Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தத்துக்கு அப்பால்....பின்னணி என்ன?

Featured Replies

13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்க தயாராக இருப்பதாக மகிந்த கூறியதின் பின்னணி என்ன? - ஆய்வாளர்கள் விளக்கம்

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவும் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததாக தெரிய வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது அந்நாடுகளால் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் புலப்படுத்தியிருந்தன.

இந்நிலையில், சீனாவை மட்டும் நம்பியிருந்து போர்க்குற்ற விவகாரத்தில் இருந்து மீளமுடியாது என்பதை அறிந்து கொண்ட சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியாவை திருப்பதிப்படுத்த வேண்டிய தேவையிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசியப் பிராந்தியத்தில் சீனா வகுக்கும் வியூகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய நாடுகள் கொண்டுள்ள நிலையில், போர்க்குற்ற விவகாரத்தில் இருந்து மீள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு நம்பிக்கை இந்தியாதான். இதனை வைத்துக் கொண்டே இந்தியாவும் தன்னுடைய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

தனது நலன்களை முதன்மைப்படுத்திச் செயற்படும் இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைக்கப்பண்ணுலதற்காக எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல், இலங்கையில் தனது நலன்களை பேணிக் கொள்வதற்கான நகர்வுகளையே மேற்கொள்கின்றது.

இந்நிலையில், இந்தியாவின் நலன்களைக் கவனித்தால் ஈழத்தமிழர்களைப் பற்றி இந்தியா கவலைப்படாது என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா சொன்ன அனைத்துக்கும் உடன்பட்டதுடன், 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவும் தயாராக இருப்பதாகவும், இதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்கவும் தயாராக இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கூறியிருந்தாலும், அது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும் போது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் அதனை நிராகரித்துவிடும்.

இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஏற்கவில்லை என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் இருந்து இதுவரை வெளிவரவில்லை. மாறாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவே கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்துக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசிய போது, 'அந்த அர்த்தத்தில் நான் அதைச் சொல்லவில்லை' என சிறிலங்கா ஜனாதிபதி கூறியதாகத் தெரிய வருகின்றது.

இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா சொன்னதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. அதேவேளை, இந்தியாவின் தேவை இருப்பதால் அதனை மறுக்கவும் சிறிலங்கா அரசாங்கம் முன்வரப் போவதில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=55a60f89-a715-447b-aefa-cab478d725a2

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு வழங்க தயாராக இருப்பதாக மகிந்த கூறியதின் பின்னணி என்ன? - ஆய்வாளர்கள் விளக்கம்

p1200095.jpg

சுத்தமான சுகாதாரமான முறையால் .. தூய நெய்யினால் தயாரிக்கபட்ட திருநெல்வெலி அல்வா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.