Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொமன்வெல்த் அழுத்தங்களை இலங்கை சமாளித்தது எப்படி- சுபத்ரா

Featured Replies

கொல்லப்போவது போல கழுத்தை இறுக நெரிப்பதும், பின்னர் பிடியை மெல்லத் தளர்த்துவதும் தான், இலங்கை விவகாரத்தில் மேற்குலகு கையாளும் வழிமுறையாக மாறியுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், கடைசி நேரத்தில் அந்த அழுத்தங்கள் தளர்த்தப்பட்டுள்ளன 2013இல் அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை இலங்கையில் நடத்த 2009ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை மறுபசீலனை செய்வது குறித்து பேர்த் மாநாட்டில் ஆராயப்படும் என்று கனடாவும், அவுஸ்திரேலியாவும் மிரட்டிக் கொண்டிருந்தன.

அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன.இன்னொரு பக்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது போர்க்குற்ற வழக்கு ஒன்றும் மெல்பேர்ன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனால் இலங்கை மீதான அழுத்தங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேர்த் நகரைச் சென்றடைந்த போது, அந்தப் போர்க்குற்ற வழக்கை விசாரிக்க அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் அனுமதி மறுத்து விட்டதான அறிவிப்பு வெளியானது.

இந்த வழக்கை விசாரிக்க அனுமதிக்குமாறு தம்மிடம் கோரப்படவில்லை என்று கூறிக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் அதை நிராகப்பதாக திடீரென அறிவித்திருந்தார்.

ஒரு வழக்கை விசாரிக்கலாமா? இல்லையா? என்று ஆராய்வதற்கு அவர் குறைந்தபட் நேரத்தைக் கூட எடுத்திருக்க வாய்ப்பில்லை.இதனால் தான் இது அரசியல் ரீதியான முடிவு என்று அங்குள்ள இராஜதந்திரிகளால் விமர்சிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக கடும் கருத்துகளை வெளிப்படுத்தி வந்த அவுஸ்திரேலியா, இலங்கையுடன் மென்போக்கை கடைப்பிடிக்க எடுத்து முதலாவது நடவடிக்கை இதுவாகும்.

எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டும், பிரதமர் ஜுலியா கிலாட்டும் சந்தித்த போது போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

ஒரு பக்கத்தில் அவுஸ்திரேலியா போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும், அதற்கு தமது நாடு களமாவதை விரும்பவில்லை.மெல்பேர்ன் நீதிமன்ற வழக்கைத் தடுத்துள்ளதன் மூலம் இதையே உணர முடிகிறது.

அதுமட்டுன்றி இலங்கையில் 2013ஆம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு நடத்தப் படுமானால், அதனை புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஸ்பன் ஹாபர் அறிவித்திருந்தார். அவரது முடிவையே அவுஸ்திரேலியாவும் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் இந்த விடயத்தில் இலங்கைக்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படும் சூழல் உருவாகியிருந்தது. பேர்த் மாநாட்டில் அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை இலங்கையில் நடத்துவதா? இல்லையா? என்று விவாதிக்கப்படும் என்று கனடா உறுதியாகக் கூறிவந்தது.

ஆனால், அந்தத் திட்டத்தையும் மாற்றியமைத்துள்ளது அவுஸ்திரேலியா தான்.இந்தப் பிரச்சினை பற்றி கொமன்வெல்த்தில் விவாதிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கிலாட் கூறியதும், இந்த விகாரத்தை முதன் முதலாக எழுப்பிய கனேடியப் பிரதமர் ஹார்பருக்குக்கு பெரும் அதிர்ச்சி. இதனால் 30 மணி நேரப் பயணத்தின் பின்னர் பேர்த் வந்த அவர், கொமன்வெல்த் மிகவும் அதிர்ச்சியான நிலையில் காணப்பட்டார்.

கொமன்வெல்த் கூட்டத்தை இலங்கையில் நடத்துவதா? இல்லையா? என்று விவாதிக்க வேண்டியதில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறிய மற்றொரு நாடு இந்தியா.எப்போதுமே இலங்கையை சர்வதேச அரங்குகளில் பாதுகாப்பதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அண்மைக்காலமாக சீனாவும் ரஷ்யாவும் ஐ.நா.வில் செய்து வந்த இந்த வேலையை கொமன்வெல்த்தில் இந்தியா செய்திருக்கிறது.கொமன்வெல்த்தில் சீனாவும், ரஷ்யாவும் உறுப்புமை பெற்றிருக்காத நிலையில் இந்தியாவே இலங்கையைக் காப்பாற்றியது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஞ்சன் மத்தாய், எப்போதோ எடுக்கப்பட்டு விட்ட முடிவு குறித்து இனிமேல் ஆராயத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.அடுத்த கொமன் வெல்த் கூட்டத்தை இலங்கையில் நடத்தக் கூடாது என்று கோரிய நாடுகளுக்கு இது இடியாக அமைந்தது.

ஏனென்றால், கொமன்வெல்த்தில் இந்தியாவின் பாத்திரம் மிகப்பெரியது. கொமன்வெல்த் நாடுகளின் ஒட்டுமொத்த சனத்தொகையில், 60 வீதமானோர் இந்தியாவில் தான் வாழ்கின்றனர்.

அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் கைவிட்ட பிறகு வேறெவரும் இலங்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கவில்லை.இலங்கை மீது கொடுக்கப்பட அழுத்தத்தை குறைத்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டத் தவறவில்லை.

“இலங்கையில் நடக்கும் அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தைப் புறக்கணிப்பது பற்றி அந்தந்த நாடுகள் தனித்தனியாக முடிவெடுக்கலாம், அதேவேளை, எல்லா நாடுகளினதும் கண்கள் உங்கள் மீதே உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை நண்பர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்' என்று அவர் எச்சரிக்கும் பாணியில் கூறியுள்ளார்.

அவரது கருத்து, அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தை புறக்கணிக்கும் கனடாவின் அறிவிப்பை அவுஸ்திரேலியாவும் பின் பற்றுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

ஒரு வழியாக அரசாங்கம் கொமன்வெல்த் கூட்ட நெருக்கடியைச் சமாளித்து விட்டது. இது ஒன்றும் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றோ, அதனால் ஆன காரியம் என்றோ கருத முடியாது.

அண்மைக்கால சர்வதேச சூழமைவுகளை அவதானிக்கும் போது இலங்கை மீது அழுத்தத்தை அதிகப்பதும் பின்னர் பிடியைத் தளர்த்துவதும் வழக்கமாக மாறியுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தான் அண்மைய சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளன.இலங்கை மீது கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வருவது போன்று இறுக்கிக் கொள்வதும், அதனை வைத்து சில காரியங்களை ஒப்பேற்றுவதும் மேற்குலக தந்திரங்களாகி விட்டன.

இலங்கையின் மீது அழுத்தங்களை கொடுத்து சில விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மேற்குலக நாடுகள் ஒருங்கிணைந்து செயற்படுவதாகவே தோன்றுகிறது.

அமெரிக்கா, பித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள், இலங்கை விடயத்தில் ஒரு நாடு விட்டுப் பிடிக்க இன்னொரு நாடு அழுத்திப் பிடிக்கும் உத்தியைக் கையாள்கின்றது.

ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கொள்ளாத வகையில், நகர்த்தப்படும் இந்தக் காய்கள் இலங்கையை வழிக்கு கொண்டு வருவதற்கான உத்தியாகவே தெரிகிறது.

போர்க்குற்றங்களுக்காக யாரையும் கூண்டில் ஏற்றுவது மேற்குலக நாடுகளின் மைய நோக்கம் இல்லை. ஆனால், இதனை வைத்துக் கொண்டு, பொறுப்புக் கூறுதல் என்ற விவகாரத்தின் ஊடாக அரசியல் நல்லிணக்கம் ஒன்றை உருவாக்குவதே அவர்களின் மைய இலக்காகத் தெரிகிறது.

நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றுக்கான அழுத்தங்களைக் கொடுக்கவே மேற்குலகம் விரும்புகிறது. ஏனெனில், இலங்கையில் உறுதியற்ற நிலை மீண்டும் தோன்றுவது சீனாவின் பிடியை அதிகரிக்கச் செய்யும் என்று மேற்குலகம் உணர்ந்து கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமெரிக்கா விடுத்த அழைப்புத் தொடக்கம் கொமன்வெல்த் நெருக்கடிகள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் என்று எல்லாமே நகர்த்தப்படுவது அரசியல் தீர்வு என்ற ஒரே இலக்கை நோக்கித்தான்.

அந்த இலக்கை அடையும் வரை இலங்கை மீதான அழுத்தங்கள் அவ்வப்போது இறுகுவதும் பின்னர் தளர்வதுமாகவே தொடரப் போகிறது. இந்த நெகிழ்வு நிலை இராஜதந்திரத்துக்கு ஏதாவதொரு ஒரு கட்டத்தில் இலங்கை பிடிகொடுக்காமல் திமிறினால் மட்டுமே இந்த முடிச்சு இறுகிக் கொள்ளும்.இல்லையேல், இதுபோன்ற நெருக்கடிகள் இலங்கைக்கு பெரும் பாதிப்பாக அமையாது போலவே, அண்மைக்கால சர்வதேச நடப்புகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

http://akkinikkunchu.com/new/index.php

பொதுநலவாய மாநாடுகளுக்கு சிங்களத்தை ஒரு போர்குற்றவாளியாக அந்த அமைப்பில் இருந்து தள்ளி வைக்கப்பட இருந்த சந்தர்ப்பத்தில் இருந்து சிங்களம் தப்பியுள்ளது என்பது உண்மையே. ஆனால், இந்த அமைப்பு ஊடாக சிங்களம் மீது தொடரும் அழுத்தங்களை அதனால் குறைக்க முடியவில்லை.

“இலங்கையில் நடக்கும் அடுத்த கொமன்வெல்த் கூட்டத்தைப் புறக்கணிப்பது பற்றி அந்தந்த நாடுகள் தனித்தனியாக முடிவெடுக்கலாம், அதேவேளை, எல்லா நாடுகளினதும் கண்கள் உங்கள் மீதே உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை நண்பர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்' என்று அவர் எச்சரிக்கும் பாணியில் கூறியுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் இரட்டை வேடம் தொடரும்.தொடர்ந்து நாம் ஏமாளிகள் ஆவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொமன்வெல்த் அமைப்பைக் கலைத்து விடுவது, உலகத்திற்கு நல்லது!

இது ஒரு காலத்தோடு பொருந்தாத, வேண்டுமென்றே சில இத்துப் போன நாடுகளின் நியாயத்தைத் தூக்கி நிறுத்தப் பயன்புடும் ஒரு அமைப்பு!

காலப் போக்கில் இது தானாக உயிரிழந்து விடும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியர்கள் ஆரம்பத்தில் சமூக குற்றங்களில் ஈடுபட்ட திருடர்கள்,விபச்சாரிகள் போன்றோரை குடியேற்றிய நாடே அவுஸ்திரேலியா,இவர்கள் நிற வெறி கொண்டவர்கள் அவுஸ்திரேலிய பழங்குடி மக்களை மிகவும் கீழ்த்தரமாக நகைசுவை என்ற ரீதியில் வம்பு வளப்பவர்கள் அரசியல்வாதி ஒருவர் பகிரங்கமாக பழ்ங்குடி மக்களின் பாரம்பரிய நடனத்தை அவர்களின் அதிக எடையுடன் இணைத்து பண்பற்றமுறையில் கருத்து தெரிவித்து ஊட்கங்களில் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.

கலைஞர்கள் தொலைகாட்சி நிகழ்சி ஒன்றில் அமெரிக்க கருப்பினரை இழிவு படுத்தி சர்ச்சையில் மாட்டிக்கொண்டனர்.

விளையாட்டு இரசிகர்கள் அவுஸ்திரேல்யாவிர்காக விளையாடும் பிஜி நாட்டில் பிறந்தவரை போல வேடமணிந்து முகத்திற்கு கறுப்பு சாயம் பூசி கொன்டனர்

இவ்வாறு இவர்களின் இரத்தத்தில் நிறவெறி ஊறியுள்ளது,வெளினாட்டவர்கள் அகதியென்றல்ல கல்விசார் தகமை,தொழில் சார் திறன்,வர்த்தக என எந்த வடிவத்தில் வந்தாலும் அவர்கள் வேண்டாத விருந்தாளிகளே.

இத்தாலியர்கள்,ஆசியர்கள்,லெபனிஸ்,இந்தியர்கள்,இப்பொழுது நம்மவர்கள் இவர்கள் மீது வார்த்தை துன்புறுத்தல் தொடக்கம் வன்முறை வரை செய்துள்ளார்கள்.

ஒவ்வொரு அக்திகள் படகும் அவுஸ்திரேலிய கரையை எட்டும் போதும் ஊடகங்களில் அவை வெளிக்கொண்ரப்படுகின்ரன தற்போதைய அரசிற்கு கடந்த தேர்தலில் 2 ஆவது பெரிய பிரச்சனையாக அகதிகள் பிரச்சனை இருந்தது.

முந்தைய அரசு நாட்டுக்கு வெளியே அக்திகளகவருவோர்கலை அனுப்பி அங்கிருந்து வருடாம் ஒன்றிர்கு 4000 அகதிகளாக ஏற்று வந்தது,அதில் குறை கண்ட தற்போதய அரசு நக்ரூவில் இயங்கிய அகதி நிலையத்தை மூடி இப்பொது நாட்டிற்குள் நுழையும் அகதிகளை கட்டு படுத்த முடியாமல் இந்தோனேசியா,மலேசியா என்பவற்றுடன் இணக்கப்பாட்டிற்கு வௌவதற்கு பெரும் தொகை பணத்தை வீணடித்தும் எந்த பலனும் அகதிகள் பிரச்சனையில் ஏற்படவில்லை

அது தான் இப்போது சாத்தானுடன் (சிங்களத்துடன்)ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

கன்டாவை பொறுத்தவரையிலும் இதே பிரச்சனையுள்ளது ஆனால் அவர்கள் இவ்வளவு மலிவாக நடந்து கொள்ளவில்லை

அவுஸ்திரேலியர்கள் கோவணத்தை கழட்டி தலைப்பாகை கட்டும் கேவலமானவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.