Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவரேஜ் பிள்ளையார் கோவிலும் காதல் நினைவுகளும்!

Featured Replies

கவரேஜ் பிள்ளையார் கோவிலும் காதல் நினைவுகளும்!

வணக்கம் உறவுகளே!

என் தமிழ் மொழியையும் என் தாய் மண்ணையும் வணங்கி ஈழவயலில் என் முதல் பதிவை ஆரம்பிக்கின்றேன்.

நானும் ஒரு பொடிப்புள்ள என்பதால் பொடிப்புள்ளைகளின் சங்கதிகள் சிலதை சொல்லுறன் கேளுங்க. வன்னியில் காதலர்கள் போவதற்கு கடற்கரைகளோ இல்லை,பூங்காக்களோ,தியேட்டர்களோ இல்லை கடற்கரைகள் இருந்தது ஆனால் அங்கே காதலர்கள் போவது கிடையாது. இதற்கான காரணம் நீங்கள் அறிவீங்கள் தானே.இதனால் பெரும்பாலும் காதலர்கள் சந்திக்கும் இடங்களாக ஊரில் உள்ள குச்சு ஒழுங்கைகள் ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

funny-lover-pics.jpg

பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொடிப் பிள்ளைகள் தான் அதிகமாக இந்த குச் ஒழுங்கை காதல் ஜோடிகளாக இருப்பினம். அவேன்ர வயதில் அவங்களுக்கு காதல் என்றால் பயம். காரணம் வீட்டில் தெரிந்தால் பேச்சு விழும் என்பதால் வெளியில் தங்கள் காதல் தெரியாத வண்ணம் காட்டிக் கொள்வீனம். இதுக்கு (இதற்கு) பெரும் சிரமம் எடுத்து தங்கள் காதலை மூடி வைப்பினம். ஆனாலும் எப்படித்தான் கண்டு பிடிப்பாங்களோ தெரியாது நம்ம பொடியங்கள் கண்டு பிடித்துவிடுவாங்க."டேய் அவனும் அவளும் இன்னைக்கு கவரேஜ் பிள்ளையார் கோவிலடில கதைச்சுக்கொண்டு இருந்தாங்கடா" என்று பொடியங்களின் புலனாய்வு ரிப்போட் சொல்லும் பிறகு என்ன அந்த காதல் ஜோடிகளுக்கு பள்ளிக்கூடத்தில் எல்லோறும் சேர்ந்து ஒரே பகிடி பண்ணுவம்.

உப்படித்தான் ஒரு நாள் நானும் இன்னும் ஒரு சிநேகிதனும் ஒருக்கா கவரேஜ் பிள்ளையார் கோவிலடி பாதையால் போய்க்கொண்டு இருக்கும் போது ஒரு பொட்டை எங்களைக் கடந்து லேடிஸ் சைகிளில் போனது அப்ப என்ர சினேகிதன் சொன்னான்; "டேய் குட்டிப்பையா அங்க பார் அந்த பொட்டை எங்கட பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொட்டைதானே இவள் ஏன் கவரேஜ் பிள்ளையார் கோவிலடி பாதையால் போறாள் ஏதும் சங்கதி இருக்கும் போல வா பார்ப்பம்" என்றான்.

சரி என்று நானும் அவனும் அந்த பொட்டைக்கு பின்னால் போனம். பாத்தால் (பார்த்தால்) அவள் கவரேஜ் பிள்ளையார் கோவிலடியையும் தாண்டி அங்கால உள்ள டியூசனுக்கு போனாள். நாங்களும் அவளை விலத்திக்கொண்டு போய்விட்டம் அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் கதைக்கிறாங்க. "குட்டிப்பையனும் அவன்ற சினேகிதனும் நேற்று கவரேஜ் பிள்ளையார் கோவில் பக்கம் ஒரு பொட்டைக்கு பின்னால போனாங்களாம்". எப்படி இந்த பகிடியை பாத்தியளே! உதைத்தான் "பனைமரத்துக்கு கீழ நிண்டு பால் குடிச்சாலும் கள்ளு குடிக்கிறது" என்று சொல்லுவினம். ஹி...ஹி...

ஆனாலும் ஒன்றை கவனிக்க வேண்டும் என்னதான் காதலர்கள் ஒதுக்குபுறமான பாதைகளில் நின்று கதைத்துக்கொண்டு இருந்தாலும் எந்த தப்புதாண்டாவும் செய்ய வெளிக்கிட மாட்டினம் காரணம் அதுதான் அந்த மண்ணின் கலாச்சாரம் அதன் புனிதம். காதலை மதிக்கும் அங்கு காதலர்கள் ஏதும் விளையாட்டு விட்டினம் என்றால் டின் கட்டி விடுவார்கள் அண்ணாக்கள். தமிழனின் கலாச்சாரத்தில் காதலுக்கு தனி இடம் உண்டு காதலும் வீரமும் தமிழனின் கலாச்சாரத்துடன் ஓட்டிய இரட்டைக்குதிரைகள்.சங்ககாலங்களின் காதலுடன் கலந்த வீரத்தை சொல்லியிருப்பார்கள் அதை நாங்கள் நேரில் பார்த்தது இல்லை ஆனால் வீரம் விளைந்த வன்னி மண்ணில் அதை நேரில் கண்டு இருக்கேன்.தன் காதலைவிட தன் தாய் நிலத்தின் மீது வைத்த காதலுக்குகாக தன்னை அர்பணித்த பல புனிதர்கள் வாழ்ந்த நிலம் அது.

<a href="http://4.bp.blogspot.com/-CfDjOczaNbE/TugT4DC3-2I/AAAAAAAAABU/HTLEokiMSZ4/s1600/kilinochchi2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em">kilinochchi2.jpg

இதனால் தான் அந்த மண்ணில் காதலுக்கு தனிமரியாதை உண்டு காதலியே தன் காதலனை உச்சிமுகர்ந்து தன் மண்ணுக்க்காக அனுப்பிவைத்த புண்ணிய பூமி அது. ஒரு பெண்ணின் மீது கொண்ட காதலுக்காகவோ இல்லை ஒரு ஆணின் மீது கொண்ட காதலுக்காகவோ உயிர் துறப்பது சரியா தவறா என்றால் நிச்சயம் தவறு தான். ஆனால் தன் மண்ணின் மீதான காதலுக்காக தன்னை அர்ப்பணித்த மனிதர்களின் வாழ்ந்த அந்த பூமியில் என்றும் காதல் போற்றப்படும்.ஒரு பெண்ணின் மீது வரும் காதல் என்றாலும் சரி.பலருக்கு தன் மண்ணில் வந்த காதல் என்றாலும் சரி புனிதர்கள் வாழ்ந்த பூமியில் புனிதமான காதல் என்றும் வாழும்.

*********************************************************************************

அரும்பத விளக்கம் / சொல் விளக்கம்:

  • பொடிசுகள்-இளம் பையன்கள்,பொண்ணுகள்
  • பொடிப்புள்ள- பையன்
  • சொல்லுறன்-சொல்கிறேன்
  • சங்கதிகள்-மேட்டருகள்
  • பெரும்பாலும் -அதிகமாக
  • கேளுங்க-கேளுங்கள்.
  • பொட்டை-பொண்ணு/ பிகரு
  • அறிவீங்கள் -அறிந்திருப்பீங்க.
  • குச்சி ஒழுங்கை/ குச்சு ஒழுங்கை/ குச்சொழுங்கை-சின்ன சின்ன வீதிகள் (Small Street)
  • லேடிஸ் சைக்கிள்-பெண்களுக்கு என்று தனியாக வரும் பார் இல்லாத சைக்கிள் (Ladies Bike)
  • பேச்சு விழும்-திட்டுதல்/ ஏசுதல்.
  • இருப்பினம் -இருப்பார்கள்.
  • பகிடி-நக்கல்
  • சங்கதி-செய்தி/ மேட்டர், சுவாரஸ்யமான விடயம்.
  • அவேன்ர-அவர்களின்
  • இதுக்கு -இதற்கு.
  • விலத்திக்கொண்டு போய்விட்டம் -கடந்து செல்லுதல்/முந்தி செல்லுதல்
  • தாண்டிச் செல்லுதல்- கடந்து செல்லுதல்.
  • டின் கட்டி விடுவார்கள் அண்ணாக்கள்.-டின் கட்டுதல் என்றால் தண்டனை வழங்குதல் என்ற பொருள் படும். அண்ணாக்கள் என்பது புலிகளை குறிக்கும்
  • மூடி வைப்பினம்-மூடி மறைப்பார்கள்.
  • ஒருக்கா: ஒருக்கால்/ ஒருவாட்டி / ஒரு தடவை.
  • பண்ணுவம் -செய்வோம்/ கலாய்ப்போம்.
  • உப்பிடித்தான்: இதே மாதிரி /அதே மாதிரி.
  • பகிடி-பகடி
  • கதைக்கிறாங்க: பேசுறாங்க.
  • அப்ப: அப்போது.
  • போனம்: போனோம்
  • பாத்தால்: பார்த்தால்.
  • காட்டிக் கொள்வீனம்-காட்டிக் கொள்வார்கள் / பாசாங்கு செய்வார்கள்.
  • பாதைகள்-வீதிகள்
  • கவரேஜ் பிள்ளையார் கோவிலடி-கிளிநொச்சியில் கணேசபுரம் ஊடாக உருத்திரபுரம் போகும் வீதியில் உள்ள ஒரு கோவில். இதற்கு ஏன் கவரேஜ் பிள்ளையார் கோவில் என்று பெயர் வந்தது என்றால்; வன்னியில் அப்போது கைத்தொலைபேசிகள் பாவனையில் இல்லை இதனால் அங்கே கைத்தொலை பேசிக்குரிய சிக்னல் கோபுரங்கள் இல்லை. எனவே கைத்தொலை பேசிகள் யாரும் பாவிப்பது என்றால் கவரேஜ்(சிக்னல்) இருக்காது.ஆனால் சில இடங்களில் கவரேஜ் இருக்கும்.அதில் முக்கியமான இடம் தான் கவரேஜ் பிள்ளையார் கோவில். வயல் வெளிகளுக்கு நடுவில் இருக்கும் பசுமையான ஒரு இடம்.அங்கே கவரேஜ் இருப்பதால் பலர் அங்கு தான் கைத் தொலைபேசிகளில் (அலைபேசி) கதைக்க வருவார்கள். அந்த கோவிலை ஓட்டி இருந்த வீதிகளில் காதலர்கள் சந்தித்து பேசிக்கொள்வார்கள். ஹி..ஹி...அதெல்லாம் ஒரு காலமுங்க! அந்த நினைவுகள் தான் மீண்டும் வருமா?



    ****************************************************************************


    மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை;


    என்றும் அன்புடன்;
    உங்கள்;
    குட்டிப்பையன்!
    அப்ப நான் போயிட்டு வரட்டே! (ஓக்கே நான் கிளம்புறேனுங்க).

    http://www.eelavayal.com/2011/12/blog-post_14.html

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப் பையனுக்குப் பாராட்டுகள்.

சங்கதி- மேட்டரு

பொட்டை-"பிகரு"

முடியல :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது கதை தொடருங்கள் ஆனால் நான் வன்னி மக்களது வாழ்க்கை பற்றி வேறோன்று கேள்விப் பட்டேன்...அதை எழுதினால் யாழில் உள்ளவர்கள் அடிக்க வருவதோடு பிரதேச வாதம் கதைக்கிறேன் எனவும் சொல்வார்கள் ஆகவே அமைதி

தலைப்பைப் பார்த்திட்டு என்னடா பிள்ளையாருக்கு இங்கிலீசுப் பேராய்க்கிடக்கு அப்ப பூசையும் இங்கிலீசிலை தான் செய்யத் தொடங்கீட்டினம் போல் என்று யோசிச்சிட்டன். அப்பாடா வாசித்த பிறகு தான் நிம்மதி கிடைச்சுது. இந்தக் காலத்திலை ஏதோ தமிழிலை கல்யாணம் கட்டுறாங்களாம், கோயிலிலை தமிழிலை பூசை செய்கிறாங்களாம் ஆனால் வீட்டிலை பிள்ளையளுக்குத் தமிழ் தெரியாது, பிள்ளையளுக்குத் தமிழ் கதைக்க விருப்பமில்லை என்று பெருமையாகச் சொல்லும் பெற்றோர், பேரன், பேத்திமார்.........

அநியாயத்திலும் அநியாயம்! ஆண்டவா....... அந்தத் திறத்திலை தமிழில் கல்யாணம், பூசை, சாம்த்தியச் சடங்கு........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.