Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்லுங்கள் � கனடிய அரசின் செய்தியைச் சொல்ல கனடியக்குழு சிறீலங்கா பயணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rick-dykstra-G-news-432-150.jpg

ஜெனீவாவில் இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசிற்கு வலியுறுத்த, முக்கிய மூன்று உறுப்பினர்களை கனேடிய காப்பர் அரசு கொழும்பிற்கு அனுப்புகிறது.

வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டின் பணிப்பின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர், இவர் முன்னாள் கனடாவின் ஆப்கானிஸ்தானிற்கான தூதுவர் ஆவர். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டகஸ்ரா, செனட்டர் வேன் வைட் ஆகியோரும் வருகை தரவுள்ளனர்.

இவர்கள் இன்று கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இக் கனேடியக் குழுவினர் பலதரப்பட்டோரையும் சந்திக்கவுள்ளனர். இவர்களது பயண ஒழுங்கு விபரத்தை கனேடிய வெளிவிவகாரத்துறை வெளியிடவில்லை.எனினும், இவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை விடயத்தில் முக்கிய கண்டன நாடாக கனடா மாறியுள்ள நிலையில், இவ் விஐயம் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஜெனீவாவில் அமெரிக்காவுடன் இணைந்து கனடாவும் சமர்பித்துள்ள நிலையில், அதற்கான ஆதரவு திரட்டும் பணியையும் கனடா முன்னின்று செய்து வருகிறது. இது இலங்கை வட்டாரத்தில் மேலும் விசனத்தை அதிகரித்துள்ள நிலையிலேயே கனேடியக் குழுவினரின் இவ்விஐயம் அமைகிறது.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட், கனடிய தமிழர்களை பலமுறை சந்தித்துள்ள நிலையில், நிலைமையை கண்டறியும் நோக்கிலும் இப்பயணம் அமைவதாக கனேடிய தேசிய ஊடகம் குளோப் அன்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ள நிலையில், இப்பயணம் அமைகிறது.

கடந்த காலங்களில் இலங்கை செல்ல முயன்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிக் பிறவுன், போல் கலன்ரா ஆகியோருக்கு இலங்கை விசா அனுமதியை மறுத்ததும், லிபரல் கட்சித்தலைவர் போப் ரெ கொழும்பு விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

harper-baird3-G-news-337-003.jpg

Chris-Alexander-G-news-420_004.jpg

rick-dykstra-G-news-432-002.jpg

rick-dykstra-G-news-432-002.jpg

http://www.seithy.co...&language=tamil

அன்புள்ள கனடாவே,

மனைவியை கணவன் அடித்தாலோ இல்லை தர்க்கப்பட்டாலோ அதை இந்த நாட்டின் சட்டம் குற்றமாக பார்த்து அவர்களை பிரிக்கின்றது.

எமது இலங்கையிலோ சர்வதேசம் சேர்த்து வைத்த இரண்டு இனங்கள், 1948 ஆம் ஆண்டிலிருந்து பல கலவரங்கள், பின்னர் துன்பியல் நிறைந்த போர், இறுதியில் ஒரு வரலாறு காணாத படுகொலை.

கோசவா போன்று எங்களையும் பிரித்து விடு. சேர்ந்து வாழக்கேட்டு இனவழிப்பை ஊக்கப்படுத்தாதே.

நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பிரித்து வைப்பதால் அவர்களுக்கு நலன் கிடைக்கின்றது. இதில் உண்மை என்னவென்றால் நீதி மன்றம் சட்டத்தரணி எல்லோரும் அவர்கள் பிரிவதன் மூலம் செலவளிக்கும் பணத்தைப்பெற்றுப் பயனடைகின்றனர். பிரிபவர்களின் முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டு ஒரு சராசரி மனிதர்களாக வாழ்வதால் என்றும் அவர்களைச் சுரண்டலாம்.

அங்கு பிரிவினை வாதம் என்றும் இருக்கும்போது சேர்ந்து வாழுங்கள் என்று சொல்வதால் இவர்களுக்கு நலன் கிடைக்கின்றது. பிரித்துவிட்டால் உங்கள் முன்னேற்றம் உயர்ந்து இவர்கள் தாழ்ந்துவிடுவார்கள். அப்பிராந்திய நலன்களை இவர்கள் அனுபவிக்க இயலாது.

பஞ்ச தந்திரக்கதைகளில் ஒன்றான 'குரங்கு அப்பம் பிரித்த கதை" தான். இதற்குத்தான் எமது முதாதையர் பஞ்சதந்திரக்கதைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் பயனில்லாது இருக்கின்றது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது. எல்லோரும் தங்கள் நலம் சார்ந்த விடயத்தை முன்னிறுத்தித்தான் சிந்திக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை தாக்கும் ஓயாத அலைகளில் ....... வரிசையில் இப்போது கனடா அலையின் தாக்கம் இது சுனாமியாகுமா ? என்பது பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி குழுவை கூட்டமைப்பு சந்தித்து நிலைமைகளை விளக்க வேண்டும். இமெல்டா படம் காட்ட ஏற்கனவே தயார் நிலையில் இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை கணவன் அடித்தாலோ இல்லை தர்க்கப்பட்டாலோ அதை இந்த நாட்டின் சட்டம் குற்றமாக பார்த்து அவர்களை பிரிக்கின்றது.]

ம்னைவியால் அடிவாங்கும் கணவர்மாருக்கு சட்டம் ஒன்றுமில்லையா???

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.