Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இவங்க ராணி மங்கம்மாவும் பூலான் தேவியும்  

நெத்தியடி அடிக்க    

பெண்களை பற்றி பெண்கள் தான் குறையும் குற்றமும் சொல்லுவங்கா  

இனி இப்படி சம்மந்தமே இல்லாமல் பேசுவாங்க.. பாருங்க :):lol: :lol:

  • Replies 138
  • Views 17.8k
  • Created
  • Last Reply

பத்து ஆண்களும் ஒன்றாக கூடலாம் ஆனால் இரண்டு பெண்கள் ஒன்றாய் கூடினால் பின் பேரழிவுதான் :P :P . ஆனால் அதற்கு எமது பெண்கள் (யாழ்கள) விதிவிலக்கு :):lol:

ட்

புரியவில்லை எதைப்பற்றி கதைக்க போகிறீர்கள்?

பத்து ஆண்களும் ஒன்றாக கூடலாம் ஆனால் இரண்டு பெண்கள் ஒன்றாய் கூடினால் பின் பேரழிவுதான் :P :P . ஆனால் அதற்கு எமது பெண்கள் (யாழ்கள) விதிவிலக்கு :):lol:

இந்தா உண்மையை சொல்லிப்போட்டு இப்பிடி பெல்டி அடிக்கிறதெண்டால் என்ன தம்பி இது .................

இனி இப்படி சம்மந்தமே இல்லாமல் பேசுவாங்க.. பாருங்க :):lol: :lol:

நீங்க சொன்னது சரிதான் அக்கா :wink: :wink: :P

இந்தா உண்மையை சொல்லிப்போட்டு இப்பிடி பெல்டி அடிக்கிறதெண்டால் என்ன தம்பி இது .................

பின்ன பூரிக்கம்பால் வாங்கித்தான் ஆகனும் என்றீங்களா..சரியான சுயநலம் முகத்தார் உங்களுக்கு...நீங்கதான் பொன்னம்மாக்காட்ட வாங்கிறது எண்டதுக்காக எல்லாரும்...ம்ம்ம்..! :wink: :lol::lol:

நீங்க சொன்னது சரிதான் அக்கா :wink: :wink: :P

தமிழினி அக்கா திருக்குறள் சொல்லிட அதுக்கு :P விளக்கம் சொல்ல நித்தில வந்துட்டா :P

எப்ப தான் உங்களுக்கு ஏதும் புரிச்சு இருக்கு? :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் பற்றிய கதை

ட்ராமாவைப் பற்றிக் கதைப்பம் எண்டு வாணி கத்தினபோதும் யாரும் அதைக் கணக்கெடுத்ததாத் தெரியேல்லை. பிரியன் மட்டும் "உனக்கு இப்ப இங்கை என்ன அலுவல்" எண்டு மட்டும் கேட்டுவிட்டு ஒதுங்கிவிட்டான். வாணி இதுகள் திருந்தாதுகள் எண்டது மாதிரி ஒரு பார்வை எல்லாரையும் பாத்தாள்.

"ட்ராமா பற்றி பிறகு கதைப்பம். முதலில பட்டிமன்றம் இருக்கோ இல்லையோ" எண்டு ஆரோ தங்கடை சந்தேகத்தினை தூக்கிப் போட்டினம். வசந்தனுக்கு பட்டிமன்றம் பிடிக்காது. அதை கண்ணிலையும் காட்டக் கூடாது. 'கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா எண்ட மருத்துவப் பரிசோதனை நடக்கிற இடம் அது எண்டு அவன் ஆக்களுக்கு சொல்லுவான். எண்டாலும் ஒரு தலைவரா அவன் சிந்திச்சுப் பார்த்தான். வாற சனத்துக்கு ஒரு Entertainment இருக்க வேணும் எண்டதுக்காக பட்டிமன்றத்துக்கு அவனும் ஒத்துக் கொண்டான். ஆரும் கேட்டால் மக்கள் விரும்பிறதைத்தானே குடுக்க வேணும் எண்டோ இல்லாட்டி உலகமயமாக்கலில இதெல்லாம் சகஜம் எண்டோ சொல்லுவம் எண்டும் மனசுக்குள்ளை குறிச்சு வைச்சுக் கொண்டான்.

"உண்மையான காதல் என்பது கல்யாணத்துக்கு முதலிலா இல்லாட்டி பிறகா வருகுது எண்டதை தலைப்பா வைப்பம்" எண்டான் ஒருத்தன்.

வசந்தனுக்கு உண்மையான காதல் எண்டால் என்ன பொய்யான காதல் எண்டால் என்ன எண்டு ஒண்டும் விளங்கேல்லை. மனசும் மனசும் மட்டும் நேசிக்கின்ற, ஆத்மார்த்தமான எண்ட மாதரியான விழல் விளக்கங்களை அவன் நம்பிறதேயில்லை. காதல் ஆரம்பிக்கிறதே வெறும் உடல் ஈர்ப்பாலைதான் எண்டது அவன்ரை நம்பிக்கை. அதுக்குப் பிறகு போகப் போக, பழகப் பழக ரண்டு பேருக்கும் உணர்வு ரீதியான ஒரு ஈர்ப்பும் புரிந்துணர்வும் வருகுது எண்டதை அவன் புரிஞ்சு கொண்டிருந்தாலும் அது சாதாரணமாக அதிக காலம் எவரோடு பழகினாலும் வாற புரிந்துணர்வு தான் எண்டதையும் விசேஷமாக குறித்து சொல்ல அதில எதுவும் இல்லையெண்டதையும் வசந்தன் விளங்கி வைச்சிருந்தான்.

"எடியே நான் ஒண்டு சொல்லட்டே?" எண்டு கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் சொல்லத் தொடங்கினாள் வாசுகி!

"பதினெட்டு வயசு வரைக்கும் நாங்கள் விரும்பின பொடியளோடை சுத்தவேணும். பதினெட்டில இருந்து இருபத்தினாலு வயசு வரைக்கும் படிப்பில கவனம் செலுத்தி வேலைக்கு போய் காசு சேக்க வேணும். இருபத்தினாலு வயசில வீட்டில அம்மா பாக்கிற மாப்பிளையை கலியாணம் கட்டி சந்தோசமா இருக்க வேணும்" அவள் சொல்லி முடிக்கவும் எல்லா பெட்டையளும் ஓ எண்டு கத்தி அவளுக்கு தார்மீக ஆதரவு குடுத்தாளவை.

"கவனமடி.. உதை வெளியில சொல்லிப்போடாதை.. எல்லாக் கோட்டிலையும் கேஸ் போட்டுவிடுவாங்கள்" எண்டு ஒருத்தன் சொல்லி தனக்கும் உலக நடப்புக்கள் தெரியும் எண்டதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

வசந்தன் காதலைப்பற்றி கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான். காதல் எண்ட பேரில பெடியள் பெட்டையள் பார்க் சினிமா எண்டு சுத்திறதிலை அவனுக்கு எந்தக் கருத்தும் இல்லை. அது சம்மந்தப்பட்ட ரண்டு பேரோடை பிரச்சனை எண்ட அளவில யோசிச்சாலும் காதலில சிலர் செய்யிற திருகுதாளங்கள் அவனுக்கு சிரிப்பைக் கொண்டு வரும்.

நிறையப் பேர் தங்கடை இயல்பை மறைச்சுக் காதலிக்கிறது ஏன் எண்டு அவனுக்கு விளங்கேல்லை. உண்மையான காதல் புனிதமான காதல் எண்டு கதை சொல்லுற சிலரும் தாங்கள் அனுப்பின sms க்கு அடுத்த நிமிசத்தில் பதில் வராட்டி தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எண்டு பயந்து போகினம். வரச்சொன்ன நேரத்துக்கு அவள் வராட்டி தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எண்டு பயப்பிடுகினம். போன் பண்ணி வேறேதோ காரணங்களினால் அவள் அதை எடுக்காட்டில் தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எணடு பயப்பிடுகினம். பயந்து பயந்து சாகிறது எண்டு சொல்லுவினமே அப்படி செத்து செத்து காதலிக்கிற அவையை நினைச்சால் பாவமாயிருக்கும் அவனுக்கு.

என்ரை எல்லாப் பலவீனங்களும் தெரிஞ்சு, என்ரை கோப தாபங்களை உணர்ந்து, நான் சண்டைபிடிக்க அனுமதித்து, என்னோடு எந்தச் சஞ்சலமுமில்லாமல் சண்டைபிடிச்சு காதலிப்பது எத்தனை வித்தியாசமானது என வசந்தன் நினைச்சுக் கொண்டான்.

என்ரை பலவீனங்கள் தெரிஞ்சாலும் இந்தக் காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை, என்ரை கோபதாபங்களை எப்பிடிக் காட்டினாலும் என்ர காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை, நான் என்ன சண்டை பிடிச்சாலும் இந்தக் காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை இருக்கும் ஒரு ஆணும் அதே நம்பிக்கை இருக்கும் ஒரு பெண்ணும் காதலித்தல் எல்லோருக்கும் கிடைக்காத வித்தியாசமான அனுபவம் தான்.

சண்டையின் உச்சக்கட்டத்தில் இனி உனக்கும் எனக்கும் கதை இல்லையெண்டு சொல்லி தொலைபேசிகளை அடித்து வைக்கும் அந்தக் கணத்திலும் அவளை நான் காதலிக்கிறேன் என்றும் அவனை நான் காதலிக்கிறேன் என்றும் அவனும் அவளும் நினைக்கின்ற காதல் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்?

என் இயல்பு எதுவென்று தெரியாத நிலையில் காதலிக்கப்படுவதிலும் பார்க்க என்னை முழுதாய் தெரிந்து இவன் இவ்வளவும் தான் இதை தவிர இவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது என இயல்பு தெரிந்து காதலிக்கப்படுவதே இன்பம் எண்டு முடிவெடுத்தான் வசந்தன். அதையே அங்கை இருந்த எல்லாருக்கும் சொன்னான்.

"போடா மக்கு! நான் என்ரை கோபத்தில அவனோடை எரிஞ்சு விழுந்தன் எண்டால் போடி எண்டுபோட்டு போயிடுவான்.." எண்டாள் வாசுகி

"போகட்டும் விடு" எண்டான் வசந்தன்.

நன்றி - சாரல் / சயந்தன்

:twisted: :twisted: :twisted: :twisted: :evil:

அதை விட..வசந்தன்..அது வேற வசந்தன்..நீங்கள் டென்சன் ஆகாதைங்கோ..

.....................

கதை நன்றாக இருக்கு..பட் கதையின் முடிவு எனக்கு சுத்தமா..விளங்கல.. :? :roll: :roll: :roll:

ஆமா இவங்க ராணி மங்கம்மாவும் பூலான் தேவியும்

நெத்தியடி அடிக்க :P :P

பெண்களை பற்றி பெண்கள் தான் குறையும் குற்றமும் சொல்லுவங்கா

:P :P

ஐயோ வினீத் அண்ணா..கொமா போட்டுக்கொண்டே போறீங்களே..முற்றுப்புள்ளி வையுங்கோ...!!!!!!!!!

ஐயோ வினீத் அண்ணா..கொமா போட்டுக்கொண்டே போறீங்களே..முற்றுப்புள்ளி வையுங்கோ...!!!!!!!!!

நீங்கள் சரி எண்ட முற்றுப்புள்ளி வைத்து விடலாம் :P :P

மதன் நீங்கள் இணைத்த காதலைப்பற்றி கட்டுரை என்னைப்பொறுத்தவரையில் நிஐமானது. காதலுடன் சண்டை பிடித்து தொலைபேசியை அடித்து வைத்துவிட்டு அடுத்த 5 நிமிடங்களில் ஒன்றுமே நடக்காதமாதிரி கதைப்பார்களே அங்கு தான் நிஐ காதலை உணரமுடியும்.

நன்றி இங்கு இணைத்தமைக்கு மதன்.

. காதலுடன் சண்டை பிடித்து தொலைபேசியை அடித்து வைத்துவிட்டு அடுத்த 5 நிமிடங்களில் ஒன்றுமே நடக்காதமாதிரி கதைப்பார்களே அங்கு தான் நிஐ காதலை உணரமுடியும்..[/quo

ம்ம்ம்ம்ம்..............அனுபவித்து சொல்லேக்கை நாங்கள் கேக்கத்தான் வேணும் ........... வாழ்க.....உங்கள்.....கா......த.....ல்...

ஆமா..இந்த கதை எனக்கு முடிவு விளங்கவில்லை.இதில் யார் யார் காதலர்கள்..??யாருமே இல்லை எண்டெல்லோ நெச்சன்..கடைசில அந்த கேர்ள் எதுக்கு போகட்டும் விடு எண்டு சொல்லுறா..சத்யமா புரியல.. :roll: :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.