Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மனியில் தமிழீழ தேசியத் தலைவரின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரை வெளியீட்டால் ஓடித்திரியும் இலங்கைத் தூதரகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

german_stamp_001-150x150.jpg

ஜெர்மனியில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் இலங்கைத் தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடா மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் போல் ஜெர்மனியிலும் கடந்த வாரம் கேணல் கிட்டு மற்றும் தியாகி முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது.

தமிழர்கள் தமது தேசிய முத்திரைகளை வெளியிடுகிறார்கள் என்பதால் ஜெர்மனியில் மணிக்கற்கள் வியாபார நிறுவனம் ( Carl Faller Institute ) ஒன்று சிறிலங்காவின் மணிக்கற்கள் படங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிட்டு இலங்கை தபால் அமைச்சரிடமும் அன்பளித்தது.

இதை கண்ட இலங்கை தபால் அமைச்சர் (Jeevan Kumaratunga) ஜீவன் குமாரதுங்க , இலங்கையின் இறைமையை பாதிக்கும் வண்ணம் ஏனைய ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது ஜெர்மன் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளை வெளியிட அனுமதி வழங்காமல் தமக்கு பெருமையை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு Carl Faller Institute நிறுவனத்தின் இயக்குனர் யேர்மனியில் சிறிலங்காவின் இறைமையை பாதிக்கும் வண்ணம் முத்திரைகள் வெளியீடு செய்வதற்கு எவ்வித இடமும் கிடையாது என்பதையும் உறுதியளித்திருந்திருந்தார்.

இச்சம்பவங்களையடுத்து, ஜெர்மன் ஈழத்தமிழர்கள் தமது தேசியம் சார்ந்த முத்திரைகளை ஜெர்மன் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளியிட்டு வைத்துள்ளனர்.

german_stamp_003.jpggerman_stamp_002.jpggerman_stamp_001.jpg

http://www.tamilthai...newsite/?p=4320

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு, தாபல் கந்தோருக்குப் போய்.... கொஞ்ச முத்திரை வாங்கி வைக்கவேணும்.

இந்த தொடர் முத்திரை வெளியீட்டால் சிங்கள நாட்டின் தூதராலயங்கள் ஓட்டித்திரிகின்றன. இதனால் மகிந்தவின் கடுப்பு பீரிஸ் மீது (வெளிவிவகார அமைச்சர்) பாயலாம். இது ஜெனீவா மீது பீரிசுக்கு இருக்கும் கவனத்தை குழப்பினால், அதுவும் நன்மையே!

இப்டி கேணதனமான வேலைகள் ...எப்பிடீன்னா.....

சொந்த செலவில சூனியம் ,, எங்களுக்கு நாங்களே!!

முத்திரையா முக்கியம்? ஒரு அரசியல் நெருக்கடிக்குள்ள ,, சிங்களவன தள்ளுறதுக்கு...

சர்வதேச ஆதரவை தேடும் நிலையில்,, முத்திரை ,,, முந்திரிகாய்... மேட்டர ஆரம்பிச்சு,,,

ஸ்டாம்ப் வெளியிடப்படும் நாடுகளுக்கு ... சிங்களவன் நெருக்கடி கொடுத்து...

அனைத்து முயற்சிகளையும் கெடுக்க வைக்கும்!!

முதல்ல தீர்வு... அப்புறம் முத்திரை...!!

நாங்க நிஜமாவே லூசுங்கதான்... சிங்களவன் பார்வைல!!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க நிஜமாவே லூசுங்கதான்... சிங்களவன் பார்வைல!!

ஆனால் சிங்களவன் அப்படி ஒரு நாளும் நினைத்ததில்லை

சொல்லியதுமில்லை.

அது தான் அவனது வெற்றியின் ரகசியம்

நாளைக்கு, தாபல் கந்தோருக்குப் போய்.... கொஞ்ச முத்திரை வாங்கி வைக்கவேணும்.

நிறையவே வாங்குங்கள் தமிழ் சிறி!

நல்ல முயற்சி!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.