Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு காண்பதற்கு த.தே.கூட்டமைப்பு தூண்டுமாறு புலம்பெயர்தோர் அமைப்புகளிடம் அரசாங்கம் கோரிக்கை

Featured Replies

அரசியல் தீர்வு காண்பதற்கு த.தே.கூட்டமைப்பு தூண்டுமாறு புலம்பெயர்தோர் அமைப்புகளிடம் அரசாங்கம் கோரிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நிகழும் பிளவுகளை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு அக்கட்சியை செயற்பட வலியுறுத்துமாறு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவுக்குச் சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர், புலம்பெயர்ந்த தமிழர்கள், ஜெனீவாவிலுள்ள தூதரங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றபோது இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசியல் தீர்வு செயன்முறை தொடர்பரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளமை தென்படுவதாக வெளிவிவகார அமைச்சை கண்காணிப்பதற்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்தார்.

'அரசியல் தீர்வு காண்பதற்கான த.தே.கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் பங்குற்றும் அரசாங்கத் தூதுக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவன் என்ற வகையில் அக்கட்சியில் பிளவுகள் உள்ளதை நான் அறிவேன். அரசியல் தீர்வு காண்பதற்காக செயற்படுவதில் ஒரு தரப்பு உண்மையான அக்கறை கொள்ளவில்லை. அத்தகைய தீர்வு தமது தேர்தல் நலன்களை பாதிக்கும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இத்தகைய பேதங்களை ஒதுக்கிவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்துமாறு நான் உங்களிடம் கோருகிறேன்' என சஜின் வாஸ் குணவர்தன கூறினார்.

உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதியொருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் துண்டித்துக்கொண்டது ஏன் என உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதியான சுரேன் சுரேந்திரன் கேள்வி எழுப்பினார்.

அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களை நியமித்தவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார். இவ்விடயம் தொடர்பாக, இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் தான் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தாம் வரவேற்பதாக உலக தமிழர் பேரவை தெரிவித்தது.

'நாம் அவ்வறிக்கையை வரவேற்கிறோம். அனைத்துவிடயத்திலும் உங்களை விமர்சிப்பதற்காக நாம் வரவில்லை. எனினும் நீங்கள் ஏன் அந்த இடைக்கால அறிக்கையின் சிபாரிகளை அமுல்படுத்தவில்லை?' என சுரேன் சுரேந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பிரசன்னமாகியிருப்பது குறித்து புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளை சேர்ந்தோர் கவலை தெரிவித்தனர். அவர் துணை இராணுவக் குழுக்களை இயக்குவதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் புதல்வரும் கனேடிய தமிழ் காங்கிரஸை சேர்ந்தவருமான ஜெரி ஆனந்தசங்கரியும் இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களில் ஒருவராவார்.

எனினும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றும் நபர்கள் மீது அவதூறுகளை சுமத்தவேண்டாம் என இக்கலந்துரையாடலை நெறிப்படுத்திய அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரிக்கை விடுத்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36932-2012-03-02-19-53-31.html

இந்த அறிக்கையைப்,பார்க்கும் போது சிங்களப் அரச பயங்கரவாதிகளுடன் கடைந்தெடுத்த மடையர்கள் மற்றும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைகூலிகளே கலந்து கொண்டுள்ளனர் போலத் தெரிகிறது.

  • தொடங்கியவர்

'அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்படும்'

அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தனது அறிக்கையை 6 மாதங்களில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று ஜெனீவாவில் தெரிவித்தார்.

ஜெனீவாவுக்குச் சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர், புலம்பெயர்ந்த தமிழர்கள், ஜெனீவாவிலுள்ள தூதரகங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றபோது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் துண்டித்துக்கொண்டது ஏன்? என உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதியான சுரேன் சுரேந்திரன் கேள்வி எழுப்பியபோது , அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களை நியமித்தவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் தான் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

'இத்தெரிவுக்குழுவின் காலம் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடினோம். இது ஒரு கால வரையறையான முயற்சி. நாம் ஆறுமாதங்களில் அறிக்கை சமர்ப்பிப்போம்'; என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36933--6-.html

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தையில் எந்தப்பயனும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை சிங்களஊதுகுழல்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது!

ஏமாற்று அரசியலின் மன்னர்கள் சிங்களவர்கள் என்பது மேலே கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பேச்சுவார்த்தை குழுவில் ஈடுபடும் இருவர் வெவ்வேறு பதில்கள் அளித்துள்ளனர்:

- கூட்டமைப்பு தான் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியதாக ஒருவர் சோடிக்கின்றார்

- ஆறுமாதத்தில் இன்னுமொரு அரிக்கு சமர்ப்பிக்கப்படும் என மற்றையவர் காதில் பூ வைக்கிறார்

சர்வதேசம் எமக்கு சார்பாக ஒரு முடிவை எடுக்கும் வரை இந்த மாயஜால வித்தைக்காரர்களுடன் பேசியே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையைப்,பார்க்கும் போது சிங்களப் அரச பயங்கரவாதிகளுடன் கடைந்தெடுத்த மடையர்கள் மற்றும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைகூலிகளே கலந்து கொண்டுள்ளனர் போலத் தெரிகிறது.

தெரிகிறதா... உண்மை அதுதான்.

ஸ்ரீலங்காவை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள... பினாத்தல் சம்பந்த,சுமந்திர கூட்டமைப்பினரே... ஸ்ரீலங்கா அரசிடம் சொல்லி அறிக்கையை வெளியிடச் சொல்லியிருக்கவும் சாத்தியம் உண்டு.

புலத்துத்மிழருக்கு கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபாடு உண்டு. கூட்டமைப்பில் போதுமான அறிவாளிகள் இருப்பதால் கூட்டமைப்பே தேவையான முடிவுகளை எடுத்து பேசுவது நல்லது. அரசாங்கம் புலத்து தமிழர்கள் முடிவெடுப்பதை விரும்புகிறதாயின் புலத்து தமிழர்களுடன் தான் பேசவேண்டும். ஆனால் கூட்டமைப்புடன் பேசும்போது புலத்து தமிழர்கள் முடிவை எடுத்து அதை கூட்டமைப்பைக்கொண்டு செய்விக்க வேண்டுமாயின் அது எற்றுக்கொள்ள முடியாதது.

கூட்டமைப்புக்கு அரசியல் விளங்கவில்லை என்று நினைத்தால் மட்டுமே, தமிழருக்கு தீர்வைக்கொடுக்க, அரசு புலத்து தமிழர்களை அழைத்துப் பேச முயலவேண்டும். இந்த காரணமாக அரசாங்கத்திற்கு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்த விருப்பமில்லையாயின் புலத்து தமிழர்கள் அரசாங்கத்திற்காக முன்வந்து அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள். இது பேரம் பேசப்படும் பேச்சுவார்த்தையாக மட்டும்தான் இருக்க முடியுமே தவிர நடைமுறைபடுத்தும் பொறுப்புள்ள நாடாளுமன்றக்குழுவில் இணைவதை புலத்துத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொள்வதை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும். நாடாளுமன்றத்திற்குள் பேரம் பேசவேண்டிய பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்வதை புலத்து தமிழர்கள் விரும்பப் போவதில்லை. இதை அரசாங்கம் விரும்புகிறதாயின் புலத்து தமிழர் அரசுடன் பேசுவார்கள்.

அதுவரைக்கும், ஹலோ, டிசெம்பர் 19 திகதி என்று வைத்த பேச்சுவார்தையை கிருஸ்ணாவைக் கண்டவுடன் பீர்சு ஏன் ரத்து செய்தவர் என்று சொல்வீரா?

  • கருத்துக்கள உறவுகள்

ம்!!!

தமிழனில் மேலும் இரண்டு பிரிவுகள்! :icon_mrgreen:

1. புலத்துத் தமிழன்

2. பூர்வீகத் தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்!!!

தமிழனில் மேலும் இரண்டு பிரிவுகள்! :icon_mrgreen:

1. புலத்துத் தமிழன்

2. பூர்வீகத் தமிழன்

3) ஸ்ருடன்ற் விசா தமிழன். :icon_mrgreen::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.