Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தில் முன்பெல்லாம் கையில் பிரம்போடு தான் குழந்தைகள் வாத்தியார் விளையாட்டு விளையாடினார்கள்...

Featured Replies

சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு.

முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன்.

சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழைய நினைவாக இருக்கிறது. தனக்கு மற்றையவர்கள் இழைத்த துன்பங்கள் பற்றிப் பேசத்தொடங்குவதற்குப் பல வருடங்கள் முன்னர் தொட்டு தான் செய்த குழப்படிகளை ஒழிவு மறைவின்றிப் பேசிவருகிறார். நானறிந்தவரை, தன்னைப் பற்றி இத்தனை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடியவர்கள் வேறு எவரையும் எனக்குத் தெரியாது.

சாத்திரியின் எழுத்தில் தன்னை எவ்வளவு தூரம் தான் வெளிப்படையாகப் பேசுகிறாரோ, அதே அளவிற்கு தன்னைக் கடுப்பேற்றிய அல்லது தனது ஆர்வத்தைக் கிளறிய மற்றையவர்கள் பற்pறியும் பல வரும். சாத்திரி மற்றறையவர்கள் பற்றி எழுதும் எழுத்துக்கள் வாசிப்பவர்களிற்குள் ஒரு வித அசௌகரியத்தைப் பொதுவாக உருவாக்கும்;. முன்னொரு தருணத்தில் சாத்திரியின் இந்தப் பாங்குபற்றி நானும் அவருடன் விவாததித்தது ஞாபகத்தில் உண்டு. எனினும் சற்று யோசித்துப் பார்க்கையில், சாத்திரியின் மற்றையவர்கள் மீதான எழுத்துக்கள் சார்ந்து வாசகராக எமக்குள் ஏற்படும் அசௌகரியம் பயத்தில் இருந்தே எழுகின்றது என்றே இப்போது எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

அதாவது, இளம் பெண்பிள்ளைகள் உள்ள ஒரு சாலையோரத்து வீட்டு மதிலில், அம்மதில் வெள்ளையடிக்கப்பட்ட அன்றிரவோ மறுநாளோ சாத்த்திரியும் இருழழகனும் கரியால் எழுதினார்கள் என்று வாசிக்கையில் தோன்றுகின்ற அசௌகரியம் என்பது, எமது சொத்துக்கள் சார்ந்து எமது பாதுகாப்புச் சார்ந்து எமது பிரத்தியேகம் மற்றும் உத்தரவாதங்கள் சார்ந்து எமக்குள் எம்மையும் அறியாது வாசிக்கப்படுவதிலேயே அந்த அசௌகரியத்தின் அடிப்படை இருக்கின்றது என்றே தோன்றுகின்றது. பெண்பிள்ளைகள், தந்தை, சாலையோரத்து வீடு, அதன் மதில், மதிலில் அடிக்கப்பட்ட வெள்ளை என்பன அனைத்துமே எங்களையும் அறியாது எங்களிற்குள் குறியீடுகள் ஆகிப் பயப்படுத்துpகன்றன. சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பொதுவெளியில் எழுதும் அளவில் எங்களால் எங்களைப் பற்றி பேச முடியாது. நாங்கள் எங்களைப் பற்றி மற்றையவர்களுடன் பேசுவதை விடுவோம், நாங்கள் எங்களிற்குள் எங்களோடு கூட சாத்திரியின் வெளிப்படையில் சொற்ப வீதமளவிற்கேனும் வெளிப்படையாக இருக்க முனைவதில்லை. கோட்டை கட்டியே வாழ்ந்து பழகிவிட்டோம். உலகின் அனைத்துச் சட்டங்களும் இத்தகைய பயங்களிற்கான பரிகாரங்களாகவும் அதிகார பேரம்பேசல்களாகவுமே எழுந்தன என்ற நிலையில், வாசகர் எமக்குள் அத்தகைய அசௌகரியங்கள் பயம் சார்ந்து எழுவதில் எந்த விந்தையும் இல்லை. ஆனால், ஒரு ஆயுத போராட்டத்தை ஆதரித்து, அந்தப் போராட்டத்தை எங்கள் பேரில் முன்னெடுக்கும் பொறுப்பை ஒரு சிலரின் தலையில் பொறித்துப் பார்த்திருந்த நாங்கள் மேற்படி முனையில் சற்று ஆழமாகப் பேசவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

பெண்பிள்ளைகள் உள்ள சாலையோரத்து வீட்டின் வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் சாத்திரி கரி பூசும் போது கூசிய எங்கள் முளங்கால்களிற்குப் பதிலாக, றிசியும் அவரது சகாவும் ஆபிரிக்க தாதாக்களோடு போதைப் பொருள் உள்ளடங்கலாகப் பேரம்பேசி வென்று கப்பலை கட்டமைப்புக்களின் வலைகளிற்குள்ளால் நகர்த்தியபோது பெருமையில் எமது மார்புகள் மட்டுமே பொருமின. நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கவேண்டிய பெரியவர்கள் பாலகன் சிறீகௌரிபாலனிற்குள் அவனிற்குப் புரியாத உணர்வுகளை விதைத்துப் பயப்படுத்தியது சார்ந்து சாத்திரி எழுதியபோது, அந்தப் பெரியவர்கள் பற்றி இப்போது எழுதத்தானா வேணும் என்றே மிகப்பாரிய எண்ணிக்கையான கருத்துக்கள் வந்தன. ஆனால், அந்தப் பாலகன் இன்றுவரை அச்சம்பவம் சார்ந்து அழுதுகொண்டிருப்பதை உணர எமக்கு நேரமில்லை. ஒன்றாய் வளர்ந்த நண்பன் வேறொரு இயக்கத்தில் சேர்ந்து துரோகியாக ஊரிற்குள் வந்தபோது, அவனது அக்காவின் கையால் சோறு உருண்டை வாங்கி உண்டு விட்டுச் சென்ற ஒரு இரவில் தவிர்க்கமுடியாத நிலையில் அந்நண்பனைச் சுட்டுக்கொன்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்டமைக்கான மூலகாரணம், இறந்த நண்பனின் அக்கா வசை பாடி அழுத ஒலி இன்னமும் அந்தப் போராளிக்குள் ரணமாய் சீழ் வடிந்து கொண்டிருப்பதே என்பது போதிய அளவிற்குப் வாசகரால் உள்வாங்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது, எங்களிற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை களத்தில் தனியே விட்டது மட்டுமன்றி தப்பியிருப்வர்கள் சுமக்கின்ற உளவியல் சுமைகளையும் அவர்கள் பேசாதிருப்பதே எங்களிற்கு அனுகூலமென்று எம்மால் கூசாமல் கூற முடிகிறது.

கொழும்பில் ராணி சார்ந்து வந்த கதையிலும் காமம் வருகிறது. தாக்குதல் வெற்றி அதனை அர்த்தப்படுத்துகிறது. அது மட்டுமன்றி கதையில் ராணியும் தீயிடப்பட்டு சுத்திகரிக்கப்படுவதால் பொறுத்துக் கொள்ள முடிகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம். பள்ளிக்கூட விடுதியில் மாணவர்களிற்குள் நடக்கும் விடயங்கள் மித்திரனில் வருவதுபோல பாசறைக் கதைகள் பேசமுடியாது என்பது முடிந்த முடிபாகக் கூறப்படுகின்றது. ஆனால் இங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. சிறீ கௌரிபாலன் பச்சிளம் பாலகனாக இருக்கும் போது 'பத்தரும்' 'அன்ரியும்' அவனிற்குள் ஆரம்பித்து வைத்த அழுகுரலிக்குச் செவிகொடுக்க நாம் தயாரில்லை. யாருமே கேட்க மறுத்த, கேட்கப்படாத அழுகை வயதோடு சேர்ந்து ரணமாக வளர்ந்து பாசறையில் சீழ் வடியும் ரணம் மீளக் கீறப்பட்டபோது வலி எப்படி இருந்தது என்று சாத்திரி சொன்னால் அதை இப்பவும் நாங்கள் கேட்கத் தயாராகவில்லை. இது எல்லாம் மறைவாய் பேசி மறைந்து போகவேண்டிய விடயங்கள், சமூகங்களிற்குள் நடவாத கதைகளா, அடக்கி வாசிக்காது இப்படி அடித்துப் பேசும் உரிமை யாரிவரிற்குக் கொடுத்தது என்ற ரீதியிலேயே எமது கோபம் குவியப்படுகிறது. ஆனால், எப்போதும் போல எமது கோபத்தை நாம் புனிதங்களின் பெயரில் மட்டுமே வெளிப்படுத்துகிறோம். ஏனெனில் சாத்திரிபோன்று எங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச நாங்கள் என்ன வெள்ளந்திகளா என்ன. வழமைபோல், இறந்து போனவர்கள் பேச முடியாது என்பதால் அவர்கள் சார்பில் நாங்கள் ஆஜராவதாகக் கூறிக்கொள்கிறோம். இறந்து போனவர்கள் எங்களிற்காக மரித்தவர்கள் என்று விசும்பல் மத்தியில் கூறுகிறோம். ஆனால், ஆண்கள் அழுவதில்லை என்று நம்பியே வளாந்த நாங்கள், எங்கள் முன் எங்களிற்காகப் போராடிய ஒரு வளாந்;த ஆணின் அழுகுரலை அழுகுரல் என்று இனம் பிரிக்கமுடியாதவர்களாக புனிதத்தின் பெயரில் பதிவிற்குத் தடைபோட்டு நிம்மதியாய் நாங்கள் தூங்கப் போய்விடுகிறோம்.

இவ்விடத்தில் இன்னுமொரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதாவது சாத்;திரி பொய் சொல்கிறார் எந்தப் பாசறையிலும் இவ்வாறு நடக்கவில்லை என்பது அவ்வாதம். உண்மையில் சாத்திரியின் பதிவைப் படிக்கும்வரை இப்படியான பிரச்சினை பாசறையில் இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நான் எந்தப் பாசறையிலும் வாழ்ந்ததில்லை. சாத்திரி பாசறையில் வாழ்ந்தவர். வேறு இயக்கங்களிலும் இந்தப் பிரச்சினை இருந்ததாக அர்யுனும் எழுதியுள்ளார். பாசறையில் நடந்ததா இல்லையா என்பது தெரியாதபோதும் பாடசாலை விடுதிகளில் இவ்வாறான சம்வங்கள் நடந்ததை பொதுவாகப் பலரும் கேள்விப்பட்டிருப்பர். மிகக் கடுமையான ஆசிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் கூட பள்ளிக்கூட விடுதிகளில் வியப்பேற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்த செய்திகள் சமூகத்தில் பரிட்சயமாய் இருந்தன. மேலும், பாலியல் சார்ந்து ஏகப்பட்ட அறியாமைகள் பேசாப்பொருட்கள் என்றிருந்த நிலையில் ஆண்பெண் தொடர்புகள் சார்ந்தே தண்டனைகள் முதலியன வகுக்கப்பட்டிருந்தன. குழந்தை உருவானால் மறைக்கமுடியாதே என்ற எச்சரிக்கை பல மட்டங்களில் அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. திருமணம் குழந்தை பராமரிப்பு முதலிய நடைமுறைப் பிரச்சினைகளும் எச்சரிக்கை உணர்விற்குக் காரணமாயிருந்தன. மறைக்கப்படக்கூடிய பிரச்சினைகள் சார்ந்து மனிதரின் மன அழுத்தங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்துள்ளன. எச்சரிக்கை உணர்வின் கனதி சார்ந்து தான் சட்டங்களும் விதிகளும் இயற்றப்படும் என்ற ரீதியில் இப்பிரச்சினை ஆண் பெண் உறவளவிற்கு சட்டத்திற்குட்படுத்தப்படாதிருந்திருக்கக் கூடிய சாத்தியம் மறுப்பதற்கில்லை. மேலும் சாத்திரி போராட்டத்தில் இணைந்திருந்த காலத்தில் இருந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள் என்று கூறிவிடமுடியாது. தலைவரின் ஆரம்ப நாட்களில் அவரோடு இருந்தவர்களே இன்றும் வாழ்கிறார்கள் எனும் போது சாத்திரி காலத்தவர்கள் இருப்பது வியப்பில்லை. இது எம்மைக் காட்டிலும் சாத்திரிக்கு அதிகம் தெரியும். எனனே நடக்காத ஒன்றைக் கற்பிதம் செய்து இத்தகைய ஒரு அவதூறைக் கிளப்பவேண்டிய தேவை சாத்திரிக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இனி எழுதிய பதிவை அழி;த்தமை பற்றிப் பார்க்கின், சாத்திரி எழுதிய ஒரு பதிவை நிர்வாகம் தூக்க, கொதிச்சுப் போய் சாத்திரி தான் எழுதிய சிலதைத் தானே தூக்க சாத்திரிக்குத் தடை வந்து விடுகிறது. தடைக்கான காரணமாக, சாத்திரி பதிவு போட்டாரே என்று நம்பி 120 பேர் பின்னூட்டம் போட்ட நிலையில் சாத்திரி பதிவைத் தூக்கினால் 120 பின்னூட்டர்களும் கேணயர்களாக ஆகிப்போகிறார்கள் என்கிறது கோபம். இநதக் கோபம் சார்ந்து எழுகின்ற ஒவ்வாமைகளை எந்தக் கோணத்தில் இருந்து எழுத ஆரம்பிப்பது என்று புரியாது மனம் திணறுகிறது. இயன்ற வரை முயலுகிறேன்.

ஒரு தலைப்பில் முதற்பதிவு அழிக்கப்படால் நேரம் மினக்கெட்டு மற்றவர்;கள் அத்தபை;பில் எழுதிய அத்தனை பின்னூட்டங்களும் கேணைத்தனமாகத் தெரியும் என்ற விவாதத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதாவது, 'ஆமால்ல', 'கிளம்பீட்டாய்யாகிளம்பீட்டான்', 'எத்தினைய செய்தனாங்க இதைச் செய்யமாட்டமா' என்பதுபோன்ற பின்னூட்டங்கள் ஏதாவது ஒரு தலைப்பைச் சார்ந்து தியட்டிரில் படம்பார்க்கும் ரசிகனின் வர்ணனை போன்று எழுதப்பட்டிருப்பின் தலைப்பின் முதற்கருத்து நீக்கப்படுகையில் அவை ஒருவேளை அர்த்தமற்றுத் தெரியலாம். ஆனால் அத்தகைய கருத்துக்களிற்கு 'நேரம் மினக்கெட்டு எழுதிய' பின்னூட்;டங்கள் என்ற அடைமொழி சரிவராது. நேரம் மினக்கெட்டு எழுதிய ஒரு பின்னூட்டம் எனின், ஏறத்தாள அப்பின்னூட்டம் என்னத்தைப் பேசுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு அப்பின்னூட்டம் மட்டுமே போதுமானது, தலைப்பின் முதற்பதிவு அவசியமற்றது. பின்னூட்டம் ஒரு குறும் பதிவை ஒத்தது என்ற வகையில் அது தனித்து வாழக்கூடியது. எனவே தலைப்பின் முதற் பதிவு நீக்கப்பட்டால் கீழுள்ள அனைத்தும் கேணைத்தனமாகத் தெரியும் என்பதை முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை.

அடுத்து, கருத்து யாரிற்குச் சொந்தமானது என்பது சார்ந்து எழும் கேள்வி. இணையவெளி உரிமைகள் பற்றிப் பரந்த, இன்னமும் மருவிக்கொண்டிருக்கும் விவாதவெளி விரிந்து கொண்டே இருக்கின்றது என்றபோதும், பொதுவாக ஒரு கருத்தை முன்வைப்பவரே சட்டத்தின் முன் அக்கருத்திற்கான பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கிறது. ஒருவர் மீது பிறிதொருவர் ஒரு கருத்துச் சார்ந்து வழக்குத் தொடர்கிறார் என்று வைத்துக்கொள்ளின், பிரச்சினையினை முளையிலே முடித்துவிட கருத்தாளர் விரும்பின் வக்கீல் நோட்டீஸ் கண்ட மாத்திரத்தில் தனது பதிவை அழிக்க நினைக்கலாம். பின்னூட்டங்கள் வந்துவிட்டனவே, பின்னூட்டர்களைக் கேணையர்கள் ஆக்கக் கூடாதே என்பதற்காகக் கருத்தாளரைப் பொதி சுமக்கக் கூற முடியாது. அதற்காகத்தானே எடுத்தேன் கவிழ்;த்தேன் என்று எழுதாது ஆற அமர ஒன்றிற்குப் பலதடவை யோசித்து எழுதும்படி கோருகிறோம் என்பது இந்த இடத்தில் எதிர்பார்க்கக்கூடிய ஒரு எதிர்வினை. ஆனால், ஒரு பதிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என அனைத்துக் கோணங்களையும் அதைப் பதிய முன்னர் கணக்கிட்டுவிடுவது எப்போதும் சாத்தியமானதல்ல. சில சமயங்களில் பதிந்ததன் பின்னர் எதிர்பாராத பிரச்சினைகள் தலைதூக்கலாம், இது சட்ட ரீதியாக மட்டுமன்றி தெரிந்தவர் உறவினர் என்ற முனைகளிலும் வரலாம். எனவே, கருத்தாளர்களின் கருத்துக்களிற்கு யாழ்களம் பொறுப்பேற்க முடியாது என்ற நிலையில், கருத்தாளரிற்குத் தான் பதிந்ததை அழிக்கும் உரிமை இருக்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

இறுதியாக, எந்த ஒரு சட்டத்திற்கும் 'லெற்றர் ஒவ் த லோ' மற்றும் 'ஸ்பிறிற் ஒப் த லோ' என்று இரு விடயங்கள் உண்டு. முதலாவது எழுத்தில் எவ்வாறு சட்டம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பது. இரண்டாவது அவ்வாறு ஒரு சட்டம் வருவதற்கான அடிப்படை என்ன, எத்தகைய விளைவுகளைத் தடுப்பதற்காக அச்சட்டம் இருக்கின்றது என்ற அடிப்படையில் அச்சட்டத்தின் ஆன்மா என்ன என்று பார்;ப்பது.

சட்டங்கள் விதிகள் என்பனவற்றை எழுத்து மட்டத்தில் மட்டும் பார்ப்பது ஆரோக்கியமற்றது. சப்பாத்திற்கு ஏற்ற கால்களைத் தேடுவது நடக்கத்தான் செய்யும் என்ற போதும், கால்களிற்கேற்ற சப்பாத்துக்கள் நோக்கிய தேடல்களும் இருக்கவே வேண்டும். மேற்கில் உள்ள சட்டங்களின் படி உள்ளே தள்ளுவது மட்டுமன்றி, புதிய வழக்குகள் சார்ந்து உள்ள சட்டங்களை மாற்றியமைப்பதும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சமூகம் முதிர்ச்சி அடைவதற்கு விதிகள் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஆழ்ந்த பார்வையும் இன்றியமையாதன. மூன்றாம் உலகநாடுகளின் முன்னைநாள் அரச உத்தியோகத்தர்கள் போன்று ஒரு கோப்பில் எழுதப்பட்ட விதிகளைச் சேகரித்து வைத்தபடி, காதிற்குள் ஒரு பென்சிலைச் சொருகிக்கொண்டு, எல்லோரும் எழுதப்பட்ட விதிகளிற்கமைய நடக்கிறார்களா என்று அலைவது அனைத்துச் சமூகத்திலும் நடக்கத்தான் செய்யும். பல குழந்தைகள் தாம் காணும் முதல் அதிகாரமான ஆசிரியரைப் போல வீட்டில் விளையாடுவது சகஜம் தான். அதுவும் ஈழத்தில்; குழந்தைகள் கையில் பிரம்பையும் வைத்துக்கொண்டு தான் ஆசிரியர் விளையாட்டை முன்பெல்லாம் விளையாடினார்கள். ஆசிரியரின் வகுப்பறை விதிகள் சரியா என்று குழந்தையால் விசாரிக்க முடியாது. ஆனால் வளர்ந்தவர்கள்;, இயன்றவரை, எழுதப்பட்ட விதிகளை அவற்றின் ஆன்மா சார்ந்து ஆழமாக நோக்குவதும், புதிய வழக்குகள் சார்ந்து விதிகளை ஆராய்வதும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள், இன்னுமொருவன்!

சில உண்மைகள் வெளியே சொல்லப் படுவது, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் என்பது உண்மையே!

ஆனாலும் ஒருவர், தனது கருத்தை வெளிப்படுத்தும் போது அது மற்றவர்களால் எவ்வாறு உள்வாங்கப் படுகின்றது என்பதைப் பொறுத்தே அவர்களது கருத்துக்கள், அமைகின்றன!

மற்றும் எழுதுபவரின் நோக்கமும், இங்கு அவதானிக்கப் படுகின்றது!

காந்தி தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதும்போது, அது 'சத்திய சோதனை' ஆகியது!

அதையே நானும் நீங்களும் எழுதப் போனால், அது மஞ்சள் பத்திரிகையாகின்றது!

ஏனெனில் காந்தி மீது மக்களுக்கு மதிப்பிருந்தது!

அதற்கு முக்கிய காரணம், காந்தி இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியமையே!

அந்தக் காலத்தில், சத்திய சோதனையை விமர்சித்தவன் 'துரோகி'யாகி இருப்பான்!

இதே போலத்தான், பல தியாகங்களாலும், அர்ப்பணிப்புக்களாலும், வளர்க்கப் பட்ட அமைப்பை விமர்சிப்பதும்!

அதற்குக் காரணம் அந்த அமைப்பின் 'நோக்கம்'

அதற்காக ஆயிரமாயிரம் போராளிகள், தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளார்கள்!

அவர்களது நோக்கம் ஓரளவாவது நிறைவேறிய பின்பு, அவர்களை விமரிசிப்பது தான் பொருத்தமாக இருக்கும்!

அவர்களது தியாகங்களும், உன்னதமான இலட்சியங்களும், மதிக்கப் பட வேண்டியவை என்பதே எனது தாழ்மையான கருத்து!

அவர்களுக்குள் இருந்த, 'குருவிச்சைகளை' சாத்திரியின் எழுத்துக்கள் இனங்காட்டுகின்றன!

அதற்காகவே சாத்திரியின் எழுத்துக்களைத் தேடித்தேடிப் படிப்பேன்!

தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்!>

சட்டவியற்பகுதியில் உங்கள் பார்வையும், அணுகுமுறையும் இங்கு சிந்தனையைத் தூண்டுபவையாக உள்ளன. இணையவெளியையும், கருத்துக்களத்தையும் பரிசோதனை மட்டத்திலேயே பார்க்கவேண்டியுள்ளதால் பல வினாக்களின் முடிச்சுக்களை காலமே அவிழ்த்துவைக்கவேண்டும்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பலர் தொடாத பக்கங்களை உங்கள் பார்வையாக்கியிருக்கிறீர்கள் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு.

முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன்.

சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழைய நினைவாக இருக்கிறது. தனக்கு மற்றையவர்கள் இழைத்த துன்பங்கள் பற்றிப் பேசத்தொடங்குவதற்குப் பல வருடங்கள் முன்னர் தொட்டு தான் செய்த குழப்படிகளை ஒழிவு மறைவின்றிப் பேசிவருகிறார். நானறிந்தவரை, தன்னைப் பற்றி இத்தனை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடியவர்கள் வேறு எவரையும் எனக்குத் தெரியாது.

சாத்திரியின் எழுத்தில் தன்னை எவ்வளவு தூரம் தான் வெளிப்படையாகப் பேசுகிறாரோ, அதே அளவிற்கு தன்னைக் கடுப்பேற்றிய அல்லது தனது ஆர்வத்தைக் கிளறிய மற்றையவர்கள் பற்pறியும் பல வரும். சாத்திரி மற்றறையவர்கள் பற்றி எழுதும் எழுத்துக்கள் வாசிப்பவர்களிற்குள் ஒரு வித அசௌகரியத்தைப் பொதுவாக உருவாக்கும்;. முன்னொரு தருணத்தில் சாத்திரியின் இந்தப் பாங்குபற்றி நானும் அவருடன் விவாததித்தது ஞாபகத்தில் உண்டு. எனினும் சற்று யோசித்துப் பார்க்கையில், சாத்திரியின் மற்றையவர்கள் மீதான எழுத்துக்கள் சார்ந்து வாசகராக எமக்குள் ஏற்படும் அசௌகரியம் பயத்தில் இருந்தே எழுகின்றது என்றே இப்போது எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

அதாவது, இளம் பெண்பிள்ளைகள் உள்ள ஒரு சாலையோரத்து வீட்டு மதிலில், அம்மதில் வெள்ளையடிக்கப்பட்ட அன்றிரவோ மறுநாளோ சாத்த்திரியும் இருழழகனும் கரியால் எழுதினார்கள் என்று வாசிக்கையில் தோன்றுகின்ற அசௌகரியம் என்பது, எமது சொத்துக்கள் சார்ந்து எமது பாதுகாப்புச் சார்ந்து எமது பிரத்தியேகம் மற்றும் உத்தரவாதங்கள் சார்ந்து எமக்குள் எம்மையும் அறியாது வாசிக்கப்படுவதிலேயே அந்த அசௌகரியத்தின் அடிப்படை இருக்கின்றது என்றே தோன்றுகின்றது. பெண்பிள்ளைகள், தந்தை, சாலையோரத்து வீடு, அதன் மதில், மதிலில் அடிக்கப்பட்ட வெள்ளை என்பன அனைத்துமே எங்களையும் அறியாது எங்களிற்குள் குறியீடுகள் ஆகிப் பயப்படுத்துpகன்றன. சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பொதுவெளியில் எழுதும் அளவில் எங்களால் எங்களைப் பற்றி பேச முடியாது. நாங்கள் எங்களைப் பற்றி மற்றையவர்களுடன் பேசுவதை விடுவோம், நாங்கள் எங்களிற்குள் எங்களோடு கூட சாத்திரியின் வெளிப்படையில் சொற்ப வீதமளவிற்கேனும் வெளிப்படையாக இருக்க முனைவதில்லை. கோட்டை கட்டியே வாழ்ந்து பழகிவிட்டோம். உலகின் அனைத்துச் சட்டங்களும் இத்தகைய பயங்களிற்கான பரிகாரங்களாகவும் அதிகார பேரம்பேசல்களாகவுமே எழுந்தன என்ற நிலையில், வாசகர் எமக்குள் அத்தகைய அசௌகரியங்கள் பயம் சார்ந்து எழுவதில் எந்த விந்தையும் இல்லை. ஆனால், ஒரு ஆயுத போராட்டத்தை ஆதரித்து, அந்தப் போராட்டத்தை எங்கள் பேரில் முன்னெடுக்கும் பொறுப்பை ஒரு சிலரின் தலையில் பொறித்துப் பார்த்திருந்த நாங்கள் மேற்படி முனையில் சற்று ஆழமாகப் பேசவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

பெண்பிள்ளைகள் உள்ள சாலையோரத்து வீட்டின் வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் சாத்திரி கரி பூசும் போது கூசிய எங்கள் முளங்கால்களிற்குப் பதிலாக, றிசியும் அவரது சகாவும் ஆபிரிக்க தாதாக்களோடு போதைப் பொருள் உள்ளடங்கலாகப் பேரம்பேசி வென்று கப்பலை கட்டமைப்புக்களின் வலைகளிற்குள்ளால் நகர்த்தியபோது பெருமையில் எமது மார்புகள் மட்டுமே பொருமின. நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கவேண்டிய பெரியவர்கள் பாலகன் சிறீகௌரிபாலனிற்குள் அவனிற்குப் புரியாத உணர்வுகளை விதைத்துப் பயப்படுத்தியது சார்ந்து சாத்திரி எழுதியபோது, அந்தப் பெரியவர்கள் பற்றி இப்போது எழுதத்தானா வேணும் என்றே மிகப்பாரிய எண்ணிக்கையான கருத்துக்கள் வந்தன. ஆனால், அந்தப் பாலகன் இன்றுவரை அச்சம்பவம் சார்ந்து அழுதுகொண்டிருப்பதை உணர எமக்கு நேரமில்லை. ஒன்றாய் வளர்ந்த நண்பன் வேறொரு இயக்கத்தில் சேர்ந்து துரோகியாக ஊரிற்குள் வந்தபோது, அவனது அக்காவின் கையால் சோறு உருண்டை வாங்கி உண்டு விட்டுச் சென்ற ஒரு இரவில் தவிர்க்கமுடியாத நிலையில் அந்நண்பனைச் சுட்டுக்கொன்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்டமைக்கான மூலகாரணம், இறந்த நண்பனின் அக்கா வசை பாடி அழுத ஒலி இன்னமும் அந்தப் போராளிக்குள் ரணமாய் சீழ் வடிந்து கொண்டிருப்பதே என்பது போதிய அளவிற்குப் வாசகரால் உள்வாங்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது, எங்களிற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை களத்தில் தனியே விட்டது மட்டுமன்றி தப்பியிருப்வர்கள் சுமக்கின்ற உளவியல் சுமைகளையும் அவர்கள் பேசாதிருப்பதே எங்களிற்கு அனுகூலமென்று எம்மால் கூசாமல் கூற முடிகிறது.

கொழும்பில் ராணி சார்ந்து வந்த கதையிலும் காமம் வருகிறது. தாக்குதல் வெற்றி அதனை அர்த்தப்படுத்துகிறது. அது மட்டுமன்றி கதையில் ராணியும் தீயிடப்பட்டு சுத்திகரிக்கப்படுவதால் பொறுத்துக் கொள்ள முடிகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம். பள்ளிக்கூட விடுதியில் மாணவர்களிற்குள் நடக்கும் விடயங்கள் மித்திரனில் வருவதுபோல பாசறைக் கதைகள் பேசமுடியாது என்பது முடிந்த முடிபாகக் கூறப்படுகின்றது. ஆனால் இங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. சிறீ கௌரிபாலன் பச்சிளம் பாலகனாக இருக்கும் போது 'பத்தரும்' 'அன்ரியும்' அவனிற்குள் ஆரம்பித்து வைத்த அழுகுரலிக்குச் செவிகொடுக்க நாம் தயாரில்லை. யாருமே கேட்க மறுத்த, கேட்கப்படாத அழுகை வயதோடு சேர்ந்து ரணமாக வளர்ந்து பாசறையில் சீழ் வடியும் ரணம் மீளக் கீறப்பட்டபோது வலி எப்படி இருந்தது என்று சாத்திரி சொன்னால் அதை இப்பவும் நாங்கள் கேட்கத் தயாராகவில்லை. இது எல்லாம் மறைவாய் பேசி மறைந்து போகவேண்டிய விடயங்கள், சமூகங்களிற்குள் நடவாத கதைகளா, அடக்கி வாசிக்காது இப்படி அடித்துப் பேசும் உரிமை யாரிவரிற்குக் கொடுத்தது என்ற ரீதியிலேயே எமது கோபம் குவியப்படுகிறது. ஆனால், எப்போதும் போல எமது கோபத்தை நாம் புனிதங்களின் பெயரில் மட்டுமே வெளிப்படுத்துகிறோம். ஏனெனில் சாத்திரிபோன்று எங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேச நாங்கள் என்ன வெள்ளந்திகளா என்ன. வழமைபோல், இறந்து போனவர்கள் பேச முடியாது என்பதால் அவர்கள் சார்பில் நாங்கள் ஆஜராவதாகக் கூறிக்கொள்கிறோம். இறந்து போனவர்கள் எங்களிற்காக மரித்தவர்கள் என்று விசும்பல் மத்தியில் கூறுகிறோம். ஆனால், ஆண்கள் அழுவதில்லை என்று நம்பியே வளாந்த நாங்கள், எங்கள் முன் எங்களிற்காகப் போராடிய ஒரு வளாந்;த ஆணின் அழுகுரலை அழுகுரல் என்று இனம் பிரிக்கமுடியாதவர்களாக புனிதத்தின் பெயரில் பதிவிற்குத் தடைபோட்டு நிம்மதியாய் நாங்கள் தூங்கப் போய்விடுகிறோம்.

இவ்விடத்தில் இன்னுமொரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதாவது சாத்;திரி பொய் சொல்கிறார் எந்தப் பாசறையிலும் இவ்வாறு நடக்கவில்லை என்பது அவ்வாதம். உண்மையில் சாத்திரியின் பதிவைப் படிக்கும்வரை இப்படியான பிரச்சினை பாசறையில் இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நான் எந்தப் பாசறையிலும் வாழ்ந்ததில்லை. சாத்திரி பாசறையில் வாழ்ந்தவர். வேறு இயக்கங்களிலும் இந்தப் பிரச்சினை இருந்ததாக அர்யுனும் எழுதியுள்ளார். பாசறையில் நடந்ததா இல்லையா என்பது தெரியாதபோதும் பாடசாலை விடுதிகளில் இவ்வாறான சம்வங்கள் நடந்ததை பொதுவாகப் பலரும் கேள்விப்பட்டிருப்பர். மிகக் கடுமையான ஆசிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் கூட பள்ளிக்கூட விடுதிகளில் வியப்பேற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்த செய்திகள் சமூகத்தில் பரிட்சயமாய் இருந்தன. மேலும், பாலியல் சார்ந்து ஏகப்பட்ட அறியாமைகள் பேசாப்பொருட்கள் என்றிருந்த நிலையில் ஆண்பெண் தொடர்புகள் சார்ந்தே தண்டனைகள் முதலியன வகுக்கப்பட்டிருந்தன. குழந்தை உருவானால் மறைக்கமுடியாதே என்ற எச்சரிக்கை பல மட்டங்களில் அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. திருமணம் குழந்தை பராமரிப்பு முதலிய நடைமுறைப் பிரச்சினைகளும் எச்சரிக்கை உணர்விற்குக் காரணமாயிருந்தன. மறைக்கப்படக்கூடிய பிரச்சினைகள் சார்ந்து மனிதரின் மன அழுத்தங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்துள்ளன. எச்சரிக்கை உணர்வின் கனதி சார்ந்து தான் சட்டங்களும் விதிகளும் இயற்றப்படும் என்ற ரீதியில் இப்பிரச்சினை ஆண் பெண் உறவளவிற்கு சட்டத்திற்குட்படுத்தப்படாதிருந்திருக்கக் கூடிய சாத்தியம் மறுப்பதற்கில்லை. மேலும் சாத்திரி போராட்டத்தில் இணைந்திருந்த காலத்தில் இருந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள் என்று கூறிவிடமுடியாது. தலைவரின் ஆரம்ப நாட்களில் அவரோடு இருந்தவர்களே இன்றும் வாழ்கிறார்கள் எனும் போது சாத்திரி காலத்தவர்கள் இருப்பது வியப்பில்லை. இது எம்மைக் காட்டிலும் சாத்திரிக்கு அதிகம் தெரியும். எனனே நடக்காத ஒன்றைக் கற்பிதம் செய்து இத்தகைய ஒரு அவதூறைக் கிளப்பவேண்டிய தேவை சாத்திரிக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இனி எழுதிய பதிவை அழி;த்தமை பற்றிப் பார்க்கின், சாத்திரி எழுதிய ஒரு பதிவை நிர்வாகம் தூக்க, கொதிச்சுப் போய் சாத்திரி தான் எழுதிய சிலதைத் தானே தூக்க சாத்திரிக்குத் தடை வந்து விடுகிறது. தடைக்கான காரணமாக, சாத்திரி பதிவு போட்டாரே என்று நம்பி 120 பேர் பின்னூட்டம் போட்ட நிலையில் சாத்திரி பதிவைத் தூக்கினால் 120 பின்னூட்டர்களும் கேணயர்களாக ஆகிப்போகிறார்கள் என்கிறது கோபம். இநதக் கோபம் சார்ந்து எழுகின்ற ஒவ்வாமைகளை எந்தக் கோணத்தில் இருந்து எழுத ஆரம்பிப்பது என்று புரியாது மனம் திணறுகிறது. இயன்ற வரை முயலுகிறேன்.

ஒரு தலைப்பில் முதற்பதிவு அழிக்கப்படால் நேரம் மினக்கெட்டு மற்றவர்;கள் அத்தபை;பில் எழுதிய அத்தனை பின்னூட்டங்களும் கேணைத்தனமாகத் தெரியும் என்ற விவாதத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதாவது, 'ஆமால்ல', 'கிளம்பீட்டாய்யாகிளம்பீட்டான்', 'எத்தினைய செய்தனாங்க இதைச் செய்யமாட்டமா' என்பதுபோன்ற பின்னூட்டங்கள் ஏதாவது ஒரு தலைப்பைச் சார்ந்து தியட்டிரில் படம்பார்க்கும் ரசிகனின் வர்ணனை போன்று எழுதப்பட்டிருப்பின் தலைப்பின் முதற்கருத்து நீக்கப்படுகையில் அவை ஒருவேளை அர்த்தமற்றுத் தெரியலாம். ஆனால் அத்தகைய கருத்துக்களிற்கு 'நேரம் மினக்கெட்டு எழுதிய' பின்னூட்;டங்கள் என்ற அடைமொழி சரிவராது. நேரம் மினக்கெட்டு எழுதிய ஒரு பின்னூட்டம் எனின், ஏறத்தாள அப்பின்னூட்டம் என்னத்தைப் பேசுகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு அப்பின்னூட்டம் மட்டுமே போதுமானது, தலைப்பின் முதற்பதிவு அவசியமற்றது. பின்னூட்டம் ஒரு குறும் பதிவை ஒத்தது என்ற வகையில் அது தனித்து வாழக்கூடியது. எனவே தலைப்பின் முதற் பதிவு நீக்கப்பட்டால் கீழுள்ள அனைத்தும் கேணைத்தனமாகத் தெரியும் என்பதை முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை.

அடுத்து, கருத்து யாரிற்குச் சொந்தமானது என்பது சார்ந்து எழும் கேள்வி. இணையவெளி உரிமைகள் பற்றிப் பரந்த, இன்னமும் மருவிக்கொண்டிருக்கும் விவாதவெளி விரிந்து கொண்டே இருக்கின்றது என்றபோதும், பொதுவாக ஒரு கருத்தை முன்வைப்பவரே சட்டத்தின் முன் அக்கருத்திற்கான பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கிறது. ஒருவர் மீது பிறிதொருவர் ஒரு கருத்துச் சார்ந்து வழக்குத் தொடர்கிறார் என்று வைத்துக்கொள்ளின், பிரச்சினையினை முளையிலே முடித்துவிட கருத்தாளர் விரும்பின் வக்கீல் நோட்டீஸ் கண்ட மாத்திரத்தில் தனது பதிவை அழிக்க நினைக்கலாம். பின்னூட்டங்கள் வந்துவிட்டனவே, பின்னூட்டர்களைக் கேணையர்கள் ஆக்கக் கூடாதே என்பதற்காகக் கருத்தாளரைப் பொதி சுமக்கக் கூற முடியாது. அதற்காகத்தானே எடுத்தேன் கவிழ்;த்தேன் என்று எழுதாது ஆற அமர ஒன்றிற்குப் பலதடவை யோசித்து எழுதும்படி கோருகிறோம் என்பது இந்த இடத்தில் எதிர்பார்க்கக்கூடிய ஒரு எதிர்வினை. ஆனால், ஒரு பதிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என அனைத்துக் கோணங்களையும் அதைப் பதிய முன்னர் கணக்கிட்டுவிடுவது எப்போதும் சாத்தியமானதல்ல. சில சமயங்களில் பதிந்ததன் பின்னர் எதிர்பாராத பிரச்சினைகள் தலைதூக்கலாம், இது சட்ட ரீதியாக மட்டுமன்றி தெரிந்தவர் உறவினர் என்ற முனைகளிலும் வரலாம். எனவே, கருத்தாளர்களின் கருத்துக்களிற்கு யாழ்களம் பொறுப்பேற்க முடியாது என்ற நிலையில், கருத்தாளரிற்குத் தான் பதிந்ததை அழிக்கும் உரிமை இருக்கவேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

இறுதியாக, எந்த ஒரு சட்டத்திற்கும் 'லெற்றர் ஒவ் த லோ' மற்றும் 'ஸ்பிறிற் ஒப் த லோ' என்று இரு விடயங்கள் உண்டு. முதலாவது எழுத்தில் எவ்வாறு சட்டம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பது. இரண்டாவது அவ்வாறு ஒரு சட்டம் வருவதற்கான அடிப்படை என்ன, எத்தகைய விளைவுகளைத் தடுப்பதற்காக அச்சட்டம் இருக்கின்றது என்ற அடிப்படையில் அச்சட்டத்தின் ஆன்மா என்ன என்று பார்;ப்பது.

சட்டங்கள் விதிகள் என்பனவற்றை எழுத்து மட்டத்தில் மட்டும் பார்ப்பது ஆரோக்கியமற்றது. சப்பாத்திற்கு ஏற்ற கால்களைத் தேடுவது நடக்கத்தான் செய்யும் என்ற போதும், கால்களிற்கேற்ற சப்பாத்துக்கள் நோக்கிய தேடல்களும் இருக்கவே வேண்டும். மேற்கில் உள்ள சட்டங்களின் படி உள்ளே தள்ளுவது மட்டுமன்றி, புதிய வழக்குகள் சார்ந்து உள்ள சட்டங்களை மாற்றியமைப்பதும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சமூகம் முதிர்ச்சி அடைவதற்கு விதிகள் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஆழ்ந்த பார்வையும் இன்றியமையாதன. மூன்றாம் உலகநாடுகளின் முன்னைநாள் அரச உத்தியோகத்தர்கள் போன்று ஒரு கோப்பில் எழுதப்பட்ட விதிகளைச் சேகரித்து வைத்தபடி, காதிற்குள் ஒரு பென்சிலைச் சொருகிக்கொண்டு, எல்லோரும் எழுதப்பட்ட விதிகளிற்கமைய நடக்கிறார்களா என்று அலைவது அனைத்துச் சமூகத்திலும் நடக்கத்தான் செய்யும். பல குழந்தைகள் தாம் காணும் முதல் அதிகாரமான ஆசிரியரைப் போல வீட்டில் விளையாடுவது சகஜம் தான். அதுவும் ஈழத்தில்; குழந்தைகள் கையில் பிரம்பையும் வைத்துக்கொண்டு தான் ஆசிரியர் விளையாட்டை முன்பெல்லாம் விளையாடினார்கள். ஆசிரியரின் வகுப்பறை விதிகள் சரியா என்று குழந்தையால் விசாரிக்க முடியாது. ஆனால் வளர்ந்தவர்கள்;, இயன்றவரை, எழுதப்பட்ட விதிகளை அவற்றின் ஆன்மா சார்ந்து ஆழமாக நோக்குவதும், புதிய வழக்குகள் சார்ந்து விதிகளை ஆராய்வதும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

சிவப்பு எழுத்துத் தொடங்கும் இந்த இடத்தில் இருந்து உங்களின் விவாதத்தின் நேர்மை கேள்விக்குரியதாகிறது அண்ணா..! எப்படியாவது சாத்திரி அண்ணாவைப் பிழையின்றிக் காட்டி ஆகவேண்டும் என்ற பதற்றம் தெரிகிறது...ஒருவர் மேல் வைத்திருக்கும் மதிப்பு உங்கள் கருத்து நேர்மையை பொய் சொல்ல வைத்திருக்கிறது என்பது இந்த இடத்தில் தொடங்கும் உங்கள் எழுத்துப் பதற்றத்தில் இருந்து தெரிகிறது..உங்கள் சிந்தனைகள் மேல் அளவற்ற மதிப்பு வைத்திருந்தவன் நான்...சார்பு நிலை என்பது உங்களையும் பாதித்து விட்டது என்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது..உண்மையில் உங்க்ளைப் போலவே இன்னும் அதிகமாக சாத்திரி அண்ணையை நான் காப்பாற்றி இருக்கவேண்டும்..ஏனேனில் நானும் அவரின் எழுத்து ரசிகன்...ஆனால் நான் அதைப் பொய்யுக்குச் செய்வதை அவர் ஒரு போதும் விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்...தன்னைச் சுத்தி எதையும் பொய்யாகப் புனையாமல் வெளிச்சத்துக்குள் வாழும் மனிதர் அவர்...அவருக்குத் தெரியும் தான் செய்தது தவறு என்று..அதற்க்காக அவர் வாசகரிடம் மன்னிப்பும் கேட்டு விட்டார்..அவரின் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.