Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்து நாளிதழுக்கும் கண் திறந்துள்ளது

Featured Replies

இந்து நாளிதழுக்கும் கண் திறந்துள்ளது

இறுதிக்கட்டப்போரில் ஏற்பட்ட சிவிலியன் பாதிப்புகள், சிவிலியன் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்பில் இராணுவத்தின் தவறுகளைக் குற்றஞ்சாட்டாது நழுவியுள்ளது நல்லிணக்க ஆணைக்குழு. இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து “இந்து” பத்திரிகை விமர்சித்துள்ளது.

இதுதொடர்பில் தமிழகத்தில் இருந்து வெளியாகும், வலதுசாரி, தமிழர் விரோதப் பார்ப்பன கருத்தியலைக் கொண்ட பத்திரிகையான “இந்து” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது புலிகள் இயக்கம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுடன், முடிவடைந்த இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்டப்போரின்போது “கணிசமான” சிவிலியன் பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன என்ற உண்மையை நிலைநிறுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்த ஆணைக்குழு “சிவிலியன் பாதிப்புகள் பூஜ்யம்” என்ற இலங்கை அரசின் முன்னைய நிலைப்பாட்டை ஒருபடி மேல் நோக்கி கடந்துள்ளது. இந்தப் பாதிப்புகளுக்கு இராணுவத்தின் தவறே காரணம் என பழிசுமத்துவதற்கான அதிசிரம சாத்தியமான கடமையிலிருந்து இந்த ஆணைக்குழு அரைகுறை சாட்சியங்களோடு நழுவியுள்ளது.

எனினும், இந்தக் கைவிலங்கு இத்தகைய பெரும்பாலான செயல்களுக்காக விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்த இந்த ஆணைக்குழுவைத் தடுக்கவில்லை. பயங்கரவாதக் குழுவோடு போராடுவது இலங்கைக்கு ஒரு கடினமான சவாலாகவே இருந்தது. நல்லிணக்க ஆணைக்குழு, 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கையை விமர்சித்துள்ளது. இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் சமத்துவமான அதிகாரம் படைத்தவையாக இந்த உடன்படிக்கை பேணுகிறது என அது குற்றங்கண்டுள்ளது.

அதேவேளை, கணிப்பீட்டில் அரசு சார்பற்ற ஒரு குழுமத்தை அரசே உயர்நிலைகளை வகிக்கின்றது என்ற கருத்தை அறிக்கை பரிதாபகரமாகத் தவறவிட்டுவிட்டது.யுத்த சூனிய பிரதேசத்திலுள்ள சிவிலியன்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்பாக இராணுவம் மீது குற்றஞ்சுமத்த இந்த அறிக்கை முயலவில்லை. யுத்த சூன்யப் பிரதேசத்தில் படையினர் திருப்பிச் சுடுவதை “கொள்கைகள் சமன்பாடு” என அறிக்கை குறிப்பிடுகிறது.

வேறுவிதமாகக் கூறுவதாயின், விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்கும் இலட்சியத்துக்கு இத்தகைய செயற்பாடு தவிர்க்கமுடியாததொன்றே என்பதாகும். சிவிலியன்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக ஐந்து அம்சங்களின் சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து அறியப்படவேண்டும் என நல்லிணக்கக் ஆணைக்குழு அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

அதேவேளை, பாதுகாப்புப் படையில் ஒருவரின் முறைகேடான நடத்தை நிரூபிக்கப்பட்டால் அவரை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தி, குற்றவாளியாயின் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் கோருகிறது. இராணுவத்திடம் சரணடைந்த அநேக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காணாமற்போயுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அளித்துள்ள சாட்சியங்களை அடிப்படையாகக்கொண்டு விசாரணை நடத்துமாறும் ஆணைக்குழு அரசைக் கோரியுள்ளது.

“சிறிலங்கா கொலைக்களம்” ஆவணப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து, சந்தேகங்கள் கிளப்பியுள்ள ஆணைக்குழு, அதில் இடம்பெறும் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கர உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அரசைக் கோரவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மை நிலைப்பாட்டையோ, பொய்மையையோ நிலைநாட்டத் தூண்டவில்லை.

சிவிலியன் பாதிப்புகள் சம்பந்தமான குழப்பநிலையைக் குறிப்பிடாமல் தவிர்த்து, மனிதநேயத்துக்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குமாறே அரசை ஆணைக்குழு இலங்கையின் பல் சமூக அமைப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போதுமானவையாக அமையவில்லை.

போர் தொடர்பாக இலங்கை அரசு மேற்கொள்ளும் முதல்தரச் சோதனை நடவடிக்கையாக இது இருக்கலாம். அரசு நல்லிணக்கப்பாட்டிலும், கடந்தகால படிப்பினைகளிலும் அக்கறை செலுத்துமானால், அது ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப செயற்பட ஆரம்பிக்க வேண்டும்.

இப்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=91721

  • கருத்துக்கள உறவுகள்

கண் கெட்ட... பின், சூரிய நமஸ்காரம்.

அது, தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் இந்துவுக்கு தெரிந்திருந்தும்.. செய்த, குற்றம். குற்றமே....

நாம் போரில்.... தோற்றதற்கும், எமது போராட்டத்தைப் பற்றிய... தவறான அணுகு முறையை.. வடக்கிந்தியர்களுக்கும், மேற்லகுலகத்துக்கும்... தனது வியாபாரத்துக்காக காவிச் சென்றது இந்து என்னும் பத்திரிகை.

அதனை விட... மகிந்த ராஜபக்ஸவின், ஸ்ரீலங்காவின் அதி உயர் பத்திரிகையாளர் விருதையும் பெற்றவர் இந்து ராம்.

இத்தனைக்கும்.... வன்னியில் சமாதானப் பேச்சு வார்த்தை ஆரம்பத்தின் போது....

உலகத்தின்... பல நூறு, பத்திரிகையாளரும், புகைப்படப் பிடிப்பாளரும் கூடியிருக்க,

தேசியத்தலைவர் ஒருவரை கூப்பிட்டு, நீங்கள்... இந்து பத்திரிகையில் இருந்த , பத்திரிகையாளர் தானே... என்று, கேட்டு நலம் விசாரித்தார்.

இப்படிப்பட்ட.... பத்திரிகை, ஒரு இனத்தை அழித்து விட்டு, வேசை ஆட்டம் ஆடுவதை விட.... நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாகலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக இருக்கவும்!

அது அநேகமாக 'நெற்றிக்கண்' ஆக இருக்கும் சந்தர்ப்பங்களே அதிகம்!!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராமின் "பிடி" போய்விட்டதா?

  • தொடங்கியவர்

கண் கெட்ட... பின், சூரிய நமஸ்காரம்.

அது, தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் இந்துவுக்கு தெரிந்திருந்தும்.. செய்த, குற்றம். குற்றமே....

நாம் போரில்.... தோற்றதற்கும், எமது போராட்டத்தைப் பற்றிய... தவறான அணுகு முறையை.. வடக்கிந்தியர்களுக்கும், மேற்லகுலகத்துக்கும்... தனது வியாபாரத்துக்காக காவிச் சென்றது இந்து என்னும் பத்திரிகை.

அதனை விட... மகிந்த ராஜபக்ஸவின், ஸ்ரீலங்காவின் அதி உயர் பத்திரிகையாளர் விருதையும் பெற்றவர் இந்து ராம்.

இத்தனைக்கும்.... வன்னியில் சமாதானப் பேச்சு வார்த்தை ஆரம்பத்தின் போது....

உலகத்தின்... பல நூறு, பத்திரிகையாளரும், புகைப்படப் பிடிப்பாளரும் கூடியிருக்க,

தேசியத்தலைவர் ஒருவரை கூப்பிட்டு, நீங்கள்... இந்து பத்திரிகையில் இருந்த , பத்திரிகையாளர் தானே... என்று, கேட்டு நலம் விசாரித்தார்.

இப்படிப்பட்ட.... பத்திரிகை, ஒரு இனத்தை அழித்து விட்டு, வேசை ஆட்டம் ஆடுவதை விட.... நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாகலாம்.

சிங்களம் ஒரு விலாங்கு மீன் போன்றது என்பதை தமிழர் தரப்பு கூறி வந்தது, வருகின்றது. ஆனால், இந்திய நடுவண் இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் ஒரு ஆழமான நீண்டகால பார்வையை பரிசீலிக்க மறுத்ததன் விளைவே எமதினத்தின் அழிவு. அந்த அழிவில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நாம் உள்வாங்கி, இந்து உட்பட, தாயக மக்களின் அரசியல் வெற்றிக்கு இவை வழிகோலவேண்டும் என நம்புவோம்.

தொடர்ந்தும் எமது அழிவை இந்தியா விரும்புமானால், ஒருநாள் இந்தியா கூட வரைபடத்தில் இருந்து அகற்றப்படுவது தவிர்க்கமுடியாதது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.