Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும்

Featured Replies

இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் ஜயந்த தனபால

இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவுடன் உறவுகளை சிறிலங்கா பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐநா சபையின் ஆயுத பரிகரண விவாகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும் சிறிலங்காவின் மூத்த ராஜதந்திரியுமான ஜயந்த தனபாலா தெரிவித்திருக்கின்றார்.

20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. புத்திசாலித்தனமாக இந்தியாவுடனான உறவை இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009க்கு பின்னர் அந்தப்புத்திசாலித்தனத்தை காணமுடியவில்லையே’, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘வரலாற்று ரீதியாக இந்திய வம்சாவழியினர்தான் ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருகின்றார்கள். ஸ்ரீலங்காவில் நடக்கும் ஒவ்வொரு விவகாரமும் இந்தியாவின் தமிழ்நாட்டிலும் அதன் ஏனைய பகுதிகளிலிலும் நேரடித்தொடர்பு உடையதாகவே இருக்கின்றது.

13 ஆவது திருத்தச்சட்டம், அதற்கு அப்பால், இரண்டாவது சபை என்று கூறியது எல்லாம் போய் இப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு என்றெல்லாம் ஜனாதிபதி பேசுகின்றார், இந்திரா காந்தியைப் போன்று எம் கையை முறுக்கிய மாதிரியான அணுகுமுறையைக்கடைப்பிடிக்காது, அரசியல் தீர்வு காணும் முயற்சியை விரைந்து காணும்படி இந்தியா சாந்தமாக கோருகின்றது. ஆனால் நாம் அச்செய்திக்கு காது கொடுப்பது போன்று தெரியவில்லை.

இந்திய-இலங்கை உடன்படிக்கையை 1980 களில் திணித்ததிலும் பார்க்க இந்தியாவின் சர்வதேச வளர்ச்சி இன்று 100 வீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வழிகாட்டலையே எதிர்பார்த்து நிற்கின்றன.

உலக ரீதியில் இந்தியாவிற்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்ல உறவுகளைப் பேண முடியும். முன்னரும் இவ்வாறே நடந்துள்ளோம். இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் . அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் ‘ என்றும் ஜயந்த தனபால லக்பிம ஆங்கில வார இதழுக்கு தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=79972

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் . அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் ‘

vadivelu.jpg

நான் அப்படியே ஷாக்காயிட்டன்...

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/TVxOPwoJRIU

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் ஜயந்த தனபால

இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவுடன் உறவுகளை சிறிலங்கா பலப்படுத்த வேண்டும்.

புத்திசாலித்தனமாக இந்தியாவுடனான உறவை இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009க்கு பின்னர் அந்தப்புத்திசாலித்தனத்தை காணமுடியவில்லையே’

இந்திரா காந்தியைப் போன்று எம் கையை முறுக்கிய மாதிரியான அணுகுமுறையைக்கடைப்பிடிக்காது, அரசியல் தீர்வு காணும் முயற்சியை விரைந்து காணும்படி இந்தியா சாந்தமாக கோருகின்றது.

உலக ரீதியில் இந்தியாவிற்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்ல உறவுகளைப் பேண முடியும். முன்னரும் இவ்வாறே நடந்துள்ளோம்.

http://www.alaikal.com/news/?p=79972

கிந்தியா என்ற துரோகத்தின் முழுவடிவமானதொரு நாடு எமதருகில் இல்லாதிருந்திருப்பின் அல்லது ஐரோப்பாவை அண்மித்ததாக எமது நாடு இருந்திருப்பின் என்றோ எமது கொடியும் ஐநாவில் பறந்திருக்கும் அண்மைய முள்ளிவாய்காலில் 140000த்திற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகளைச் சிங்களத்தோடு சேர்ந்து கிந்தியா கொல்வதற்கு வாய்ப்பேற்பட்டடிருக்காது. இந்தச் சிங்கள இராஜதந்திரியைப் பாருங்கள் எப்படிச் சிங்களைத்தை எச்சரிக்கின்றாரென்று, அதாவது ஏதாவதொரு தீர்வை வைப்பதூடாக கிந்தியாவைத் தந்திரமாகத் தூரநிறுத்துவதோடு சீனாவை ஒரு தடுப்புநிலைக்குக் கொண்டுவரலாம் என்பதை எவளவு தந்திரமாக் கூறியுள்ளார். அத்தோடு உலக அரங்கிலும் சிங்களத்துக்குச் சாதகமானதொரு புறநிலையை தோற்றுவிக்கலாம் என்பதோடு சிங்களத்தை இனப்படுகொலைக் குற்றச்சாட்டிலிருந்து காப்பதற்கானதொரு வாய்ப்பாகவும் அமையும் என்பதேயாகும். இந்த லட்சணத்தில, இனி நாங்க கிந்தியா பொறுமை இழந்து மீதியிருக்கிற தமிழரையும் பலிகொடுக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். என்ன கொடுமையிது தமிழா!

இந்தியவின்

பொறுமையை அளவிட முடியாது. இலங்கை விடயத்தில் எத்தனை தடவையும் தோற்பதற்கு அவர்கள் தயாராகவுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.