Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம்

Featured Replies

ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம் ஸார்கோஸியின் கருத்தும் எதிர்கால உலகமும்..

நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார்கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எதிரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகின் முன் வைத்திருக்கிறார்.

சென்ற வருடம்..

கேணல் கடாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரகசியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரான முதலாவது குண்டை வீசியது, நேட்டோ அல்ல ஸார்கோஸிதான்.

கடந்த சனிக்கிழமை சிரியாவுக்கு எதிராக ஐ.நா கொண்டு வந்த பிரேரணையை ரஸ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வீட்டோ அதிகாரைத்தைப் பாவித்து இடை நிறுத்திவிட்டன. இந்த நாசகார செயல் முதல் தடவையல்ல, இது இரண்டாவது தடவையாகும்.

முதல் தடவை இவர்கள் வீட்டோ பாவித்தபோது சிரிய அரசு 3000 பொது மக்களை கொன்றிருந்தது. இரண்டாவது தடவை வீட்டோ பாவித்தபோது 6000 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

ஐ.நாவால் எதுவும் செய்ய முடியவில்லை…

ஐ.நா பிரேரணைக்கு எதிர்ப்புக் காட்ட நேற்று 217 பேரை கிரனைட் வீசிக் கொன்ற சிரிய நயவஞ்சக அரசு இந்த வரிகளை எழுதும்போது கோம்ஸ் நகரில் 15 பொது மக்களை கொன்று தள்ளுகிறது..

இப்படி…

சொந்த மக்களை கொலை செய்யும் அரசுகளை கட்டுப்படுத்த முடியாத ஐ.நாவை கெஞ்சிக் கொண்டிருப்பதைவிட, அந்த அமைப்பையே குப்பையில் வீசிவிட்டு நாம் களமிறங்க வேண்டும் என்று ஸார்கோஸி அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருப்பது பிரான்சிய புரட்சிக்கு பின் கேட்கும் புகழ் பெற்ற குரலாகும்.

அன்று..

பயங்கரவாத பட்டியலில் போடப்பட்ட இயக்கங்களை அழிப்பதற்கு உதவி செய்தது ஐ.நா..

இன்று..

பயங்கரவாத பட்டியலிடப்பட்ட இயங்கங்கள் இருந்த நாடுகளில் இருந்து நாசவேலை செய்த பயங்கரவாத அரசுகளை அழிப்பதற்கு உதவ முடியவில்லையானால் அந்தப் பக்கச்சார்பான அமைப்பு எதற்கு… ?

ஸார்கோஸியின் கேள்வி அர்த்தமுள்ள கேள்வியல்லவா..?

அதனால்தான்..

சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு சரியான பாடம் கற்பித்து, சொந்த மக்களுக்கு எதிராக இயங்கும் ஒரு நயவஞ்சக அரசை விரட்டியடிக்க தாம் தயார் என்று அவர் முழங்கியிருப்பது இந்த நூற்றாண்டின் புகழ்மிக்க குரலாக பதிவாகிறது..

அன்று லிபியாவுக்கு எதிராக ஸார்கோஸி களமிறங்கியபோது கேணல் கடாபி பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

அது மட்டுமா..

இதுவரை அமெரிக்கா தலைமையில் இயங்கிய அணி இனி பிரான்ஸ் தலைமையில் அணி மாறுகிறது என்று அறிவித்திருந்தார்.

ஆக..

பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றவர்களை அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கியது அமெரிக்கா..

பயங்கரவாத நாடுகளை அழிக்கும் போருக்கு தலைமை தாங்கப்போவது பிரான்ஸ் என்பது இதனுடைய கருத்தாகும்.

லிபியா அழிக்கப்பட்டுவிட்டது…

இனி சிரியா… ஈரான்… பாகிஸ்தான்… அப்பாலும் அப்பாலும்…

veto-sri1.jpg

இடையில் ஒரு கேள்வி மூளையைச் சரடி ஓடுகிறது..

அப்படியானால் நேட்டோவின் பங்கு என்ன..?

பிரான்சின் தலைமையில் புதிய அணியா.. உடனடியாக எதிர்த்தது இந்த நேட்டோதான்.. அதுதான் லிபியாவில் குண்டு வீச்சுக்களை நடாத்த சற்று தாமதமாக அது களமிறங்கியது..

ஏன்..? நேட்டோவுக்கும், ஸார்க்கோஸிக்கும் என்ன முறுகல்.. ? ஏன் நேட்டோ தலைமையில் களமிறங்க மறுக்கிறார் ஸார்கோஸி… ?

நேட்டோவிலும் பல பயங்கரவாத அரசுகள் அங்கம் வகிக்கின்றன.. அவை நேட்டோவில் இருந்து புனிதம் பெற்றுவிட முடியாது..

உதாரணம்..துருக்கி..

அதனால்தான் சென்ற மாதம் பிரான்சிய செனட் துருக்கியை போர்க்குற்றவாளி என்று அறிவித்தது. கடந்த 1915ம் ஆண்டு ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்களை மானிடப் படுகொலை செய்த நாடு துருக்கி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படிப்பட்ட துருக்கி போன்ற நாடுகள் இருப்பதால் நேட்டோ புதிய உலகிற்கு தலைமை தாங்க முடியாது..

எப்படி நேட்டோ தேவையில்லையோ அப்படியே..

சிறீலங்கா, சீனா, ரஸ்யா, போன்ற நாடுகளின் போலி நலன்களை பேணும் ஐ.நாவும் தேவையில்லை..

ஸார்க்கோஸியின் குரலுக்கு கை தட்டவேண்டியவன் ஈழத் தமிழனல்லவா.. அவன் என்ன செய்கிறான்..?

இனி..

நேட்டோ என்பது அது கலைக்கப்படும்வரை அங்கத்துவ நாடுகளை கட்டிப்போடும் ஓர் அமைப்பு என்பதை வருங்காலம் வெளிப்படையாக உணர்த்தும்.

armi1-300x219.jpg

ஐ.நாவின் அடுத்த கட்ட பணி என்ன..?

அரசியல் தவிர்ந்த மற்றய விடயங்களை மட்டும் அது கவனிக்க வேண்டும்.. புவி வெப்பமடைதல், தொற்றுநோய், பட்டினி போன்ற வீட்டோ அதிகாரம் பாவிக்கப்படாத இடங்களில் மட்டும் அது தொழிற்பட வேண்டும்.

நிறைவாக..

ஸார்கோஸியின் பிரதான குற்றச்சாட்டுக்கு வருவோம்…

தனது நாட்டில் வாழும் ஓர் இனத்தை அந்த நாட்டின் அரசு நயவஞ்சகமாக கொலை செய்தால் அந்த அரசு உலக மன்றில் ஓர் அரசாக தொடர்ந்து நீடிக்க முடியாது..

சபாஷ்…!

சிறீலங்கா இந்த குற்றத்திற்குள் வரும் முதலாவது நாடு..

2009 ம் ஆண்டு மே..

புலிகளுக்கு சர்வதேச சமுதாயம் மரணம் என்ற ஒரு வழியை திறந்துவிட்டது..

2012 ல் உலக சமுதாயம் சிங்களத்திற்கு மரணமும் இல்லாமல் வாழ்வும் இல்லாமல் இரு வழிகளையும் அடைத்திருக்கிறது..

ஸார்கோஸி தலைமையில் புறப்பட்டுள்ள இந்தச் சூறாவளி சர்வாதிகாரக் காடுகளை எல்லாம் அடித்து சுடுகாடாக்கும்…. இதை லிபியாவுக்கு மேல் விழுந்த முதல் குண்டு சத்தம் கேட்க முன்னரே அலைகளில் தெட்டத் தெளிவாக எழுதியிருந்தோம்.

சரி.. இந்த அவலமான நிலையில் இந்தியா இலங்கைக்கு உதவுமா..?

இல்லை..

ஏன்..

சிரியாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் ரஸ்யாவையும், சீனாவையும் கைவிட்டு அந்தர் பல்டி அடித்துள்ளது இந்தியா..

சிறீலங்காவுக்கு எதிராக இனி அது ஆகாச பல்டி அடிக்கும்..

இனியும் இந்தியா சிறீலங்காவுக்கு ஆதரவளித்தால் தமிழ் நாட்டில் கலைஞரும், காங்கிரசும் வீட்டுக்கு போனது போல.. சோனியா அம்மையார் தோல்வியடைய நேரிடும்.

அன்று தீமையான பக்கத்தில் அரசியல் சுழன்றபோது பட்டம் விட்ட புலம் பெயர் தமிழினம் இன்று காற்று சரியான பக்கத்தில் காற்றடிக்கும்போது பட்டம் விடாமல் படுத்திருக்கலாமா..?

ஐ.நாவுக்கு வெளியால் செயற்பட விரும்பும் ஸார்கோஸிக்கு முதலாவது வாழ்த்துக் கடிதத்தை இன்றே அனுப்புவோம்..

அலைகள் ஐரோப்பிய விவகார அரசியல் நோக்கு.. 06.02.2012

http://www.alaikal.com/news/?p=95970

  • கருத்துக்கள உறவுகள்

சார்கோசியின் அரசியல் ஆயுள் இன்னும் 2 மாதங்கள்தான் என்பது கடினமான செய்தி.

அத்துடன் அடுத்துவரப்போகும் சோசலிச ஆட்சியாளர்களிடம் நாம் இதைவிட அருகாமையில் செல்லமுடியும் என்பது நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் மக்கள் இறப்பதை பார்த்து இவர்கள் இரங்கவில்லை............ ஈரானுடன் போர் வந்தால் சிரியா வின் நிலபரப்பு இவர்களிடம் இருந்தால். ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஏவும் ஏவுகணைகளை சிரியாவில் இருந்து சுட்டு வீழ்த்தலாம் என்ற நோக்கத்தை அடிப்பையில் வைத்தே இவர்கள் ஓடிதிரிகிரார்கள்.

விடயம் தெரிந்த ருசியாவும் சீனாவும் தடுக்க பார்கிறார்கள்.

இவர்கள் ஈரானில் கொன்று குவிக்க போகும் மக்கள் தொகையில் ..................... இன்று சிரியாவில் இறக்கும் மக்கள் சும்மா இடிவிழுந்து இறக்கும் எண்ணிக்கையாகத்தான் இருக்கும்.

இவர்கள் அங்கும் இங்கும் சுத்தி போகவேண்டிய ஊர் ஈரான்தான்.

பொங்கிவார நேரம் பானை உடைவதுபோல என்று சொல்லுவார்கள். இவர்கள் இப்படி ஜெனநாயகம் பேசி பேசி இரானை சென்றடையும்போது அங்கே இவர்கள் நடாத்தா இருக்கும் கொலைவெறியை கண்டு இதே அரபுநாட்டு மக்கள் கொத்தித்து வீதியில் இறங்கினால் ????

இதே மக்கள் பயங்கரவாதிகள்தான்.

பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் மோதல் பல பயங்கரவாதிகள் மரணம் என்ற செய்திதான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஜீரியாவிலிருந்து ஆரம்பித்த அரபுப்புரட்சிக்கு

புரட்சியாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் ஆட்சிக்கு எதிராகப் போராட

ஐரோப்பா முதல் அமெரிக்கா வரை ஆதரவு தந்தன.

அரபுப் புரட்சிக்கும் ஈழத் தமிழனின் விடுதலைக்கும்

எந்த ஒற்றுமையும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.