Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவிற்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்கிறதா ?

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யும். எனவே இதனை வரவேற்கின்றோம் என இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

ஆனால் தமிழர்களை அழிப்பதற்கு உதவிய அமெரிக்காவின் செயற்பாடுகள் இவ்விடயத்தில் எந்தளவிற்கு உண்மையாக அமையுமென்பதை கூற முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தினால் அந்நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியிலும், உலக உழைக்கும் வர்கத்தினர் மத்தியிலும் தமிழர் பிரச்சினைகளை கொண்டு செல்ல முடியும்.

ஆனால் மேற்குலகம் மீது எமக்கு நம்பிக்கை கிடையாது. தமிழர்களை ஒழிப்பதற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகும்.

எனவேதான் ஒபாமா பட்டும் படாமலும் அறிக்கைகளை விடுகிறாறே தவிர கடுமையாக தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டுமென வலியுறுத்துவதில்லை. இது தான் உண்மை.

தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் எப்போதோ அமெரிக்காவினால் அதனை பெற்றுக் கொடுத்திருக்க முடியும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

அமெரிக்காவுக்கு இஸ்ரேல், போன்ற நாட்டைத்தவிர வேறு எல்லா இடமும் 'தனக்கு இதில் என்ன இலாபம்?' என்ற கேள்வியை வைத்தே எதையும் செய்யும் என்பது நாம் அறிந்ததே.

எனவே, தமிழருக்காக அமெரிக்கா குரல் கொடுக்கும் என்றால் அதற்கு எம்மால் ஒரு தேவை உள்ளது என்பதே காரணம். அவர்களுக்கு உள்ள தேவையை ஆராய்ந்து/அறிந்து எமக்கு அதிகூடிய அரசியல்/பொருளாதார இலாபத்தை அதில் பெறுவதே சாமார்த்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிதாய் எதுவும் தமிழர் தரப்புக்கு அமேரிக்கா செய்யும் என்று கனவுகான வேண்டாம் அவர்கள் ஏதாவது தமிழ் தரப்பு சின்னனாக ஏதாவது செய்தால் அதை விட இரண்டு மூன்று மடங்கு சிங்களவனுக்கு செய்து அவர்களை சந்தோசப்படுத்தி சீனா பக்கம் போகாது பார்க்க வேண்டுமே அப்படியிருக்கையில் அமேரிக்கா ஏதாவது செய்யுமா ?

யார் சொன்னது? தளம்,எண்ணை வளம்.இது போதும் இப்போதைக்கு,ஆனால் இலங்கை அரசுகள் எம்மை மதிக்கவேண்டும்,சிறு நீர் கழிப்பதாயினும் எமக்கு சொல்லிவிட்டு செய்தால் நாட்டில் உலகறிய நல்லாட்சி நடப்பதாக முழு உலகாலும் ஏற்றுகொள்ளபடும்

  • கருத்துக்கள உறவுகள்

அவன் ஒரு வியாபாரி

எம்மிடம் என்ன உண்டு அவனை மடக்க....?

அத்துடன் சிங்களவன் என்ற நரி எதையும் இலவசமாகக்கொடுக்கும் பங்காளியும் எம்முடன் உண்டு?

அதையும் மீறி எம்மால்....?

ஆனால் செய்யணும்

எப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலும் பார்க்க, ஸ்ரீ லங்காவிலும் பார்க்க நன்றாக தமிழரை வைத்து பார்க்கும் அமெரிக்காவை நம்ப தயங்குகிறோம்.

ஸ்ரீ லங்கா காரன் காசை கொட்டி எமது ஆயுத போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றிவிட்டான். அமெரிக்காவாலும் அந்த நேரம் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் காலம் மாறிவிட்டது.

இப்போது மேற்கத்தைய நாடுகளுக்கு தமிழ் ஈழத்தை அங்கீகரித்து மேற்கத்தைய ஆதரவு நாடு ஒன்றை தென் ஆசியாவில் உருவாக்க ஆசை வந்துவிட்டது.

விகிரமபாஹுவும் தமிழரை மேற்கிடம் இருந்து பிரிக்க அலுவல் குடுக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் அமெரிக்காவிற்கு இராணுவத்தளத் அமைக்கவே இடம் காணாது. அதை ஏன் அமெரிக்கா பெற்றுத்தரவேண்டும்

தமிழீழம் அமெரிக்காவிற்கு இராணுவத்தளத் அமைக்கவே இடம் காணாது. அதை ஏன் அமெரிக்கா பெற்றுத்தரவேண்டும்

சிறீலங்காவுக்கு அண்மையில் உள்ள தளங்களை பலப்படுத்துகிறது அமெரிக்கா - அக் 28, 2010

சிறீலங்காவுக்கு தென்புறத்தில் 700 மைல்கள் தொலைவில் உள்ள டியகோ கார்சியா பகுதியில் அமைந்துள்ள தனது படைத்தளத்தை 127 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் செலவில் அமெரிக்கா நவீனமயப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:http://www.yarl.com/forum3/index.php?showtopic=76947

2004, 2005 காலங்களில் அமெரிக்கா இலங்கையில் முதலிட விரும்பியது. அதே நேரம் புலிகளுடன் இலகுவான போக்கையும் கடைப்பிடித்தது. இலங்கையின் பல்கலைகழகங்களைத் தனியார் மயப்படுத்த சொன்னது. தமிழர்களின் பிரதேச உரிமைகளை அரசாங்கம் மதித்து அந்த பக்கங்களிலும் முன்னேற்றங்கள் கொண்டுவர வேண்டுமென்றது. யப்பான் முதலிட விரும்பியது. யப்பன் உண்மையில் அங்கே முன்னணி வகிக்க விரும்பியது. இந்த முதலீடு ஊக்குவிற்பு புதின பேச்சுகளை நானும் எனது முதலாளியும் பேசியிருந்தோம். மூன்று மாதங்களின் பின்னர் அவர் என்னுடன் பேசும் போது, தான் எனது விவரங்களை யப்பான், இலங்கை தூதுவராலய அதிகாரிகளுடனும், நியுயோர்க் சேம்பர் ஒஃப் கொமர்சிலும் பேசியதாயும், அதில் உண்மை இருப்பதாயும், தான் தனது யப்பனிய விநியோகிதர்களிடம் இலங்கையிலிருந்து எற்றுமதி செய்வது பற்றி பேசபோவதாயும் கூறியிருந்தார். யப்பன் அக்காசி என்ற கூனியை சமாதனத்தூதுவராக அனுப்பி வைத்தௌ. அந்த நேரம் சகுனி பிளேக் அமெரிக்க தூதுவரானார். இந்திய மும்மூர்த்திகள் வந்தார்கள். தமிழ்மக்களின் நம்பிகை நடசத்திரம் சொல்கெயும் பண்டியுடன் கணடாக மாறினார். மகிந்தா பதவிக்கு வந்தார். பிளேக் மகிந்தா துதி பாட ஆரம்பித்தவுடன் கதையெல்லாம் மாறி விட்டது. பிளேக் போன்றவர்களின் சீனபயக் கொளகைளை அந்த நேரத்து உதவி அரசாங்க காரியதரிசி ரிச்சாட் அமிதாச் குறை கூறி புத்தகம் கூட எழுதியிருந்தார்.

இப்போது நாம் மட்டுமல்ல அமெரிக்கவும் தோற்றிருக்கிறது. அதற்கு மேலாக அதை உணர்ந்தும் இருக்கிறது. நாம் கூட்டமைப்பை குழப்புவர்களின் கையாட்களாகாமல் பொறுத்திருந்து பார்ப்போம் அமெரிக்கவின் புதிய திசை எங்கே எனபதை.

Edited by மல்லையூரான்

2004, 2005 காலங்களில் அமெரிக்கா இலங்கையில் முதலிட விரும்பியது. அதே நேரம் புலிகளுடன் இலகுவான போக்கையும் கடைப்பிடித்தது. இலங்கையின் பல்கலைகழகங்களைத் தனியார் மயப்படுத்த சொன்னது. தமிழர்களின் பிரதேச உரிமைகளை அரசாங்கம் மதித்து அந்த பக்கங்களிலும் முன்னேற்றங்கள் கொண்டுவர வேண்டுமென்றது. யப்பான் முதலிட விரும்பியது. யப்பன் உண்மையில் அங்கே முன்னணி வகிக்க விரும்பியது. இந்த முதலீடு ஊக்குவிற்பு புதின பேச்சுகளை நானும் எனது முதலாளியும் பேசியிருந்தோம். மூன்று மாதங்களின் பின்னர் அவர் என்னுடன் பேசும் போது, தான் எனது விவரங்களை யப்பான், இலங்கை தூதுவராலய அதிகாரிகளுடனும், நியுயோர்க் சேம்பர் ஒஃப் கொமர்சிலும் பேசியதாயும், அதில் உண்மை இருப்பதாயும், தான் தனது யப்பனிய விநியோகிதர்களிடம் இலங்கையிலிருந்து எற்றுமதி செய்வது பற்றி பேசபோவதாயும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் யப்பன் அக்காசி என்ற கூனியை சமாதனத்தூதுவராக அனுப்பி வைத்தது. அந்த நேரம் சகுனி பிளேக் அமெரிக்க தூதுவரானார். இந்திய முப்புரவசுரர்கள் வந்தார்கள். தமிழ்மக்களின் நம்பிககை நடசத்திரம் சொல்கெயுமும் பண்டியுடன் கணடாக மாறினார். மகிந்தா பதவிக்கு வந்தார். பிளேக் மகிந்தா துதி பாட ஆரம்பித்தவுடன் கதையெல்லாம் மாறி விட்டது. பிளேக் போன்றவர்களின் சீனபயக் கொளகைகளை அந்த நேரத்து உதவி அரசாங்க காரியதரிசி ரிச்சாட் அமிதாச் குறை கூறி புத்தகம் கூட எழுதியிருந்தார்.

இப்போது நாம் மட்டுமல்ல அமெரிக்கவும் தோற்றிருக்கிறது. அதற்கு மேலாக அதை உணர்ந்தும் இருக்கிறது. நாம் கூட்டமைப்பை குழப்புவர்களின் கையாட்களாகாமல் பொறுத்திருந்து பார்ப்போம் அமெரிக்கவின் புதிய திசை எங்கே எனபதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் அமெரிக்காவிற்கு இராணுவத்தளத் அமைக்கவே இடம் காணாது. அதை ஏன் அமெரிக்கா பெற்றுத்தரவேண்டும்

அமெரிக்காவிற்கு டியாகோ கார்சியா தளத்திலும் பார்க்க தமிழ் ஈழம் ஆயிரம் மடங்கு பெரிது. மற்றும் இந்தியாவிற்கு இருபது மைல் தூரத்தில் வந்ததாகவும் இருக்கும்.

http://en.wikipedia.org/wiki/Diego_Garcia

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு இஸ்ரேல், போன்ற நாட்டைத்தவிர வேறு எல்லா இடமும் 'தனக்கு இதில் என்ன இலாபம்?' என்ற கேள்வியை வைத்தே எதையும் செய்யும் என்பது நாம் அறிந்ததே.

இஸ்ரேல் போல தமிழரும் அமெரிக்காவுக்கு நெருக்கமாக முயற்சிக்கலாமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

அவன் ஒரு வியாபாரி

எம்மிடம் என்ன உண்டு அவனை மடக்க....?

அத்துடன் சிங்களவன் என்ற நரி எதையும் இலவசமாகக்கொடுக்கும் பங்காளியும் எம்முடன் உண்டு?

அதையும் மீறி எம்மால்....?

ஆனால் செய்யணும்

எப்படி?

கரும்புலிகளின் தாக்குதல் முறைகளை அமேரிக்கா கற்றுக்கொள்ள விரும்பியதாகவும் அதனை ஏற்பாடு செய்ய ருத்திரகுமாரன் முயற்சித்ததாகவும் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமான தொடர்புகளை மட்டுமே விரும்பியதாகவும் சேரமான் எழுதியிருந்தார்.

இஸ்ரேல் போல தமிழரும் அமெரிக்காவுக்கு நெருக்கமாக முயற்சிக்கலாமல்லவா?

- ஒரு கட்சியில் இணைந்து இருக்கவேண்டும்

- தமிழரை தமிழர் பொருளாதார ரீதியாக உயர்த்திவிட வேண்டும்

- சமூக உணர்வுகளை வளர்க்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.