Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரணத்திற்கு பின்னால்?

Featured Replies

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது. எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன் மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே மரணத்திற்கு பின்னால் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இன்னொரு உலகத்தை அடைய முடியும் என்று கற்பனைக் கதைகளை நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர்.

எவ்வளவோ அறிவியல் வளர்ந்திருக்கிறது. பல தொழில் நுட்பங்களை கண்டறிந்து விட்டோம். ஆனால் மரணத்திற்கு பின்னர் மனிதன் என்ன ஆகிறான் என்பதை மட்டும் எவராலும் அறிய முடியவில்லை. இது பிரபஞ்சத்தின் உண்மையாகக் கூட இருக்கலாம். "சாகின்ற நாள் தெரிந்து விட்டால் வாழுகின்ற நாள் நரகமாகிவிடும் என்பார்கள்". அது உண்மை தான். வாழும் வரை நாம் மகிழ்ச்சியாக ஒவ்வொரு நொடியையும் வாழக் கற்றுக் கொள்வோம்.

நாம் ஏழையோ, பணக்காரனோ எப்படி இருந்தாலும் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்வோம். இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதருக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தீர்வு காண முடியாத பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும். சிலர் பிரச்சனைகளின் மேலே ஏறி ஓடிக்கொண்டிருப்பர். இன்னும் சிலர் மூளையிலே முடங்கி எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை மேல் சோதனை என இடிந்து விடுவர். இவர்களைப் போன்றவர்களுக்கு நான் கூறிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

இந்தப் பிறவி , இந்த உடல் எதுவுமே நமக்கு நிரந்தரம் இல்லாதவை, நமது பிரச்சனைகளும் கூட அப்படித்தான் நமக்கு நிரந்தமானவை அல்ல. நீங்கள் அளவுக்கதிகமான பிரச்சனையில் சிக்கித் தவிப்பதாக நினைத்தால் அதற்கு ஒரே தீர்வுகாக உங்கள் மரணத்திற்கு பின்னால் எதுவுமே இல்லை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் ஏழையோ, பணக்காரனோ அல்லது அறிவாளியோ, முட்டாளோ எப்படி இருந்தாலும் மரணத்திற்குப் பின் ஒரு வெற்றிடமே.

பலர் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து மீள முடியாமலோ, வேறு செயல்களில் ஈடுபாடு செலுத்த முடியாமலோ இருப்பார்கள். நீங்கள் அந்த வேளையில் அதை மறப்பதற்கு உங்கள் மரணத்திற்கு பின்னால் உள்ள ஒரு யூகிக்க முடியாத வாழ்க்கையை யோசித்து பாருங்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து, போராடி பல பிரச்சனைகளை கடந்து இறுதியில் மரணத்திற்கு பின்னால் நாம் அனைவரும் மாயமாய் மறைந்துவிடத்தானே போகிறோம்.

ஆகவே எதையும் பெரிதென நினைக்காமல் வாழ்க்கை செல்லும் பாதையில் செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தை சுவாரஸ்யமாக அமைத்துக் கொள்ளுங்கள்.

http://ennavazhkai.blogspot.com/2011/11/blog-post_18.html

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கம் , நரகம் இருக்குதோ இல்லையோ , அப்படி இருப்பதாக நம்புவதால்தான் நானும், என் போன்ற பலப்பலரும் கொஞ்சமாவது யோக்கியமாய் வாழ்வதுபோல் நடித்துக் கொண்டிருக்கிறோம், இப்ப அதுக்கும் ஆப்பு போல் கிடக்குது! :unsure::rolleyes:

  • தொடங்கியவர்

சொர்க்கம் , நரகம் இருக்குதோ இல்லையோ , அப்படி இருப்பதாக நம்புவதால்தான் நானும், என் போன்ற பலப்பலரும் கொஞ்சமாவது யோக்கியமாய் வாழ்வதுபோல் நடித்துக் கொண்டிருக்கிறோம், இப்ப அதுக்கும் ஆப்பு போல் கிடக்குது! :unsure::rolleyes:

மிக்க நன்றிகள் சுவி உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மரணபயத்தை வெல்பவனே பிறர் வாழப் பல செயல்களை செய்ய முடியும் :) :) :) .

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கருத்து கோமகன். மரணத்தின் பின்னால் யோசிப்பதில்லை யாரும். நாம் அனுபவிப்பது எல்லாம் நம் முன் வினைப் பயன் என்பதில் மட்டும் எனக்கு நம்பிக்கை உண்டு.அதுபோல் விதிக்கப் பட்டதையும் எம்மால் மாற்ற முடியாது என்பதும் உண்மைதானே.

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் என்பது ஒரு பிரச்சனையில்லை! அது ஒரு கணத்தில் நிகழ்ந்து விடுவது!

ஆனால், மரணத்தை, எதிர் பார்த்திருக்கும் நாட்கள் தான் கடினமானவை!

வெளியே, முகங்கள் என்ன விதமான, வீரியங்களைக் காட்ட எத்தனித்தாலும், வாழ்நாளில் ஒருவர் வாழ்ந்த முறை, அவரது நல்லதும் , கெட்டதுமான செயல்கள், ஒரு திரைப்படம் போலத் திரும்பத் திரும்ப ஓடியபடி இருக்கும். தீய செயல்களைச் செய்தவர்களுக்கு, இது ஒரு தவிர்க்க முடியாத சித்திரவதையாகும். இதைத் தான், நரகம் என எல்லா மதங்களும், பூடகமாகச் சொல்லி நிற்கின்றன என எண்ணுகின்றேன்! நல்ல முறையில் வாழ்ந்த ஒருவன், பிச்சைக்காரனாயினும், மரணத்தை எண்ணிக் கவலைப் படத் தேவையில்லை!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்,

வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்!

என்ற குறளின் பொருளும், இதுவாகத் தான் இருக்க வேண்டும்!

நன்றிகள், கோம்ஸ்!

  • தொடங்கியவர்

நல்ல ஒரு கருத்து கோமகன். மரணத்தின் பின்னால் யோசிப்பதில்லை யாரும். நாம் அனுபவிப்பது எல்லாம் நம் முன் வினைப் பயன் என்பதில் மட்டும் எனக்கு நம்பிக்கை உண்டு.அதுபோல் விதிக்கப் பட்டதையும் எம்மால் மாற்ற முடியாது என்பதும் உண்மைதானே.

நீங்கள் விதைத்த விளைச்சல்களை நீங்கள் வாழுங்காலத்திலேயே அறுவடை செய்கின்றீர்கள் . காலங்கள் சற்று முன்னே பின்னே இருக்கலாம் . இதில் எங்கே வந்தது முற்பிறவிப்பயனும் ,விதிப்பயனும் ??? என்னைப் பொறுத்தவரையில் மனிதனது இயலாமை என்பதன் மறுவெளிப்பாடு விதிப்பயனாகும் :) :) .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மரணம் என்பது ஒரு பிரச்சனையில்லை! அது ஒரு கணத்தில் நிகழ்ந்து விடுவது!

ஆனால், மரணத்தை, எதிர் பார்த்திருக்கும் நாட்கள் தான் கடினமானவை!

வெளியே, முகங்கள் என்ன விதமான, வீரியங்களைக் காட்ட எத்தனித்தாலும், வாழ்நாளில் ஒருவர் வாழ்ந்த முறை, அவரது நல்லதும் , கெட்டதுமான செயல்கள், ஒரு திரைப்படம் போலத் திரும்பத் திரும்ப ஓடியபடி இருக்கும். தீய செயல்களைச் செய்தவர்களுக்கு, இது ஒரு தவிர்க்க முடியாத சித்திரவதையாகும். இதைத் தான், நரகம் என எல்லா மதங்களும், பூடகமாகச் சொல்லி நிற்கின்றன என எண்ணுகின்றேன்! நல்ல முறையில் வாழ்ந்த ஒருவன், பிச்சைக்காரனாயினும், மரணத்தை எண்ணிக் கவலைப் படத் தேவையில்லை!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்,

வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்!

என்ற குறளின் பொருளும், இதுவாகத் தான் இருக்க வேண்டும்!

நன்றிகள், கோம்ஸ்!

பிறப்பை விரும்பியவாறு துல்லியமாக கணிக்கத் தெரிந்த மனிதனுக்கு மரணத்தின் நாட்களை மறைத்து , அவினில் விஞ்சிய சக்தியாம் கடவுள் இருப்பதை உணர்த்துவதாகவும் நான் எடுக்கின்றேன் . அதேவேளையில் நரகத்தின் வாசல் அவன் வாழுங்காலத்திலேயே , அவன் காலடியில் இருக்கின்றது . அது , அவன் செய்யும் செயல்களின் அடிப்படையில் அதன் எதிர்வினைகள் இருக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.