Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் ஐ.நா. உரை தொடர்பிலான பெல் பொட்டின்கரின் அறிக்கை! இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uno_mahinda_speech.jpg

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆற்றியஉரையை தாமே தயாரித்து வழங்கியதாக பிரி;த்தானிய நிறுவனம் வெளியிட்ட தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.2010 ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் ஜனாதிபதி ஆற்றிய உரையை தமது நிறுவனமே தயாரித்ததாக பிரித்தானியாவின் பெல் பொட்டின்கர் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த உரை சிறப்பானதாக இருந்ததாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். எனினும் குறித்த உரையில் அடங்கியிருந்த பதங்கள் குறித்து நிறுவனம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதியின் இந்த உரையில் நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனம் அமைந்திருக்கிறது. எனினும் ஒரு அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் நடத்தும் போர் தொடர்பில் அம்சங்களை கொண்டிருக்கவில்லை.

எனவே ஐக்கி;ய நாடுகளின் மனித உரிமைகள் சாசனம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்தநிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு, ஜனாதிபதிக்கான ஐக்கிய நாடுகள் உரையை தயாரித்திருந்தபோதும் தமது உரையையே ஜனாதிபதி ராஜபக்ச விரும்பியதாக பெல் பொட்டின்கர் நிறுவனத்தின் தலைவர் டேவிட் வில்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு இதனை மாற்ற முயன்றபோதும் ஜனாதிபதி தமது நிறுவனத்தின் உரையே தெரிந்தெடுத்ததாக பிரித்தானிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவின் ஊடகவியல் சபை, பெல் பொட்டின்கர் போன்ற பொதுமக்கள் தொடர்பாடல் நிறுவனங்களின் ஒழுங்குகள் குறித்து நடத்திய விசாரணையின் போது இலங்கை ஜனாதிபதிக்கான உரை குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் பெல் பொட்டின்கர் நிறுவனத்தின் தகவல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேகர, குறித்த அறிக்கை, இலங்கையை கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் தகவலை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் போருக்கு பின்னர் இலங்கையின் பெயரை சர்வதேசத்தில் உயர்த்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம், பெல் பொட்டின்கர் நிறுவனத்துக்கு கடந்த வருடம் 4.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, பெல் பொட்டின்கர் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் கடந்த வருடம் லண்டனில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒன்றுகூடலின் போது பங்கேற்றதாகவும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.

http://www.tamilthai...newsite/?p=1123

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மட்டும் மறுப்பு தெரிவிக்கும் இலங்கை அரசு, இதுவரை எதனைத்தான்... ஒத்துக் கொண்டுள்ளது.

இதே... போல் தான் மகிந்த ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்ற விருந்த உரையையும் பெல் பொட்டிங்கர் நிறுவனம் தான்... தயாரித்திருக்கும்.

நல்ல காலம்... அந்த உரையை, நாம் கேட்க வேண்டிய அவசியமே.. இல்லாமல் போய் விட்டது.

I need one too, my pay review interview coming soon.

Edited by Sooravali

Rajapaksa_UN_Speech.jpg.w300h343.jpgblank.gifblank.gif

Rajapaksa_UN_speech

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.