Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை நொறுக்கி, அள்ள.. அமெரிக்கா தீவிரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

999516118036.jpg

இலங்கையை நொறுக்கி, அள்ள.. அமெரிக்கா தீவிரம் - 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது!

கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தான் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளை அமெரிக்கா களம் இறக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மார்ச் 19 அல்லது 22ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு எதிரான தனது ஆதரவு வேட்டையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதைத் திரட்டும் முயற்சிக்காக 100 பிரதிநிதிகளை அமெரிக்கா இறக்கியுள்ளது. இவர்கள் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர். மேலும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளின் ஆதரவையும் உறுதி செய்து வருகின்றனர்.

இந்த பிரமாண்ட பிரதிநிதிகள் குழு ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறதாம். இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிராக அரசுத் தரப்பே போராட்டங்களைத் தூண்டி வருவதாலும், அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் பேசி வருவதாலும், அமெரிக்கா கடும் கோபமடைந்திருப்பதாகவும், எனவே இலங்கையை மனித உரிமைகள் கவுன்சில் முன்பு தோலுரித்துக் காட்ட அது தீவிரமாகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் முன்பு அமெரிக்காவின் தலைமையில் அதன் ஆதரவு நாடுகள், இலங்கையை மண்டியிட வைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ் உலகம் காத்திருக்கிறது.

நன்றி தற்ஸ்தமிழ்.

இறுதிநேரக் குத்துக்கரணங்கள் வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கிளிகிளுப்புத் தலைப்புக்களைப் படித்து, பல தடவை இறுதியில் நாங்கள் தான் நொறுங்கிப் போய் உள்ளோம்!

இப்படியான கிளிகிளுப்புத் தலைப்புக்களைப் படித்து, பல தடவை இறுதியில் நாங்கள் தான் நொறுங்கிப் போய் உள்ளோம்!

அமெரிக்கா எதில் இறங்கினாலும் அதனை முழு வீச்சில் செயற்படுத்த முனைவார்கள்.

அதற்காக இப்படி கிளு கிளுப்பாக எழுதி உசுப்பேத்தாமல் நமது ஊடகங்கள் அடக்கி வாசிப்பதே நல்லது. உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்குவதில் நம்மவர்கள் மகா கில்லாடிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா எதில் இறங்கினாலும் அதனை முழு வீச்சில் செயற்படுத்த முனைவார்கள்.

அதற்காக இப்படி கிளு கிளுப்பாக எழுதி உசுப்பேத்தாமல் நமது ஊடகங்கள் அடக்கி வாசிப்பதே நல்லது. உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்குவதில் நம்மவர்கள் மகா கில்லாடிகள்.

என்ன செய்வது? எமது ஊடகர்களுக்கு பொறுப்புணர்வை விட சுய அடயாளத்திற்கு கொம்பு சீவுவதையே மேன்மையானது எனக் கொள்கின்றார்கள்!!

தான் சொன்னதே நடக்கின்றது என்று கொள்ளும் உவகைக்குள் நடக்கின்ற நிகழ்ச்சியின் அவலம் அது பொருட்டு கொள்ள வேண்டிய கவலை காணாமல் போய்விடுகின்றது!

தகவலை பரபரப்பாக்க வேண்டும் என்பதற்காக வார்த்தைகளின் தன்மையை கவனிக்காது விடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு உதவி செய்ய வந்தவர்கள் எல்லாம் செத்தது தான் வரலாறாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான கிளிகிளுப்புத் தலைப்புக்களைப் படித்து, பல தடவை இறுதியில் நாங்கள் தான் நொறுங்கிப் போய் உள்ளோம்!

சிறி இரானிய கொங்கிரஸ் எழுபது வருடமா ஆசை காட்டும்போது வாயை பிளந்தோமே?

இரண்டு மில்லியன் ஈழ தமிழருக்கு வாழ்வு கொடுத்த மேற்கை நம்புவது நல்லது. 

தமிழனுக்கு உதவி செய்ய வந்தவர்கள் எல்லாம் செத்தது தான் வரலாறாக இருக்கின்றது.

அப்பிடியில்லை தமிழனே காட்டிக் குடுத்து செத்தான் என்பதுதான் அதிக வரலாறு.

அமெரிக்கா இறுதிவரை தீர்மானத்தில் உறுதியாக இருப்பின் இங்கு வெற்றி பெறலாம். ஏனெனில் இம்முறை வீட்டோ உரிமையை எவரும் பிரயோகிக்க முடியாது. அத்துடன் அமெரிக்காவுக்கு எதிராக களமிறங்க ஏனைய நாடுகள் பயப்படும்.

ஆனாலும் எதுவும் நடக்கும் வரை அடக்கி வாசிக்கப்பட வேண்டும். ஒன்றை பத்தாக்கி சொல்லும் எம் ஊடகங்களால் தான் ஒவ்வொரு தடவையும் இறுதியில் அதிகளவு ஏமாற்றம் மிஞ்சுகிறது.

தமிழனுக்கு உதவி செய்ய வந்தவர்கள் எல்லாம் செத்தது தான் வரலாறாக இருக்கின்றது.

மேரி கொல்வின் உட்பட....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.