Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3ம் நாள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் . சத்யராஜ், மணிவண்ணன், அமீர், திருமா ஆகியோர் பார்வையிட்டனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3ம் நாள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் . சத்யராஜ், மணிவண்ணன், அமீர், திருமா ஆகியோர் பார்வையிட்டனர்.

  • Sunday, August 28, 2011, 17:42

மூன்றால் நாள் உண்ணா நிலை போராட்டம் தொடர்கிறது. மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மூன்று சகோரதரிகள் தொடர்ந்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இரண்டு பேர்களின் உடல் நிலை சற்று பலவீனமாக தொடக்கி விட்டது. அவர்களுடன் முத்துக்குமார் ஆவணப்படத்தின் உதவி இயக்குனர் மகேந்திர வர்மா மற்றும் அகிலா, தமிழரசி ஆகியோரும் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு ஆதரவு தர நிறைய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் சத்யராஜ், மணிவண்ணன் , அமீர் மற்றும் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

உண்ணாவிரத மேடையில் டைரக்டர் மணிவண்ணன் பேசியதாவது:

பேரறிவாளன், சாந்தன், முருகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது:

இன்று நாம் துயரமான ஒரு காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தூக்கு தண்டனையை எதிர்பார்த்து விடியலுக்காக காத்திருக்கும் 3 தம்பிகளின் உயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 3 பேரும் சிறைக்கு சென்றபோது பள்ளி மாணவர்களாக இருந்தவர்களெல்லாம் சட்ட நிபுணர்களாக மாறி உள்ளனர்.

உண்ணாவிரத மேடைக்கு நான் வந்தவுடன் எதுவும் பேசவேண்டாம் என்றுதான் நினைத்தேன். பயந்துபோய் இதை சொல்லவில்லை. அதே நேரத்தில் இன்று மனித நேயத்தை தட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 19 வயதில் ஒரு இளைஞர் காதலிக்காகவோ, காதலுக்காகவோ காத்திருப்பான். ஆனால் 3 பேரும் தூக்கு தண்டனைக்காக காத்திருந்தனர். 11 ஆண்டுகளாக கருணை மனுவை நிராகரிக்காமல் தற்போது அதனை நிராகரித்துள்ளது.

அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது சட்ட ரீதியாக வழங்கப்பட்ட தண்டனை அல்ல. அரசியல் ரீதியான படுகொலை. இங்குள்ள தமிழர்கள் சிலரே 3 சகோதரர்களையும் தூக்கில் போடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிப்போரில் நாம் வெல்வோம். தமிழக முதல் அமைச்சர் ஒருவரால்தான் 3 பேரின் தண்டனையை குறைக்க முடியும் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

எனவே முதல் அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையை கூட்டி மரண தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். நிச்சயம் அதனை அவர் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விரைவில் வேலூர் சிறைச்சாலையில் நாம் வரவேற்போம்.

இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.

உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் கூறியதாவது:

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை காப்பாற்ற முதல்வர் ஒருவரால் மட்டும்தான் முடியும்:

மகாத்மாகாந்தி மற்றும் மனிதநேய ஆர்வலர்கள் அனைவரும் மரண தண்டனை தேவையில்லை என்று கூறியுள்ளனர். இந்த தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் எந்த குற்றமும் செய்யாமல் தூக்கு மேடை ஏற காத்திருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது நியாயமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

20 ஆண்டுகளாக சிறை வாழ்க்கையை அவர்கள் அனுபவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் அவிழ்க்க முடியாத சில முடிச்சுக்கள் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் உலக தமிழர்களின் வரவேற்பை பெற்று உள்ளார். அவர் ஒருவரால் மட்டும்தான் 3 பேர் உயிரையும் காப்பாற்ற முடியும் நிலை உள்ளது. எனவே அவர் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

டைரக்டர் அமீர் பேசியதாவது: 3 உயிர்களை காப்பாற்ற இங்கு 4 உயிர்கள் தங்களை மாய்த்துக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தமிழக மக்கள் மட்டும் இன்னும் விழித்துக்கொள்ளாமலேயே உள்ளனர். 12 நாட்கள் உண்ணாவிரதத்துக்கு பின்னர் இன்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரே வெற்றி பெற்று உள்ளார். ஊழலை விட சக்தி வாய்ந்தது உயிர். அதனை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது.

அதில் இருந்து மீள்வதற்காக 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து திசை திருப்பி உள்ளனர். கருணையே இல்லாத ஒரு ஜனாதிபதியிடம் கருணை மனு சென்றது வேதனை அளிக்கிறது. தமிழக முதல் அமைச்சரால் மட்டும்தான் 3 பேரின் உயிர்களையும் காப்பாற்ற முடியும் என்று தமிழகம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே அவர் 3 பேர் உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். 100 நாள் சாதனையை இன்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள். 3 பேர் உயிரை காப்பாற்றினால் அது உங்கள் வாழ்நாள் சாதனையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

http://www.tamilthai.com/?p=25248

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு கறுப்பி. "தமிழக முதல் அமைச்சரால் மட்டும்தான் 3 பேரின் உயிர்களையும் காப்பாற்ற முடியும் என்று தமிழகம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" நல்ல முடிவு வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.