Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை _

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை

வீரகேசரி இணையம் 9/19/2011 12:40:51 PM

முற்றிலுமாக செயலிழந்த நிலையிலுள்ள செயற்கைக்கோளொன்று எதிர்வரும் சில தினங்களில் பூமியில் விழும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெப்ரிஸ் எனப்படும் குறித்த விண்கலத்தின் நிறை 6-7 டொன்கள் ஆகும். இதனை நாசா விஞ்ஞானிகள் தற்போது உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செயற்கைக்கோளானது எதிர்வரும் 23ஆம் திகதியளவில் பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இக்கோளானது பூமியை வந்தடையும் போது 1006 துண்டுகளாக உடையுமெனவும் இவற்றில் 26 துண்டுகள் மட்டுமே பூமியில் விழுமெனவும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு உடையும் துண்டுகளில் அதிகூடிய துண்டொன்றின் நிறை 350 பவுண்ட்கள் எனவும் இவை பூமியில் மனிதரொருவரை மோதுவதற்கான சாத்தியம் 3200 க்கு 1 என அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாசா வரும் நாட்களில் வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இது எப்பகுதியில் விழுமென நாசா விஞ்ஞானிகளால் கூட உறுதியாகக் கூற முடியாது.

அண்டார்டிகாவைத் தவிர பூமியின் எப்பகுதியிலும் இது விழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு சூரியன்களைக் கொண்ட கோள்

இதேவேளை இரண்டு சூரியன்களை, ஒரு கோள் சுற்றி வருவதை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.

கெப்ளர்-16பி எனப் பெயரிடப்பட்டுள்ள இக் கோளானது பூமியிலிருந்து 200 ஒளிஆண்டு தொலைவில் அமைந்துள்ளது.

http://www.youtube.c...GhRFvSw28Y#t=0s

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33883

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி இணைப்பிற்கு,

இது ஆட்களுக்கு மேல் விழுந்தால் எந்தெந்த நஷ்ட ஈடுகளை பெறலாம், நாசாவிடம் நஷ்ட ஈடு பெற வாய்ப்பிருக்கா?

இந்த கோள் மகிந்தாவின் மண்டையில் வந்திறங்கவேண்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட பெரிய கோளை மகிந்தவின் மண்டையில் மட்டுமல்ல சிறிலங்காவின் மண்டையிலும் ஏன் சர்வதேசத்தின் மண்டையிலும் மே 2009 இல் இறக்கியாச்சு.

Edited by விசுகு

இந்த கோள் மகிந்தாவின் மண்டையில் வந்திறங்கவேண்டும் :lol:

மகிந்தாவின் மனுசியின் கொண்டையில் இருக்கு பூவை இறக்க தான் ஆவலுடன் இருக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sep 23, 2011 / பகுதி: உலக வலம் /

பூமியை தாக்கும் செயற்கைகோள்! நாளை அல்லது நாளை மறுதினம் என்ன நடக்கும்?

இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள், நாளை (23) பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி இந்திய ரூபா செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது.

14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது.

அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளிமண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பலாகிவிடும். இருப்பினும் 26 துண்டுகள் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வெடித்து சிதறும் பாகங்கள் 150 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்போது விண்வெளியிலிருந்து கிளம்பும் என சரியாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் பூமியில் விழும் என தெரிவிக்கின்றனர்.

செயல் இழந்த பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. இவை பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மீறி வளிமண்டலத்தில் நுழையும் செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலாகிவிடுகின்றன. அதையும் மீறி பூமிக்கு வரும் செயற்கைக்கோள்களை கடலுக்குள் விழச் செய்வது வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லை. இதனால் இதன்செயல்பாட்டைகட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கின்றனர்.

யு.ஏ.ஆர்.எஸ்., செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் கடலில் விழ வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் வடக்கு கனடாவில் அல்லது தென் அமெரிக்காவின் தென்பகுதியிலும் விழ வாய்ப்புள்ளது. இதில் 3200ல் ஒரு பங்கு, மனிதர்கள் மீது விழும் அபாயமும் இருக்கிறது. இது விழும்போது 750 கி.மீ., சுற்றளவு வரை இதன் பாகங்கள் பூமியில் பரவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/news/18514/57/.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி நன்றி இணைப்பிற்கு, எங்க விழும் என்று நீங்க சரியா சொல்லாததால் ஆபிஸிற்கு வந்துவிட்டேன், 15மாடிக் கட்டத்தில் 2ம் மாடியில் செக்கை இருக்க வைத்து செக்கின் மடியில் இருந்து மடிக் கண்ணியில் விசைப் பலைகையை தட்டிக் கொண்டிருக்கிறேன், விழுந்தவுடன் அறியத் தரவும், எழும்பி வீட்டை போவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி நன்றி இணைப்பிற்கு, எங்க விழும் என்று நீங்க சரியா சொல்லாததால் ஆபிஸிற்கு வந்துவிட்டேன், 15மாடிக் கட்டத்தில் 2ம் மாடியில் செக்கை இருக்க வைத்து செக்கின் மடியில் இருந்து மடிக் கண்ணியில் விசைப் பலைகையை தட்டிக் கொண்டிருக்கிறேன், விழுந்தவுடன் அறியத் தரவும், எழும்பி வீட்டை போவம்

இனி விழாது :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.