Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சரி", "பிழை" .. இரண்டும் இணைய வேண்டுமா????

Featured Replies

091110%252520007.jpg

... இன்று ஐரோப்பாவில் என்று கூறுவதிலும் ஈழத்தமிழர்கள் புகுந்த புலம்பெயர் தேசமெங்கும் ..

* சீரளிக்கிறாங்கள்!

* நாறடிக்கிறாங்கள்!

* இருக்கிற கொஞ்சத்தையும் முடிக்கப் போகிறாங்கள்!

* தெருத்தெருவாக அடிபடுகிறார்கள்!

* வெட்டுப்படுகிறாங்கள்!

* பதவி/பணத்திற்காக மண்ணுக்குள் போனவர்களை விற்க நிற்கிறார்கள்!

* ..

......... இவ்வார்த்தைகள் கேட்காத/பேசாத அவர்கள் வீடுகளே இல்லை எனலாம்! ஏன்??? ... பதில் தெரியாதவர்கள் எவரும் இலர்!

... எல்லாம் வரும் வாரங்களில் புலம்பெயர் தேசமெங்கும் நடைபெற இருக்கும், எமக்காக மண்ணோடு மண்ணாக போனவர்களின் நினைவு தாங்கிய நாளாம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒட்டியே!!

இரண்டு குழுக்களின் மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் புலமெங்கும்! எதற்கு போவது??? எம்மவர் பலரிடம் குழப்பம்?? மாவீரர்நாள் நிகழ்வுகளை புலம்பெயர் தேசமெங்கும் கடந்த காலங்களில் நடத்தியவர்களின் நிகழ்விற்குப் போவதா? இல்லை தற்போது புலம்பெயர் தேசமெங்கும் புதிதாக தோன்றி புதுயுகம் படைக்க வந்திருப்பவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர்நாள் நிகழ்விற்கு செல்வதா??? ... மொத்தத்தில் எம்மவர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

ஏன் இந்த இரண்டாவது மாவீரர்தினம்? முன்னையோர் நடத்தியதில் என்ன குறை கண்டார்கள்? ... அவர்களே கூறுகிறார்கள் .. முன்னையோர் ... 2088இற்கு பின்னர் ...

* மாவீரர்நாளில் சேரும் நிதிக்கும், இந்நிகழ்வு சம்பந்தமாக வர்த்தகர்களிடமோ, வள்ளல்களிடமோ அறவிடப்படும் நிதிகளுக்கு கணக்கு காட்டுகிறார்கள் இல்லை?

* இவர்களினால் பாரிய நிதி மோசடிகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது?

* இந்நிகழ்வை நடத்தியோரிடம் வெளிப்படைத்தன்மை இல்லவே இல்லை .. அதாவது ஒரு சிலருக்குள் எல்லாவற்றையும் மூடி மறைக்கிறார்கள்?

* எல்லோரையும் அரவணைத்து செல்ல முயற்சிக்கிறார்கள் இல்லை?

* பல ஊடகங்களை ஒதுக்குகிறார்கள் .. தமக்கு விரும்பிய ஒன்றிரண்டுக்கே நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் சந்தர்ப்பங்களை கொடுக்கிறார்கள்?

... இந்தக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாணவையே!! மறுக்க முடியாததவை!! ஆனால் இக்குற்றச்சாட்டுக்களில் பல பல ஆண்டுகளாக .. அதாவது மாவீரர்நாள் என்று புலமெங்கும் 1990இலிருந்து அனுஸ்டிக்க தொடங்கியதில் இருந்து நடைபெறுகிறது! உண்மையில் சொல்லப்போனால் இக்குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பானவர்கள் அப்போது தாயகத்தில் இவர்களுக்கு பொறுப்பாக இருந்த தலைவர்களும்/தலைமையுமே! ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு தெரிந்தே இவைகள் நடைபெற்றன!! இது காலம் காலமாக அவர்களுக்கு சிலரால் எடுத்துச் செல்லப்பட்டும் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை!

... 2008இற்கு பின்னர் நிதிமோசடிகள் நடைபெற்றன என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை! ஆனால் கடந்த காலங்களில் .. அது 2008இற்கு முன் .. புலம்பெயர் தேசங்களில் சிலரது பெயர்களில் நிதிகள் முதலிடப்பட்டன, இவர்களால்!! அது தலைமைக்கும் தெரிந்தே!! அப்படி முதலிடப்பட்டோர்களில் ஓரிருவர் தற்போது சுற்றி விட்டதாக சில கூறுகிறார்கள்! அது நடைபெற்றும் இருக்கலாம்!

ஆனால் .. இக்குற்றச்சாட்டுக்களை சீர்செய்து மாவீரர்நாளை நடத்தப்போகின்றோம் என்று இன்று தோன்றியுள்ள குழுவில் உள்ளோர் அரிச்சந்திரர்களா???? .. இக்குற்றச்சாட்டுக்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை/தாம் கடந்த காலங்களில் இக்குற்றங்களில் பங்கு கொள்ளவில்லை என்று கூறுகிறார்களா? .. அவைகளுக்கு மேல் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வந்துள்ளனரா??? என்றால் விடை .. "இல்லை" .. என்பதே!

இன்று புதிதாக புலமெங்கும் வந்திருக்கும் கும்பலுடன் இணைந்து மாயாஜாலம் காட்ட முற்பட்படும் ஏனையோர், கடந்த காலங்களில் பல தேசிய செயற்பாடுகள் எனும் போர்வையில் .. விடுதலைப்புலிகளின் வேறு சில அமைப்புகளின் பெயரிலும், சில மனிதாபிமான செயற்பாடுகள் எனும் பெயரிலும் வசூலில் ஈடுபட்டு இன்றுவரை கணக்கு வழக்கு காட்டாதவர்களே!!! மேலும் இக்கும்பலில் சிலர், முன்னையோருடன் இணைந்து இறுதி யுத்தம் எனும் பெயரில் வசூல் நடத்தியவர்களுமே!

அப்போ, ஏன் இக்குற்றச்சாட்டுக்களை சுமத்தியபடி, அதனை சீர் செய்யவென்று வந்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள்?? ... விடை இலகு!! ... இது இலகுவில் மக்கள் மனங்களை தொடும்! முள்ளிவாய்க்கால் முடிவுற்றதும் பல புலம்பெயர் தேசத்து எம்மவர்களின், கனவுகள் சிதைந்தவுடன் வேதனை, விரக்தி கோபமாகி புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட செயற்பாட்டாளர்களின் மேல் பாய்ந்தன. அப்போ, பலர் நிதிகள் சம்பந்தமாகவே கேள்விகள் கேட்டனர்! முன்னையவர்களும் நிதிகளில் சில தாயகத்துக்கு அனுப்பப்பட்டதையோ அல்லது பல தேவையற்ற முதலீட்டுக்கு புறப்பட்டு இழந்ததையோ வெளிப்படையாக சொல்ல முடியாத சங்கடத்தில்!!! அவைகளை நன்றாக ஆராய்தவர்கள்(????), இக்குற்றச்சாட்டுக்களை இப்புத்தம் புதிதாய் புலத்தில் புகுந்தவர்களின் ஆயுதங்களாக, அவற்றை திணித்திருக்கிறார்கள்! இவர்களும் புலமெங்கும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்!!!

கடந்த காலங்களில் முன்னையோர்களினால் ஒதுக்கப்பட்ட புலம்பெயர் ஊடகங்களுக்கு, இப்போது பழி தீர்க்கும் சந்தர்ப்பம்! அது தீபம் தொலைக்காட்சியாகட்டும், ஐ.பி.சி வானொலியாகட்டும்! அவைகளுக்கு வாரம் தோறும் வாணவேடிக்கை காட்ட இது சந்தர்ப்பமாகியிருக்கிறது!!

கடந்த மூன்று வாரங்களாக தீபம் தொலைக்காட்சியில், ... புலமெங்கும் இரண்டு தீபாவளிகள், இரண்டு புதுவருட பிறப்புக்கள், இரண்டு மாவீரர் நாட்களா? ... எனும் தலைப்பில் விவாத அரங்கு! முதல் நிகழ்விற்கு இரு குழுக்களையும் அழைத்து இருவரும் வரவில்லையாம்! இரண்டாம் வாரம் புத்தம் புதிய குழுக்களின் தலைவர்களாம் (இவர்களைப் பற்றி பின் ..)!! கடந்த வாரம் முன்னையோர்!! ... இந்த முன்னையோரில் கலந்து கொண்டவர்கள் இராஜமனோகரனும், ஜெயானந்தமூர்த்தியும்! ..

... அதில் இராஜமனோகரனிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது ... "புத்தம் புதிதாக புலமெங்கும் வந்தோரின் பிரதிநிதிகள் கடந்த வாரம் நடைபெற்ற விவாதத்தில் கூறினார்கள், தாம் இணைந்து மாவீரர்நாளை நிகழ்த்த தயாராக இருப்பதாக, ஆனால் நீங்கள் இணைய மறுக்கிறீர்கள் என்று! அது உண்மையா? அல்லது நீங்களும் இணைந்து மாவீரர்நாளை நடாத்த தயாராக இருக்கிறீர்களா???" .. என்று !! ..

... அக்கேள்விக்கு பதிலளித்த இராஜமனோகரன் ... " சரி, பிழை என்ற இரண்டும் வேறு வேறானவை! சரியும், பிழையும் இணையலாமா? இணையுமா?" என்றார்!

உண்மைதான்!! ... பல பல கேள்விகள், தற்போது புலம்பெயர் தேசமெங்கும் தோன்றியிருப்பவர்களைப் பற்றி எழுப்பப்பட்டும், சரியான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை!!அவர்களது வெளிப்படைத்தனமை கேள்விக்குறியாகிறது! ... இப்படியானவர்களுடன் இணைந்து புலத்தில் மாவீரர் நாள் செய்ய வேண்டுமா?????????

கள்வர்களை திருத்தி வழிக்கு கொணரலாம்! சொல்வழி கேளாதவர்களை வழிக்கு கொணரலாம்! பிழையான வழி செல்பவர்களையும் நேர் வழிக்கு திருப்பலாம்! ஆனால் துரோகிகள் செல்லும் வழி ...?????????

Edited by Nellaiyan

கள்வர்களை திருத்தி வழிக்கு கொணரலாம்! சொல்வழி கேளாதவர்களை வழிக்கு கொணரலாம்! பிழையான வழி செல்பவர்களையும் நேர் வழிக்கு திருப்பலாம்! ஆனால் துரோகிகள் செல்லும் வழி ...?????????

எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்.

மாவீரரே!

உங்கள் நினைவாக

கனத்த மனத்துடன் - என்

கரங்களில் தீபம் ஏற்றி வந்தேன்.

இதனை

எங்கே ஏற்றிடுவேன்!

ஏற்றுமிடம் தெரிய வில்லை

ஏங்கித் தவிக்கிறேன்.

மாவீரரே!

உங்களுக்கு தீபம்

எங்கே ஏற்றுவேன்?

ஏற்றுமிடம் தெரிய வில்லலை

ஏங்கித் தவிக்கிறேன்.

கொஞ்சம் பொறுங்கள்

யாரோ…

கூவி அழைக்கும் சத்தம் கேட்கிறது.

இங்கே வாருங்கோ

நாங்கள் இருபது வருட

அனுபவம் மிக்கவர்கள்

நாங்கள்தான் மாவீரை நேசிப்பவர்கள்

இங்கே வாங்கோ…

மாவீரரே!

இன்னும் கொஞ்சம் பொறுங்கள்

மேலும்

ஒரு திசையிலிருந்து சத்தம்…

நாங்கள்

புண்பட்ட காரணத்தால்

புலம்பெயர்ந்து வந்தவர்கள்.

உண்மையின் வழி நின்;று

உரிமைக்கு குரல் கொடுப்போம்.

தனிபட்டோர் நலம் பேணாத்

தமிழீழ நலன் காப்போம்

எம் தேசத்தின் புதல்வர்களை

சிறப்பாக வழிபடுவோம்.

மாவீரரே!

என்ன செய்வேன்?

எந்தப் பக்கம் நான் செல்வேன்.

ஒன்று

உண்மையில்லை என்று

எனக்கு தெரிகிறது.

மற்றதை உணர முடியாமல்

உள்ளம் தவிக்கிறது

கனத்த மனத்துடன்

கரங்களிலே விளக்கேற்றி

எங்கே ஏற்றிடுவேன்

ஏங்கித் தவிக்கிறேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கடந்தவாரம் கடைத்தெருவில் ....இரு இளைஞர்கள் ...

.. உந்த தீபக்காரர் மாவீரர்நாள் என்று ஒப்பாரி வைக்கினம், பாத்தனீயோ?

.. ஓம்!

.. போன கிழமை, சரியும் பிழையும் இணைய வேண்டுமோ என கேள்வி?

.. ம்ம்ம் .. நல்ல பண்டிதர்கள் போய், நல்ல சங்கத்தமிழில் முழங்கி விட்டு போயிருக்கினம்!!

.. என்ன சொல்கிறாய்?

.. பின் என்ன சரியும் பிழையும் இணைய வேண்டுமா? என்று கேட்டால் யாருக்குத்தான் புரிந்திருக்கும்?

.. உண்மைதான்!

.. நாலு எங்களை மாதிரி இளசுகள், நெற்றுகள் பாக்கிறதுகளுக்கு உந்த வசனத்தின் பின்னணி புரியலாம்? மற்ற்துகளுக்கு ..??

.. உண்மைதான் என்ரை அப்பரும் பாத்தவராம்! என்ன கதைச்சினமே என்று புரியவில்லையாம்! குழம்பிப்போய் இருக்கிறார்!

.. கிடைச்ச சந்தர்ப்பத்தில் சொல்ல/கேட்க/புரியவைக்க வேண்டியவைகளை, வெட்டொன்று துண்டு இரண்டாக சொல்லி இருக்க வேண்டும்! அதை விட்டுட்டு பழந்தமிழ் பேசி விட்டு வந்திருக்கிறார்கள்?

..

..

......... உண்மைதான், இன்றும் ILC கேட்டுக் கொண்டிருந்தபோது ... சொன்னார்கள் ... ஆனால் ... உண்மைகளையும், பொய்மைகளையும் தெளிவாக அனைவருக்கும் புரியக்கூடிய விதத்தில் இன்னும் சொல்கிறார்கள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைப் போன்ற, சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் நியாயமான கேள்வி நெல்லையன்.

இவ்வளவு நாளும்... சேர்த்த காசை... எந்தப் பரதேசி அனுபவிக்குதோ.....

இதுக்குப் பேர் தான்... குருட்டு லக்.

  • கருத்துக்கள உறவுகள்

091110%252520007.jpg

பல பல கேள்விகள், தற்போது புலம்பெயர் தேசமெங்கும் தோன்றியிருப்பவர்களைப் பற்றி எழுப்பப்பட்டும், சரியான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை!!அவர்களது வெளிப்படைத்தனமை கேள்விக்குறியாகிறது! ... இப்படியானவர்களுடன் இணைந்து புலத்தில் மாவீரர் நாள் செய்ய வேண்டுமா?????????

  • கருத்துக்கள உறவுகள்

091110%252520007.jpg

பல பல கேள்விகள், தற்போது புலம்பெயர் தேசமெங்கும் தோன்றியிருப்பவர்களைப் பற்றி எழுப்பப்பட்டும், சரியான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை!!அவர்களது வெளிப்படைத்தனமை கேள்விக்குறியாகிறது! ...?????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.