Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மயமாகும் யாழ்.பல்கலைக்கழகம் (Photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffnauniver-150x150.jpg

யாழ் பல்கலைக்கழகத்திற்கு இம்முறை அதிகளவு வெளிமாட்டங்களைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது யாழ்.பல்கலைக்கழக வரவாற்றில் என்றும் இல்லாத ஒரு சிங்கள மயமாக்கல் நடவடிக்கை என யாழ்.கல்விச் சமூகம் கருதுகிறது

இவர்களுக்கான கற்கைநெறி ஆரம்ப நாளான நேற்று திங்கள் கிழமை இவர்கள் தமது குடும்பத்தினருடன் வாகனங்களில் பல்கலைக்கழக வாசலில் குழுமியிருந்ததைக் காண முடிந்தது.

இம்முறை மருத்துவ பீடத்திற்கு 100 சிங்கள மாணவர்களும் விஞ்ஞான பீடத்துக்கு 160 தென்பகுதி சிங்கள மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.

இதில், பௌதீக விஞ்ஞானத் துறைக்கு 100 சிங்கள மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்துறைக்கு 60 சிங்கள மாணவர்களும் அனுமதி பெற்றிருப்பதாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இது இம்முறை விஞ்ஞானபீடத்துக்கு தெரிவாகும் மாணவர்களின் விகிதாசாரப்படி 60 சதவீதம் என்றும் தெரியவருகிறது.

கடந்த காலங்களில் கூடியளவுக்கு முழுக்க முழுக்க தமிழ் மாணவர்கள் மாத்திரமே உயர்கல்வியைத் தொடர்ந்த ஒரு பல்கலைக்கழகமாக இருந்த யாழ் பல்கலைக்கழகத்தில், தற்போது தென்பகுதி சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களும் அதிகளவில் அனுமதி பெற்று கல்வியைத் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் தமிழர்கள் பின்தள்ளி சிங்கள மயமாக்கும் ஒரு செயற்பாடாகவே யாழ்.கல்விச் சமூகத்தினால் பார்க்கப்படுகிறது.

எமது காணிகளை அபகரித்து திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் ஒரு புறம் மறுபுறத்தில் எமது கல்வியில் கை வைத்து அதையும் சிங்கள மயமாக்குகிறது சிறிலங்கா அரசு யாழ்.கல்விச் சமூகம் விழிப்படைய வேண்டும்.

sinhala_univer_02.jpg

sinhala_univer_01.jpg

http://www.tamilthai.com/?p=27747

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க.. எப்படி.. யாழ் பல்கலைக்கழகத்திற்கு இவை வருகினம் என்றதும்.. அவைக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினம் என்பதும் புரியவில்லை.

யாழ் மாவட்டத்தில் கல்வி கற்ற ஒருவர்.. பொறியியல் கல்வியை தேர்வு செய்திருந்தால்.. அல்லது மெரிட் புள்ளிகள் பெற்றால் மட்டுமே அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் கல்வி கற்க முடியும். ஆனால் அண்மைய ஆண்டுகளாக புதிய பாடநெறிகள் புகுத்தப்பட்டு.. வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.. அவர்களுக்குரிய பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் அனுப்பப்படும் விடயம் நிகழ்ந்து வருகிறது. இது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும் சாதகமான விடயமாகும்..!

இந்த நிலை.. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற போதும்.. நம்மவர்கள் அதைப் பற்றி கதைப்பது குறைவு. கிழக்கில் முஸ்லீம்களுக்கு என்று தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவினார் ஆஸ்ரப். அதுமட்டுமன்றி கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். வடக்கே யாழ் மற்றும் வவுனியா கம்பஸிலும் இவர்களின் ஆதிக்கம் தான்.

கொழும்பு.. மொரட்டுவ.. பேராதனியவை எடுத்தால்.. அங்கு தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியே காணப்படுகிறது. கொழும்புக்கு தெரிவாவோர்.. மெரிட் அடிப்படையில் வருபவர்கள். மற்றவர்கள் வடக்குக் கிழக்கில்.. பொறியியல் கல்வி வழங்கப்படாத காரணத்தால்.. போகின்றனர். ஆனால்.. யாழ் மாவட்டத்திலோ.. அல்லது வடக்குக் கிழக்கிலோ கல்வி கற்காத சிங்களவர்கள் எப்படி.. யாழ் பல்கலைக்கழகம்.. கிழக்குப் பல்கலைக்கழகம் நோக்கி வர முடிகிறது..???! இந்த நிலை.. யாழ் மாணவர்கள் தென்னிலங்கையில் உள்ள இதர பல்கலைக்கழகங்களுக்குப் போக இருக்கிறதா என்றும் நாம் ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

யாழ் மாவட்ட மாணவர்கள்.. களனி.. சிறி ஜெயவர்த்தன புர.. உட்பட ஏனைய தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்படும் புள்ளி விபரங்கள் இருந்தால்.. அதனையும் நாம் பெற்று ஆராய வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம்.. களனி.. மற்றும் ஜெயவர்த்தன புர மற்றும் பிற தென்னிலங்கை பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க சிங்களவர்களையே அதிகம் உள்ளடக்கி வைத்திருக்கின்றன...!

டேய் .....லூசுப்பயலுகளே....யாழ் மாணவர்கள் எங்கு வேணும் எண்டாலும் படிக்கலாம்...ஆனால் யாரும் யாழ்பாணத்துக்கு வரக் கூடாதா???

  • கருத்துக்கள உறவுகள்

லுசுப் பயலே 1991/92 இல் அரசாங்கத்துக்கு எதிரா சுரேந்திரன் என்ற மாணவனால் போட்ட வழக்கை எடுத்துபார் என்ன நடந்தது என்று, அதில் வெற்றி பெற்று எத்தனை மாணவர்கள் பல்கலைக்கழகம் போனவர்கள் என்று தெரியும், அப்ப தெரியும் அரசாங்கத்தின் அடக்கு முறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.