Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக போராட்டம் நடத்த

Featured Replies

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக போராட்டம் நடத்த

தமிழ் அமைப்புகள் திட்டம்

தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட டேம் 999 படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தமிழராக இருந்து கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இப்படி கூறலா மா? என்று தமிழர் அமைப்புகள் குமுறுகின்றன.

முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச பிரச்னையாக்க மலையாளத்தை சேர்ந்த சோஹன் ராய் என்பவர் கேரள அரசின் ஆதரவுடன் எடுத்த படம் தான் டேம் 999. இந்தப் படத்திற்கு வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகள் நிதியுதவி செய்துள்ளனர்.

இந்தப் படத்தை வெளி யிட்டு தமிழகத்திற்கு சர்வதேச அளவில் நெருக் கடி ஏற்படுத்த வேண்டும் என்பதே சோஹன்ராயின் நோக்கம். இந்தப் படத்திற்கு டேம் 999 என்று பெயரிட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையின் 999 ஆண்டு குத்தகை காலம் தான் காரணம்.

ஆனால் இது முல் லைப் பெரியாறு அணை யின் கதை இல்லை என்று ஊர் ஊராகப் போய் விளக்கிய சோஹன்ராய், அணை இடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் ஒரு அணை உடைந்து பல லட்சம் பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல் கிராபிக்ஸ் காட்சி வருகிறது.

இது மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது போல் உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் திரையிட இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இப் படத்தை தடை செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில் டேம் 999 படத்தின் இரு பாடல் கள் தற்போது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல்கள் வெற்றி பெற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆஸ்கர் விருதுக்கான படங்களின் போட்டியில் டேம் 999 திரைப்படமும், அதன் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடல்களில் ஏதாவது ஒன்றாவது ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்று கடவுளின் வேண்டுகிறேன்”. என்றார்.

தமிழகத்தில் பெரும் புயலையும், சர்ச்சையையும் கிளப்பிய இப்படத்துக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கருத்து தெரிவித்திருப்பதையறிந்த தமிழ் ஆதரவு அமைப்புகள் குமுறுகின்றன. அவருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

http://www.nakkheera...ws.aspx?N=67637

Edited by BLUE BIRD

'வண்ணத்திரையும் (சினிமாவும்) அரசியலும் வேறு இல்லை விளையாட்டும் அரசியலும் வேறு' என்பதை யாராவது சொல்லும்பொழுது அவர்கள் மேதாவிகள் மாதிரி தோற்றம் தந்தாலும் யதார்த்தம் அதுவல். அதாவது, வண்ணத்திரை (சினிமா), விளையாட்டு (கிரிக்கெட்) எல்லாமே அரசியல் தான்.

எம்மில் சிலர் 'அரசியல் இல்லை' என்று ஒதுங்கினாலும் அதை எதிரிகள் 'அரசியலாக' பயன்படுத்திவிடுகிரார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் அப்பா திலீப்குமார் மலையாளம்தானே..! :rolleyes:

அவரின் அப்பா திலீப்குமார் மலையாளம்தானே..! :rolleyes:

அது ரத்த உறவு.

இருக்கத்தானே செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னைத் தமிழனாகக் காட்டிக்கொள்வதை விட இந்தியனாகவும், முஸ்லீமாகவும் காட்டிக்கொள்ளவே விரும்புகிறார். தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதற்காக தமிழ் மேல்ச் சாதியினர் உதவாத போது, முஸ்லீம் ஒருவர் உதவினாராம், அதற்காகத்தான் இந்த முஸ்லீம் மதமாற்றம் அது, இது என்கிற நன்றிக்கடன் விளையாட்டெல்லாம்.

அவர் தமிழராக இருந்தபோது அவரை உலகுக்குத் தெரியாது, ஆனால் அவர் உலகிற்குத் தெரிந்தபோது அவருக்குத் தமிழைத் தெரியாது.

ஒரு சொல்லில் சொல்வதென்றால், வியாபாரி !!!!

காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா !!!!! :lol:<_<

Edited by ragunathan

அப்போ நாம் இப்ப kaafir தானே .....

ரஹ்மான் ,தமிழகத்தையே எதிர்த்துக்கொண்டு மலையாளிகளுக்கு ஆதரவு தரும் பேர்வழி இல்ல..!

& இதுபோன்ற அரசியல் சிக்கலில் மாட்டிக்கிறவரும் இல்ல..!

ஒருவேளை அந்த படத்தோட இசை மட்டும் அவருக்கு புடிச்சிருக்கலாம் & அதால அப்டி சொல்லி இருக்கலாம்!

மீடியா அவர மாட்டி விடுதுன்னுதான் நேக்கு தோணுது!! :)

இதுக்குதான் சொல்றது இடம்,பொருள், காலம் அறிந்து பேசனும். தான் மேதாவி என்று காட்டி கொள்ள எப்படியும் பேசக்கூடாது.

நரம்பில்லா நாக்கு எப்படியும் பிரளும்.

தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்- ஏ.ஆர்.ரஹ்மான்

25-ar-rahman-1300.jpg

டேம் 999 படம் ஆஸ்கர் விருது பெற வாழ்த்தது தெரிவித்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமீபத்தில் டெல்லி ஆக்ராவில் நடைபெற்ற விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பான ஏக் தீவானா தா படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டேம் 999 ப பாடல்கள் ஆஸ்கர் விருது தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடும்போது சக இசையமைப்பாளர் என்ற முறையில் ஆவுசுப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் சிலர் இதனை வேறு விதமாக கூற தொடங்கியுள்ளனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தமிழனாகிய எனக்கு என் வளர்ச்சியில் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாகவும், முக்கியத் தூணாகவும் இருந்து வருகிறார்கள். அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த 3 வாரங்களாக நான் ஹாலிவுட் பணியில் அமெரிக்காவில் மூழ்கி இருந்ததால், தமிழ்நாடு, கேரளாவில் நடந்து வரும் முல்லைப் பெரியாறு பிரச்சினை எந்த அளவுக்கு தீவிரமானது என்பதை நான் உணரவில்லை.

இந்தப் பிரச்சினையில் முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாமின் நிலைப்பாட்டினை நான் மதிக்கிறேன்.

இந்தியாவின் வேகமான வளர்ச்சியைப் பார்த்து இன்று உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் நமது ஒற்றுமையே...

அதனைக் கட்டிக் காப்பது மிகவும் முக்கியம்.

என் அருமை ரசிகர்களுக்கு எனது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.

http://tamil.oneindia.in/movies/news/2011/12/25-a-r-rahman-clarifies-his-speech-on-dam-999-aid0091.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.