Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்‌ஷ ஆட்சி விரைவில் கவிழும் அறிகுறி! அரசில் உள்ள அமைச்சர்கள் கருத்து!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

makintha12.jpg

தற்போதைய மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் மிக விரைவில் கவிழும் அறிகுறி தென்படுவதாக சிறீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் எதிர்ப்புக்களினால் தத்தமது தேர்தல் தொகுதிகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் அந்த அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜபக்‌ஷ குடும்ப சகிதம் மேற்கொண்டுவரும் பாரியளவிலான ஊழல், மோசடிகளைக் குறைந்தபட்சமாக குறைத்துக் கொண்டாலும், எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.eeladhesa...ndex.php?option

பத்து வருசத்துக்கு அவனை அசைக்கேல்லாது என்று சொல்லுகினம்... சனி என்ன செய்யுது என்று பார்ப்பம்...

இப்படிச் சர்வாதிகாரிகள் தமது ஆட்சி வலிமைக்கு தெரிவு செய்யப்பட்ட மந்திரிகளில் தங்குவதில்லை. இனியெல்லாம் வேண்டும் போது அவர் புதியவர்களை நியமித்துக்கொள்வார். மேலை நாடுகள் மாலைதீவு மாதிரி ஒன்றை எதிர் பார்க்காலாம். ஆனால் இலங்கை லிபியாவின் பாதை அல்லது சூடானின் பாதயில்த்தான் செல்லும்.

இலங்கையில் பலமான எதிர்க்கட்சிகளை இல்லாமல் செய்துள்ளார்கள் மகிந்தா கூட்டம். ஓரளவு வல்லமை கொண்ட சரத்தும் உள்ளுக்குள். இராணுவமும் மகிந்தா கட்டுப்பாட்டுக்குள்.

மகிந்தா கூட்டத்தை கவிழ்க்கக்கூடியவர்கள் அவரது குடும்பத்திற்குள் உள்ளுக்குள் இருந்தே வரவேண்டும்.

இல்லை ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் தெருவில் இறங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்ஷவின் அரசியல் சதுரங்கத்தில் கட்டைகள் வலிமையான இடத்தைப் பிடித்துள்ளது போல் தெரிந்தாலும், பின்னர் தக்க வைத்துக் கொள்ள முடியாதபடி டபக்கென்று 'செக்" சொல்லும் நிலை தோன்றும். அதுவம் வெகு தூரத்தில் இல்லை. வெகு விரையாக வருபவர்கள் வெகுவிரைவாக போய்விடுவார்கள் என்பது கடந்த கால ஆனுபவங்கள். மழைக்கு முளைத்த காளான் என்பார்கள்

சிங்களப் பயங்கரவாதிகள் தமக்குள்ள மோதும் நிலை ஆரம்பிக்கும் போது, எம்மினத்தை நாமே பாதுகாக்குமளவுக்கு எமது ஆளணி, ஆயுத பலத்தை மீளக்கட்டி எழுப்பியிருக்க வேண்டும். இல்லையெனின் அதனால் எமக்கு தேவையான பலன் கிடைக்காமல் போய்விடும்.

எமது சனத்தொகையும் பெருக வேண்டும். குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களும், பொருளாதார பலம் உள்ளவர்களும் இதில் கூடிய பங்களிப்புச் செய்யலாம். ஒன்று இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்தாமல் குறைந்தது நாலு பிள்ளைகளைப் பெற்று, அவர்களை எக்காலத்திலும் தளாரத தமிழ் உணர்வுள்ளவர்களாக வளர்ப்பதன் மூலம் எமது இனத்தை மீளக்கட்டி எழுப்பவேண்டிய தேவை மிக அவசியமாவுள்ளது.

மேலும், குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களும், பொருளாதார பலம் உள்ளவர்களும் மேலும் ஒரு பிள்ளையைப் பெற்று அவனை / அவளை பலம், அறிவு, பொதுநலம் பொருந்தியவனாக வளர்த்து, தாயக மீட்புக்காக அர்ப்பணிக்க வேண்டும்.

இது காலத்தின் அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார பலம் உள்ளவர்கள் அனைவருக்கும் வேற நாட்டு சிற்றிசன் உள்ளது. நாட்டில் இஸ்லாமியர் தொகை தமிழர்களுக்கு சரிநிகராகிவிட்டதை பலர் கண்டுகொள்ளவில்லை. ஈழத்தில் தமிழர்கள் தொகை பெருக ஆவன செய்தல் வேண்டும். ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியாவில் அல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா ஜெனோசைட் தலைவரை கவிழ்க்க சொந்த தம்பியே திட்டம் தீட்ட தொடங்கிவிட்டான். 

ஆரிய கூத்தை ரசிக்க தயாராகுங்கள்,  அதே நேரம் ஈழ காரியத்தில் கண்ணாய் இருப்போம்.

புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார பலம் உள்ளவர்கள் அனைவருக்கும் வேற நாட்டு சிற்றிசன் உள்ளது. நாட்டில் இஸ்லாமியர் தொகை தமிழர்களுக்கு சரிநிகராகிவிட்டதை பலர் கண்டுகொள்ளவில்லை. ஈழத்தில் தமிழர்கள் தொகை பெருக ஆவன செய்தல் வேண்டும். ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியாவில் அல்ல!

இசுலாமியரும் தமிழர் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இசுலாமியரும் தமிழர் தானே?

தமிழருக்கு அவர்கள் இஸ்லாமியதமிழர் ஆனால் இலங்கை இஸ்லாமியரை பொருத்தமட்டில் "நான் இஸ்லாமியன்" அவர்கள் தங்களை தமிழர் என்று சொல்வதை விரும்புவதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.