Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா மீது அமெரிக்கா கடும் அதிருப்தி – இராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரிப்பு

Featured Replies

ிறிலங்கா மீது அமெரிக்கா கடும் அதிருப்தி – இராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரிப்பு [ திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012, 11:15 GMT ] [ தா.அருணாசலம் ] colombo-protest-12.jpgஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளன.

இந்தத் தீர்மானம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு முறைப்படி அறிவித்த பின்னர், சிறிலங்காவின் பல அணுகுமுறைகள் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அனுப்பிய இரகசியக் கடிதம் கொழும்பு ஊடகங்களில் வெளியானது குறித்து அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது குறித்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கடந்த ஜனவரி 25ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இதன் முக்கியத்துவம் மற்றும் இரகசியத்தன்மை கருதியே கொழும்பிலுள்ள அமெரிக்கப் பிரதித் தூதுவர் மூலம் இந்தக் கடிதம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

மிகவும் நம்பிக்கைக்கரிய - இரகசியமான அந்தக் கடிதம் கொழும்பு ஊடகங்களில் வெளியானது அமெரிக்காவை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சே இந்தக் கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் அதனை வெளியிடவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க மார்ச் மாதத் தொடக்கத்தில் வொசிங்டன் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் ஹிலாரி கிளின்ரன்.

இந்தக் கடிதம் மற்றும் அழைப்புக்கு இதுவரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பதில் எதையும் அனுப்பவில்லை.

அத்துடன் அவர் அமெரிக்கா செல்வது குறித்த எந்த முடிவையும் இன்னமும் எடுக்கவில்லை.

ஹிலாரியின் அழைப்பை புறக்கணிக்கும் வகையிலேயே சிறிலங்காவின் நகர்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து ஜெனிவா தீர்மானத்தை முன்னிறுத்தி அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை சிறிலங்கா அரசாங்கமே முன்னின்று ஏற்பாடு செய்துள்ளதும் அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.

இதனை, மக்களை வீதிக்கு இழுத்து வந்து தம்மீது அழுத்தம் கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் எத்தனிப்பதாகவே அமெரிக்கா கருதுகிறது.

இதுகுறித்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக, கொழும்புக்கு வொசிங்டன் எச்சரிக்கை ஒன்றையும் கொடுத்துள்ளது.

இத்தகைய போராட்டங்களின் போது, அமெரிக்கக் குடிமக்களோ அல்லது நிறுவனங்களோ அல்லது ஏனைய முகவர் அமைப்புகளுக்கோ தீங்கு விளைவிக்கப்பட்டால் அதற்கு சிறிலங்கா அரசே பதிலளிக்க வேண்டியிருக்கும் என்றும் வொசிங்டனில் இருந்து கொழும்புக்கு தகவல் பரிமாறப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் சிறிலங்காவில் உள்ள தமது குடிமக்களை அவதானமாக இருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20120227105673

இந்த விரிசல் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்ளுகிறேன். அதற்கு மகிந்தா கூட்டம் மேலும் சீன, உருசிய, இரானிய, பாகிஸ்தான் உறவுகளை பலப்படுத்தல் வேண்டும். அதற்கு துணைக்குழுக்களும் உதவவேண்டும்.

இலங்கையின் ஊத்தை குணங்களை அமெரிக்காவுக்கு மூடி மறைத்தவர் பிளேக். அவர் போன காலத்திலிருந்து அமெரிக்கா இலங்கையை பற்றி நன்றாக படித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு திறந்து வைக்கபட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஊத்தை குணங்களை அமெரிக்காவுக்கு மூடி மறைத்தவர் பிளேக். அவர் போன காலத்திலிருந்து அமெரிக்கா இலங்கையை பற்றி நன்றாக படித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு திறந்து வைக்கபட்டுள்ளது.

பிளேக் எங்கே போட்டார், மல்லை?

இன்னும் இருக்கின்றார் என்றே நினைக்கின்றேன்! ஆசியப் பிராந்தியப் பொறுப்பாளராக!

பிளேக் எங்கே போட்டார், மல்லை?

இன்னும் இருக்கின்றார் என்றே நினைக்கின்றேன்! ஆசியப் பிராந்தியப் பொறுப்பாளராக!

இப்போது அவர் பற்றீசியா புட்னிக்கின் தரவுகளுடன்தான் தனது வேலகளை செய்யவேண்டும். தான் தூதுவராக இருந்த போது றிச்சாட் அமிர்தாஜ்க்கு வேண்டிய தொல்லைகள் கொடுத்தவர். புலிகளை றிச்சட் அமிர்தாஜ் நியூ யோர்க் கொண்டு செல்ல முடியாதபடி பார்த்துக்கொணடவர். இப்போ அவருக்கு அவரின் தேவைகளுக்கு எற்றபடி இலங்கையை பாதுகாத்து யாரும் தரவுகள் அனுப்பிவைப்பதில்லை போலுள்ளது. அமெரிக்கா கரை மாறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பிளேக் சிங்களவனோடை சேர்ந்து செங்கல் அடுக்கேக்குள்ளையே டவுட் ஆனன்யா..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.