Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

22 பிரதி பொலிஸ் மா அதிபர்களில் 21 சிங்களவர் 1 முஸ்லிம் இதுவா நல்லிணக்கம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.adaderana.lk/tamil/news.php?nid=23367

22 பிரதி பொலிஸ் மா அதிபர்களில் 21 சிங்களவர் 1 முஸ்லிம் இதுவா நல்லிணக்கம்?

சமீபத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர்களில் தமிழ் அதிகாரிகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 21 சிங்களவர்களும், ஒரு முஸ்லிமும் உள்ளடங்குகிறார்கள். இதில் ஒரு தமிழரும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

உண்மையில் முஸ்லிம்களுக்கும் உரிய ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவே நான் எண்ணுகிறேன். இனரீதியான ஒதுக்கீடு என்பதைவிட, நேர்முகத்தில் தகுதியை பெற்ற தமிழ் அதிகாரிகளும் பின்தள்ளப்பட்டு, பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்கள் தமிழர்களுக்கு உரிய இடங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையிலும், பெரும்பாலும் சிங்களமயமாக இருக்கின்ற பொலிஸ் துறையில் தமிழர்களுக்கு உரிய இடத்தை பெற்றுதரப்போவதாக அடிக்கடி தமிழ் ஊடகங்களில் சொல்லிவருபவர் என்ற முறையிலும் இதில் உடனடியாக நீங்கள் தலையிடவேண்டும்.

அரசு உயர் மட்டத்தில் எடுத்து கூறி ஒரு விசேட நடவடிக்கையின் மூலம் தமிழ் அதிகாரிகளுக்கு உரிய இடங்களை பெற்றுகொடுக்க வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,

உண்மையில் இன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தமிழ் பேசும் அதிகாரிகளுக்கு உரிய இடம் வழங்கப்படவேண்டும். இதன் மூலம் பெரும்பாலும் சிங்கள மயமான சிங்கள பொலிஸ் என்று குறிப்பிடப்படும் பொலிஸ் துறை, உண்மையான இலங்கை பொலிசாக மாற்றப்படமுடியும்.

இந்த விடயத்தில் உரிய தகுதி இருந்தும் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்பது அநீதிகரமானது. எனவே இருப்பவர்களுக்கே உரிய இடம் வழங்கப்படாதபோது, புதிதாக தமிழர்களை நியமிப்பது என்ற கருத்து நகைப்பிற்கு உள்ளாகின்றது. தமிழர்களுக்கு உரிய நியமனங்களை வழங்க முடியாவிட்டால் சொல்லிவிடவேண்டும், அதற்காக அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என நடைமுறையாகாத வாக்குறுதிகளை அரசாங்கம் வாரி வழங்ககூடாது.

எனது கருத்துகளையும், கடும் அதிருப்தியையும் அமைச்சர் வாசுதேவவை இன்று காலை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளேன். எனது கருத்துகளை ஏற்றுக்கொண்ட அவர் உடன் இதில் தலையிடுவதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.

தமிழர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டு, இலங்கை பொலிஸ் துறையில் தமிழர்களின் உரிய பங்கு உறுதி செய்யப்பட்டு, உண்மையான இலங்கை பொலிஸ் உருவாக்கப்படும் என அடிக்கடி தமிழ் ஊடகங்களில் அமைச்சர் சார்பாக வரும் செய்திகளை வாசிக்கும் அப்பாவி தமிழர்களில் நானும் ஒருவன்.

எனவே தமிழ் ஊடகங்கள் இதுபற்றி அமைச்சரிடமும் கருத்து கேட்டு தமிழ் பேசும் மக்களுக்கு உண்மை நிலவரங்களை உண்டா, இல்லையா எனக்கேட்டு அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுகொள்கிறேன்.

பிணக்கத்தை சிங்களவன் தொடர்ந்து ஏற்படுத்தியவண்ணமே உள்ளான்.

இதற்குள் இணக்க அரசியல் மட்டுமே சாத்தியம் என்று கூறுகின்ற கள உறவுகள் இது பற்றி என்ன எண்ணுகிறார்கள்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் அண்ணை,கருணா,பிள்ளையான் இன்னும் பலர் இந்த பதவிகளில் உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.