Jump to content

விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய..


Recommended Posts

விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து

துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள்

கொழும்பு, மார்ச்.8-

ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

விடுதலைப்புலிகள் போர்

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர்.

இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர்.

இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஜெனீவாவில் பேச்சு

இந்த நிலையில் ஜெனீவாவில் கடந்த வாரம் இலங்கை அரசு பிரதிநிதிகளுக்கும், விடுதலைப்புலி தலைவர்களுக்கும் இடையே, ஜெனீவா சமரச குழுவினர் முன்னிலையில் பேச்சு நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லைஎன்றாலும், முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

துப்பாக்கிகளின் வரைபடங்கள்

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விடுதலைப்புலி இயக்க தலைவர்கள் நேற்று கொழும்பு விமான நிலையத்துக்கு விமானம் மூலம் வந்து

சேர்ந்தனர்.

அப்போது அவர்கள் கொண்டுவந்த பொருட்களை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்கள் கொண்டுவந்த பொருட்களின் இடையே துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய உயர்ரக கேமிராக்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் விளக்குகள், மற்றும் பல பொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றியதாக சுங்க இலாகா டைரக்டர் சரத் ஜெயதிலகே கூறினார்.

அதிவேக படகுகள்

இதைத்தொடர்ந்து விடுதலைப்புலி தலைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அதிவேக படகுகளின்உதிரி பாகங்கள், சிறிய ரக விமானங்களின் பாகங்கள், ராக்கெட் இணைக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை ஏற்கனவே விமான பயணத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது வெளிப்பட்டது.

கடத்திகொண்டு வரப்பட்ட உதிரி பாகங்களை ஒன்றாக சேர்த்து, அதிவேகபோர் படகுகள், சிறிய விமானங்களை விடுதலைப்புலிகள் தயாரித்து இருப்பதும் தெரியவந்தது. விடுதலைப்புலிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தினத்தந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லியா....

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அவர்கள் எப்பவுமே இப்படித்தான் எதையுமே அதிகப்படுத்திதான் செய்தி போடுவினம் :evil:

Link to comment
Share on other sites

இதுல பெரிய நகைச்சுவை என்னென்றால் இவர்கள் விசாரணை நடத்தி புலிகள் சில உண்மைகளை ஒப்புக்கொண்டது தான்.

Link to comment
Share on other sites

தினத்தந்தி குறிப்பிட்ட செய்தியில் சிலதை தவறவிட்டுள்ளது,, சுவிசில் இருந்து திரும்பிய புலிகளின் தலைவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, வரைபடங்களுடன், ஒரு டாங்கி, ஒரு மல்ரிபெரல், சாம்7ரக ஏவுகனைகளை கட்டுநாயக்கா சுங்க அதிகாரிகள் கைப்பற்றினார்கள் என்பதே உண்மை,,, :oops: :lol:

சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்யமுதல் தினந்தந்தி செய்தியாளருக்கு அறிவித்துவிட்டுத்தான் பறிமுதல் செய்ததாக CNN தொலைக்காட்சியில் காண்பிச்சார்கள்,,, :evil: :evil:

அது இருக்கட்டும் நம்ம லுக்கி தினந்தந்தியிலா வேலை செய்யிறார்?? :roll: :?

Link to comment
Share on other sites

இதுல பெரிய நகைச்சுவை என்னென்றால் இவர்கள் விசாரணை நடத்தி புலிகள் சில உண்மைகளை ஒப்புக்கொண்டது தான்.

சுஜீந்தன் அதை விட பெரிய டமாஷு பாருங்க:

மேற்கோள்:

இதைத்தொடர்ந்து விடுதலைப்புலி தலைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அதிவேக படகுகளின்உதிரி பாகங்கள், சிறிய ரக விமானங்களின் பாகங்கள், ராக்கெட் இணைக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை ஏற்கனவே விமான பயணத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது

இவர்கள் சொன்ன இவ்வளவையும் கடத்தி வர ஒரு கொண்டெய்னர் வேண்டாமோ?

அப்போ அவ்ரோ விமானத்திலயெல்லா கிளிநொச்சியில கொண்டு போய் பேச்சுவார்த்தை குழுவை இறக்கி இருக்கணும்- ஹெலி காணுமா?

அதைவிட பெரிய டமாஷு - உலகத்தில எந்த விமானபயணத்தில பயணிக்கிறவர்கள் இதெல்லாம் - கொண்டு விமானத்துக்க ஏற விடுறாங்க -?

இதுவரை விமானங்கள் பத்தியும் - விமானநிலையங்கள் பத்தியும் கேள்விப்படாதவங்களுக்கு வேணும்னா இப்பிடி சொல்லிட்டு போகலாம்!

தினதந்தியாம்-அதிகமாக விற்பனையாகும் நாளிதழாம்- அட சீ-!

செய்தி எழுதுறத விட்டுபுட்டு-பேசாம அர்ஜுன் படத்துக்கு கதை எழுத சொல்லுங்கப்பா- நல்லா சூட் ஆவும்-! 8)

Link to comment
Share on other sites

சுஜீந்தன் அதை விட பெரிய டமாஷு பாருங்க:

மேற்கோள்:

இதைத்தொடர்ந்து விடுதலைப்புலி தலைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அதிவேக படகுகளின்உதிரி பாகங்கள், சிறிய ரக விமானங்களின் பாகங்கள், ராக்கெட் இணைக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை ஏற்கனவே விமான பயணத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது

:lol::lol::lol::lol:

இவர்கள் சொன்ன இவ்வளவையும் கடத்தி வர ஒரு கொண்டெய்னர் வேண்டாமோ?

அப்போ அவ்ரோ விமானத்திலயெல்லா கிளிநொச்சியில கொண்டு போய் பேச்சுவார்த்தை குழுவை இறக்கி இருக்கணும்- ஹெலி காணுமா?

அதைவிட பெரிய டமாஷு - உலகத்தில எந்த விமானபயணத்தில பயணிக்கிறவர்கள் இதெல்லாம் - கொண்டு விமானத்துக்க ஏற விடுறாங்க -?

இதுவரை விமானங்கள் பத்தியும் - விமானநிலையங்கள் பத்தியும் கேள்விப்படாதவங்களுக்கு வேணும்னா இப்பிடி சொல்லிட்டு போகலாம்!

தினதந்தியாம்-அதிகமாக விற்பனையாகும் நாளிதழாம்- அட சீ-!

செய்தி எழுதுறத விட்டுபுட்டு-பேசாம அர்ஜுன் படத்துக்கு கதை எழுத சொல்லுங்கப்பா- நல்லா சூட் ஆவும்-! 8)

Link to comment
Share on other sites

தினத்தந்தி சொல்லி குற்றமில்லை. கொலை பாலியல் வல்லுறவு கள்ளக்காதல் பற்றி எழுதிப்பழகியவர்கள். நேரடியாக அங்கைநடப்பதைப் பாத்த மாதிரி கதை எழுதுவது அவர்கள் வழக்கம். அதே மாதிரி இதையும் எழுதிவிட்டார்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.