Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வம்சாவழி மலையாளம் என்கிறார் ஜானகி அம்மா- என்டீ ரீவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின் பெயர் ஜானகி அம்மா. கொல்லத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் இவரது இல்லம் உள்ளது. ஜானகி அம்மாவின் தாயுடன் கூடப் பிறந்த ஆறு சகோதரர்களில் ஒருவர்தான் வேலுப்பிள்ளை. ஜானகி அம்மாவின் தாயின் பெயர் நானி அம்மா.

எனவே தான் பிரபாகரனுக்கு மைத்துனி உறவுமுறை என உரிமை கொண்டாடுகின்றார் ஜானகி அம்மா.

இவ்வாறு உறவுமுறை கொண்டாடும் ஜானகி அம்மாவை என் டீ ரீவி பேட்டி எடுத்துள்ளது.

ஜானகி அம்மாவின் அம்மப்பா அதாவது வேலுப்பிள்ளையின் தகப்பன் இறந்தபோது வேலுப்பிள்ளை செத்த வீட்டுக்கு சென்று இருக்கின்றார். பிறந்த மண்ணுக்கு வேலுப்பிள்ளை சென்றிருந்த கடைசி தருணம் அதுதான். அப்போது ஜானகி அம்மாவுக்கு வயது 11. அதற்கு பின் வேலுப்பிள்ளையை ஜானகி அம்மா காணவே இல்லையாம்.

ஜானகி அம்மாவின் தாய் நானா அம்மாவுக்கு வேலுப்பிள்ளை மாதாந்தம் ரூபாய் 50 அனுப்பி வந்திருக்கின்றார். காசு அனுப்புகின்றமையை நானா அம்மாவின் மரணத்துக்கு பின்னர் வேலுப்பிள்ளை நிறுத்திக் கொண்டார். அந்நாட்களில் ரூபாய் 50 என்பது மிகவும் கணிசமான தொகைதான் என்கின்றார் ஜானகி அம்மா.

வேலுப்பிள்ளையால் அனுப்பப்பட்டு இருந்த போஸ் கார்ட்டுகளை ஜானகி அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார்.

அனுப்பியவரின் முகவரி ஆர். வேலுப்பிள்ளை, வல்வெட்டி ஸ்ரோர், 224 கே. கே. எஸ். ரோட், யாழ்ப்பாணம் என்று உள்ளது. பிரபாகரன் என்று ஒரு ஆண் மகனை பெற்று எடுத்து இருக்கின்றார் என்று இந்த போஸ் கார்ட்டில் எழுதி இருக்கின்றார் வேலுப்பிள்ளை. இந்த போஸ் கார்ட் 1953 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு பின் வேலுப்பிள்ளையிடம் இருந்து போஸ் கார்ட் எதுவும் வந்திருக்கவில்லையாம்.

பிரபாகரனை ஜானகி அம்மா ஒரு போதும் நேரில் பார்த்து இருக்கவில்லை. அல்லது பிரபாகரனுடன் தொலைபேசியில் கதைத்து இருக்கவுமில்லை. ஆனால் மாமன் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெரும் தலைவர் பிரபாகரன் என்று அடித்துக் கூறுகின்றார்.

மாமன் வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் குடியேறிய பின்னர் பிரபாகரன் உட்பட பிள்ளைகளை தமிழில் படிக்க வைத்து தமிழ் கலாச்சாரத்தில் வளர்த்து எடுத்து இருக்கின்றார் என்று இயல்பாகவே சொல்கின்றார் ஜானகி அம்மா.

1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை இடம்பெற்றபோது ஜானகி அம்மாவின் இல்லத்துக்கு இந்திய புலனாய்வுப் பிரிவினர் மோப்பம் பிடித்து வந்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். இதையும் ஜானகி அம்மா நினைவு கூர்ந்தார்தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு மலையாளி ஆவார் என கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் அதற்கான ஆதாரங்களோடு கூறியுள்ளார்.

Video:

அந்த வேலுப்பிள்ளையும் இந்த வேலுப்பிள்ளையும் எப்படி ஒன்றாக முடியும்!

இது மலையாள, இந்தியக் காட்டுமிராண்டிகளின் கூட்டுச் சதியாக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை ஊத்தை சித்தம்பலம் வேலுப்பிள்ளை மலையாளி அவரையும் தலைவரின் தகப்பனையும் போட்டு குழப்பியடிக்கிறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வம்சாவழி இலங்கையர் என்றவுடன் உடனே எமது நினைவில் வருவது மலையக தோட்டத் தொழிலாளர்தான். இவர்கள் தவிர வேறும் இந்தியர்கள் சுயவிருப்பத்தின் பேரிலோ அன்றி காலனித்துவ எஜமானர்களால் அழைத்துவரப்பட்டோ இலங்கையில் தொழில்புரிய என வந்த 2 அல்லது 3 தலைமுறைக்குட்பட்டவர்கள் இலங்கையில்தமிழ் பிரதேசங்களில் இன்றும் வாழ்கிறார்கள். இவர்கள் கேரளம் மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் ஆனால் இன்று எவ்விதத்திலும் இவர்களை பிரித்தறிவது கடினம். வீட்டில் முதியவர்கள் மட்டும் தென்னிந்திய மொழிகளில் சரளமாக உரையாடுவதையும் பிள்ளைகள் சுத்த யாழ்பாணத்தமிழில் பேசுவதையும் நான் கேட்டிருக்கிறேன். தேசியத்தலையர் பற்றிய இச்செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. தேசியத்தலைவரின் தாத்தவின் பெயர் திருவேங்கடம் என்பதறிந்து நானே இப்படியிருக்கலாமோ என்று எண்ணியது உண்டு. ஏனெனில் இந்த பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு பொதுவான பெயரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமக் கந்தன், சிங்களவனாக மாறிய மாதிரி.... இதுவும் நடக்கும்.

:icon_mrgreen:

:D

1954 நவம்பர் 26ம் திகதி பிறந்த பிள்ளைக்கு 1953 டிசம்பர் 18ம் திகதி போஸ் காட் அனுப்ப முடியுமா?

Thank you donkey :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.