Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் டிவியில் இருந்து சக்சேனா ராஜினாமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் திரைப்படப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவர் பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்காலிமாக செம்பியன் என்பவரை சி.இ.ஓ.’வாக நியமித்தது. அவர் மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை வாரிக் குவித்தது. தற்போது வெடி என்ற படத்தையும் வெளியிட உள்ளது.

இதனைத் தொடர்ந்து சக்சேனா, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனை தொடர்பு கொண்டு தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்திற்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் சன் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் கலாநிதிமாறனுக்கு அனுப்பி வைத்துள்ளார். கலாநிதிமாறன் அக்கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என சக்சேனாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

http://www.nakkheera...ws.aspx?N=62298

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே சண் தொல்லைக்காட்சியையும் திரப்படத்துறையினர் ஒதுக்கி விட்டால் சந்தோசம்

  • கருத்துக்கள உறவுகள்

சன் தொலைக்காட்சியை மூடிவிட்டால் இன்னும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

04.jpg

சிறைப் பறவையாக கூண்டுக்குள் அடைந்து கிடந்த சக்சேனா, இப்போது வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார். சிறையில் இருந்த போது, தனது எதிரிகள் யார் யார் என்று தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது என்று சொல்லி புலம்புகிறார். சக்சேனாவின் துபாய் பினாமியும் கல்லூரித் தோழருமாக வலம் வந்தவர் 60 கோடி ரூபாயை அபேஸ் செய்தது வேறு சக்சேனாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரசியல்வாதி கைது செய்யப்பட்டால், அரசியலில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் சந்தோஷப்படுவார்கள். சினிமாத் துறையில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அத்துறையில் இருக்கும் அவரது எதிரிகள் சந்தோஷப்படுவார்கள். பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டால், கட்டுமானத் தொழிலில் அவரது போட்டியாளர்கள் கொண் டாடுவார்கள். அரசியல், சினிமா, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் எந்த முத்திரையும் பதிக்காத, நேரடியாக அந்தத் தொழில்களில் இறங்காத ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டதும் எல்லா தரப்பினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

தொழில்ரீதியாக இப்படி போட்டிகள் இருப்பதைக் கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நண்பன் கைது செய்யப்பட்டால், அவரது நண்பர்கள் வருத்தப்படுவதுதான் இயல்பு. ஆனால், ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது நண்பர்கள் எல்லாம் ரகசியமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றால் நம்ப முடிகிறதா?

எல்லாத் தரப்பிலிருந்தும் ஏன் இப்படி சக்சேனாவுக்கு எதிர்ப்பு? தனக்கு வாழ்வளித்த கலாநிதியையே மதிக்காத சக்சேனா, நண்பர்களையும் அப்படியே நடத்தியதுதான் இதற்குக் காரணம்.

தி.மு.க. ஆட்சியில் கிண்டியில் இருக்கும் செக்கர்ஸ் ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கு குறித்து, நண்பர்களிடம் பேசிய சக்சேனா, “அந்த ஓட்டல் அடிச்ச விவகாரத் துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் துரை தயாநிதியும் அவனோட ஆட்களும் செஞ்ச வேலை. இது கலாநிதிக்கும் தெரியும். ஆனால், மாமனும் மச்சானும் சேர்ந்து என்னை மாட்டி விடணும்னு நினைக்கறானுங்க’’ என்று சொல்ல, நண்பர்கள் வட்டாரம் ஆடிப்போயிருக்கிறது. இந்தத் தகவலும் அப்போதே கலாநிதியின் காதுக்குப் போனதாம்.

இப்படியே தனது பழக்க வழக்கங்களையும் நடவடிக்கைகளையும் வைத்திருந்த சக்சேனாவை துபாய் பினாமியும் எதற்காக ஏமாற்றினார் என்பது அவரை விசாரித்தால்தான் தெரியும் என்கிறது சக்சேனாவின் நட்பு வட்டாரம்.

சரி... யார் அந்த துபாய் பினாமி?

சக்சேனாவின் நண்பரான வெங்கட்குமார் ஈரோட்டைச் சேர்ந்தவர். லயோலா கல்லூரியில் சக்சேனாவின் ஜூனியரான இவர், துபாயில் பெரும் நிதி நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். வெங்கட் சென்னை வரும்போதெல்லாம், சென்னையில் இருக்கும் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தங்கிச் செல்வது வழக்கம். கடந்த ஐந்து வரு டங்களில், வெங்கட் சென்னை வந்து செல்லும் போதெல்லாம், சக்சேனா மூலம் ஏகப்பட்ட கோடிகள் கைமாறியிருக்கிறது.

அந்தப் பணத்தை சென்னை பாரிமுனையில் இருக்கும் ஹவாலா பேர்வழிகள் மூலம் துபாய்க்கு எடுத்துச் சென்றிருக்கிறார் வெங்கட். இப்படி பலமுறை கைமாறிய தொகையின் மதிப்பு மட்டும் 60 கோடி ரூபாய். அந்த நிதியை, அங்கே பெரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார் வெங்கட். இதை உறுதிப்படுத்திக் கொள்ள இரண்டு முறை சக்சேனாவும் துபாய் சென்றிருக்கிறார்.

நான்கைந்து முறை, 3 கோடி, 4 கோடி என்று கொடுத்த சக்சேனா, கடைசியில் கொடுத்த தொகை 20 கோடியாம். இந்த நிதி எப்படி வந்தது என்று வெங்கட் விசாரித்த போது, ‘எந்திரன்’ படத்தின் மூலம் தனக்கு பெரிய கமிஷன் கிடைத்ததாக, சக்சேனா சொல்லியிருக்கிறார்.

இப்படி சேர்ந்த தொகை அனைத்தும், துபாயில் முதலீடு செய்த விஷயம் வெங்கட்டுக்கும், சக்சேனாவுக்கும் மட்டுமே தெரியும். சிறை சென்ற பிறகு, தனது முக்கிய நண்பர் மூலமாக வெங்கட்குமாரிடம் பேசி இருக்கிறார் சக்சேனா.. அந்த நண்பரிடம், ‘சக்சேனா எந்தப் பணமும் என்னிடம் தரவில்லை’ என்று மறுத்து விட்டாராம் வெங்கட்குமார். இந்தத் தகவல் கிடைத்ததும் சக்சேனா சிறைக்குள் தனிமையில் கதறி அழுதிருக்கிறார்.

சிறையில் இருந்து சக்சேனா வெளியே வந்ததும் முதல் வேலையாக வெங்கட்குமாரை தொடர்பு கொண்டு பணம் குறித்து கேட்டிருக்கிறார். ‘பணத்தை முதலீடு செய்த நிதி நிறுவனம் கடும் நஷ்டத்தில் இருக்கிறது. பணம் எப்படி வரும் என்று தெரியவில்லை. அதை எப்படியாவது வாங்கிடலாம்’ என்று பதில் சொல்ல, ஆடிப் போய்விட்டாராம் சக்சேனா.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

இந்தப் பண விவகாரத்தை வெளியே சொல்லவும் முடியாமல், வெங்கட்குமாரை அழைத்து கறாராக கேட்கவும் முடியாமல் தவித்து வருகிறார் சக்சேனா. இது குறித்து சக்சேனாவின் நட்பு வட்டாரத்தில் கேட்டபோது, “அவருக்கு துபாயில் ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக மலேசியா, சிங்கப்பூரில் முதலீடு செய்தி ருக்கலாம். ஆனால், வெங்கட்குமாரிடம் அவ்வளவு தொகை இருக்குமா என்பது சந்தேகம். ஒரே நபரிடம் இத்தனை பெரிய தொகையை சக்சேனா தருவதற்கு முட்டாள் இல்லை. வெங்கட்குமார் சென்னை வரும் போதெல்லாம், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் சக்சேனாவை தனியாக சந்தித்துப் பேசுவார். மற்றபடி வெங்கட்குமாரிடம் சக்சேனா பணத்தைக் கொடுத்து ஏமாந்தாரா என்பது தெரியாது’’ என்ற மழுப்பலான பதிலே கிடைத்தது.

தங்களுக்குத் தெரியாமல் சன் நிறுவனத்தில் சக்சேனா செய்திருந்த தில்லுமுல்லுகள் ஒவ்வொன்றாக வெளிவர, மாறன் சகோதரர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இந்த வெங்கட் விவகாரம் அவர்கள் கோபத்தைப் பலமடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘சன் பிக்சர்ஸ்’ சம்பளமும் இல்லை. காஸ்மோபாலிட்டன் கிளப்பிலிருந்துகூட அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நண்பர்களும் ‘அல்வா’ கொடுத்திருக்கும் இந்த நிலையில், அதிகாரத்தில் இருக்கும் போது போட்ட ஆட்டங்களை சக்சேனா நிச்சயம் நினைத்திருப்பார்.

திருட்டு சி.டி. தயாரித்தாரா?

கடந்த ஆட்சியில் எல்லா புதுப்படங்களின் சிடியும் உடனடியாக வெளிவர, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, வெளியிட்ட படங்களுக்கு மட்டும் ஏக கெடுபிடி விதிக்கப்பட்டது.

ஆனாலும், படம் வெளிவந்து ஓரிரு வாரங்களில் சி.டி. வெளியானது சன் பிக்சர்ஸ் நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தது. அதிலும் மற்ற படங்களை விட, சன் பிக்சர்ஸ் நிறுவனப் படங்களின் சி.டி.க்கள் அதிக தரத்தில் வெளிவந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து கலாநிதி மாறன் பலமுறை சக்சேனாவிடம் பேசியி ருக்கிறாராம். அதுகுறித்து தன்னுடைய அதிர்ச்சியையும் பதிலாகத் தெரிவிப்பாராம் சக்சேனா.

அந்த திருட்டு சி.டி.க்களைத் தயாரித்ததும் சக்சேனாதான் என்று இப்போது தெரிய வந்துள்ளதாம். இதன் மூலமும் பெருமளவு பணம் சம்பாதித்து இருக்கிறார் சக்சேனா. இந்தத் தகவல் தெரிந்து கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் கலாநிதி மாறன்.

நமது நிருபர்

-குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

சக்ஸேனா ராஜினாமா!

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்ஸேனா, சிறையில் இருந்து விடுதலையானதும் அலுவலகம் சென்றாராம். அவரிடம் பேசிய நிர்08b.jpgவாகிகள் அவரை ராஜினாமா செய்யச் சொன்னார்களாம். ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த அவருக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்ததாம். அதாவது, ‘கோர்ட் வழக்குக்கு என இதுவரை நிறுவனம் ரூ. 40 கோடி செலவு செய்துள்ளது. அதனைத் திருப்பித் தரவேண்டும்’ என்றும் சொன்னார்களாம். அவரும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் சன் நிர்வாகத்துக்கு மிகவும் நெருக்கமான சிலர், ‘இதுபோன்ற வம்பு விவகாரங்களுக்கு எல்லாம் சக்ஸேனாதான் பொறுப்பு என்று வெளியில் உள்ளவர்களுக்குச் சொல் வதற்காகத்தான் ராஜினாமா நாடகம். கலாநிதியுடன் அவருக்கு உள்ள உறவை யாராலும் பிரித்08c.jpgதுவிட முடியாது. சில நாட்களில் அவர் சன் நிறுவனத்தில் வேறு இடத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவார்’ என்று சொல்கிறார்கள்.

கலாநிதிக்கு காய்ச்சல்!

மாறன் சகோதரர்கள் மீதான சி.பி.ஐ. பிடி இறுகி வருகிறது. இரண்டொரு நாளில் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கலாம் என்று தகவல்கள் சொல்கின்றன. இந்தத் தகவலால் சகோதரர்கள் இருவரும் மிகவும் அப்செட்டாகியிருக்கிறார்கள். தயாநிதி மாறன் டெல்லியில் இருக்கிறாராம். கலாநிதிக்கு வைரஸ் காய்ச்சலாம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா, பிரதமரையும் சிதம்பரத்தையும் இழுத்துவிட்டது காங்கிரஸ் கட்சிக்குக் கோபமாம். அதனால்தான் அவர் மீது கூடுதல் செக்ஜன்கள் போடுகிறார்கள். தப்பிவி டுவார் என்று எதிர்பார்த்த தயாநிதியையும் சிக்க வைக்கிறார்கள் என்று தி.மு.க. தரப்பில் சொல்லப்படுகிறது. மாறன் சகோதரர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தால் கூட்டணி முழுசாக பிரிந்துவிடும் என்கிறார்கள்.

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.