Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Mummy i want தண்ணி.....!!!

Featured Replies

எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நண்பி ஒருவர் இமெயிலில் அனுப்பிய கவிதை ஒன்றை யாழ்களத்தில் பகிர்கின்றேன்.

ஈழமுரசு "நகைச்சுவை இரவு" நிகழ்வில்(06.08.2011) வாசிக்கப்பட்ட கவிதை

ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து

அனாதைகளாய் ஆனபோதும்

அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய்

அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்!

என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து

அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து

புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து

காசி அண்ணாவின் கைபிடித்து

கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து!

வீட்டிலே தமிழ்!

தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்

தமிழ்மானம் போச்சு!

தமிழனாய் பிறந்தோம் என்று பெருமை பேசு-இல்லையேல்

தமிழினத்தின் அருமை போச்சு!

தமிழினத்தின் உயிர் மூச்சுதானே எங்கள் செம்மொழி

மூச்சையே நிறுத்திவிட்டால் இனம் வாழ ஏது வழி?

படலை திறந்து வந்தோம்

உடலை மட்டும் தானே கொண்டுவந்தோம்

உயிரும் உணர்வும் இப்போதும் அங்கேதானே!

சத்தியமாய் சொல்லுங்கள் எங்களின் கால் இடுக்கில்

இப்போதும் எங்கள் வீட்டின் முற்றத்து மண்தானே ஒட்டி இருக்கிறது.

அரியாலையில் இருந்தமாதிரி அவுஸ்திரேலியாவில் இருக்கமுடியாது

மேடைக்கு ஏற்ற வேசம் போட்டே ஆகவேண்டும்

ஆனாலும் தமிழன் என்ற அடையாளம் தொலைக்கப்படாது

அடையாளங்களை தொலைத்துவிட்டு அரைகுறையாய் வாழ்வதை விட

அட அம்மணமாக வாழ்வது எவ்வளோ மேல்!

ஒசி(Aussie) என்று சொல்வதில் சிலநேரம் எனக்கு பெருமை!

என்னதான் வெளுக்க "லோசன்"(Lotion) போட்டாலும் என் தோல் கருமை!

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது அதுதான் உண்மை!

வீட்டிலே தமிழ்!

தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்

தமிழ்மானம் போச்சு!

பிள்ளை ஒன்று பெறுவதே பெரும்பாடு

என் பெற்றபிள்ளை தமிழ் மறந்தால் அது வெக்கக்கேடு!

தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்

தமிழ்மானம் போச்சு!

பெற்ற பிள்ளைக்கு ஹரிபோட்டர் என்று

பெயர் வைச்சால் என்ர பிள்ளை என்ன மொழி பேசும்?

பீற்றரும் ஸ்ரெல்லாவும் "hi how are you? " என்று பேசலாம்

தமிழரசியும் கலையரசியும் "hi how are you buddy" என்று சொன்னால்

என்னாகும் எங்கள் சந்ததி?

தமிழரசியின் பெயரில் மட்டுமே தமிழ்

அவள் மூச்சிலும் இல்லை பேச்சிலும் தமிழ் இல்லையே!

அது அவள் பிழை இல்லை! தழிழரசியை பெற்ற தந்தை என் பிழை!

Factory இல பட்டை அடி அடிச்சுப்போட்டு

பாசத்தோடு ஓடு வந்து முத்தமிட்டால்

"அப்பா" என்று சொன்னால்த்தானெ அந்த அலுப்பு தீரும்

அப்பதான் என்ர ஆயுளும் கூடும்

என்ர மூத்தது "Daddy i want Ulunthu VADA" என்கிறான்

அட என்ர கடைக்குட்டி Mummy i want தண்ணி... என்கிறாள்

தாலி கட்டியவளை "Darling" என்றால்

என்ர பிள்ளை என்னப்பாத்து "Dada" எண்டுதான் சொல்லுவான்

காலம் போக என்னை "வாடா" என்பான்...

இனசனம் முன்னே மானம் போகும்

மனம் நொந்து என்ன பலன்?

கட்டிலிலே தமிழ் மறந்தால்....

தொட்டிலிலே என்ன வரும்?

Mummy i want thanni......!!!

தமிழ்த்தாய் நொந்து போவாளே இதை எண்ணி

வீட்டிலே தமிழ்!

தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்

தமிழ்மானம் போச்சு!

தாய்ப்பாலோடு சேர்த்து தமிழையும் ஊட்டுங்கள்

தாய்பாசத்தோடு சேர்த்து தமிழ்நேசத்தையும் காட்டுங்கள்

நாங்கள் எல்லாம் பூவரசம் கதியால்

புடுங்கி வந்து Dandenong இல் நட்டாலும்

பூக்கிறது பூவரசம் பூதான்!

ஆனால் இந்த பிஞ்சுகள் பூவரசம் பூவின் நிறம் அறியாத ரோஜாக்கண்டுகள்

விதை விதைக்கும் போது அவதானம்

இல்லையெனில் எங்களுக்குத்தான் அவமானம்!

NORWAY இல் இருந்து வந்த மூத்தவளின் இளையதும்

FRANCE இல் இருந்து வந்த இளையவனின் கடைசியும்

என்ன மொழியில் பேசுவது என்று தெரியாமல் முழிக்கும்..!!!

தாயிருந்தும் இந்த பிள்ளைகள் அனாதைகள்...

தாய்மொழி செத்துப்போனதால்....!!!!

என்ர அப்புவுக்கு ஆயிரம் டொலர் தேவையில்லை

தன்ர பேரன் தமிழ் பேசவேண்டும்

அப்பதான் அப்புவின் அடிவயிறு குளிரும்

ஆங்கிலம் பேச வேண்டாம் எண்டு குதர்க்கம் பேசவில்லை

ஆங்கிலம் என்பது அவசிய மொழிதான் - ஆனால்

அன்னை மொழியை ஆங்கிலம் திண்டால்

அடுத்த சந்ததி தமிழ் மறந்தால்

யாருக்கு வேதனை?

தமிழ் இனத்தை அழிக்க ஆரும் தேவையில்லை

மொழியை மறந்தால் தமிழ் இனம் தானாய் அழியாதோ?

தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்

தமிழ்மானம் போச்சு!

எத்தனை ஆயிரம் உயிர்விலை கொடுத்து

செங்குருதி ஊற்றி வளர்த்த மொழியல்லோ எங்கள் தாய்மொழி

தமிழ் இனத்தின் விழிதானே எங்கள் தமிழ்மொழி

அடிபடுவம் பிடிபடுவம் புடுங்குப்படுவம்- ஆனால்

தமிழீழம்,தலைவன்,தமிழ் எண்டால்

தம்பியாய் தங்கையாய் அண்ணனாய் ஒண்டா நிப்பம்!

தாயை பழித்தவனின் நாக்கைதான் அறுப்போம்.

தாய் மொழியை பழித்தவனின் தலையையே அறுப்போம்.

நாளைய இந்த சந்ததி தமிழ் மறந்தால் நாறிப்போகாதோ நம் இனம்?

இளைய சந்ததிக்கு இது புரிந்தால் இன்னும் தலைனிமிரும் எம் இனம்.

தாய் பிறந்த தேசத்தின் வாசம் அறியாத இந்த பிஞ்சுகள் சில

தமிழீழத்தின் மேலும் தமிழின் மேலும் கொண்ட பாசம்

அப்பழுக்கில்லாத ஆழ்ந்த நேசம்.!

விடுதலை மீதும் அண்ணனின் மீதும் இவர்கள் காட்டும் பாசம்

எங்களில் சிலர் போடும் வேசத்திலும் பெரியது!

வாய்க்கால் வெட்டி வளிந்தோடும் இந்த நீருக்கு வழிகாட்டுங்கள்

வளர்க்கிற போதே வாய்க்கு வாய் தமிழ் சொல்லி வளருங்கள்

வெளியில என்ன மொழியையும் பேசுங்கோ

விட்டில மறக்காமல் தமிழையே பேசுங்கோ

Mummy i want தண்ணி.....!!!

தமிழ்த்தாய் நொந்து போவாளே இதை எண்ணி

வீட்டிலே தமிழ்!

தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்

தமிழ்மானம் போச்சு!

-தமிழ்ப்பொடியன்-

16.08.2011

நல்லதொரு பதிவு!

இங்கே உள்ள பள்ளி ஆசிரியர்கள் வேற்று இன மக்களுக்குக் கூறும் அறிவுரைகளில் முக்கியமானது

வீட்டில் உங்கள் தாய்மொழியை உங்கள் குழந்தைகளோடு பேசுங்கள், பள்ளியில் மற்ற மாணவர்களோடு சேரும் போது பிள்ளைகள் ஆங்கில மொழியைப் புரிந்து பேசப் பழகுவார்கள் என்று.

எங்கடை ஆக்கள் கனபேர் வீட்டில தமிழ் கதைச்சாலும் சிலர் ஊரில அம்மா அப்பா என்று சொன்னவர்கள் கூட இங்கே வந்து மம்மி டாடி என்று அல்லவா சொல்கிறார்கள்... பிறகு எப்படி அவர்களின் பிள்ளைகள் அவர்களை அம்மா அப்பா என்று தமிழில் கூபிடத் தன்னும் அனுமதிப்பார்கள்?

...

என்ர மூத்தது "Daddy i want Ulunthu VADA" என்கிறான்

...

-தமிழ்ப்பொடியன்-

16.08.2011

Daddy I want Ulunthu VADA என்று சொல்வதை ஓரளவு சகிக்கலாம் ஆனால் அதை முள்ளுக் கரண்டியால் சாப்பிடுவதைத் தான் பார்க்க சகிக்காது.... :blink:^_^

தமிழ் இனத்தை அழிக்க ஆரும் தேவையில்லை

மொழியை மறந்தால் தமிழ் இனம் தானாய் அழியாதோ?



தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல்

தமிழ்மானம் போச்சு!


எத்தனை ஆயிரம் உயிர்விலை கொடுத்து

செங்குருதி ஊற்றி வளர்த்த மொழியல்லோ எங்கள் தாய்மொழி

தமிழ் இனத்தின் விழிதானே எங்கள் தமிழ்மொழி

"தமிழ்" ஒன்று மட்டுந்தான் நாங்கள் 'தமிழர்' என்பதற்கான ஒரே அடையாளம்!

அதை உணர்ந்து .... எம் தமிழைக் காப்போம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.