Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மற்றுமொரு முள்ளிவாய்க்காலா இடிந்தகரை...?: கொளத்தூர் மணி [Photos]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றுமொரு முள்ளிவாய்க்காலா இடிந்தகரை...?: கொளத்தூர் மணி [Photos]

chennai22032012-6-150x150.jpg

எல்லா மாநிலங்களிலும் விரட்டியடிக்கப்பட்டதால் அணுமின்நிலையத்தை தென்தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்தில் நிறுவ மத்திய அரசு முடிவெடுத்தது. அன்றிலிருந்து இந்த அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் 2011இல் புகுசிமாவில் நடந்த அணுஉலை பேரழிவிற்குப்பின் மேலும் உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

மக்களின் உணர்வைப் புரிந்து செயல்படுவதாக “மக்களின் அச்சத்தைப் போக்காமல் மத்திய அரசு கூடங்குளம் அணுஉலையை திறக்கக்கூடாது” என்று முதல்வர் முன்மொழிந்து தமிழகசட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு நேரெதிராக இன்று மக்களை அச்சுறுத்தி அணுஉலையை திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

கூடங்குளத்தில் 5000த்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இடிந்தகரை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் திறந்தவெளி சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பால், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை இடிந்தகரைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஈழத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் முள்ளிவாய்கால் கடற்கரையோரத்தில் மக்களை முடக்கி சிங்கள அரசு அழித்ததைப் போல், போராடும் மக்களை இடிந்தகரை நோக்கி, பெருந்தாக்குதலுக்கு இந்திய, தமிழக அரசு தயாரவது போல் தெரிகின்றது.

கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படக்கூடாது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கோரிக்கை என்பதையும், இடிந்தகரை மக்கள் தனித்துவிடப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாக நாளை 23 மார்ச் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் திருநெல்வேலி பாளை திடலில் அணிதிரள்வோம் என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். முற்போக்காளர்கள், அறிவுசீவிகள், மனிதநேயமுள்ள அனைவரும் அணிதிரள்வோம். உறுதி குன்றாது போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக இடிந்தகரை நோக்கி பயணிப்போம்

தோழமையுடன்

கொளத்தூர் மணி – பெரியார் திராவிடர் கழகம்

ஒருங்கிணைப்புக் குழு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

இந் நிகழ்வில் பங்கேற்கும் கொள்ளும் தலைவர்கள் மற்றும் அமைப்புகள்

வைகோ மதிமுக, திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சீமான் நாம் தமிழர் கட்சி, வேல் முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தெகலான் பாகவி எஸ்டிபிஐ, பெ. மணியரசன் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி, தியாகு – தமிழர் தேசிய விடுதலை இயக்கம், அதியமான் ஆதித் தமிழர் பேரவை,

தமிழ்ப் புலிகள், அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு, மனித நேய மக்கள் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம், இந்திய தவ்ஹ்த் ஜமாத், வீராங்கணை மக்கள் இயக்கம் இன்னும் பல கட்சிகள் அமைப்புகள், இயக்கங்கள்.

[show as slideshow]

[View with PicLens]

thumbs_chennai22032012-1.jpg

thumbs_chennai22032012-2.jpg

thumbs_chennai22032012-3.jpg

thumbs_chennai22032012-4.jpg

thumbs_chennai22032012-5.jpg

thumbs_chennai22032012-6.jpg

thumbs_chennai22032012-7.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரண்டா கேணையர் எண்டு நினைசிட்டினம் இரானிய நேரு குடும்பம்.  ஆனால் தமிழ் இளைய தலைமுறை அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக அழித்து ஆப்பு வைக்கும் திட்டம் தான் இந்த அணுமின் நிலையம்

  • கருத்துக்கள உறவுகள்

இதனை கட்ட ஆரம்பிக்கும் போதே.... காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை, தமிழக கட்சிகள் மேற் கொள்ளத் தவறியது மகா குற்றம்.

அதில் கிடைக்கும் மின்சாரம் கூடுதலாக மற்ற மாநிலங்களுக்கே செல்கின்றன. இதை நிறுத்துவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.

உந்த போராட்டம் பற்றி ஜரோப்பாவில் இயங்கும் கிறீன் பீஸ் என்ற அமைப்புக்கு தெரிய படுத்த வேண்டும். அவர்கள் இதை சர்வதேச மயப்படுத்துவார்கள். போபால் பாதிக்க பட்டவர்களுக்கே நீதி இல்லை. இனி இது எப்போவோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.