Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தில் குதித்தார் ஹிலாரி கிளிண்டன்! அதிர்ச்சியில் சிறிலங்கா

Featured Replies

http://naathamnews.com/?p=4532

HRC-hillary1.jpg

ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொள்வதாக, ஆங்கில ஊடகமொன்றின் செய்தியினை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்தியின் பின்னணி குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கிடைத்த தகவல்களை தொகுப்பாக தருகின்றோம் :

naatham-logo.jpgசிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக, 22 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் நிலை தற்போது உள்ளது.

மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 46 நாடுகளே வாக்களிக்கும் தகமையைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது 22 நாடுகள் குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்படும் சூழலில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவ்விவகாரத்தை நேரடியாக கையாள்வதற்கு, தற்போது களத்தில் குதித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன், தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு சினத்தை ஏற்படுத்தியிருந்ததோடு, அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு முஸ்லிம் மக்களை, சிறிலங்கா பாவித்தமை அமெரிக்காவுக்கு கோபத்தை அதிகரித்ததாக அறியமுடிகின்றது.

இந்நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கீழ் நிலை இராஜாங்க மட்டத்தில் இருந்த சிறிலங்கா தொடர்பிலான பிரேரணை விவகாரத்தை, தற்போது கையில் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக சிறிலங்கா மேற்கொண்ட சகல விடயங்களை உன்னிப்பாக கவனித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சிறிலங்காவுக்கு இவ்விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையில் கடுமை அதிர்சியைக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய சூழிலிலேயே, சிறிலங்காவினுடைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே வொஷிங்டன் வருமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு, ஹிலாரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இருப்பினும் குறித்த இந்தக் கடிதத்துக்கு ஜீ.எல்.பீரிஸ் பதிலளிக்கவில்லை நிலையில், தற்போது சிறிலங்கா அரச தரப்பால் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், கைகூடுவதற்குரிய வாய்ப்புக்கள் குறைவென்றே தெரியவருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிலாரி கிளின்ரனின் மனத்தில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எட்டப்படவேண்டும் என்ற எண்ணம் இன்று நேற்றல்ல ஆரம்பகாலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. புலிகளைப் பயங்கரவாதம் என்ற தலைப்பினுள் அமெரிக்கா அடக்கியிருந்த போதிலும் 'ஆயுதம் ஏந்திய எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல" என்று ஒரு கருத்தை முன்வைத்தவர். எனவே ஹிலாரியின் தனித்துவமான போக்கு தமிழர்களுக்கு எதிரானதாக இருக்காது. உனவே ஹலாரி இதில் இறங்கியிருப்பது தமிழர்களுக்குச் சாதகமான தீர்வுகளை எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிலாரி கிளின்ரனின் மனத்தில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எட்டப்படவேண்டும் என்ற எண்ணம் இன்று நேற்றல்ல ஆரம்பகாலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. புலிகளைப் பயங்கரவாதம் என்ற தலைப்பினுள் அமெரிக்கா அடக்கியிருந்த போதிலும் 'ஆயுதம் ஏந்திய எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல" என்று ஒரு கருத்தை முன்வைத்தவர். எனவே ஹிலாரியின் தனித்துவமான போக்கு தமிழர்களுக்கு எதிரானதாக இருக்காது. உனவே ஹலாரி இதில் இறங்கியிருப்பது தமிழர்களுக்குச் சாதகமான தீர்வுகளை எதிர்பார்க்கலாம்.

மற்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, பேர்ல், டாக் போன்ற அமைப்புகளும் அம்மையாரின் மனதை கரைத்து விட்டார்கள். 

சிறப்பாக செயல்படும் நமது உலக தமிழ் அமைப்புகளுக்கு நன்றி. 

கிளறி ஊடாக அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையில் ஆசியா முக்கிய இடம் பிடிக்க உள்ளது என்பது தெளிவாகின்றது.

தமிழர்கள், அவர்கள் தேசம் அமெரிக்காவுக்கு நம்பிக்கையாக உள்ளது. கணவர், முன்னைய சனாதிபதி, பில் கிளிண்டன் கூட நேரடியாக சுனாமி நேரம் தமிழர் தரப்பின் ஆளுமையை, நேர்மையை கண்ணால் கண்டவர்.

கிளறி ஊடாக அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையில் ஆசியா முக்கிய இடம் பிடிக்க உள்ளது என்பது தெளிவாகின்றது.

தமிழர்கள், அவர்கள் தேசம் அமெரிக்காவுக்கு நம்பிக்கையாக உள்ளது. கணவர், முன்னைய சனாதிபதி, பில் கிளிண்டன் கூட நேரடியாக சுனாமி நேரம் தமிழர் தரப்பின் ஆளுமையை, நேர்மையை கண்ணால் கண்டவர்.

ஆமாம் நிச்சயமாக அகூதா அண்ணா. ஆரோக்கியமான கருத்துகளை பகிர்ந்து எமது விடுதலை பாதையில் நாம் என்றும் சரியான வழியில் பயணிக்க உறுதுணை புரியும் அகூதா அண்ணாவுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

இது அமெரிக்காவின் ஒரு நீண்ட கால திட்டம். மிக நிதானமாக உறுதியாக காயை நகர்த்துகிறார்கள். நல்லிணக்க குழுவின் பரிந்துரையை கூட சிங்களவன் நிறைவேற்றமாட்டான் என்று அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். நாம் செய்ய வேண்டியது உலக தமிழர் எல்லோரும் ஒற்றுமையாக திரண்டு இந்தியாவை ஓரம் கட்டி முற்று முழுதாக அமெரிக்க சார்பான நகர்வுகளை மேற்கொண்டு அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டு எமது இலட்சியங்களை அடைவதுதான் வரலாறு எமக்கு இட்ட ஒரேயொரு சாத்தியமான வழி. அமெரிக்கா தமது பிராந்திய நலன் சார்ந்து இதனை செய்தாலும் அதிலிருந்து நாம் எமது இலக்கை அடைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, பேர்ல், டாக் போன்ற அமைப்புகளும் அம்மையாரின் மனதை கரைத்து விட்டார்கள்.

சிறப்பாக செயல்படும் நமது உலக தமிழ் அமைப்புகளுக்கு நன்றி.

கடந்த அமெரிக்கா தேர்தலில் ஒபாமா இருக்கும் கட்சியில் வேட்பாளாருக்கான தேர்தலில் ஒபாமாவுடன் கிலாரி கிளிண்டனும் போட்டியிட்டார். அப்பொழுது தமிழர்கள் கிலாரி கிளிணடனுக்கான தமிழர் அமைப்பினை ஆரம்பித்து கிலாரிக்கு ஆதரவு தந்தார்கள். அத்தேர்தலில் கிலாரி தோற்றபின்பு தமிழர்கள் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினை ஆரம்பித்தார்கள்.

அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த பத்திரிகைகளில் ஒன்றான 'வால் ஸ்ட்ரீட் ஜெர்னானில்' ஜெனீவா பற்றி எழுதப்பட்டுள்ளது

U.S. Push for an Independent Probe on War Crimes Seen Getting U.N. Support

U.S. officials said they gained a key ally in their effort to push Sri Lanka to allow an independent investigation of government atrocities carried out at the climax of the country's 26-year civil war against the Tamil Tigers in 2009.

Eileen Donahoe, U.S. ambassador to the United Nations Human Rights Council in Geneva, said the council this week is set to accept a U.S. resolution to that affect during a meeting in Geneva that ends Friday, despite Sri Lanka's attempt to block it.

Sri Lanka is looking increasingly isolated in that effort. On Monday, Prime Minister Manmohan Singh of India, a country with warm ties to the Sri Lankan government, said India was "inclined" to back the resolution.

"We don't think of this as a symbolic vote," Ms. Donahoe said in an interview. "We see this as a meaningful effort to encourage the Sri Lankan government to take credible steps…We fear the government of Sri Lanka might fail to take those credible steps."

The motion, if successful, won't legally bind Sri Lankan President Mahinda Rajapaksa's government to any policy.

But Washington views it as a way of exhorting Sri Lanka not to cover up abuses by government soldiers during the final months of the war, a period during which a U.N. panel has said up to 40,000 civilians died.

Robert Blake, U.S. assistant secretary of state for South Asia and Central Asia, said some of the commission's recommendations were sound—such as pushing the government to demilitarize Tamil areas and publish names of detainees—but even on these Sri Lanka has yet to take action.

"We think they've had quite a lot of time to develop an action plan and we're disappointed they haven't done so," Mr. Blake said in an interview.

The U.S. resolution will ask for Sri Lanka to set a timeframe for implementing the recommendations of its commission, as well as calling for Colombo to allow a truly independent investigation of war crimes.

A panel appointed by U.N. Secretary General Ban Ki-moon, in a report a year ago, also criticized Sri Lanka for failing to properly investigate war crimes and recommended an independent inquiry.

Sri Lanka deserves some credit for building schools and roads in Tamil areas, Mr. Blake said. "But much remains to be done to ensure that Tamils, especially in the north, can live in peace."

<a href="
"'>
" style="font-size: 1.4em; line-height: 1.5em; ">

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.