Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் கவிச் சோலைக் கலையரங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
untitled9xk.jpg

நிகழ்வு குறித்த தகவலை அறிய தந்தமைக்கு நன்றிகள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுவை அண்ணாவும் கலந்து கொள்கின்றாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை.

இலண்டனிலுள்ள பல கவிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொள்கிறார்கள் என்று அறிகிறேன்.

வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தணலை மூட்டிய தமிழ்க் கவிவாணன்

புதுவையென்னும் புகழுக்குரியவன்

புனிதவேள்விக் கவிகளியற்றுவோன்

எதுகை மோனை இலக்கணச் சாத்திரம்

எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும்

வதுவை செய்து கவிமகள் தன்னையே

வாழ்வு முற்றும் அவட்கென வாழுவோன்

மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன்

மாந்தி வீழந்து மயங்கினர் ஆயிரம்

அகவை நாற்பது ஆனது அவன் கவிக்(கு)

ஆயினும் பதினாறின் இளமையாள்

தகைமையால் தமிழ் ஈழமறவரின்

தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள்

பகைமை தோற்றது பாயும் புலிகளின்

படை நடந்தது பாரதம் சோர்ந்தது

இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது

ஈழதேசம் உலகில் எழுந்தது

நீரிலே நெருப்பேற்றிடும் எங்களின்

நேரிலாத் தலைவன் பிரபாகரன்

போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப்

பொன்னெழுத்திற் புதுவை பொறித்ததால்

தேரிலேறிய தீந்தமிழாழவள்

திலகமாகத் திகழ அவன் கவி

பாரிலே தமிழீழப் பரணியைப்

பாட வேண்டியதில்லை யென்றானது

காற்றையே கயிறாக முறுக்கியும்

கனலை நெஞ்சில் அடக்கியும் தங்களின்

ஆற்றல் யாவும் விடுதலைக்கேயெனும்

அணி வகுத்த புலிகளின் நெஞ்சிலே

ஏற்றி ஏற்றி உணர்வினை ஊட்டிய

இரத்தினத்துரை எம் கவி வாணனைப்

போற்ற நாவிற் புகழ்மொழி ஆயிரம்

பொய்யிலாதவர் நெஞ்சிலுதிக்குமாம்

வாழ்வு வேறு கவிக்களம் வேறெனும்

வகை பிரித்த நடிப்புச் சுதேசியாய்

தாழ்பிடித்து உயர்ந்திடத் தன்னிலை

சாகஸங்கள் நடாத்த அறிந்திலான்

கூழ் குடித்து அரைவயிற்றோடுதன்

குடும்ப மோடினும் ஈழவிடுதலை

நாளை நோக்கி நலிந்திடும் பெற்றியான்

நமது தேசக் கவியவன் வாழ்கவே

புதுவைக் கவி எம் ரத்தினமே புகழ்மிக்குயர் நட்சத்திரமே

எதுகைக்கொரு வெண் நித்திலமே எழுசப்த சுரத்தின் நிலமே

வெல்லற்கரிய தமிழினிமை மேவக் கவியால் தளையிடையே

அல்லல் படுமெம் நிலையுணர்த்தும் சொலலேருழவா சீராளா

எழுத்தாம் அம்பை மழையாக்கி எறியும் வில்லை நாவாக்கி

ஒளித் து}றல்களால் மானுடத்தின் உயர்விற் குறிவைத்துரமூட்டி

புழுத்தே வழியும் சமுதாயப் பொல்லா நாற்றச் சிணிபோக்கி

முழுத்தாரணியும் கழுவுண்ணும் முழுக்காட்டுக நின் கவியாலே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரு காலை வணக்கங்கள்.

அருமையான கவிதையை களத்திலே தவழவிட்டதற்கு ஆயிரம் நன்றிகள்.

புதுவையின் புகழ்பாட புனித இவ் அன்னையர் தினத்தினிலே

எதுகை மோனையுடன் இனிய கவி தந்தமைக்கு என்னினிய வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dscf04892mm.jpg

dscf04926am.jpg

dscf05009vk.jpg

dscf05021uk.jpg

dscf05058gh.jpg

dscf05200fq.jpg

dscf05251xa.jpg

dscf04936do.jpg

dscf04954ru.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dscf04892mm.jpg

dscf04926am.jpg

dscf05009vk.jpg

dscf05021uk.jpg

dscf05058gh.jpg

dscf05200fq.jpg

dscf05251xa.jpg

dscf04936do.jpg

dscf04954ru.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.