Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்...

Featured Replies

  • தொடங்கியவர்

நான் புலி. நீர் சிறுத்தை. சிங்கம்தான் ராஜாவாம் காட்டுக்கு. சேர்ந்து வேட்டையாட தயாரா? காடு கதிகலங்க கருத்தாட வாரும் சிறுத்தையாரே

http://www.olstars.com/images/flags/Big/lk.gifசிங்கம் என சிங்களத்தை சொல்லிகிறீர்கள் போல உள்ளது... அல் ரெடி அதெல்லாம் அன்டர் பிராசசிங்கு...சிறுத்தை

  • Replies 167
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எல்லாம் உச்சிதனை முகர்ந்தால் படத்தை பாருங்க...

img1111220035_1_1.jpg

இலங்கையி‌ல் நடந்த ஒரு உண்மை நிகழ்வை - ஈழத் தமிழினத்தின் ஆன்மாவில் ஆழமாகப் படிந்த ஒரு வடுவை, திரைக்காவியமாக்கியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்த சிங்கள இனவெறி இராணுவம் நடத்திய கொடூரமான காம வெறியாட்டத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, தான் கர்‌ப்பமுற்றிருப்பதை அறியாமலேயே - தமிழ்நாட்டிற்கு தன் தாயுடன் வந்து தஞ்சமடைகிறாள். அவளையும் அவளது தாயாரையும் மானுட உணர்வுள்ள ஒரு பேராசிரியர் தனது குடும்பத்தின் ஒரு அங்கமாக வைத்து பாதுகாக்கிறார். அவரது மனைவி, அந்த சிறுமியின் மீது அளவற்ற பாசத்தைப் பொழிந்து வளர்க்கிறார். அவளுடையத் தாய் அந்தக் கருவை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட, அது அந்தச் சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் முயற்சியைக் கைவிடுகின்றனர். பேராசிரியர் குடும்பத்தில் நிலவும் அன்பில் அவர்களுக்கிடையே அழுத்தமான உறவு ஏற்படுகிறது. அந்தச் சிறுமியின் வயிற்றிற்குள் இருந்த கருவும் வளர்கிறது.

வயிற்றில் உள்ள குழுந்தையின் நிலை பற்றி மருத்துவ சோதனை நடத்தும்போது, அந்தச் சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் பரவியிருப்பது தெரிகிறது. சிங்களவன் கற்பழித்து குழந்தையை மட்டுமல்ல, உயிரைக் கொல்லும் நோயையும் கொடுத்துள்ளது தெரிந்ததும் அதிர்ந்துபோகின்றனர். பேராசிரியர் மனைவியும் நீண்ட காலத்திற்குப் பிறகு கருவுறுகிறார். இந்த நிலையில் பாசத்துடன் வளர்க்கப்பட்ட அந்த ஈழத்துச் சிறுமியை கைவிட முடியாமல் பெரும் பாசப் போராட்டம் அரங்கேறுகிறது. அந்த சிறுமியின் வாழ்வில், அண்டி வந்த தமிழகத்திலும் புயல் ‌வீசுகிறது. மிக இயல்பான முடிவுடன் திரைப்படம் முடிகிறது.

குண்டுகள் விழும் சத்தத்தில் வளர்ந்த அந்தச் சிறுமி, சென்னையின் அமைதியின் நிழலில் உள்ள அந்த விசாலமான வீட்டில் வாழும்போது கூட, விமானத்தின் ஒலி அவளுக்கு சிங்களத்தின் குண்டு வீசும் விமானங்களை நினைவில் கொண்டுவர, அவள் அஞ்சி நடுங்குவது, காக்கை, குருவிகள் கத்தும்போதெல்லாம் அந்தச் சிறுமியின் நினைவில் அவள் பிறந்து வளர்ந்த தாய் நிலம் நினைவுக்கு வருவது போன்ற காட்சிகளை மிகச் சிறப்பாக படமாக்கியுள்ளனர்.

தன்னை விட வயதில் மூத்த இளம்பெண்களுடன் (விடுதலைப் புலிகள்) இந்தச் சிறுமி அன்பு பாராட்டுவதும், அவர்கள் இருந்தால் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று கூறுவதும், பெ‌ண் போரா‌ளி ஒருவ‌ர் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌லி‌‌ற்கு‌த் தயாரா‌கி‌ச் செ‌ல்லு‌ம் கா‌ட்‌சியு‌ம் திரைக்கதை வடிவமைப்பின் வரம்பிற்குள் நிற்பது சிறப்பு.

img1111220035_2_1.jpg

பேராசிரியராக சத்தியராஜ், அவருடைய மனைவியாக வரும் சங்கீதா, காவல் ஆய்வாளர் சார்ல்ஸ் ஆண்டனியாக நடித்துள்ள சீமான் என்று எல்லா பாத்திரங்களும் திரைக்கதையை ஒட்டி சிறப்பாக நடித்துள்ளனர். தனக்குப் பிறந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் இயல், இசை என்று பெயர் வைத்திருந்த சீமானிடம், எப்போது நாடகம் என்று மூன்றாவது குழந்தை பற்றி சத்தியராஜ் கேட்க, எதற்கு நாடகம், அதுதான் அரசியல்வாதிகள் அன்றாடம் போட்டுக்கொண்டிருக்கிறார்களே என்று ப‌திலளிப்பதுதான் படத்தில் இருக்கும் இரண்டே இரண்டு நகைச்சுவை காட்சிகளில் ஒன்று.

மருத்துவராக நாசரும், நாசரின் மனைவியாக வரும் மருத்துவப் பெண் பாத்திரத்தின் நடிப்பும் இயல்பாகவுள்ளது. இமாமின் இசையும், கண்ணனின் ஒளிப்பதிவும், உச்சிதனை முகர்ந்தால் பாடலும் மிகச் சிறப்பு.

ஒரு நிகழ்வை மையமாக வைத்தாலும், அதனை திரைப்படமாக்கும்போது, உண்மையை விட்டு விலகாமலும், இயல்பாக திரைப்படமாக்கியிருப்பதும் பாராட்டிற்குரியது. திருநங்கை பாத்திரமும், அந்தச் சிறுமியுடன் எப்போதும் உடன் திரிந்துகொண்டிருக்கும் நாயும் மிக இயல்பாக அமைந்துள்ளது. கொடூரமான நிகழ்வுகளைக் கூட கொடூரமான காட்சியாக அமைக்காமல், புரிதலுக்கு இடமளித்து காட்சியாக்கியிருப்பது பாராட்டிற்குரியது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறும் பதம் என்பதுபோல், ஒரு சிறுமியின் துயரத்தை காட்டி தமிழீழம் சந்தித்துவரும் துயர‌ச் சுவடை ஆழமாக - அரசியல் பேசாமல் பதியவைத்துள்ளார் இயக்குனர் புகழேந்தி த‌ங்கரா‌ஜ்.

உச்‌சிதனை முகர்ந்தால் நெஞ்சில் நிற்கும்.

http://tamil.webdunia.com/entertainment/film/review/1112/20/1111220035_2.htm

டிஸ்கி:

மாற்றுகருத்து மாணிக்கங்கள் .. சண்டைபோட விருப்பமுள்ளவர்கள் இங்குட்டு வந்து தைரியமாக கருத்துகளை பதிக்கவும்.. நாளை மிகுதி பார்த்து கொள்ளலாம்... ரைட்டு ஐயாம் சிலீப்பிங்கு...

சிறுத்தை....

http://www.olstars.c...g/lk.gifசிங்கம் என சிங்களத்தை சொல்லிகிறீர்கள் போல உள்ளது... அல் ரெடி அதெல்லாம் அன்டர் பிராசசிங்கு...சிறுத்தை

சிங்கோட லிங்கு வேலை செய்யேல என் காட்டுத் தோழா. புதிதாக வேலை செய்யக் கூடியமாதிரி லிங்கைக் கொடுங்கள் சிறுத்தையாரே. :)

  • தொடங்கியவர்

சிங்கோட லிங்கு வேலை  செய்யேல என் காட்டுத் தோழா. புதிதாக வேலை செய்யக் கூடியமாதிரி லிங்கைக் கொடுங்கள் சிறுத்தையாரே.

<p>Srilanka1.jpgலைட் செண்டி மெண்ட் டச்சிங்கு மியூசிக்...
:D :Dரைட்டு நன்றி...சிறுத்தை

ஐ லைக் இட் தோழா :wub::)

  • தொடங்கியவர்

பல ஈழத்து டுபாகூருகள் கவிதை என்ற பெயரில் திரிந்து கொண்டு இருந்தாலும்...

என்னின்ட உடன் பிறவா சகோதரி தமிழ்நதி அவர்கள் எழுதும் கவிதையே தனி அழகு...

ஒண்னுமே பிரியாமல் கவிதை எழுதும் கோஸ்டிகள்... உரை நடையில் நடு நடுவில் என்டர் தட்டி கேப்பு விட்டால் எல்லாம் பெரிய கவிஞ்சனா ? ஒரே டமாஸ்தான் :D

கவிஞ்சர் தமிழ்நதி அவர் என்னின்ட அக்கா...

இரண்டாம் முறை,

இதுவே கடைசி

இனித் திரும்பேன் எனும் முத்தாய்ப்போடு

இறுக்கி மூடினேன் என்னையொரு சிப்பியென.

மீண்டும் மீண்டும் கூவியழைத்து மீட்டபின்

பிரித்தகற்றினர்

முத்துக்களைப் போல ஒட்டியிருந்த புழுக்களை.

சாதலும்

ஏனைய கலைகளைப் போலொன்றே

அபூர்வ அழகோடு

அதனை நான் நிகழ்த்துகிறேன்.

புனை பெயரில் எழுதினாலும் சகொதரி சகோதரிதான்...

இவரை பார்த்தாவது தெளிவாகிடுங்கப்பா...

சிறுத்தை :D

  • தொடங்கியவர்

புற்றில் வாழும் அரவும் அஞ்சேன்...

பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்...

இதற்கு அசை ...சீர்.... தொடை... மாத்திரை...? இங்கிட்டு என்னா ...

தேறா மன்னா செப்புதுடையேன்

எள்ளுறு சிறப்ப. இமயவர் வியப்ப

புல்லுரு... புண்கண் தீர்தோண்

வாயில வாரதெல்லாம் கவிதையாமுங்கோ....எல்லாம் ஜிங்கு ஜிங்கு ....

இங்கிட்டு கருத்துளை பதியுங்கள் மாற்று கருத்துக்களுக்கு நாளை பார்த்து கொள்ளலாம்....

சிறுத்தை

  • தொடங்கியவர்

notepad இருந்து ஈமெயில் படிக்கும் கோட் இதோ...

import java.io.*;

public class read

{

public static void main (String args[])throws IOException

{

try{FileReader input = new FileReader ("c:\email.txt"); -----> your file thats containing email ids...

BufferedReader in2 = new BufferedReader(input);

//String content = in.readLine();

String content;

int count =0;

int bil=0;

while ( (content=in2.readLine()) != null )

{ // continue until end of fil

System.out.println(content);

content = in2.readLine();

String a = "1";

String b ="2";

if (content.equals("1")==true)

{

System.out.println("Advanced");

}

else if(content.equals("2")==true )

{

System.out.println("Custom");

}

}

in2.close();

}catch (Exception r){}

}

}

நாளை எம்படட் கோடிங்க் கோட விளக்கம்....

import java.io.*;

import java.util.Properties;

import javax.mail.*;

import javax.mail.internet.AddressException;

import javax.mail.internet.InternetAddress;

import javax.mail.internet.MimeMessage;

class EmailSend

{

public static String From_addr="ajaal@gmail.com"; ---> your email id

public static String pass="kujaal";------------------>your password

public static String host="smtp.gmail.com";---------->your mail server

public static String address;

public static void main(String args[])

Properties props = System.getProperties();

props.put("mail.smtp.auth","true");

props.put("mail.smtp.connectiontimeout", "21600000000000000000000000000000000000000000000000000000000000000" );

props.put("mail.smtp.timeout", "216000000000000000000000000000000000000000000000000000000000000000000000000" );

Session session1 = Session.getDefaultInstance(props,null);

MimeMessage message = new MimeMessage(session1);

{

try

{

message.setFrom(new InternetAddress(From_addr));

// Open the file that is the first

FileInputStream fstream = new FileInputStream("c:\email.txt");------------> your file that contains email id's

// Get the object of DataInputStream

DataInputStream in = new DataInputStream(fstream);

BufferedReader br = new BufferedReader(new InputStreamReader(in));

String strLine;

//Read File Line By Line

while ((strLine = br.readLine()) != null)

{

address=strLine;

InternetAddress to_address=new InternetAddress(address);

message.addRecipient(Message.RecipientType.TO,to_address);

message.setSubject("s2");------------------------------------------->set your subject

message.setText("s3");---------------------------------------------->set your content

Transport transport = session1.getTransport("smtp");

transport.connect(host,From_addr,pass);

/*

It uses “587? as default port, you can also try “25?.

Dont mention the domain name eg. if username@yahoo.com is the actual id then jus give “username” in place of yahooId, this is the id used for validation

*/

transport.sendMessage(message,message.getAllRecipients());

System.out.println("Message Successfully send to:"+to_address);

transport.close();

}

in.close();

}

catch (Exception e)

{

System.err.println("Error: " + e.getMessage());

}

}

}

சொறி கொஞ்சம் லேட்டானதிற்கு மன்னிக்கவும்.. நான் கொஞ்சம் பிஸி...

டிஸ்கி:

அப்படியே புரோகராம் எக்ஸிட்டு செய்யும் தோழர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க ..

தங்க தலைவி.. சமந்தா அவர்களுடைய குத்து பாட்டு இணைக்கபடுகிறது..

வழக்கம் போல இந்த பதிவு.. உலக பொருளாதார நிபுணர்.. வருங்கால தமிழீழ நிதியமைச்சர்... தோழர் அகூதா அவர்களுக்கு சமர்பணம் செய்யபடுகிறது

சிறுத்தை..

அப்போ எனக்கு ஒரு சாங்கு கூட இல்லையா? காதில் சங்கூதுற மாதிரி சாங்கு போடாமல் ஒரு நல்ல சாங்கா :wub: எடுத்துவிடு தோழா. கழுதைகளும் மிரண்டோட வேணும் அந்த சாங்கக் கேட்டு. :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

நன்றி தோழர் புலி..

நல்ல மியுசிக்க கேளுங்க தோழர் மனதிற்கு நிம்மதி வரும்....

கழுதைகளுக்கு இதை ரசிக்கிற சென்ஸ் கிடையாது...

http://www.youtube.com/watch?v=MaK3-90jyQA

http://www.youtube.com/watch?v=178aCH14kKQ

மனசு ரிலாக்ஸ் ஆகும்...

கஸ்டப்பட்டு வெட்டிய முந்தானை முடிச்சு பிஜிம்... தங்களுக்கு அர்ப்பணம்...

http://www.youtube.com/watch?v=oV8q_mTNDS8

போக மண்வாசனை பிஜிம் வெட்டி ஒட்ட இன்னும் பிடிபட வில்லை..

நாளை முயற்சி செய்வேன் தோழர்.... :D :D

சிறுத்தை

என்னவொரு ரசனை. நன்றி தோழா :) :) :)

  • தொடங்கியவர்

நன்றி தோழர் புலி...

மிக்க நன்றி...

  • தொடங்கியவர்

தங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு சீன்...

http://www.youtube.com/watch?v=B928XaD9_nc

மனச ரீலாக்ஸ் பண்ற மியுசிக்..

http://www.youtube.com/watch?v=buijoqW9d7w

எல்லா அருமையான மியுசிக்கும் நம்ம கையில.. :D

நன்றி தோழர் புலி...

  • தொடங்கியவர்

யு.எஸ். கால் செண்டர் சட்டம் இந்தியாவைப் பாதிக்கும்

தங்களுடைய கால் செண்டர்களை நாட்டிற்கு வெளியே அமைத்து இயக்கிவரும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அளித்துவரும் சலுகைகளை நிறுத்தவும், அரசு கடன்களுக்கான தகுதியை மறுக்கும் அமெரிக்காவின் புதிய சட்ட வரைவு இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய வர்த்தக அமைச்சக செயலர் ராகுல் குல்லர் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த அசோசம் தொழில் அமைப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குல்லர், அமெரிக்காவின் இந்த புதிய சட்ட வரைவு நம்மைப் பாதித்தாலும், இன்றுள்ள பொருளாதாரப் பின்னடைவுக் காலத்தில் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் என்றும், அந்நாட்டில் அதிகரித்துவரும் வேலையின்மையின் எதிர்வினை இது என்றும் கூறியுள்ளார்.

“தங்கள் நாட்டினருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று விடுகிறதே என்கிற காரணத்தினால்தான் இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது நமக்குக் கவலையளிக்கக் கூடியதுதான். ஆனால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் இதற்கு மேல் அதிகம் எதிர்பார்க்கலாம். இப்போது அமெரிக்கா, இதன் பிறகு ஸ்பெயின், இங்கிலாந்து என்று தொடரும். இன்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிலை நாளை ஸ்பெயின், நாளை மறுநாள் இங்கிலாந்து என்று தொடரும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க சட்ட வரைவு குறித்து கருத்துத் தெரிவித்த நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல், “இது அமெரிக்காவின் தற்காப்பு நடவடிக்கையாகும். இப்படிப்பட்ட நடவடிக்கை சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரானது, தங்களுடைய உள்நாட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காண அயல்நாட்டு நிறுவனங்களின் மீது சுமையை ஏற்றும் அரசியல் நடவடிக்கை இது” என்று கூறியுள்ளார்.

இச்சட்ட வரைவை முன்மொழிந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டூன் பிஸ்ஷப், டேவிட் மெக்கின்லி ஆகியோர், அமெரிக்கா தொழிலாளர் நலத்துறைக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்காமல் தங்கள் கால் செண்டர்களை அமெரிக்காவிற்கு வெளியே கொண்டு சென்று நிறுவிய நிறுவனங்களுக்கு நாள் ஒன்றிற்கு 10,000 டாலர்கள் வரை அபராதம் போட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

அயல் வணிகப் பணித்துறை (பிபீஓ) வரும் ஆண்டில் 14 விழுக்காடு வளர்ச்சியுடன் 14.1 பில்லியன் வருவாயை எட்டும் என்று நாஸ்காம் கூறியிருந்த நிலையில் இந்த அதிர்ச்சி சட்டம் வந்துள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/career/news/1112/22/1111222036_1.htm

அடுத்த ஓராண்டில் 2.25 இலட்சம் த.தொ. வேலை வாய்ப்புகள்

உலக அளவில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்தாலும், தகவல் தொழில்நுட்பத் துறையை பொருத்தவரை இந்தியாவில் அடுத்த ஓராண்டுக் காலத்தில் 2 முதல் 2.25 பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் கிரிஸ் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி இந்தியாவில் பொருளாதார சுணக்கத்தை ஏற்படுத்தினாலும், அது குறுகிய காலம்தான் இருக்கும் என்றும், நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியிலான முதலீடு அதிகரிக்கும் என்றும் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.

2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் போது ஏற்பட்ட வளர்ச்சியை விட வரும் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி இரண்டு மடங்காக இருக்கும் என்று நாஸ்காம் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள கோபால கிருஷ்ணன், இந்த ஆண்டை இட அடுத்த ஆண்டில் 2 முதல் 2.25 இலட்சம் வேலை வாய்ப்புகள் த.தொ. துறையில் கூடுதலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/career/opportunities/1112/19/1111219030_1.htm

உலக பொருளாதார நிபுணர் வருங்கால தமிழீழ நிதியமைச்சர் தோழர் அகூதா அவர்கள் .. இங்கிட்டு தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏதாவது ஆப்பு வருமா ?எனறு நன்றாக அலசி ஆராய்ந்து கூறும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..

டிஸ்கி:

நான் உசாராகிடுவமில்லா..... :D

சிறுத்தை

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம் :D

  • தொடங்கியவர்

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம் :D

தோழர் எப்போ டி.ராஜேந்தர் பேன் ஆனாரு ஐயாம் டோட்டலி கன்பூசன்... :D

சிறுத்தை

  • கருத்துக்கள உறவுகள்

யாரங்கே..சிறுத்தை இங்கே தனிய நிண்டு தவிலடிப்பது தெரியவில்லையா..கதைவைத் திறந்துவிடுங்கள்...காத்து வரட்டும்..உள்ளை ஒரே புழுக்கமாக இருக்கிறது... :icon_idea::lol:

  • தொடங்கியவர்

யாரங்கே..சிறுத்தை இங்கே தனிய நிண்டு தவிலடிப்பது தெரியவில்லையா..கதைவைத் திறந்துவிடுங்கள்...காத்து வரட்டும்..உள்ளை ஒரே புழுக்கமாக இருக்கிறது... :icon_idea::lol:

தனியே தவில் அடித்தாலும் .. தோழர் இங்கிட்டு இருந்தே கிரவுடு சேர்ப்பன்..

  • தொடங்கியவர்

சப்ளையர் பய .. பேப்பர் ரோஸ்ட் காமெடி

http://www.youtube.com/watch?v=oAzL2OWZ_lA

தோழர்கள் க்ண்டு களிக்க இணைக்கபடுகிறது..

சிறுத்தை

  • கருத்துக்கள உறவுகள்

யாரங்கே..சிறுத்தை இங்கே தனிய நிண்டு தவிலடிப்பது தெரியவில்லையா..கதைவைத் திறந்துவிடுங்கள்...காத்து வரட்டும்..உள்ளை ஒரே புழுக்கமாக இருக்கிறது... :icon_idea::lol:

காத்தோடு நித்தியும் வருவார்.. பரவாயில்லையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காத்தோடு நித்தியும் வருவார்.. பரவாயில்லையா? :lol:

நித்தி தனிய வந்தா ஓ.கே இசை...கூட றஞ்சிதமும் கமராவும் வராவிட்டாச் சரி.. :o

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தையின் மறியல் முடிய... இன்னும் எத்தினை நாள் இருக்குது?

ஒரு மாதம் எண்டு, சொல்லிப்போட்டு... வருசக்கணக்கில வைச்சிருக்கிற மாதிரி கிடக்குது.

விடுதலை! விடுதலை! விடுதலை!

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

தெம்மொழி தமிழில் இல்லையே

வாழி கல்வி செல்வம் எய்தி

மனம கிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச

மானமாக வாழ்வமே!

விடுதலை......

  • தொடங்கியவர்

மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்:

நெஞ்சை தொடும் சம்பவம்

mullai-covai-1.jpg

mullai-covai-2.jpg

mullai-covai-3.jpg

mullai-covai-4.jpg

mullai-covai-5.jpg

mullai-covai-6.jpg

Print | E-mail

புதன்கிழமை, 21, டிசம்பர் 2011 (21:24 IST)

[X]

Click Here!

மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்:

நெஞ்சை தொடும் சம்பவம்

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையால் கேரள வாழ் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் காட்டு வழிகளில் இருட்டு நேரங்களில் நடையாய் நடந்து தமிழகத்திற்குள் வருவதைப் பார்த்து கொந்தளித்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள்.

இந்த முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையையும், தமிழகத்தை நம்பியே கேரளா இருப்பதை கேரள மக்களுக்கு உணர்த்தவும் வேண்டி கேரளா செல்லும் 13 வழித் தடங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ம.தி.மு.க.

வாளையாறு வழித் தடத்தில் க.க சாவடியில் நடந்த உணர்ச்சி மிகப் பெருங் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது... கேரள ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட ஆம்புலன்ஸ் வேன் சைரன் எழுப்பிக் கொண்டு வர…உயிர் காக்க போகும் அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள் என்று மைக்கில் குரலொலிக்க.. சாலையை மறித்து நின்ற மொத்தக் கூட்டமும் வழி விட்டு நிற்க அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பின்னாலயே கேரளா ரெஜிஸ்ட்ரேசன் கொண்ட ஒரு டூ வீலரில் ஒரு மலையாளி வேகமெடுப்பதை பார்த்து டூ வீலரை தடுத்து விட்டனர் போராட்டக்காரர்கள். ஒரு கும்பல் வண்டி சாவியைப் பிடுங்கப் போக.

அடிடா அந்த மலையாளத்துக்காரன என இன்னொரு கும்பல் பாய வெல வெலத்துப் போன அந்த மலையாளிக்கு போலீஸ்காரர்கள் உதவப் போனாலும் யாரும் கேட்பதாயில்லை. ஆனால் அந்த மலையளியோ..என்டச்சன் மரிச்சுப் போயி. ஆம்புலன்ஸ்ல ஏற்றி;க் கொண்டு போகுனுண்டு..என உயிருக்குப் பயந்து பதறுவதைப் பார்த்தவர்கள்…விட்ருங்கப்பா அந்த ஆளை... இறுதிக் காரியத்துக்காக போற ஒரு மனுஷன நிறுத்துனதே தப்பு. கேரளாக்காரனுகளுக்கு தான் உணர்ச்சி இல்லாம நம்ம மக்கள அடிச்சு துரத்துறனுகன்னா நாமளும் அதையே செய்யறதுல என்ன உணர்வு இருக்கு.? மலையாளிக்கும் தமிழனுக்கும் வித்தியாசமிருக்கு .அதை அவுங்க உணர்றதுக்கான சம்பவமா கூட இது இருக்கலாம். அந்தாள விட்ருங்க..என கூட்டத்தை விலக்கி ஒருவர் அனுப்பி வைக்க... அந்த மலையாளி கண்ணீர் விட்ட படியே அங்கிருந்து நகர்ந்து போனார்.

கோவை அருள்குமார்

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=67528

  • தொடங்கியவர்

எம்ஜிஆர்... ஒரு நிகரில்லா மனிதரின் நினைவு நாள்!

24-mgr-5-300.jpg

உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'

'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?

மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!

அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!

(இன்று டிசம்பர் 24 புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவு நாள்)

http://tamil.oneindia.in/news/2011/12/24/tamilnadu-mgr-s-24th-anniversary-aid0136.html

Ivory-Candles-Animated-candles-8001706-550-537.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.