தீர்ப்பளித்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நன்றி

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://www.puthinapp...?20110816104491

உள்ளூர்த்துறை அமைச்சர் சிதம்பரம் நிறைய குத்து வெட்டுகள் உள்ளூரிலேயே செய்தவர். ராசபக்சா கூட்டத்துடன் சேர்ந்து முதலீடுகள் என்று கொள்ளை அடித்தவர். தமிழக அரசிலும், மத்திய அரசிலூம் வகையாக மாட்டி கொண்டவர். கருணாநிதியில்லாக் குறையை காங்கிரசுக்கு நிவிர்த்தி செய்ய கடவுளால் மனம் உவந்து அளிக்கபட்டவர். மலையாளி-சோனியா கும்பலால் தக்க தருணத்தில் வந்து தங்களுக்கு கைகொடுப்பதாக மெச்சபடுபவர். வெகுவிரைவில் பேரறிவாளனுடனும் மறையோருடனும் பககத்துணைக்கு வருவதாக வாக்கு கொடுத்திருப்பவர். அவர் தனக்கு, உள்ளே தன்னை பயங்கர குற்றவாளிகள் சூழ்ந்திருக்கும் போது இந்த அரிய நண்பர்கள் துணையிருப்பார்கள் என்பதால் அவர்களை வெளியே விட விரும்பவில்லை.

அமைச்சர் சிதம்பரம் வெகுவிரைவில் அமைச்சர் பதவியை அல்ல, காங்கிரஸ் கட்சியைல்ல, சொந்த வீட்டையே துறந்து (உள்ளே) போகப்போகிறார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.