Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு மீதான மக்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01 செப்டம்பர் 2011

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்.

varathrajperuma_CI.jpg

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றிய பயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர்.

இவ்வாறு வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜப் பெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

குழந்தைகள், சிறுவர்கள் இரவு முழுவதும் தமது பெற்றோர்களைக் கட்டிப்பிடித்தபடி பயத்தில் உறைந்தபடி உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் தமது படிப்புகளை மேற்கொள்ள முடியாதுள்ளனர்.

இந்த நிலைமையானது வடக்கு கிழக்கின் மக்கள் சமூகம் முழுவதையும் உளவியல் ரீதியாக வாட்டி வதைக்கும் ஒரு கொடூரமாக இங்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது

இதனை பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் வதந்தி என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பொத்துவில் தொடக்கம் பருத்தித்துறை வரை பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் மர்மமாக நடமாடிய மனிதர்களை மக்கள் துரத்திய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அவர்களில் சிலர் அரச படைகளின் முகாம்களுக்குள்ளேயே ஓடி மறைந்திருக்கிறார்கள். அத்துடன் இவை தொடர்பாக இந்த அரச அதிகாரிகள் விடுக்கும் அறிக்கைகளும் சேர்ந்து இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டத்துக்கும் அரச படைகளின் அதிகாரத்துக்கும் இடையே திட்டமிட்ட தொடர்பு இருப்பதாக மக்கள் உறுதியாக நம்புவதற்கே வழிவகுத்திருக்கிறது.

இந்த மர்ம மனிதன் விவகாரம் மேலும் தொடருமாக இருந்தால் பலர் இதனால் மிகவும் ஆபத்தான உளவியல் நோய்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையே ஏற்படும். இரவு நேரங்களில் ஆண்கள் தமது வீடுகளை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல முடியாது உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது தொடர்ந்து இரவுகள் தோறும் நித்திரை முழிப்பதினால் ஏற்படும் பலயீனங்களுக்கும் நோய்களுக்கும் பலர் உள்ளாக நேரிடும்.

இந்த மர்ம மனிதர்கள் பற்றிய சம்பவங்களினால் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையையும் இப்போது இழந்துபோய் உள்ளனர். அரசாங்கம் இந்த சம்பவங்களை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதோ ஒரு குறுகிய அரசியல் நோக்கத்துக்காகச் செய்கிறது என்றே பரவலாக மக்கள் நம்புகிறார்கள். எனவே ஜனாதிபதியும் மற்றும் அமைச்சர்களும் இந்த விடயத்தில் உடனடியாக அக்கறை எடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்புப் படைகள் மீதும் பொலிசார் மீதும் நம்பிக்கைகள் ஏற்பட வழிவகுக்க வேண்டும்.

பாதுகாப்புப் படைகளின் தளபதிகளும் பொலிஸ் அதிகாரிகளும் மக்களைக் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு மர்ம மனிதர்கள் விவகாரத்தை மூடிமறைக்கும் போக்கைக் கைவிட்டு விட்டு மிகவும் காத்திரமான முறையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மர்மமான மனிதர்களின் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று அறிவித்து சமூகவிரோதிகளுக்கு எதிராகச் செயற்படும் மக்களை அதிகாரத்தால் கட்டிப்போடுவது மர்ம மனிதர்களின் செயல்களுக்கும் அதைப் பயன்படுத்த முயலும் திருடர்களுக்குமே உதவியாக அமையும். எனவே பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் மக்கள் அமைப்புக்களை அனைத்துக் கிராமங்களிலும் ஏற்படுத்தி அவை மர்ம மனிதர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக காத்திரமான முறையில் செயற்பட அரச படைகளும் பொலிஸாரும் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும், வடக்கு கிழக்கில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளும் சமயத் தலைவர்களும் சமூகப் பிரமுகர்களும் ஒன்றிணைந்து இந்த மர்ம மனிதர்கள் விவகாரத்துக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அ. வரதராஜப்பெருமாள்

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்.

கடுமையான சட்டங்கள் மூலம் மக்கள் உணர்வுகளை அடக்காதீர்கள்

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கோரப்பிடியிலும், பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களின் பிடியிலும் சிக்கி பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இன்னல்களுக்கும் துயரத்துக்கும் உள்ளாகியது வரலாறாகும்.

மிக நீண்ட காலம் இவ்வாறு உடல் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்த தமிழ் மக்களின் இயல்பு வாழ்விற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதுவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அரசாங்கத்தின் கடமையாகும்.

அந்த வகையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி விடுத்திருந்த அறிவிப்பு தமிழ், முஸ்லிம், மலையக மக்களை மகிழ்வுப்படுத்தும் செய்தியாய் அமைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதனை வரவேற்றிருந்தனர். இதே போன்று பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்குவதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். அதுவே, அனைத்து இலங்கை மக்களினதும் எதிர்பார்க்கையாகும்.

கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் நியாயமான உணர்வுகளை, ஜனநாயக ரீதியான எழுச்சியை அடக்கிவிட முடியாது என்பது எமது நம்பிக்கை, இதுவே நம் எல்லோரதும் அனுபவமாகும்.

அழுத்தங்களுக்கு மத்தியிலும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக துணிச்சலாக தீர்மானம் எடுத்த ஜனாதிபதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்கி நாட்டில் ஜனநாயக சூழல் மேலும் விரிவடையவும், சாதாரண சட்டங்கள் மூலம் நீதியான சூழல் மேம்படுத்தப்படுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும்.

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியற் தீர்வினை விரைவில் அடைவதற்கு உரிய உருப்படியான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுமாயின் புதிய முறையிலோ புதிய வடிவத்திலோ மீண்டும், மீண்டும் அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி அமுல் நடாத்த வேண்டிய தேவை எதிர்காலத்தில் அரசுக்கு ஏற்பட மாட்டாது என்பதையும் இத்தருணத்தில் கூறிவைக்க விரும்புகிறாம். .

அ.வரதராஜப்பெருமாள்

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்

http://www.globaltam...IN/article.aspx

புதுடெல்லி எழுதிக்கொடுத்துள்ளதை பார்க்கும்பொழுது முக்கிய நடிகர், இயக்குனரின் கதை வசனத்தை ஒப்புவிக்கவில்லையோ? இல்லை புதிய இயக்குனரான சீனாவை முழுக்க நம்பிவிட்டு பழைய இயக்குனரை கைகழுவி விட்டுவிட்டதோ? எனவும் என எண்ணத்தோன்றுகின்றது.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசு மீதான மக்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது

இதைத்தானே அன்று விடுதலை புலிகள் உங்கள் செவி கிழிய சொன்னார்கள் அப்போது நீங்களும் அரசுடன் சேர்ந்து அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தீர்கள் இப்போது என்னாச்சு ........?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.